இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் “தூஷண”வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும்.

Angst in der Nacht

Die Uhr spricht aengstlich mit dem Spinnweb an der Wand,
Am Laden reisst der Wind,
Meine flackernden Kerzen sind
Ganz vertropft  und heruntergebrannt,
Kein Wein im Glase mehr,
Schatten in allen Ecken,
Deren lange Finger sich nach mir strecken.
-Hermann HESSE.

இடையீடு:2. முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் “ஈழத்துக்கு”அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க…

அந்தத் தெருவோரமாகச் சாய்கிறேன்.கரமெதுவும் இல்லை.அம்மாக் கரம் பாலகர்களுக்குமட்டுமே.அன்னைக்குப் பாலகனாகக் காலம் பின்நோக்கிச் செல்ல என் மனத்துக்கு மட்டுமே முடியுமாகையால் நான் மௌனித்து வான் பார்க்க, பிளவுகொண்ட தேசிக்காய் குங்குமம் தரித்து என் விழிமுன்னே நர்த்தனமாட எனது மனைவி சொன்ன வார்த்தை வேலைணைச் சிவராசா சொன்ன சாஸ்த்திரத்தில் என்னை இந்த டிசம்பரில் கொல்லும் காலமாக நர்த்தனமாடுகிறது.

துவண்டு போனது எனது குரலும்,குடியும்.என்னைக் கொல்லும் காலத்தைக் கணித்து வழங்கிய சிவராசா, சேதுராமனைக் கொப்பியடித்து எண்சாஸ்த்திரம் சொன்ன அன்றைய எண்பதுகளின் முன் பகுதி வேலணை பங்களாவடிச் சந்தியில் பலரது செருப்புகள் அவன் முகத்தை முத்தமிட்டுக்கிடக்க, எனது துணைவிக்கு அவனிடம் சாஸ்த்திரம் கேட்பதில் அலாதி பிரியம்.யாழ்ப்பாணத்து ஏதோவொரு முடுக்கில் நான் மௌனித்துக்கிடந்தபடி உழைத்து ஓடாகும்போது எனது போதையில் வீடு கட்சிகட்டி எனக்கு வைத்தியம் பார்க்கிறது.நான் மரணிப்பதில் என் மனையாளுக்கு அதிக பிரியமென நான் எப்போதும் புரிய எனது போதை காலத்தை வழங்கவில்லை.

யாழ்ப்பாணச் சுடலைகள் எங்கும் பேய்,வீதிகள் எங்கும் பேய்,வீடுகளின் நடுவே சவங்கள் உருண்டு கொள்கின்றன.குத்தீட்டியாய் மந்திரக்காரன் தனது குறியில் தேசிக்காயைக் குத்தித் தமிழச்சிகளது முலையில் காண்டம் வாசிக்க யாழ்ப்பாணம் தென்னிலைங்கைப் பெருங்குடிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொண்டிருக்கிறது.எனக்குக் காண்டம் வாசிக்க எனது பொண்டில் எந்த மந்திரவாதிக்குத் தனது…

“செய்வினை,

சூனியம்,

பில்லி,

காண்டம்,

சாஸ்த்திரம்,

மந்திரம்,

மாயம்”

எல்லாமாக யாழ்ப்பாணியச் சாம்பிராஜ்சியத்தில் பொருள் நிலை வாழ்வு சிறப்பாக…

ஒரு நேர வயிற்றுக்கு உழைக்க வக்கற்ற எனது பொண்டாட்டி என்னைக் காலத்தில் கொல்ல, மெல்ல வலையைப்பின்ன நான் போதையில் பொருள்தேடுகிறேன்!

கொட்டை பெருசு கோவணஞ் சிறிசு: பின் சுருக்கம்1.

“வாடா சுந்தரம்,வா மச்சான்.வந்து மோட்டச் சயிக்கிளை ஸ்ராட் பண்ணு.”இவன் சுந்தரத்தை நேற்றுப் பன்னிரெண்டு மணிக்குக் கூட்டுச் சேர்த்தேன்.அவனும் என்னைப்போன்ற பெருங்குடிமகன்.

சூனியத்தையும்,சாஸ்த்திரத்தையும் அவனிடம் சொன்னபோது தன்ர மனைவியும்,மாமியும் இதில நின்று நாட்டியம் ஆடுகிறவை என்றும் சொன்னான்.தன் மனைவியும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாரோ போட்ட தவிட்டைத் தின்று கொழுப்பதாகவும் சொன்னான்.

இப்போது யாழ்ப்பாண பெரு இராஜ்சியத்தில் மூத்த குடித் தமிழர்கள் குடிமனைக்குள் கொள்ளிவைக்க எல்லாம் பணத்தைச் சுற்றி வீணியூற்ற நானும் எல்லாமாக மாறி எனது மனைவியிடம்”அது-சவம்”என்றெல்லாம் ஆகிப்போனேன்!எனது இருப்பு அவளுக்குச் சவமென…

போன மாதம் மகிந்தா மாவினது “ஒரே தேசம்,ஒரே மக்கள்” அரச பரிபாலத்தில் யாழ்ப்பாணப் பெண்டிர்களுக்கு அரபுத் தேசங்களின் “வேலையெடுப்பு”வேலை வேண்டிக்கொடுக்க முகவர்கள் வந்து கொட்டகை போட்டார்கள்,அந்தக் கொட்டகை வாசலில் வந்து குவிந்த யாழ்ப்பாணியத் தமிழச்சிகள் கிளிநொச்சிவரை கியூவில் நிற்கினம்.அரபுத் தேசத்தில் பணிபுரிந்து தமது செல்வச் செழிப்பை இரட்டிப்பாக்கவென அவர்கள் கனவு விதைத்து…

இப்படியான பொழுதுகளில் நானும் காலத்தைப் பின்நோக்குவதில் அரபுத் தேச “ஆண் குறிகள்”அப்பன்,மகன்,பேரன்,மாமன்,மைத்துனன்,என வீணியகற்றிக்கொண்ட பெருவெளியில் துர்நாற்றத்தோடு அந்தச் சகதி சாக்கடையாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடி வருகிறது.சுனாமியைவிடச் சுரமொழுப்பி உயரும் அந்த அரேபியச் சுக்கிலம் எனது வீட்டின் வாசலில் இன்னொரு கொலைக்களத்தை மெல்ல எனது  அனுமதியின்றிச் செய்யத் துடிக்கிறது.

இந்தச் சங்கதியை நான் உணர முடியாதைத்யிட்டு எனது நண்பன் சுந்தரத்தோடு பேசினபோது”போடா புண்டையாண்டி,உன்ர பொண்டிலை என்ன, என்ர பொண்டிலையும்தான் அவன்கள் ஓழ்க்கப் போறான்கள்”எண்டான்.எனக்கு இது,சகஜமாகப் பேசுவதாகப் போச்சு.என்ன நடந்தது?

மானத்தோடு வாழ்ந்த மண் என்று அப்பப்ப நான் பெருமைப்பட்ட காலம் மெல்ல விடைபெற்று இருக்கிறது.எனக்கு இதில”ஆரூ ஓழ்த்தாலென்ன…”எண்ட நிலைமை சவுக்கடியாக இருக்கமாட்டேன் எண்டு சொல்கிறது.

பின்ன,இருக்காதா?

வீட்டு வளவுக்குள்,வீட்டின் ஒரு பகுதியை,மெல்ல விடுதியாக்கி-லொஜ் எனப் போட்டுப்போட்டு பணத்தைச் சம்பாதிக்கத் தென்னிலங்கைச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்க, எனது பொண்டிலுக்கும் சரியான ஆசை அந்தப் பணத்தில்.ஆரெடுத்துக்கொடுத்த ஐடியாவோ அவள் கொண்டை முடிகிறாள் நோட்டுச்சரத்தில் அழகுபார்க்க.

இன்றும்,இன்னொரு முடுக்குவரை சுந்தரத்தின் மோட்டார் சயிக்கிளில் மெல்ல அமர்ந்து இறங்கிக்கொண்டேன்.”டேய் மச்சான் இவளிட்ட கசிப்பு மட்டுமில்லை எல்லாம் கிடைக்கும்”எண்டான் அவன்.அந்தத் தெருவுக்கு “வெள்ளான் தெருவென”வெள்ளார் சொல்லுவினம்.

மெல்லக் கடாசிய கசிப்பில் அவளது தொடைக்கு நடவில் உலகத்தின் சரிவு தோன்ற ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்தை அசைக்க முடியாதென்று எண்ணிக்கொண்டேன்.

இப்போது,மனைவியும்,அவளது சாஸ்த்திரமும் நர்த்தனம் ஆடியது.

“டிசம்பரில் உனக்குச் சாவு,நீ என்னோடு சேர்ந்திருப்பது பிள்ளையின்ர பலனில் முடியாத காரியம்.நீ பிரிந்து போ”என்கிறாள்.என்ர உயிரில அவளுக்குச் சரியான அக்கறை யாழ்ப்பாணத்து ஆமிக்காரன்கள்போல.விழிமுன்னே விரியும் அவளது ஆசை மெல்லக் குத்தும் கோரப் பற்களாய் அவளது முகம்…

முள்ளி வாய்க்காலில் மௌனித்துக்கொண்ட ஏகத்தலைமையின் பெரிய ஆயுதம் முடித்துவைத்த அதே கதையை இன்னொரு சுற்றில் இப்படி மகிந்தா துவக்கி வைத்துப்போட்டார்.அவர் “தெமிழு” எண்டு ஏசிக்கொள்ள அவரது சிஸ்சியர்கள் அவருக்காகத் “தமிழர்கள் கூட்டத்தில் குழப்புவதாக நாடகம்”போட சிங்களவர்கள் எண்ணிக்கொண்டனரா மகிந்தா தமிழர் எதிரியென? நானறியேன் பராபரமே!அவரது கட்சியே இந்த முறையும் ஆட்சிக்கட்டிலேறுவதென அவர் “தெமிழு”மட்டும் சொல்லவில்லை.என்ர வீட்டு வாசலில் லொட்ஜ்சும் கட்டிக் கொடுக்கிறார்?

எனக்குத் தெரியாது!

இடையீடுகளும்,சுருக்கமும் சந்திக்கும் புள்ளி : 0

சுந்தரம் இப்ப மோட்டச்சயிக்கிளை உருட்டக்கூட முடியாமல் கிடக்கிறான்.நானும் “ஓட்டுவதற்கு” முனைந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறேன்.கசிப்பில சூனியத்தை  வெள்ளான் தெருக்காறி மந்திரிக்க எனக்கும் சுந்தரத்துக்கும் அவளது தொடையினது இடையில் தமிழர் தேசியம்புரியத் தொடங்கிறது.இதன் தார்ப்பாரில் நாலா புறமும் குருதி நெடில் மூக்கைத் துளைக்கிறதோ இல்லையோ யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சாஸ்த்திரிகள்,மந்திரவாதிகளது பூஜை நெடில் மூக்கைத் துளைக்கிறது.

என் பொண்டிலது தாவணியில் தொங்கிக்கொண்ட எச்சில் பேய்க்கு “மாமி”என்ற உறவு எனக்கு வேணுமாம்.

அந்த எச்சில் பேயின்ர ஈனவிரக்கமற்ற “செய்வினைகளில்” என்பொண்டிலுக்கு என்னைப் பிரிஞ்சு கிடக்கவேணுமாம்.ஆரோட என்பதுதான் எனக்குத் தெரியாத பிரச்சனை.அவளுக்கு என்ர உயிரில அவ்வளவு பிரியமெண்டும்,தனக்கும் எனக்கும் பிரச்சனை எதுவுமில்லை எண்டும்,நான் என்ர சகோதரங்களை,எப்பவோ செத்துத் தொலைந்த என்ர தாய் தகப்பனை நினைச்சுக் குடிச்சு அழிவதாகவும், என்ர அண்ணாவுக்குப் போன் போட்டுச் சொல்லிப்போட்டாள் என்ர மனைவி.

எனக்கு அவள்மீது சரியான பிரியம் இதை அண்ணா சொன்னபோது.

என்ர குடிக்கு இது காரணமில்லையெண்டு எனக்குத் தெரியும்.அது,மகிந்தாவினது கொடைக்கரத்தின்அருங்கொடை.வீதிக்கு வீதி மதுக்கடையும்,மாதுக்குடைவிரிப்பும் யாழ்ப்பாண மண்ணில் தொடக்கி வைத்த கையோடு நான்,எனக்கே இப்போது மொட்டை அடித்தேன்.

இதோ,இந்தச்சுந்தரம் காறித் துப்புறான்.

“மோட்டச் சயிக்கிளைத் தூக்கி நிறுத்த வக்கில்லை.இதற்குள் கசிப்புக்காறிக்கு தேசியத்தை காட்டப் போனியே”எண்டு கேலிக்கு வினைவிதைக்கிறான்.நான் சாரத்தை எங்கே தொலைத்தேன் எண்டும் தெரியுதில்லை.நல்ல வேளை அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை!

என்ர பொண்டிலின் இன்னொரு சாஸ்த்திரக்காரன் நடராசன் அண்டங்களைக் குடைந்த கண்டவுண்மை நான் என் பிள்ளையினது பலனின் பொருட்டு இவ்வாண்டு டிசம்பரில் என் பொண்டில் சங்கூத மரிப்பதென…

டிசம்பரில் சாகப்போகுற எனக்கு என்ன விருப்பம் இருக்கு எண்டுவேற என்ர மனைவியின்ர நண்பன் கேட்கிறான்.”சொல்லு முருகன் உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா”எண்டபடி ஆட்டிறிச்சியும் காய்சிச் சாரயமும் வேண்டித்தாறான் குடியென…

அவன் நேற்றுச் செய்த இந்த விருப்பு வினை,எனக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் நிலையை இப்போது உணர்த்துகிறது.

நான் யாருடைய கைதி?

சாஸ்த்திரக்காரரின்,சூனியத்தின்,காலத்தில்,மனைவியின்,மாமியின்-மகிந்தாவின் கைதி?

Fear at the Jaffnas night

the clock speaks fearfully with the spin Web at the wall,
at the shop tears the wind,
my flickering candles
whole dripped and down-burned,
no wine in the glass more,
shade in all corners,
whose long fingers stretch themselves for me.-Hermann Hesse.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2010

 

http://srirangan62.wordpress.com/2010/04/07/மகிந்தாவின்-யாழ்ப்பாணச்/