செய்வோமா? குழம்புப்பொடி!
தேவையானவை:
விதைக் கொத்தமல்லி----250 கிராம்
துவரம்பருப்பு---------- 75 கிராம்
அரிசி-------------------75 கிராம்
ஜீரகம்-------------------75 கிராம்
மிளகு-------------------75 கிராம
வெந்தயம்----------------50 கிராம்
கொத்தமல்லியை தனியாக வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, பிறகு மற்றவற்றையும் அதேபோல்
வறுத்துக்கொள்ளவேண்டும். லேசாக வாசனை வரும் வரை.
காய்ந்த மிளகாய்---விருப்பத்துக்கேற்ப---150 அல்லது 200 கிராம்
கறிவேப்பிலை மிளகாய்க்கு சமமாக.
இவை இரண்டையும் கடாயில் தேவையான எண்ணையூற்றி மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். சிறிது ஆறியதும் மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகிக்கலாம்.

இதுவே வத்தக்கொழம்புப்பொடி.
பெரியவர்களும் குழந்தைகளும்....சாரி..சாரி.. பழக்கதோஷம்.
வாய்க்கு வொணக்கையாக, காரமாக சாப்பிடும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எலுமிச்சையளவு புளி கரைத்துக்கொண்டு இந்தப்பொடி 4-5 கரண்டிகள் + மஞ்சள் பொடி 2 கரண்டிகள் + தேவையான உப்பு சேர்த்து கலக்கி அதோடு ஒன்றிரண்டாக அரைத்த சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லியும் சேர்த்து பாத்திரத்தில் வெந்தயம் பொறித்து குழம்புக் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கு பொறுத்தமான காய்கள்...பூண்டு, முருங்கக்காய்-கத்தரிக்காய், ஊறவைத்து வேகவைத்த 
மொச்சை இன்னும் கைக்கு கிடைத்த காய்கள் எல்லாமும். குழம்பு விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

இதை நான் பூண்டு போட்டு கன்டென்ஸ்டாக செய்து வைத்துக்கொள்வேன்.

http://9-west.blogspot.com/search/label/புளிக்குழம்புப்%20பொடி.