"தேசம் விடுதலையாவதும்,
தேசியம் நிலைப்பதும்,
தமிழ் மொழி ஆளுவதும்
உங்களின் அடிபிடியினாற்றாமெனில்
நிச்சியம் அந்த விடுதலை
உங்களுக்கில்லை!"

இப்போது சிந்திக்கிறேன்
நான் கேட்ட வார்த்தைகள்,
எனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்
அனைத்துக்கும் என் நன்றி.


அன்புக்கும்
அங்கீகரிப்புக்கும்
ஆட்சேபத்துக்கும்
என்னை இவை உட்படுத்தியவை
இவைகளின் வழி சிந்திக்கிறேன்
இவை என் அன்புக்கு அவசியமானவை
கவனிப்பு நிறைந்த
நித்திரைக்காழ்த்தும்
பேச்சுக்குரிய இவைகளை இன்றும்...

இவை மகிழ்ச்சியை விரும்புபவை.

போராட்டமே இதன் அழகு
எனினும்,
இப்போது உன் படகோடு
என் தந்தையே
அதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்
என்னால் கை கூடவில்லை.


என்னிடமும்
உன்னிடமும் உலகம் நிறைந்திருக்க
ஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ?
எனதும்,
அடுத்த தலைமுறைக்கும் கூறுவதற்குப் பலவுண்டு...


அதோ,
வானத்தின் மூலையில்
ஒளிருமிந்த நிலாவைப்போல்
துள்ளி விளையாடத்தக்க
உங்கள் மனதைக் கெடுக்கும்
கூலிக் கவிகளைக் கடைந்தேற்றுங்கள்.

இன்னுமா
இவர்களை நம்புகிறீர்கள்?

ஆத்தைமாரின்
கொட்டில்களே
அவர்களுக்குச் சொந்தமில்லை!
இதற்குள்
தேசம் சொந்தமாகிடுமா?

போங்கள்,
போய் அடுப்புகளெரிக்க
வழியைப்பாருங்கள்!

ப.வி.ஸ்ரீரங்கன்

http://udaippuu.blogspot.com/2010/03/blog-post_26.html