காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஜெகத்குரு எஸ்கேப் ஆவதற்குத் தோதாக சன்னலைத் திறந்து விட்டது உச்ச நீதிமன்றம்.

 

புதுவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கின் குறுக்கு விசாரணையில் பிரதான சாட்சியங்களான சங்கரராமனது மனைவி பத்மாவும், மகளான மைத்ரேயியும், கோயில் ஊழியர்களும் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக மாற்றிச் சொல்லியருக்கிறார்கள். தாங்கள் கொலைசெய்த கொலைகாரர்கள் எவரையும் கண்ணால் பார்க்கவில்லை என்றும், போலீசார் காட்டிய புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர்களைத் தெரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டிலிருந்து கைப்பற்ற ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து அவருடையதல்ல என்றும் அவரது மனைவியும் மகளும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை பிறழ் சாட்சிகள் (hostile witnesses) என்று அரசு தரப்பு அறிவித்திருக்கிறது.

முக்கியச் செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

இதற்கு முன்னரே இரண்டு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி விட்டனர். தங்கள் சாட்சிகளாக அரசு தரப்பு கொண்டுவந்து நிறுத்திய இவர்களையே இனி அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்யும். அந்த குறுக்கு விசாரணை கூர்மையாக நடத்தப்பட்டால், சாட்சிகள் பொய் சொல்வது நிரூபக்கப் படலாம். பெஸ்ட் பேக்கரி வழக்கில் நடந்தது போல. அந்த வழக்கில் பணத்தால் விலை பேச முடியாத, மோடியால் மிரட்ட முடியாத தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்டவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இந்த வழக்கில் அப்படி நடக்குமா? சொல்ல முடியாது.

இந்துக்களின் லோககுரு இன்னும் சில மாதங்களில் எந்த தவறும் செய்யாத மகானாக விடுதலை அடைவார். தனது கணவனை கோரமாக ரவுடிகளை வைத்துக் கொன்றது ஜெயேந்திரன்தான் என்பது பத்மாவுக்கு நன்கு தெரியும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார். உலகுக்கும் அதில் சந்தேகமில்லை. நக்கீரன் பேட்டியிலேயே இந்த சங்கர்சாரி இதை தெனாவெட்டாக பெருமையடித்திருக்கிறார். எனில் என்ன நடந்தது?

தனது கணவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்தை அறிந்திருக்கும் பத்மாவை அவ்வளவு சுலபமாக பணத்திற்கு விலைபேசியிருக்க முடியாது. வழக்கு நடக்கும்போது அடையாளம் தெரியாதவர்களால் மிரட்டப்படுவதை அப்போதே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் பத்மா.

சங்கரமடத்தின் சொத்து மதிப்பு ஏறத்தாழ பத்தாயிரம் கோடிகள் தேறும். அம்பானி முதல் எல்லா முதலாளிகளுக்கும், சேஷன், கலாம் முதலான அதிகார வர்க்கத்தினருக்கும் பிரம்ம ஞானத்தை வழங்கும் இடமல்லவா சங்கரமடம்! பாபர் மசூதியை இடித்த சங்கபரிவாரத்தின் சார்பில் முசுலீம் அமைப்புக்களிடமும் கட்டைப் பஞ்சாயத்து பேசியவரல்லவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்?

ஆளும் வரக்க்திற்கு தரகன், இந்து மதவெறி அமைப்புகளின் லோக குரு ஆயுள் தண்டனையில் உள்ளே போனால் தர்மத்தை யார் நிலைநாட்டுவது? ஆள்பவர்கள் கைவிட்டு விடுவார்களா என்ன?

சீனியரும் ஜூனியரும் சீக்கிரமே விடுதலையாகி விடுவார்கள். அன்று இந்தக் கொலைகள் பற்றியும் இவர்களது லீலைகள் பற்றியும் கதை கதையாக வந்தவை, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், ஆகிய அனைத்தும், இந்த உலகம் பார்த்த, படித்த அனைத்தும், பொய்யாய் புனைகதையாய் போய்விடும்.

“பிரம்ம ஸத்யம் ஜெகன் மித்யா” என்றார் ஆதிசங்கரர். அதாவது பிரம்மம் தான் உண்மையானது. நாம் காணும் இந்த உலகம் மாயை என்றார். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாகுமெண்டு தயார் பண்ணி, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! உலகம் பொய் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. பிரம்மம் எது? உருட்டுக் கட்டையா, ஏ.டி.எம் மா?

எனினும், இந்த ஜனநாயக நாட்டில் சங்கரசாச்சாரி சட்டப்படிதான் விடுவிக்கப் பட இருக்கிறார். டஜன் கணக்கில் கொலைகள் செய்த ரவுடிகளும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலாளிகளும் சட்டப்படி விடுவிக்கப்படவில்லையா? அந்த ஜனநாயக உரிமை சங்கராச்சாரிக்கு மட்டும் கிடையாதா என்று ஆன்மீக மெய்யன்பர்கள் கேட்கலாம். உண்டு, உண்டு, உண்டு.

இல்லை என்று சொல்வதற்கு இனி கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் மட்டுமே இருக்கிறார். வரதராஜ பெருமாள். அவர் வருவாரா?

http://www.vinavu.com/2009/08/05/sankarachari/