இலக்கிய சந்திப்பில் பல தலைப்புகளில் சில பிரமுகர்கள் மாறி மாறி கதைத்தனர். இவர்கள் அனைவரும் எப்பிரச்சனை மீதும் தீர்வை முன் வைக்காததுடன், பிரச்சனைகளிலுள்ள அரசியலையும் ஆராயாமல் திட்டமிட்டே கைவிட்டனர். பிரச்சனைகளிலுள்ள அரசியலையும் கதைக்க முற்பட்டபோது அவர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்தனர். இப் பிரமுகர்கள் பார்வையாளர்களை மாணவர்களாக மட்டும் இருக்கக்கூறி தமது புத்திஜீவித்தனத்தை காட்ட முனைந்தனர். இவர்களினால் வைக்கப்பட்ட கருத்துக்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிப்பது போல் வெறும் தகவல்களை மார்க்சிசத்துக்கு விரோதமாக (ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்க்கு எதிராக) ஓதினர். இவர்கள் பிரச்சனையின் தோற்றுவாய்க்கோ, அதற்கான தீர்வையோ முன் வைக்காது புத்திஜீவித்தனத்தைக் காட்டினர்.

 

சஞ்சிவி இதழ்21 இல் உதிசபாபதி என்பவரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தை மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம். அவர் சொல்வது போல் இலக்கியச் சந்திப்பு கருத்துக்கள் மீது தீர்வை வைத்ததா?

 

நான் நினைக்கிறேன் தீர்வைச் சொல்லாமல் தப்பித்துக் கொள்வது தமது முகங்களை காப்பாற்றிக்கொள்ளவே தவிர வேறில்லை. எங்கே தமது முகத்தின் அடையாளம் தெரிந்துவிடுமோ என்ற மனப்பயம்! மனப்பிரமை!

 

சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டம். தனிமனிதப் பிரச்சனைகள் நாளை சமூகப்பிரச்சனையாகலாம். தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம். எனக் கூறினான் பாரதி. எனவே தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் பற்றி பேசுவதிலோ, எழுதுவதிலோ, விவாதிப்பதிலோ, விமர்சனப் பார்வைக்குட்படுத்துவதிலோ தவறேதும் காணமுடியாது. இதனால் பயனுள்ள விவாதிப்புகள் எம்முன் எழலாம். அவை ஆரோக்கியமானவையாகவே கொள்ளப்படும். இது இப்படியிருக்க எழுத்தாள பயில்வான்கள் தம்மை ஏன் மறைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லை. - நன்றி சஞ்சீவி.

 

இதை மாவோ நாம் எந்த விசயத்தைச் செய்தாலும், அதன் உண்மையான சூழ்நிலைகள், அதன் இயல்பு, இதர விசயங்களுடன் அதன் உறவுகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டாலொழிய அதை ஆளும் விதிகளை அறிய மாட்டோம். அல்லது அதை எப்படிச் செய்வதென அறியமாட்டோம். அல்லது அதை நன்றாக செய்யமாட்டோம். என்பது யாரும் அறிந்ததே. - நன்றி சீனப் புரட்சி யுத்தத்தில் யுத்ததந்திரப் பிரச்சனைகள்.

 

அகநிலையாகவும், ஒருதலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் பிரச்சனைகளை அணுகுபவர்கள் தான் களத்திற்கு வந்த அதே கணத்தில், சூழ்நிலைகளை ஆராயாமலும், விசயங்களை முழுமையாக (அவற்றின் வரலாற்றையும் அவற்றின் இன்றைய நிலைமையையும்) நோக்காமலும், விசயங்களின் சாரத்தை (அவற்றின் இயல்பையும் ஒரு விசயத்துக்கும் இன்னொன்றுக்கும் இடையிலுள்ள அக உறவுகளையும்) ஊடுருவிப் பாராமலும், தாம் சரியென்று கருதி கட்டளைகள் அல்லது உத்தரவுகள் இடுவர். இத்தகைய நபர்கள் தடுக்கி விழுவது திண்ணம்.

- நன்றி------நடைமுறை பற்றி----

.

இப் பிரமுகர்கள் அடிப்படையைக் கைவிட்ட பிரச்சனைகள் மீது, எமது கருத்தை மிகச் சுருக்கமாக முன்வைக்கிறோம்.

 

நாடக அரங்கம்-- அங்கும் இங்கும்.

இத் தலைப்பில் பேசியவர் எம் மத்தியில் சிறந்த நாடகங்களோ, நாடக இயக்குனர்களோ உருவாகவில்லை என்றார். இவர் கவனத்தில் எடுத்த மத்திய தர வர்க்க நாடகஙகளில் கூட அதன் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் விட்டதுடன் தனது முகமூடியைக் கழற்ற தயாராக இருக்கவில்லை. சிறந்த நாடகங்கள், சிறந்த இயக்குனர்கள் உருவாக வேண்டுமெனக் கோரினார். நாம் நினைக்கிறோம் கருத்துக் கூறியவர் பிரார்த்தனை மூலம் கடவுளிடம் எம்மெல்லோரையும் கோரும்படி வேண்டினார்.

 

ஒரு சிறந்த நாடகம் உருவாகவேண்டின் ஒரு சிறந்த இயக்குனர் உருவாக வேண்டும். ஒரு சிறந்த இயக்குனர் உருவாக வேண்டின் எது அவசியமோ அதை கைவிட்டு விடுகின்றனர். ஒரு சிறந்த இயக்குனர் உருவாக அவர் சமூகத்தை சார்ந்து இருக்க வேண்டும். அவர் சமூகத்தைச் சார்ந்தால் மட்டும் போதாது. சமூகப் பிரச்சனைகளில் பங்கு கொள்பவராக இருக்கவேண்டும். அப்போதே அவர் சொல்லும்.,செயலும் சமூகத்தை சார்ந்திருக்கும். அப்படி இயக்குனர் ஒரு நாடகத்தை இயக்கும் போது அது சமூகத்தைச் சார்ந்திருப்பின் அந் நாடகம் ஒரளவு வெற்றி பெறும். அந் நாடகம் சமூகத்தின் பிரச்சனையை தொட்டு நிற்குமானால் நாடகம் அம் மக்களிடம் ஒரளவு வெற்றிபெறும். அந் நாடகத்தினூடாக சமூகத்திலுள்ள பிரச்சனையை மட்டும் காட்டின் ஒரளவு வெற்றி பெறும். முழுமையாக வெற்றி பெற வேண்டின் சமூகத்திலுள்ள பிரச்சனையைச் சொல்லுவதுடன் அதற்கான தீர்வை முன்வைக்கவேண்டும். தீர்வை முன்வைக்காது வெளிவரும் நாடகம் அச்சமூகத்தில் உள்ளவர்கள் யதார்த்தமாக சந்தித்துகொண்டிருக்கும் பிரச்சனையை மீண்டும் பாப்பதால் அவர்களிடம் நாடகம் ஒரளவு வெற்றி பெறும். இது போனN;ற கதை, கவிதை, ஓவியம்..... என அனைத்தும் தீர்வை முன்வைக்கத் தவறின், அக் கலைகள் ஒரளவே வெற்றிபெறும். மற்றும் இந்நிகழ்வுகள் எப்போதும் ஒரு பகுதி மக்களிடமே வெற்றி பெறும். சமூகத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் ஒரு கலை வெற்றி பெற வேண்டுமாயின் அம்மக்களின் பிரச்சனையை சொல்வதுடன், அதற்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.

 

இந்த வகையில் சிறந்த நாடகங்கள், சிறந்த இயக்குனர்கள் உருவாக வேண்டின் கடவுளிடம் வேண்டுவதற்கு பதில் ஒடுக்கப்பட்ட மககளிடம் சென்று அவர்களின் பிரச்சனையைச் சொல்வதுடன் அதற்கான தீர்வை முன்வைப்பதனூடாகவே உருவாக முடியும்.

 

மாஸ்ரிஸ்ட்

 

இது தொடர்பாக பலர் தங்களுடைய கருத்துக்களைக் கூறினார்கள். இன்று ஜரோப்பிய ஒன்றிணைவு என்பது உள்முரண்பாடுகளுடன் ஏன் உருவாகிறது. என்ற பிரச்சனையில் அடிப்படைப் பிரச்சனையை கைவிட்டனர். இன்று சர்வதேசப் பொருளாதார நெருக்கடியும் முன்னணிக்கு வந்த ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளின் வளர்ச்சியும், அமெரிக்க இராணுவபலத்துடன் மூன்றாம் உலகநாடுகளிலேற்பட்ட சந்தைக்கான போட்டியைத் தொடர்நது உருவானதே ஜரோப்பிய ஒன்றிணைவு. இங்குள்ள பிரச்சனை முற்றுமுழுதாக மூன்றாம் உலக மக்களையும் சுரண்டுவதே. 1ம் 2ம் உலகயுத்த காலத்தில் முன்னைய நிலையில், இன்று உலகை மறுபங்கீடு செய்ய முனையும் நிலையில் தனித்து சுரண்ட இயலாதெனப் புரிந்து கொண்ட ஜரோப்பிய நாடுகள், தமக்கிடையில் பல முரண்பாடுகளிரு,ப்பினும் சுரண்டுவதில் ஜக்கியப்படடுள்ளனர். ஜக்கியப்பட்ட சுரண்டல் அமைப்பை ஒரு வர்க்கப் போராட்டத்தினூடாக(சுரண்டல் இல்லாமல் செய்வதனூடாக )மட்டுமே வெற்றி கொள்ளமுடியும். மாறாக இப்படியிருக்கும் அப்படியிருக்குமென சொல்லுவதால் யாரும் எதையும் செய்துவிட முடியாது. மாறாக இம்மாதிரியான சுரண்டலில்லாமல் ஒழிப்பதனூடாக மக்கள் இயல்பாகவே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஜக்கியத்தை நோக்கி நகர்வார்கள். இந் நாடுகள் தமக்கிடையில் சந்தைக்காக போட்டியிட்டுக் கொண்டே மக்களைச் சுரண்டுவதில் ஜக்கியப்படுகின்றனர். இப் பிரச்சனையை சுட்டிக்காட்டத் தவறியதுடன். ஜரோப்பிய ஒன்றிணைவில் இலாப நட்டம் பார்ப்பது போல் ஒரு முதலாளி நிலையில் நின்று பிரச்சனையை திசை திருப்பினர். எப்போதும் ஒரு பிரச்சனையின் அடிப்படையை அறிவது மட்டுமின்றி அதற்கான ஒரு தீhவையும் முன்வைக்க வேண்டும். இல்லாமல் முதலாளிகள் போன்று நன்மைகளையும், தீமைகளையும் பற்றி பேசுவதால் ஒடுக்கப்பட்ட மக்கள் எதையும் சாதிக்க முடியாது. சில பிரமுகர்கள் தங்களை பிரமுகர்களாக எண்ண மட்டுமே முடியும்.

 

ஜரோப்பிய இலக்கியமும் நாமும்

 

இத்தலைப்பில் நால்வர் பேசினார்கள். இது தொடர்பாகப் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். பேசிய நால்வரில் இருவர் ஜரோப்பிய இலக்கியத்திலிருந்து விலகி தமக்குத் தெரிந்த மொழி பற்றிக் கதைத்தனர். இவர்கள் எப்போதும் எத்தலைப்பை எடுப்பினும் இறுதியில் அதில் வந்து நிற்பர். இதை பாரதி என்பவரும் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய இலக்கியமும் நாமும் என்றால் ஜரோப்பிய இலக்கியப் படைப்புக்களை மொழி பெயர்த்தல், வாய்மூலம் சொல்லல்..... எனப் பலவழிகளுடாக வெளிப்படுத்தபட வேண்டும். ஆனால் அப்படிப் பெரிதாக வெளிக்கொண்டு வராத நிலையில் இந் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் வெளிக்கொண்டுவந்த ஒரு விடயத்தை ஆராய்வோம். ஏனெனில் அவர்கள் எதைச்செய்ய முற்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கலாமோகன் என்பவர் ஒரு கதையை வாசித்தார். அவர் கதையை வாசிக்க முன்பு தான் எதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதை விளக்கும் போது, எல்லோரிடத்திலும் நின்று வேறுபட்டு உண்மையை உரைப்பதற்க்கு எந்தப் பயமுறுத்தலுக்கும் அஞ்சாது சொல்வதாக கூறி வாசிக்கத் தொடங்கினார். அவர் தொடர்ந்து வாசித்த கதை அவர் போர்த்தியிருந்த போலிமுகமூடி தான் என்பதைப் பார்க்க முடிந்தது.

 

ரசியாவில் 1905ம் ஆண்டுகளில் ஒரு இளைஞனால் ஒரு கோமகன் கொலை செய்யப்படுகிறான். அவனைக் கொலை செய்யும்படி கூற முன்பு, அவன் இயக்கத்திலிருந்த ஒரு பெண்ணை விரும்புவதும், அவள் கடமையை உணர்த்தி அனுப்புவதும், அவன் கொலை செய்யாமல் திரும்புவதும், இரு சிறுவர்கள் அவனுடன்(கோமகனுடன்)வந்ததால் கொலை செய்யவில்லையென அவன் காரணம் கூறுவதும், அவனின் நண்பர்கள் அவனைக் கோழையென நகைப்பதும், அதனால் உந்தப்பட்டு அவன் சவால் விடுவதும், பின் கோமகன் அவனால் கொல்லப்பட்டதும் விதவை மனைவியின் கேள்விக்கணைகளும், அவனையொருக் குற்றவாளியாக இச் சமூகத்தின் முன் ஒரு பயங்கரவாதியாகக் காட்டியிருந்தார் அந்த பிரஞ்சு எழுத்தாளர். இக் கதையில் கலாமோகனுக்கு உடன்பாடு இருந்தபடியால் தான் அவர் இதை வாசித்திருந்தார். முற்போக்கு என சொல்லிக் கொள்ளும் கலாமோகன் போன்றோரின் அரசியல் எந்த விதத்திலும் முற்போக்காக இருப்பதில்லை. இக் கதையின் மீது விமர்சனத்தை சபையோர் வைக்காது கைதட்டி ஆரவாரித்ததினூடாக சபையிலிருந்த முற்போக்குகளும் அவரின் பக்கமே இணைந்து கொண்டனர்.

 

நாம் இக் கதையை விமர்சிக்க முன், நாம் எந்த தனிநபர் பயங்கரவாதத்தையும் ஏற்பவர்களல்ல. ஒரு தனிநபர் பயங்கரவாதத்தை செய்பவனின் நடவடிக்கை ஒட்டுமொத்த அரசு பயங்கரவாதத்தை மக்கள் மீது நடத்தும் அரசுக்குமிடையில் அவனின் நடவடிக்கையில் நியாயம் இருக்கும். ரசிய சமூதாயத்தில் ஒரு கோமகன் எப்படி உருவாகிறான். அவனின் சொத்துக்கள், அதிகாரங்கள் பற்றி மௌனம் சாதிக்கும் இவர்களின் நோக்கு என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்;. ரசிய சமுதாயத்தில் ஆட்சியிடத்திலிருந்த கோமகன் கொல்லப்பட்ட பின்பு அவனின் விதவை மனைவிக்காக கண்ணீர் வடிக்கும் கலாமோகன், அக் கோமகனுடன் மனைவியும் இணைந்து நடத்திய ஆயிரக்கணக்காண மக்களின் படுகொலையைப் பற்றிக் கதைக்கத் தயாராக இல்லை. ஏன் அவர்கள் எந்த சொத்துக்களுமற்ற பட்டினிப் பாட்டாளர்கள் தானே. கோமகன் வீசியெறியும் சில்லறைகளுக்கு அடிபடும் மக்கள் தானே என்ற நினைப்பு கதையை வாசித்த கலாமோகனுக்கு மட்டுமின்றிக் கைதட்டி ஆரவாரித்த முற்போக்குகளுக்குமேயென எண்ணத் தோன்றுகிறது. இக் கோமகன் அங்கு மக்களை ஒட்ட உறிஞ்சி அவர்கள் சாப்பிடுவதற்கில்லாமல் குளிரில் நடுங்கி நாளாந்தம் இறந்துகொண்டிருந்த போது அக் கோமகனுக்கோ அவரின் மனைவிக்கோ கண்ணீர் வரவில்லை. ஏன் கதையை வாசித்த கலாமோகனுக்கே கண்ணீர் வரவில்லை. ஆனால் தனது கணவர் இறந்தவுடன் கண்ணீர் விடும் அப் பெண்ணின் சோகத்தில் ஆழ்ந்து விடும் கலாமோகன், கண்ணீர் வடிப்பது எதன் அடிப்படையிலெனின் சுரண்டும் வர்க்கத்தின் இழப்புக்காகவே. இதனூடாக பின்னால் வந்த பாட்டாளிகளின் ஆட்சியையும் வெறுப்பதையும் பார்க்க முடிகிறது. கதையை வாசித்தவர் சோவியத்தில் சுரண்டல் நடப்பதை விரும்புவதுடன், சோவியத்தின் இன்றைய மாற்றத்தையும் வரவேற்பவரே.

 

அரசு பயங்கரவாதத்திற்கெதிராக போராடுபவர்களை(எந்தவகையானதெனினும்) பயங்கரவாதிகள் (கோமகனைக் கொன்றவனைப் போல்) எனப் பட்டம் சூட்டும் அரசுகளும், இவ்வெழுத்தாளர்களும் ஏகாதிபத்தியத்தின் சிறப்பான சேவகர்களே. இக்கதையில் அவனின் காதல் உணர்வுகளைக் கடமை என்றும். பயந்தாங்கொள்ளி என்றும் சொல்லி அவனை வேண்டுமென்றே இக்கொலையைச் செய்வதற்கு அனுப்பியதாக கதை சொல்லப்படுகிறது. இங்கு புரட்சியை விரும்பும் இளைஞர்களை கொச்சைப்படுத்துவதாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவே இப்படி ஈடுபடுகின்றனரெனச் சொல்லி, ஒரு புரட்சிக்கெதிராக கலாமோகன் கதை சொல்ல அங்கிருந்த முற்போக்குப் பிரமுகர்களும் கைதட்டினர்.

 

அவ் இளைஞன் கோமகனைக் கொலை செய்து விட்டான். கோமகனின் மனைவி அவனை சந்திக்கிறாள். தனது கணவனுக்காக கண்ணீர் வடிக்கிறாள். ஆனால் அவ்விளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிற்கெதிராக கதைக்கவில்லை ஏன்?. இதுபற்றி கலாமோகன் ஏன் கண்ணீர் வடிக்கவில்லை. இதிலிருந்து அக் கோமகன் சார்ந்த அரசமைப்பை ஏற்றுக்கொள்ளும் கலாமோகனும், சகபாடிகளும் முற்போக்கு என்றதற்கு அர்த்தமென்ன? இக் கதையையோ, கதையை வாசித்த கலாமோகனையோ விமர்சித்தால் சிலருக்கு கோபம் வரக்கூடும். ஆனால் எம்மால் இப்படிப்பட்ட கதைகளைக ;கேட்டுத் தலையாட்டிக் கைதட்டிவிட முடியவில்லை. இச் சந்தர்பத்தில் தான் அசோக் என்பவர் கேட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதைகள் வரவில்லையை? என்று. இதைக் கேட்கக் கூடாது என சிவசேகரம் தடுத்ததுடன் எமக்கெதிராகவும் தாக்குதலை நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதைகள் எத்தனையோ இருக்க இக்கதையை வாசித்த கலாமோகனும் அதை அங்கீகரித்த சிவசேகரம் போன்றோர்களும் இச் சமூகத்தில் தம்மைத் தாம் முற்போக்குவாதிகளெனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. மேலும் அசோக் என்பவர் இக்கதையின் ஆசிரியரை இந்திய எழுத்தாளர்கள் புதுமைபித்தன்........போன்றோருடன் ஒப்பிட்டபோது நித்தியானந்தன் விழுந்தடித்து இல்லை என உரத்த குரலில் கூறி கதை ஆசிரியரைப் பாதுகாத்தார். எமக்கு இக்கதை ஆசிரியரைத் தெரியாது. அது போல் அவரின் எழுத்துக்களையும் வாசித்ததும் கிடையாது. ஆனால் அவர் எழுதிய கதையை கேட்டபோது அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானது என்ற வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக எழுதும் எந்த எழுத்தாளர்களுடனும் ஒப்பிடக் கூடியவரே. இதில் நித்தியானந்தன் காப்பாற்றப் புறப்பட்டது கோமகனின் வாழ்வையும் சொத்துரிமையையும் தான். நித்தியானந்தன் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அவர்களின் போராட்டத்திற்கும் எதிரானவர்களென்பதை இக்கதை ஆசிரியரைப் பாதுகாக்க முற்பட்டதனூடாக தெளிவாக இனம் காட்டப்படுகிறது.

 

ஓவியக் கண்காட்சி .

 

ஒவியக் கண்காட்சியில் நான்கு ஒவியர்களால் வரையறுக்கப்பட்ட ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்;பட்டிருந்தன. ஒவியங்கள் புரியவில்லை ஏன்? என்ன அவலத்தை பிரதிபலிக்கின்றன, ஒவியங்கள் முன்னைய ஒவியர்களின் தழுவல்களாக வெளிவந்துள்ளன என்ற குரல்கள் பல வெளிவந்தன. ஒரு ஓவியன் வானத்திலிருந்து ஓவியங்களை பெற்று விடுவதில்லை. சமூக இயக்கத்தில் அவனைப் பாதிக்கும் விடயங்களைக் கொண்டே அவன் ஓவியங்களை தீட்ட முயற்சிக்கிறான். அவனுக்கு முன்னைய ஓவியங்கள் சில பாதிப்பைக் கொடுக்கலாம். அவைகளிலிருந்தே தழுவல்கள் உருவாகின்றன. ஒரு ஓவியன் சிறந்த ஓவியனாக மாற வேண்டுமாயின் அவன் சமூக இயக்கத்தில் இயங்கவேண்டும். அதாவது சமூக இயக்கத்தில் இணைந்து போராடும் போது மட்டுமே அவனால் சிறந்த ஓவியங்களை வரைய முடிகிறது. அதை விடுத்து பிற்போக்கு அரசையும், அச்சமூக அமைப்பையும் முழுமையாக நிராகரிக்காமல் அந்நியப்பட்ட நிலையில் வரையும் ஓவியங்கள் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்கப்படுவதில்லை.

 

ஓவியங்கள் எதுவாயினும் ஒரு பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஓவியத்தில் வெளியாகும் சம்பவங்கள் ஒடுக்கப்படுபவர்களுக்கு அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக அமைந்த எந்த ஓவியமும் இதிலொரு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு ஓவியனின் ஓவியங்கள் அவன் எதன் பக்கத்தைச் சார்ந்தவன் என்பதை தெளிவாகக் காட்டிவிடும். ஓவியங்கள் சிறப்பான கருத்தைப் பிரதிபலிக்க ஒரு ஓவியனுக்கு அரசியல் பார்வை இருக்க வேண்டும். அப்போது தான் ஓவியம் சிறப்பாக வெளிப்படுவதுடன் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கு ஓவியம் விளங்கவில்லை என்ற வாதத்தை எடுப்பின், சில ஓவியர்கள் ஏதாவது கோடுகளைக் கிறுக்கி விட்டு அதை ஓவியம் என்பார்கள். அவ் ஓவியங்கள் யாருக்கும் (ஏன் வரைந்தவர்க்கே) புரியாது. ஓவியம் என்பது சமூகத்திற்கு சிலப் பிரச்சனைகளை வெளிக்காட்டப்பட வேண்டும். அப்படி வெளிக்காட்ட முடியாத ஓவியர்கள் தங்கள் போலி முகங்களைக் பாட்ட முன் வராமல் ஏதாவது வரைந்து விட்டு அதை ஓவியம் எனச் சொல்லி விடுவார்கள். இதைப் பொதுவாக புகழ் பெற்ற முதலாளித்துவ சீரழிவு ஓவியங்களிலும், தம் புகழுக்காக சில பிரமுகர்கள் வரையும் ஓவியங்களிலும் காணலாம். ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் தொடர்பான விமர்சனத்தை தலைமை தாங்கியவரை முன்வைக்க கோரியபோது அதை விமர்சிக்காமல் நழுவி விட்டார். இந்த நிகழ்வை எமக்கருகில் இருந்த நித்தியானந்தன் ஜெயபாலனிடம் நல்ல காரியம் செய்தார் என கூறினார். இங்கு விமர்சனம் வைப்பதைத் தவிர்த்த நிகழ்வையிட்டுக் கூறிய கருத்து, கருத்துக் கூறுவதைக் (முரண்பாட்டை) கண்டு அஞ்சுவதுடன் ஓர் ஓவியனின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அமைந்ததுமாகும். ஓர் ஓவியன் விமர்சனத்தை எதிர் நிலையில் நினறு;, பார்ப்பானாயின் அவன் புகழை மட்டும் எதிர்பார்த்து ஓவியம் வரைபவனாக இருப்பதுடன், அவன் சிறந்த ஓவியனாக மாற முடியாது.

 

மனிதனும் மாசுபடும் சூழலும்

இத்தலைப்பில் பேசியவர்கள் சூழல் எப்படி மாசடைகின்றதென விளக்கினர். அதாவது மாசு காணப்படும் தன்மைகள், வடிவங்கள் என நீண்ட தகவல்களை முன் வைத்தார். அதில் குறிப்பிட்ட அனேகமான தகவல்கள் இவ்விலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோர் அறிந்தவையே. அப்படி அவர்கள் அறியாவிடினும் தகவல்களாக முன்வைக்கப்பட்டன. இத் தகவல்களை வழங்குவதால் என்ன இலாபம். எமது அறிவை வளர்ப்பதாக வைப்பினும் எப்படி சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும். இதைப்பற்றி வேண்டுமென்றே கதைக்காமல் விட்டதையும், இதற்கெதிராக போராட வேண்டியதையும் சுட்டிக்காட்டி நாம் பேசியதைத் தொடர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு எழுந்த நித்தியானந்தன் அமெரிக்கா சூழல் அசுத்தம்; தொடர்பான கூட்டத்தில் முரண்பட்டமையைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா ஒத்துக்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொண்டார். இதே கோரிக்கையை சூழல் மாசடைவதற்கான கூட்டத்தில் மூன்றாம் உலக நாடுகள் சார்பாக கலந்து கொண்டவர்களும் கோரினார்கள். நித்தியானந்தனை விட பல சிறப்பான புள்ளிவிபரங்களுடன் விளக்கி அமெரிக்காவையும், மேற்கத்தைய நாடுகளையும் ஒத்துக்கொள்ளக் கோரியவர்களே. அவர்கள் கோரிக்கையுடன் கைவிட்டது போல் நித்தியானந்தனும் உணர்ச்சிவசமான கோரிக்கையுடன் திட்டமிட்டே பிரச்சனையைத் தொடராமல் திசை திருப்பி கோருவது, பிரார்த்தனை செய்வது எனப் போராட்டத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டார்.

 

சூழல் மாசடைதல் என்பது ஏகாதிபத்தியங்களாலேயே உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கும் இவர்கள், தமது நாட்டில் வெளியேறும் கழிவுகளைத் தடுப்பதற்காக மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்வதும், அளவுக்கு மீறிய நுகர்வைக் கொண்டு இருப்பவர்களும், தமது நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மூன்றாம் உலக நாட்டில் உற்பத்தி செய்வதும், தமது நாட்டுக் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுவதும் மற்றும் கடலில் கொட்டுவதும்....... என ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டே சூழலை மாசுபடுத்துகின்றன. இதைப்பற்றி ஏகாதிபத்தியங்களுடன் கதைக்க முற்படும் இடங்களில் இவ் ஏகாதிபத்தியங்கள் சனத்தொகைப் பெருக்கத்தை சூழல் மாசடைவதுடன் சம்மந்தப்படுத்தி தமது சுரண்டலை தொடர்கின்றன.

 

இந்த வகையில் ஏகாதிபத்தியங்களும், மூன்றாம் உலக நாடுகளின் பொம்மை அரசுகளும் செய்து வரும் சூழல் மாசுபடுத்தும் நடவடிக்கையை நாம் கதைப்பதால் மட்டும் தீர்த்துவிட முடியாது. அதுபோல் தனிநபர் என்ற வகையில் சிந்திப்பதாலும் தடுத்துவிட முடியாது. ஆனால் இலக்கிய சந்திப்பில் இவற்றையே செய்தனர். இதை எதிர்த்தபோது எம்மை அவர்கள் எதிரியாகவே பார்த்தனர். இதில் எம்மை எதிரியாக பார்ப்பவர்கள், சூழல் மாசடைதல் தொடர்பாக கதைப்பது என்பது சரியான போராட்டத்தைத் திசைதிருப்பி சூழல் மாசடைவதில் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாப்;பதேயாகும். இதற்கெதிராக போராட அமைப்பு ரீதியாக இணைந்தே போராட வேண்டும். இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் குறைந்த பட்சம் இங்கு போராடும் அமைப்புகளுடன் இணைந்து போராடும் படி கோரத் தயாராக இல்லை. ஏனெனில் இங்கு போராடுபவர்களுடன் இணைந்து போராடும் போது போராட்ட நடவடிக்கைகளை வன்முறை மூலம் இவ்வரசுகள் அணுகுகின்றன. அப்படி அணுகும் போது போராடுபவர்கள் இதற்கு மாற்று வழியாக புதிய அரசை(தாம் அரசை கைப்பற்ற) உருவாக்க முயல்வார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாக இருக்கும். இது வெறும் தகவல்களை கூறுபவர்களுக்கெதிரான அரசாக இருப்பதால் போராடவேண்டும் எனச ;சொல்வதை தவிர்த்து உணர்ச்சிவசப்படடு வேண்டுகோளுடன்(பாராளுமன்றத்தில் நடப்பது போல்) மக்களைத் திசைதிருப்பி போராட்டத்தைக் கை விடுகின்றவர்கள் இப்பிரமுகர்களே.


புகலிடவாழ்வும் பெண்களும்.

 

இலக்கியச் சந்திப்பில் இந் நிகழ்ச்சியுடன் எமக்கு முற்றாக கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டமையினால் வெளியேறினோம். இந்நிகழ்ச்சியை நடத்திய நால்வரில் ஒருவருக்கும், வேறு சிலருக்கும் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டது. பெண்கள் பிரச்சனை என்பது பெண்கள் மட்டுமே பேச முடியும் என்ற பார்வையைக் கொண்ட சில பெண்கள் இருந்த நிலையில், ஆண்கள் இருக்க விவாதம் உருவானது. சமர் 2 இல் இது தொடர்பான எமது நிலையை உறுதி செய்ததுடன் இவ்விதழிலும் பெண்விடுதலை சம்பந்தமான சில விடயங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையும் வெளிவருகிறது. நாம் இவ் விடயங்களை சுருக்கமாக விவாதிக்க முற்படுகிறோம்.
விவாதத்தில் பெண்களால் எழுப்பப்படட பிரச்சனைகளாக வீட்டில் பெண்கள் ஆண்களால் ஒடுக்கப்படுகின்றனர். தொலைபேசியில் ஆண்கள் எம்மை கேட்கும் கேள்ளிகள். இன்று ஜரோப்பிய நாடுகளுக்கு வரும் பெண்களை தரக்குறைவாக கதைத்தல், ஒரு வீட்டில் பெண்ணே தேனீர் தரும் போது முதலில் கணவனுக்கு கொடுத்த பின்பே எனக்கு, பெண்கள் வேலைக்குப் போய் வந்த பின் வீட்டு வேலைகளை செய்தல்....எனப் பல பிரச்சனைகளை முன் வைத்தனர். இப்பிரச்சனைகள் பெண்களுக்கு உண்டு என்பதை சமர் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது. இதைவிட இன்னும் பல விடயங்களை பெண்கள் எதிர்கொள்ளுவதாகவே நாம் பார்க்கிறோம். பெண்கள் எழுப்பிய இப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட ஒரு அமைப்பையும், மறறும் ஒடுக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவும் நாம் கதைத்தோம். இதில் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கைவிட்டு நடுத்தர வர்க்கப் பெண்களாகிய எமது பிரச்சனைக்குப் போராடக்கூடாதா என்று நாம் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளத் தயாரின்றி வன்மத்துடன் கதைக்க முற்படடனர்.

 

பிரச்சனைகளாக இங்கு எழுப்பிய விடயங்கள் ஜரோப்பிய நாடுகளிலுள்ளவர்களுக்குச் சிறப்பாகப் பொருந்துவதால் இப் பிரச்சனைகள் இலங்கையிலிருந்து இங்கு வந்த போது ஏற்பட்ட பாதிப்புக்களுடன் கலந்ததே. இலங்கையில் எம் ;மக்களின் கலாச்சாரமாக நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமேயுள்ளது. எமது நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்திலிருந்து இங்கு வந்த நாம் ஜரோப்பிவில் காணப்படும் முதலாளித்துவ சீரழிவுக ;(ஏகாதிபத்திய சீரழிவுக்) கலாச்சாரத்துக்குள் வாழ்கிறோம். இந் நிலையில் இவ்விரு விடயங்களுக்குள் முரண்பாட்டுடன் போராட்டம் தீவிரமடைகின்றன. எமது பெண்கள் ஜரோப்பிய பெண்களின் வாழ்க்;கைகளைக் கண்ணுற்று அதன் பாதிப்பால் தாக்கப்படுகின்ற நிலையில் இங்கே பெண் விடுதலைக்கான குரல்கள் எழுகின்றன. இப்படி ஜரோப்பாவில் வெளிவரும் குரல்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.

 

1) ஜரோப்பியப் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தின் சரியான அம்சங்களை மட்டும் கோருதல்

 

2) ஜரோப்பியப் பெண்களின் சீரழிவுடன் கூடிய சுதந்திரத்தைக் கோருதல்

 

இவ்விடயத்தில் முதலாவது வகையினரின் கோரிக்கைகள் முழுமையான பெண்விடுதலையைப் பற்றிய ஒரு பார்வை இன்றி, முதலாளித்துவம் உருவான போது பெண்கள் பெற்றுக் கொண்ட சில சலுகைகளையே கோருகின்றனர்.

 

இரண்டாவது வகையினரின் கோரிக்கையோ ஜரோப்பிய பெண்நிலைவாதிகள் என கூறுபவர்களின் சீரழிவையையே கோருகின்றனர். சில பெண்கள் தனியாகவும், அதேநேரம் திருமணம் செய்தோர் (ஆண் பெண் அடங்கலாக) கோருவதுடன், தம்மை முற்போக்குகள் எனவும் அழைத்துக் கொள்கின்றனர். முற்போக்கு என்ற சொற் தொடரை வைத்து எல்லாப் பிரச்சனையிலும் பிழைப்பது போல் பெண்களும் பிழைக்கின்றனர். தமது பலவீனங்களை, தமது செயல்களை நியாப்படுத்த ஈழப்போராட்டத்தில் உள்ள முற்போக்கை தவறாக பயன்படுத்தி சரியான பெண்விடுதலைக்கு எதிராக செயல் ஆற்றுகின்றனர். இவர்கள் வைக்கும் ஒரு இரு கருத்துக்களை ஆராய்வோம்.

 

சிலர் திருமணம் என்பதை செக்ஸ் மட்டுமென்ற வரையறைக்குள் மட்டுப்படுத்திவிடுகின்றனர். இதிலிருந்து கொண்டு எமது சமுதாயத்திலுள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை இவர்கள் தவறானதெனச் சொல்லி ஆண், பெண் இருவரும் திருமணத்திற்கு முன்போ பின்போ பல ஆண்களுடனும், பல பெண்களுடனும் செக்ஸ் வாழ்வை கோருகின்றனர். இது ஜரோப்பிய சமூகத்தில் சீரழிந்த கலாச்சாரமாக பரிணாமம் அடைந்துள்ளதுடன், பொதுவாக இது தலைநகரங்களில் மட்டும் காணப்படும் சிறப்பான தன்மையே. இதை எம்மவர்கள்(ஆண்கள்,பெண்கள்) கோருவதென்பது ஒரு விடுதலையல்ல. மாறாக பெண் சீரழிவே. எமது சமுதாயத்திலுள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையில் ஒரு சில தவறான அம்சங்கள் இருந்தபோதிலும் அவ்வுறவு முறையே சரியானது. இது இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல ஜரோப்பியாவிலும் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

இக்கூட்டத்தில் பேசிய பெண் தனக்கு காதல் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இவ்வாதம் நாம் எடுக்கும் கருத்துடன் எந்தளவு முரண்பாடு கொண்டதெனப் பார்க்கலாம். அப்பெண் முன்பொரு கவிதை எழுதிய போது அதில் பயன்படுத்திய வசனங்களை இக்கட்டுரையில் பாவிப்பதை தவிர்த்து விடுகிறோம். ஏனெனில் அச்சொற்தொடர்கள் எம்மத்தியில் பேசுவது தரக்குறைவானது என்பதால். கவிதையில் ஓர் ஆணின் ஆண்மையை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடெனக் கூறியிருந்தார். இவ் விவாதத்தில் இவருக்கு காதல் ஏற்பட்டதெனில் ஆண்மையில்லா ஓர் ஆணையா விரும்புகிறார்.? அதையெப்படி அறிந்து கொண்டார். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவையே. இதில் ஓர் ஆணின் ஆண்மையை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக காட்ட முயன்ற இப் பெண்ணிலைவாதி பெண் ஒடுக்கு முறையை தவறாகப் பார்ப்பதை இங்கு நாம் பார்க்கலாம். இயற்கையின் பரிணாமத்துடனேயே ஆண், பெண் உருவமைப்பும், அவர்களிடையே வேறுபாட்டையும் தோற்றுவித்தது. இதுவே ஆணுக்குரிய ஆண்மையை உருவாக்கியது. பெண்ணை ஒடுக்கவேண்டும் என்று ஆணால் உருவாக்கப்பட்டதல்ல. இதை ஆண் உருவாக்கியதாக பார்க்கும் இப் பெண்ணிலைவாதியின் கருத்துக்கள் உண்மையான பெண்விடுதலை கருத்துக்களல்ல. இது போன்ற ஒரு பெண் கருவை சுமக்கும் நிகழ்வென்பது ஆணால் திணிக்கப்பட்டதல்ல. ஒரு பெண் கருவை சுமப்பதென்பது பரிணாமத்தின் நிகழ்வுகளே. இதை ஆண்களால் திணிக்கப்பட்டதாக கருதுபவர்கள் பெண்கருவைச் சுமக்கும் இந்நிகழ்வை பெண்விடுதலையுடன் முடிச்சுப் போட்டு பெண்ணிலையின் சரியான பக்கங்களைப் பார்க்கத் தவறுவதுடன் அதைத் தடுக்கின்றனர். ஓர் ஆணின் ஆண்மையும், ஒரு பெண் கருவைச் சுமக்கும் தன்மையும் ஒரு பரிணாம வளர்ச்சியே. இதைக் கொச்சைத் தனமாகப் பார்ப்பதென்பது பெண்விடுதலை தொடர்பான பார்வையின் குறைபாடுகளே. இப்படிப்பல......

 

நடுத்தர வர்க்கப் பெண்களாகிய நாம் எமக்குள்ள பிரச்சனைகளைக் கதைக்கக் கூடாதா? என்று குரல் எழுந்தன. இதில் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கப் பெண்களும் தமது பிரச்சனைகளை கதைக்க வேண்டும். ஆனால் இங்கு பிரச்சனைகளை கதைப்பது மட்டுமா? என்பதே நமது கேள்வி. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோர் பெண் எழுத்தாளர்கள் என அறிமுகமானவர்கள். இதற்கெதிரான ஒரு போராட்ட வடிவத்தைப் பற்றிக் கதைக்காமல் விட்டு நீங்கள் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களென சொல்வதால் எதையும் சாதிக்க முடியாது, போராட்டம் ஒன்றினூடாக மட்டுமே பெண்விடுதலையை அடையமுடியும். போராட்டம் மூலம் விடுதலையடைய ஒரு ஸ்தாபனம் வேண்டும். அந்த ஸ்தாபனம் நடுத்தரவர்க்கத்தை மட்டும் பிரதிபலிப்பின் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில் ஒரு பெண் தான் மட்டும் போராடி பெண் அடக்குமுறையை உடைக்க முடியாது. அதுபோல் நடுத்தர வர்க்கப் பெண்கள் தமக்கென அமைப்புக்கூடாக ஒருபோதும் சமுதாயத்திலுள்ள அனைத்து வர்க்கப் பெண்களுக்கும் மட்டுமின்றி தனது வர்க்கத்திற்க்கும் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. எனவே அனைத்து வர்க்கப் பெண்களும் விடுதலையைப் பெற அனைத்து வர்க்கப் பெண்களின் பிரச்சனைகளையும் ஆராய்வதும் அதேநேரம் அதற்கான வேலைத்திட்டம் எப்படியிருக்கவேண்டுமெனவும் ஆராயவேண்டும். பெண் ஒடுக்குமுறையை வெறும் சம்பவங்களினூடாக இனங்காண்பது என்பது பெண் ஒடுக்குமுறையை இனம் காண முடியாமல் தடுக்கும். பெண் ஒடுக்குமுறையென்பது பெண்ணின் உழைப்பு மதிக்கப்படுதல் தொடர்பானதே. உழைப்பு ஆண்களால் மட்டுமின்றி, ஆண்களுக்கு சார்பாக உருவாகியுள்ள அரசமைப்பிலும் பெண்களின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை. உழைப்பு மதிக்கப்படாமல் விடுவதிலிருந்தே உருவாகிறது பெணகளின் அனைத்து ஒடுக்குமுறைகளும். பெண்களின் பிரச்சனைகளுக்காக மட்டும் தனித்துப் போராடியும் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில் பெண் ஒடுக்குமுறை சமூக கட்டுமானமாக (அதாவது ஏகாதிபத்தியம் சார்பாக) உருவாகியுள்ள நிலையில் இதையுடைக்க அனைத்துப் பிரச்சனைகளுக்காக (சமூககட்டுமானத்தையுடைக்க) போராடும் போது மட்டுமே பெண்ணும் விடுதலையைப் பெறமுடியும். இது ஒரு புரட்சியுடன் மட்டுமின்றி கலாச்சார மாற்றத்தினூடாகவே உழைப்புக்கு மதிப்பு பெறுவதுடன் பெண் விடுதலையைப் பெறமுடியும். எனவே பெண்விடுதலை தொடர்பாக சிந்திப்பவர்கள் ஒரு ஸ்தாபனத்தின் (அனைத்து பெண்களையும் கவனத்தில் எடுத்து) உருவாக்கம் பற்றியும், ஒரு சமூக மாற்றத்தைப பற்றியும் சிந்திக்க வேண்டும்.