"ஏ சுயநல அறிவுஜீவிகளே !

நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்

இடம் பிடிக்க முடியாதவர்கள்

ஆனால்

உங்களுக்கு உண்டி சமைக்கும்

உங்களுடைய ஆடையை விடுக்கும்

உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்

உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்

அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்

எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது

ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி