என்னையும்

எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்....
..
"சூத்திரன்"- என்ற சங்கரமடத்தின்
கழிப்பறை வாக்கியத்தை
பெரும் "பாக்கியம்"
என்று சுமந்து திரியும்
தாமரைக்கனியின்தோலைப்
போல
எனக்குத் தோல் தடிப்பில்லையே!
..
தமிழ் "நீச பாஷை" என்றுமுகம்
சுளிக்கும் சங்கராச்சாரிக்கு
அன்றாடம்"அம்மா"
என்று அழைக்கும்
என்மே கரிசனம் வந்ததெப்படி?
..
நான் சாணிபோடும்
ஓசைசமஸ்கிருதமோ?
எங்கள் குடும்பக்காளைகளைக
சாப்புக்கு அனுப்புவதைக்கண்டு
கொள்ளாமல்
எம் மேல் மட்டும்பாசம் வந்ததென்ன?
பெண்டாளும் தந்திரம்
மாடுகளை வரையிலுமா!
..
வேள்விகளில்
உயிரோடு எரிக்கப்பட்ட
எம் மூதாதையர்களின்
வாரிசுகள்
நாங்கள்வழக்காடுகிறோம்....
..
இந்துவாக
இருந்ததில்லை நாங்கள்
வைக்கோல் மொம்மைகளைக்
காட்டும் போனும்
வாஞ்சையுடன் சுரக்கும்எம்
..
பால்மடி
வழியும் கண்ணீரையும்
நடுங்கும்
முகங்களையும் கூட
விடாது
பசியாறும் இந்து மதவெறி
..
எப்படி நாங்கள்
இந்துவாக முடியும்?
..
எம் சந்ததிப் பகையே
சங்கர மடமேவேண்டாம்
விலகுஉழைக்காத வகையினம்
என்றுஎன்மேல் உள்ள குற்றச்சாட்டை
உறுதி செய்வதாய் இருக்கிறது
உனது ஒட்டுறவு
..
எப்படி பொருந்தும்?
கரப்பதே என் பாடுகறப்பதே
உன் பண்பாடு
பனிக்குடம் உடையும்
முன்பேசீம்பாலுக்குச் செம்பு தேடும்
உன் வக்கிரங்களுக்கு
மத்தியில்வாழ்வதைவிட
கன்றின் கறியை காமுற்ற
யாக்ஞவல்கியனின் சந்ததியிடம்
..
உயிர்பிச்சை பெறுவதைவிட
செத்த பின்பும்
சினை பார்த்து அறுக்கும்
எம் மக்களுக்கு உணவாகவே
எனக்கு சம்மதம்
.
இந்துவாக வாழ்வதைவிட
விலங்காகச் சாவதே
எனக்குச் சம்மதம்
..
-துரை.சண்முகம்