இஸ்ரேல் காஸா மீதான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு, ஹமாஸ் எறிகணைகள் ஏவியதை காரணமாக காட்டி வருகின்றது. ஹமாசின் ராக்கெட் தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்றும், அதற்கான பதிலடியாகவே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை அமைந்தது என்றும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறுவதை, சர்வதேச ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.


ஹமாசின் ராக்கெட் தாக்குதல் தான் இஸ்ரேலை போருக்குள் வலிந்து இழுத்ததா? நவம்பரில் சில பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றமையே, முதலாவது போர் நிறுத்த மீறலாகும். அதேநேரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த வேளை, ஹமாஸ் எந்தவொரு எறிகணை தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த உண்மைகளை இஸ்ரேலிய அதிகாரி Mark Regev தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம் ஹமாஸ் (ஆயுதக் கடத்தலுக்கு) சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்ததால், "முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாகவே" இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற புதிய கதையையும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சி.என்.என். ஒளிபரப்பிய செய்தித் துணுக்கு ஒன்றும், இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை முதலில் மீறியது என்று குறிப்பிடப்பட்டது. இவ்விரண்டு வீடியோக்களையும் இந்தப் பதிவில் பார்வையிடலாம். இஸ்ரேலின் காஸா மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, ஒரு போர்க்கால குற்றம் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

Who Broke The Cease Fire - Hamas or Israel 2008
Israel Confirms Hamas Fired NO Rockets

<

CNN Confirms Israel Broke Ceasefire First