தே.பொருட்கள்:

உருண்டைக்கு:

குட்டி இறால் - 100 கிராம்
பொட்டுக்கட்லை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
தேங்காய் - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


க்ரேவிக்கு:

வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1டீஸ்பூன்

செய்முறை:

* இறாலை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வதக்கி ஆறவிடவும்.

* இறால் மற்றும் தேங்காயை அரைக்கவும்.

*அரைத்த இறால்,தேங்காய் விழுது+பொட்டுக்கடலைமாவு+உப்பு+சோம்புத்தூள்+முட்டை+வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கெட்டியாக கலக்கவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலைமாவு சேர்க்கலாம்.

*பிசைந்தவைகளை உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



*க்ரேவிக்கு வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

*நன்கு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு,எலுமிச்சை சாறு சேர்த்து 2 ந்மிடம் கொதித்தபின் இறக்கவும்.
http://sashiga.blogspot.com/2009/05/blog-post_04.html