அன்றைய கவிஞர்

இயற்கை அழகைப் பாடினார்

பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள்

பால் நிலா, பாடிவரும் தென்றல்

பொழியும் மழைத்துளிகள்

பச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,

பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள்

இவைகளைத் தொட்டன

ஆனால்.........

இரும்பு எஃகுமே

இன்றைய நிலையில்--நமது

பாட்டின் இதயக் கருப்பொருட்கள்!

கவிஞனின் பணி--

கவிதை மட்டுமா.....?

ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று

நடத்தவும் வேண்டும்.

 

---ஹோ-சி--மின்-----