இலண்டன் தேசம் சஞ்சிகையின் இணைய அரசியல் என்பது, எடிட்டிங் மூலம் அரசியல் ரீதியாக சேறடித்து இயங்குவது. இப்படிப்பட்ட இந்த எடிட்டிங் சர்வாதிகாரத்தை, அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்ற நிற்பது. அதை நான் விவாதிக்க முற்பட்ட போது, நடத்திய அந்த கூத்தை நீங்களே பாருங்கள்.

 http://thesamnet.net/?p=59#comment-95 எனது பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதியை நீக்கிய தேசம், அதை அவதூறு என்றது. சரி, அதை எப்படி, எந்த அரசியல் மூலம் தீர்மானித்தார்கள்? எப்படி அது அரசியல் ரீதியாக அவதூறு என்று விவாதிக்க முற்பட்ட போது, தேசம் சஞ்சிகை அந்த அரசியல் விவாதத்துக்கு வெளியில் நடத்திய அந்த அசிங்கம் தான் இவைகள். இந்த அசிங்கத்தை பூர்த்தியாக்க, விவாதத்துக்கு வெளியில் மூகமூடி போட்ட நபர்கள். இனம்தெரியாத நபர்கள் கொலைக்கே ஆதாரமின்றி படுகொலை செய்வதுபோல், இனம் தெரியாத நபரைக்கொண்டு தனிநபரைத் தாக்கி தேசம் அரசியல் செய்கின்றது.

 

இப்படி கொலைகார இயக்கங்களில் தலைவர்கள் முதல் இன்றும் அதில் உள்ளவர்களுடன் நடத்துகின்ற அரசியல் கூத்துகளை பாதுகாக்க, எமக்கு அவதூறு பட்டம் சூட்டுவது பலருக்கு அவசியமாகின்றது. தமக்கு என்று எந்த அரசியல் வரையறையும் கொண்டிராத சமரசவாதம், தொகுப்புவாதம், நட்புவாதம், நடுநிலைவாதம் கொண்ட அரசியல் உறவு, தவிர்க்க முடியாது எமது அரசியலை எதிர்ப்பதை அவசியமாக்குகின்றது. பாட்டாளி வர்க்க விடுதலை முன்வைக்கும் எமது அரசியல், எதிரிகளை தெளிவாக சமகால அரசியல் போக்கின் மீது முன்னிறுத்தி வைக்கின்றது. இந்த நிலை, "தேசத்"தின் சமரசவாதம் சார்ந்த கூட்டு குவியலை தகர்த்துவிடும். அதில் எம்மை அப்புறப்படுத்துவதன் மூலம் தான், அந்த கூட்டு அவியலை செய்ய முடியும். இதனால் எமக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு. இது எவ்வளவு பொய்யானது என்பதையும், அதை எமக்கு மட்டும் பொருத்தியதையும் அம்பலப்படுத்தியேயாக வேண்டும்.

 

அடுத்து மனித குலத்தையே கொன்று குவித்த, அதையே அரசியலாக கொண்டவர்களுடன் உள்ள உறவு, எம்மை அரசியல் ரீதியாக அவதூறாக வரையறுத்துக் காட்டுகின்றது. இதன் மேல் நாம் அரசியல் விவாதத்தை நடத்தியாக வேண்டும். இதை இரண்டு தளத்தில், இந்த அரசியல் பின்னணியை உடைத்துக் காட்ட முனைகின்றோம்.

 

1. எமது எழுத்தை அவதூறாக காட்டி, குற்றங்களை பாதுகாக்க முனையும் அரசியல் பற்றியது


2. எதை அவதூறு என்று எமக்கு கூறினரோ, அதை அவர்கள் ஒரு தலைப்பட்சமாக எனக்கு எதிராக பயன்படுத்தி நடத்திய தனிமனித தாக்குதலைப் பற்றியது

 

எமக்கு அவதூறு, கொலைகாரக் கும்பலுக்கு கம்பளம்

 

மனித விரோத குற்றவாளிகளை விமர்சிக்கும் போது, அதை அவதூறாக சித்தரித்து குற்றங்களை பாதுகாக்கும் அரசியலே, தேசம் இணைய சஞ்சிகையில் அரங்கேறியது. இதை அவருடன் விவாதத்தில் குறிப்பிட்ட போது, அதை அவர் ஒற்றைவரியில் மறுத்தார். இதை விவாதிக்க முற்பட்ட போது, என் மீது குற்றம் கண்டுபிடிக்கவும், அதே நேரம் இனம் தெரியாத அவரின் ஆதரவாளர் நபர்களைக் கொண்டு தனிமனித தாக்குதலை நடத்தினார். எனது அரசியலை மறுத்து, தனிமனிதனாக புலியுடன் சமப்படுத்தி குற்றவாளியாக நிறுவ முனைந்தார். இதையே தான் புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றது. அதாவது புலி அரசியலை அவர்கள் விமர்சிப்பதில்லை. தம்பி தேசம் அதை விட்டுவிடுமா! அதே உத்தி அதே தாக்குதல்.

 

புனைபெயரில் சுற்றி நின்று விவாதத்துக்கு வெளியில் குலைத்த அவதூறுகளைத் தாண்டி, நான் தொடர்ச்சியாக இதை அரசியல் ரீதியாக விவாதிக்க முற்பட்டேன். ஆனால் அவர்கள் இதை விவாதிக்க தயார் இல்லை என்பது தெரிந்த நிலையில், தேசத்தின் தளத்தில் தொடாந்தும் இனி விவாதிப்பதில்லை என்ற முடிவை எடுத்தோம்.

 

இப்படி ஒரு குற்றக் கும்பல் பாதுகாப்படுவதும், தொடர்ந்தும் சமூக குற்றங்களாகவே மக்கள் விரோத அரசியல் செய்வது பல வழிகளில் தொடருகின்றது. இதை பாதுகாப்பதே தேசத்தின் நோக்கம் என்பது தெளிவான நிலையில், அதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

 

ஒரு இயக்கத்தின் தொடர்ச்சியான குற்றங்கள், அதை தலைமை தாங்கிய நபர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக பாதுகாத்து கொண்டவர்கள், இன்று அந்த சமூக விரோத கூலிக் கும்பலுடன் செயல்படுகின்ற நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தான், தேசம் ஆதாரமற்ற அவதூறு என்கின்றது. குற்றம் சாட்டுபனை குற்றவாளியாக நிறுத்தி, இனம்தெரியாத அந்த கொலைகார கும்பலுடன் சேர்ந்து தேசம் அவதூறு பொழிகின்றனர்.

 

இப்படித் தான் தேச இணைய விவாதத்தளம் எம்மை அணுகியது. உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றங்கள் இழைத்தவர்களை, இப்படியும் தேசம் பாதுகாக்க முனைகின்றது. அதே அரசியலை, அந்த குற்ற அரசியல் பரம்பரை தொடர்வதை, அனுசரித்து பாதுகாக்கின்றனர். தனிப்பட்ட நட்பு, மனிதத் தன்மையுடன் கூட இதை பார்க்க அவர்களை அனுமதிப்பதில்லை. அதே அரசியல், அதே இயக்கவாதத்துடன், முன்னைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொண்டு தான் இயங்குகின்றது. அதாவது எந்த இயக்கமும் தனது கடந்தகால குற்றங்களுக்காக சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அந்த அரசியலை கேட்கவா வேண்டும். எல்லாம் கூலிப்பட்டாளங்கள். இந்த கூட்டத்தை சேர்ந்தவர்களை விமர்சித்து குற்றம் சாட்டும் போது, தேசத்துக்கு அது அவதூறாக ஆதாரமற்றதாகப் படுவதாய்க் காட்டி கொதித்துப் போகின்றனர். எடிட்டிங் அரசியல் செய்வதன் மூலம், இதன் மீது தனிமனித தாக்குதலை நடத்துகின்றனர்.

 

மக்கள் விரோத இயக்கங்கள், அதன் தலைவர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக பாதுகாக்கின்றவர்களைக் குறித்தும், அவர்களின் அரசியல் நடத்தைகளை நாம் அம்பலப்படுத்தும் போதும், அதை தனிநபர் தாக்குதல் என்கின்றனர். சிலர் அவர்களை நாம் பண்பற்ற மொழியால், மொழி வன்முறைக்கு உள்ளாக்குகின்றோம் என்கின்றனர்.

 

இது தான், என் மீதான அவதூறுகளின் அரசியல் சாரம். புளுத்துப் போன இந்த அரசியலை சாரத்தை நிறுவ, இரயாகரன் என்ற நபர் தனிப்பட்ட கோபதாபத்துடன் இதை செய்வதாக சித்தரிக்க முனைவதே இதில் உள்ள மற்றொரு அரசியல்.

 

இப்படி இதை தனிமனித நடத்தையாக, தன்மையாக காட்டுகின்றனர். இயக்கங்களின் நடத்தைகளை, தலைவர்களின் நடத்தைகளை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என்பதைக் கூறி, அந்த இயக்க அரசியலை பாதுகாக்கும் நுட்பம். அரசியல் துரோகத்தை மூடிமறைக்கவும், தமிழ் மக்களின் எதிரியிடம் பணம் வாங்கி மக்களை கொன்று குவிக்கும் கொலைகார கூலி இராணுவமாக இயங்கும் அந்த இழிவை மறைக்க, ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் என்று அடை மொழிகள் வேறு. இப்படி சோரம் போகின்ற மலட்டு அரசியல்.

 

புலிக்கு எதிரானவராக உள்ளவர்கள் யார் தான், புலியின் அரசியலை விமர்சிக்கின்றனர். புலியின் அரசியலைக் கூட விமர்சிக்காதவர்கள். நாம் மட்டுமே அதையும் செய்ய முனைகின்றோம். புலியின் அரசியலை விமர்சிக்கும் யாருக்கும், ஒரு மக்கள் அரசியல் வேண்டும். புலி அரசியலை விமர்சிக்காது தனிநபர்களை தாக்குவது, அதேபோல் தம் மீதான விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக காட்டுவது அரங்கேறுகின்றது. தேசம் போன்றவர்கள் கூட, புலியின் அரசியலைக் கொண்டு, தமக்கு முதலாளித்துவ மனித முகத்தை காட்ட முனைகின்றனர். இந்த போக்கில் நின்று, எம்மை அரசியலற்றவராக காட்டி தாக்க முனைகின்றனர். இப்படி எம்மை காட்டுவதன் மூலம், குற்றங்களுக்கு இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பொறுப்பாளிகளல்ல என்று கூறி, பாதுகாப்பதே அதன் அரசியல்.

 

இதைத் தான் தேசம் செய்கின்றது. எனது விவாதத்தை தனது தளத்தில் திசை திருப்பியபடி, இதைத் தான் செய்தது. நான் கருத்துரைக்கின்றேன் என்றால், எனக்கு ஒரு அரசியல் உண்டு. இதை நானே கூறும் போது, அதை தேசம் மறப்பது அபத்தம். எனது அரசியலை யாரும் ஏற்றுக்கொள்ளமால் இருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு அரசியல் உண்டு. அது தவறு, என்றால் அதை முதல் நிறுவ வேண்டும். அதாவது எப்படி? எந்த புரட்சிகர வர்க்கங்களுக்கு எதிராக உள்ளது என்று நிறுவவேண்டும். அதேபோல் எந்த சமூக அக்கறையுள்ள நபருக்கு எதிராக உள்ளது என்றும் தான். அதைச் செய்ய எவருக்கும் அரசியல் வக்கு கிடையாது.

 

என்ன செய்கின்றனர், அரசியல் சார்ந்த எனது செயல்பாட்டை எடிட்டிங் அரசியல் மூலம் சேறடிக்கின்றனர். இந்த அரசியல் செயல்பாட்டை அங்கீகரிக்காமல் இருப்பது, வெறம் தனிமனிதனாக காண்பது என்பதும், அப்படிக் காட்டுவதும் அவர்கள் கொண்டுள்ள அரசியல் வங்குரோத்தின் விளைவு. நாம் எமது சொந்த பெயரில் வைப்பதை, புனைபெயர் வெள்ளை வேட்டிகாரப் பொறுக்கிகளின் தாக்குதலுடன் ஒப்பிடுவது, எடிட்டிங் செய்வது நயவஞ்சகத்தனமானது.

 

தமது அரசியல் என்னவென்று சொல்லாமல் செய்கின்ற, பிற்போக்கு அரசியல் ஆட்டம் காண்பதன் விளைவு தான், எம்மை கடிக்க முனைகின்றது. நான் ஒரு அரசியலை, அதாவது மார்க்சியத்தை அரசியலாக கொண்டவன். இது மார்க்சியமல்ல என்று சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு, அதை மறுத்து நிறுவும் உரிமையும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து, நீங்கள் சொல்வதை மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என்று உளறுவது, அபத்தம். இப்படி கூறிக்கொண்டு, அரசியலற்ற இரயாகரனை பிரித்தெடுத்து, தாக்குவது என்ற கடைகெட்ட பாதையை, தேசம் தெரிந்தே செய்கின்றது.

 

எதற்காக, யாரும் பேசாத, பேசத் தயாரற்றதுமான, இலங்கையில் நடந்த குற்றங்களின் குற்றவாளிகள் யார் என்ற விடையத்தை பேசுவதால் அதற்கு எடிட்டிங். இவர்கள் கூடி அரசியல் கும்மாளம் அடிக்கும் அரசியல் தளத்தில், அந்த குற்றவாளிகளும் உள்ளனர் என்பதே உண்மை. அதை அம்பலப்படுத்தும் எம்மையும், எமது கருத்தையும் தனிமனித அவதூறாக ஒற்றை வரியில் சேறடிப்பது. அது எப்படி என்று அரசியல் ரீதியாக, நிறுவ முடிவதில்லை. எடிட்டிங் மூலம் நிறுவ முனைகின்றனர்.

 

இலங்கையில் நடந்த பாரிய குற்றங்களின், குற்றவாளிகள் யார்? தணிக்கை எடிட்டிங் மூலம் பாதுகாக்கின்ற கூத்தைக் கடந்து, நாங்கள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லுகின்றோம், யார் அந்த குற்வாளிகள் என்பதை. இயக்கத்தின் தலைமையைச் சேந்தவர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக வழிகாட்டியவர்கள், இன்றும் அதை பாதுகாக்கின்றவர்கள், அந்த அமைப்புகளில் செயல்படுபவர்கள் குற்றவாளிகள் என்பதில் யாருக்கும் விவாதம் இருக்க முடியாது. யாரெல்லாம் சுயவிமர்சனம் செய்யவில்லையோ, யாரெல்லாம் அந்த அரசியலை மறுக்க முனையவில்லையோ, அவர்கள் குற்றவாளிகள் தான். இதை இன்றும் பார்க்கத் தவறுகின்ற, அவர்களை பாதுகாக்கின்ற, அவர்களுடன் உறவைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும், இந்த குற்றங்களுக்கு உடந்தையாக நின்றுதான் அரசியல் செய்கின்றனர். இப்படி சொல்வது வறட்டுவாதமல்ல. குறுகிய தனிமை வாதமும் அல்ல. இதை அவதூறு என்று சொல்லி செய்வது, மனிதனுக்கு எதிரான குற்றங்களை மூடிப் பாதுகாப்பது தான்.

 

இதை செய்ய முனையும் தேசமும் அதையொத்தவர்களும், இதற்கு ஆதாரமில்லை என்பது அரசியல் நகைச்சுவை தான். தமிழ்ச்செல்வனின் பல்லுப் போலே. இதை ஆதாரமற்ற அவதூறாக கூறுவது என்பது, சமூக விரோத குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான்.

 

சமகாலத்தில் கருணாவின் கைது பற்றிய செய்தியும், போர் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் என்ற தகவலும் வருகின்றது. யார் எப்படி எந்தத் தளத்தில் விசாரிப்பது என்பதில், எமக்கு மாறுபட்ட அபிப்பிராயம் உண்டு. குற்றங்களுக்கு உடந்தையாக அதை வழிகாட்டிய பாலசிங்கத்தை பாதுகாத்த பிரிட்டன், எப்படி கருணாவை குற்றவாளியாக்க முடியும் என்பது தான் இதில் உள்ள வேடிக்கை. குற்றவாளிகளே குற்றவாளிகளை விசாரித்தல் தான், மேற்கின் அரசியல் சார்ந்த விசாரணை நாடகங்கள்.

இது ஒருபுறம் இருக்க, கருணா குற்றவாளிதான். ஆயிரம் ஆயிரம் மக்களின் மரணத்தை, அந்த மக்களின் அழிவை ஏற்படுத்திய குற்றவாளி தான். இது நிறுவப்பட்டால், புலிகளின் ஒவ்வொரு தலைவனும் குற்றவாளிகள் தான். இது சிறிலங்கா அரச தலைவர்களுக்கும் பொருந்தும்.

 

இது எப்படி சரியானதோ அப்படித்தான், கூலி இயக்க தலைவர்கள் நிலையும். குற்றத்தையே அரசியலாக்கி அதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட இயக்கத்தின் தலைமைகள் மீதான விமர்சனத்தை குற்றச்சாட்டை அவதூறக காட்டுவது, அதை பாதுகாப்பது தான். குற்றத்துக்கும், தொடரும் குற்றங்களுக்கும் துணை போவது தான்.

 

இதில் என்ன சந்தேகம். நான் குற்றச்சாட்டை வைத்த ஈ.என்.டி.எல்.எவ் வை எடுங்கள். கோடி கோடியாப இந்தியாவிடம் பணம் வாங்கி இயங்கும் ஒரு கூலிக்க மாரடிக்கும் துரோக இயக்கம். இந்தியப் பணம் இல்லையென்றால், அதன் பெயரே இருக்காது. ஆயிரக்கணக்கில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து படுகொலை செய்த ஒரு இயக்கம். எநததனை தாலியை அறுத்தவர்கள். அவர்கள் இருந்த புளாட்டில், உள்ளியக்கத்திலேயே சில நூறு பேரைக் கொன்றவர்கள்.

 

இந்த இயக்கத்தை, இந்த இயக்கத்தில் உள்ளவர்களை நாம் குற்றம் சாட்டினால் அது அவதூறாம். இந்த இயக்க வானொலியில் அரசியல் ஆய்வு செய்யும் அந்த 'நேர்மையான" சிவலிங்கம், முடிந்தால் ஈ.என்.டி.எல்.எவ் படுகொலைகளைப் பற்றி அந்த வானொலியில் ஆய்வு செய்யட்டும் பார்ப்போம். இன்று உள்ளவர்கள் அதற்கு பொறுப்பாளிகள் என்ற குற்றம் சாட்டட்டும் பார்ப்போம். அவர்களின் அரசியல் நேர்மை இப்படி ஒட்டையானது. ஈ.பி.டி.பி கொலைகளை அவர்களின் வானொலியில் ஆய்வாக செய்யட்டும் பார்ப்போம். சரி இதை "தேசம" செய்யட்டும் பார்ப்போம். உங்கள் அரசியல் விபச்சாரத்தால் முடியாது. எம்மால் மட்டும் தான் முடியும். அந்த மக்களுடன், அந்த மக்களின் துயரங்களுடன் நாம் மட்டும் முரணற்ற வகையில் நிற்க முடிகின்றது. இதனால் தான் எமக்கு சேறடிப்பு.

 

மனிதனைக் கொன்று போட்டு, கூலிப்பணத்தில் வளர்ந்த கூலித் துரோக இயக்கம் தான் ஈ.என்.டி.எல்.எவ். யாராவது மறுக்க முடியுமா? இந்த இயக்கம் இன்று ஜரோப்பாவில் ஜனநாயகத்தின் பெயரில் இயங்குகின்றது. இந்த இயக்கம் கருணாவுடன் சேர்ந்து புலிக்கு எதிராக நடத்திய கொலைகளை மூடிமறைத்துக் கொணNட, தற்போது புலியுடன் சேர்ந்து உறுமுகின்றது. இது தீப்பொறி ஊடாக, அதன் முகத்தின் ஒரு பக்கத்தை காணமுடிகின்றது. இப்படி குற்றங்களுக்கு துணையாக, உடந்தையாக, பங்காளியாக, சதிகாரக் கும்பலாக இன்றும் அது இருக்கின்றது, இயங்குகின்றது.

 

இதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் தான் ராம்ராஜ். இவர் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரையிலான குற்றங்கள் சார்ந்து, ஒரு குற்றவாளியா இல்லையா? ஆம் குற்றவாளி. இதை தனிமனித தாக்குதலாக காட்டுவதால், அந்த குற்றம் பொய்யாகிவிடாது.

 

புளாட் என்ற அமைப்பில், உள்ளியக்க படுகொலைகளை நடத்திய போது, அதை ஆதரித்ததால் இயக்கத்தின் விசுவாசமான நம்பிக்கைக்குரிய முன்னணி உறுப்பினரானவர். கிளிநொச்சி அறிந்த பரந்தன் ராஜன் என்ற ரவுடியும், கொலைகளில் முக்கிய பங்காற்றியவன். மனித விரோதத்தையே செய்து முக்கிய உறுப்பினரிடையே அதிகாரச் சண்டைகள் உருவானது. இந்திய உளவு அமைப்பின் தேவையுடன் வேறு சிலர் இணைந்தும் பிரிந்தும், தனி கூலி இயக்கமாக ஈ.என்.டி.எல்.எவ். உருவானது. இதன் குற்றங்கள் முழுக்க ரீ.பீ.சீ ராம்ராஜ்சுக்கும் பொருந்தும்.

 

கருணாவுடன் சேர்ந்து நடத்திய கொலைகளிலும், ஈ.என்.டி.எல்.எவ் பங்குபற்றியது. இந்த குற்றங்களைத் தெரிந்தும், அதை 'ஜனநாயக ரீ.பீ.சீ" வானொலி ஆதரித்தது. இன்று வரை அதை மூடிமறைத்து, ஜனநாயக உபதேசம் செய்கின்றனர். இன்று புலியுடன் ஒரு அரசியல் கூத்து. இப்படி கொலைகார அரசியலையே அரசியல் நடைமுறையாக கொண்ட ஒரு இயக்கம், தமது செயல்களை எப்படி உரிமை கோரிச் செய்யும். சாட்சியங்களை விட்டு வைத்தா, அது ஜனநாயக வேஷத்தைப் போடும். "தேசம" அப்படித் தான் என்கின்றது. என்ன நரித்தனம்.

 

கேள்வி தெளிவானது. அந்த இயக்கம் குற்றவாளி இயக்கமா இல்லையா என்பதுதான்? அந்த இயக்கத்தின் அரசியல் மக்களைக் கொன்று குவிக்கும் அரசியலா இல்லையா என்பது தான்? மனித குற்றங்களை அந்த இயக்கம் செய்ததா இல்லையா என்பது தான்? மக்களை ஒடுக்க ஒரு கூலிக் குழுவாக, கூலி இராணுவமாக இயங்குகின்றதா இல்லையா என்பது தான்? இதை நீங்கள் மறுத்தால், நிறுவ முடிந்தால், எம் மீதான குற்றச்சாட்டுகள் சரியானது.

 

இதையே அரசியலாக செய்த இயக்கம் பற்றிய குற்றச்சாட்டு. அந்த இயக்கத்தின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதைத்தான் தேசம் மறுக்கின்றது. இந்த மாதிரியான இயக்கத்தின் தலைவர்கள், சகலவிதமான குற்றங்களையும் செய்கின்ற, உடந்தையாக செயல்படுகின்றவர்கள், எந்த சமூக அறநெறியும் அற்றவர்கள். தெளிவாக கூறினால், பாரிய குற்றங்களை செய்கின்ற ஒரு இயக்கத்தில் இருக்கின்றவர்கள். இவர்கள் எந்த சமூக அறநெறியையும் கொண்டிருப்பதில்லை. சதி, மூடிமறைத்த முகங்கள், வஞ்சகம், கொலை வெறித்தனம், சோரம் போகும் கைகள் என்று, பல இழிமுகங்கள் இவர்களுக்கு உண்டு. யாராலும் இதை மறுக்க முடியாது.

 

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, யாரும் நிறுவ வேண்டிய அவசியம் கிடையாது. அது அவர்களின் அரசியல் முகமாக, வாழ்வாக, அவர்களின் இயக்கமாக, அரசியல் சார்ந்ததாக உள்ளது. அவர்களை, அவர்களின் அரசியல் பொறுக்கித்தனத்தை இயக்கத்துக்கு வெளியில் பிரித்துக் காட்டுபவர்கள், நயவஞ்சகர்கள் மட்டும் தான். உண்மையை உண்மையாக ஒத்துக்கொள்ள, சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்கள் தான் இதை செய்கின்றனர்.

 

சமூகத்தில் இருந்து (இவர்களை ஒத்தவர்களிடம் இருந்தல்ல), இவர்கள் பற்றி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, ஆதாரம் அவசியம் கிடையாது. அவை அவர் சார்ந்த இயக்கத்தின் அன்றாட செயல்கள் தான். இந்திய கூலிப்படையாக இருக்க பணம் வாங்கியவர்கள், அந்த கூலித்தனத்தை நிறைவேற்ற கொன்று குவிப்பவர்கள், யாரிடமும் எப்படியும் எங்கும் கை நீட்டுபவன் தான். அவனிடம் என்ன அரசியல் நேர்மை இருக்கமுடியும். மனிதவிரோத, சமூக விரோத செயல்களை விட வேறு எந்த அறநெறியும் இருப்பதில்லை.

அவர்கள் ஜனநாயக வேஷம் போடலாம், மார்க்சிய மூலம் ப+சலாம். எப்படிப்பட்ட கோமாளி வேஷம் போட்டாலும், கடந்தகால நிகழ்கால குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, உடந்தையாக இருப்பதை யாராலும் மன்னிக்க முடியாது.

 

உண்மையில் புலிக்கும் எமக்கும் இடையில் ஒரு கோடு நிரந்தரமாக பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றது. இதனால் புலி மீதான இது போன்ற குற்றச்சாட்டுகள் மேல், இயல்பாக யாரும் கேள்வி கேட்பதில்லை. புலியல்லாத தளத்தில், இந்தக் கோடு எதுவும் கிடையாது. கொலைகார கூலி இயக்கங்களின் தலைவர்கள் முதல் பொறுக்கித் தின்னுகின்றவர்கள் வரை, புலியல்லாத தளத்தில் கோடுகள் எதுவுமின்றி இன்றி சுதந்திரமாக வலம் வருகின்றனர்.

 

உண்மையான ஜனநாயகவாதிக்கும், கூலிக் கொலைகார கருங்காலிகளுக்கும் இடையில் மூடிமறைக்கப்பட்ட அரசியல் விபச்சாரமே நடக்கின்றது. உணமையான சமூக அக்கறை உள்ளவர்களுக்கும், கொலை செய்வதையே அரசியலாக கொண்டவர்களுக்கும் இடையில் எந்த அரசியல் கோடும் கிடையாது.

 

நாம் மட்டும் தான் அந்த அரசியல் கோட்டை தெளிவாக கொண்டுள்ளோம். இதனால் எமது செயல்பாட்டை எதிர்த்து, எம்மை எதிரியாக பார்க்கின்ற போக்கு என்பது இயல்பானது. எமது ஆயுதமோ மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியது. அதை மறுக்கின்றவர்களை நாம் அம்பலப்படுத்தும் போது, அதை அவதூறக காட்டுவது நடக்கின்றது.

 

நாங்கள் தெளிவாகவே கேட்கின்றோம். ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், புளாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற இயக்கங்கள், மனிதப் படுகொலைகளை நடத்தவில்லை. ஆக உங்கள் ஜனநாயகப் படி, புலிகள் மட்டும் தான் கொலைகளைச் செய்தவர்கள். இந்த இயக்கங்கள் குற்றவாளிகள் இல்லையா? அதன் தலைவர்கள் தானே அதை பொறுப்பேற்க வேண்டும். இன்றும் இதில் சிலர் பல்லுக் கழட்டிய பாம்பாக இருக்கின்றது என்பதுக்கு அப்பால், மற்றவர்கள் கொலைகளைச் செய்கின்றனர். இதன் தலைவர்கள் கடந்த மற்றும் நிகழ்கால குற்றங்கள் மீது குற்றவாளிகள் அல்லவா?

 

உங்கள் ஜனநாயகம் இதைப் பற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. தீக்கோழி மாதிரி நிலத்துக்குள் தலையை புதைத்துக் கொண்டு செய்யும் குழிபறிப்பு அரசியல், மறுபக்கத்தில் தமிழ் மக்களின் முதுகில் குத்தும் ரீ.பீ.சி அரசியல். மனிதவிரோதத்தை அரசியலாக கொண்ட காடைத்தனம் இது. இந்தக் கூலி இயக்கங்கள், மக்களுக்கு எதைத்தான் வைக்கின்றன. உங்களிடம் ஒரு சொட்டு நேர்மை இருந்தால், சொல்லுங்கள். மனிதக் குற்றங்களை, சமூகக் குற்றங்களையும் அரசியலாக கொண்ட இயக்கங்களில் இருந்து, நாங்கள் அதாவது நாம் மட்டுமே தெளிவான ஒரு கோட்டைக் கீறி, அதை நிறுவி வருகின்றோம். இந்த அரசியலை அவதூறு என்றும், ஆதாரமற்றது என்றும் சொல்லுகின்றவர்கள், அந்தக் குற்றத்துக்கு உடந்தைதான்.

 

அவர்களுடன் எமக்கு எந்த அரசியல் உறவும் கிடையாது. அவர்களைப் புலியல்லாத தளத்தில் அம்பலப்படுத்துவது தான் எமது அரசியல். அவர்களின் தலைவர்கள் யாரையும் நாம் சந்திப்பது கிடையாது. அவர்கள் மக்களின் பிரதான எதிரிகள். இந்த வகையில் எமது எதிரிகள் கூட.

 

இதனால் எம்மீது அவதூறு. இப்படி அவர்களைப் பாதுகாப்பவர்கள், அவர்களுடன் நடத்துகின்ற அரசியல் தேன்நிலவுகள், துரோக சந்திப்புகள், இரகசிய நடவடிக்கைகள், பேரங்கள் என்று பற்பல. புலம்பெயர் நாடு எங்கும் இந்த அரசியல் விபச்சாரம், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. இதனால் அடிக்கடி இந்த கொலைகார தலைவர்கள், மேற்கு நாடுகளுக்கு வருகின்றனர். இப்படி இரகசிய சந்திப்புகள், இரகசிய சதிகள் நடக்கின்றது.

 

இந்தக் குற்றவாளிகளின் தயவில் ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தான், எம்முடன் மோதுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள். கூறப்போனால் புலியல்லாத தளத்தில் உள்ள 90 சதவீதமானவர்கள், குற்றங்களை மறைத்து அதற்கு துணை நிற்பவர்கள். சமூக விடுதலைக்கு எதிரான கடைந்தெடுத்த அற்பர்கள். பொறுக்கித் தின்பதையே அடிப்படையாக கொண்ட, அரசியல் நக்குண்ணிகள்.

 

வெளிப்படையான எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. மூடிமறைத்த, தமது அரசியல் நடத்தைகளை இரகசியமாக நடத்துபவர்கள். புனை பெயர்களில் அவதூறு பொழிபவர்கள். இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சதிகள், ஏகாதிபத்தியத்தின் ஆள்காட்டியாக இயங்குவது உட்பட, இயக்கங்களிள் குற்றங்களை திட்டமிட்டு பாதுகாப்பதே, இவர்களின் அரசியல். எமக்கு அவர்கள் சுமத்துவது ஆதாரமற்ற அவதூறுப் பட்டம்.

 

ஆம், நாம் சரியாக இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இந்த அரசியல் பிளவு அவசியமானது. இது மட்டும் தான், தமிழ் மக்களின் உண்மையான மனித உணர்வுகளுடன் ஒன்று கலந்து, எடுப்பாக தன்னை எதிர்காலத்தில் வெளிப்படுத்தும். அதை நோக்கிய போராட்டம் தொடரும்.

இதன் இரண்டாம் பகுதி தொடரும்.

 

 பி.இரயாகரன்
07.11.2007