அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"

 

" நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?

 

ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து நிக்கற!

 

ஒன்னோட அவசரத்துல, நாளையப்பத்தி நெனைக்காததுனால, அவளை கெர்ப்பமாக்கிட்டு, ஒனக்கென்ன போச்சுன்னு ஹாய்யா வந்துட்ட.

 

நீ செஞ்ச காரியம் எப்படிப் பட்டதுன்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளு.

 

சின்ன வயசுலேந்து ஒன்னை எம்மடியில ஒக்கார வெச்சுகிட்டு ஸ்டியரிங்கைப் பிடிச்சு ஒன்னைக் காரோட்ட வெச்சேன்.

 

ஆனா, இன்னி வரைக்கும் ஒனக்கு லைஸென்ஸ் எடுக்கலை.

 

ஏன்? 

 

ஒனக்கு அதுக்கான வயசு இன்னும் வரலை.

 

ஒனக்கு கார் ஓட்டத் தெரியும்.

 

ஆனா, ஒரு ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னா என்ன பண்ணணும்னு தெரியாது.

 

யாரைக் கூப்புடணும்; எங்கே கூட்டிக்கிட்டு போவணும்னு தெரியாது.

 

அது மட்டுமில்லை.

 

இதுக்கப்புறம் நீ கார் ஓட்டவே முடியாது..... இன்னும் கொஞ்ச நாளைக்கு.

 

அது மாதிரிதான் வாழ்க்கையும்!

 

வயசுக் கோளறுல, ஒரு ஆர்வத்துல நீ செஞ்சுட்டேன்னு எனக்கு புரியுது.

 

ஆனா,ஊர் ஒலகத்த்துக்கு இது புரியுமா?

 

புரியாது.

 

அந்த பொண்ணுக்கு நீ வாழ்வு கொடுக்கணும்.

 

இப்படி சொல்றதே எனக்கு அவமானமா இருக்கு.

 

ஆனா, இதுதான் இப்ப நம்ம ஒலகம்.

 

இதுக்கான முழுப் பொறுப்பும் நீதான் சொமக்கணும்.

 

அதான் முறையுங்கூட.

 

இத நீ செய்வேன்னு எதிர் பாக்கறேன்."

 

இதுதான் முறையான பிள்ளையைப் பார்த்து சொல்லக் கூடியது.

 

இந்த கார் உதாரணம் ஒரு பெண்ணுக்கும் பொருந்துவதே!

 

பெண் பறவை கர்ப்பமானால், ஆண் பறவை கூடு கட்டும்.

 

தன் துணை இறந்தால், வயிற்றில் கல் சுமந்து ஆண் பறவை கீழே விழுந்து உயிர் மாய்க்குமாம்!

 

இவற்றை விடவா கேவலமானவர்கள் நாம்!

 

பறவைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்!

 

இதுவரை நாம் பார்த்தது, ஒரு மாதிரி நம் கட்டுப்பாட்டில் இருந்த நம் பிள்ளைகளைப் பற்றி!

 

இத்தோடு நம் பொறுப்பு முடிந்தததா?

 

மணமாகி, மணம் முடித்து, அவர்களை அனுப்பியபின், நமக்கு ஏதாவது பொறுப்பு உண்டா?

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html