நாள்தோறும் சாதம், சாம்பார் எனச் செய்வதை விட்டு, சாம்பாரில் சேர்க்கும் மரக்கறிச் சத்திற்கு நிகராக சாதத்தில் மரக்கறிகளைச் சேர்த்து இவ்வாறு செய்து கொள்ளலாம். சுவையாகவும் இருக்கும். வழமையில் மாற்றத்தையும் அளிக்கும்


தேவையான பொருட்கள்

1. பசுமதி அல்லது சம்பா அரிசி – 1 கப்

2. கரட் -1

3. லீக்ஸ் -1

4. கோவா – 5-6 இலைகள்

5. பீன்ஸ் - 10

6. வெங்காயம் - 2

7. கஜீ – 10

8. பிளம்ஸ் - சிறிதளவு

9. மஞ்சள் பொடி சிறிதளவு

10. உப்பு சிறிதளவு

தாளிக்க

1. பட்டர் - 1 டேபிள் ஸபூன்

2. பட்டை – 1

3. கிராம்பு – 2

4. ஏலம் - 4

5. பிரிஞ்சி இலை – 2
செய்முறை

1. குக்கரில் பட்டர் ½ டேபிள் ஸ்பூன் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து ரைஸ் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு அவித்து எடுங்கள்.

2. கரட், லீக்ஸ், கோவா, பீன்ஸ், வெங்காயம், சிறியதாக வெட்டி வையுங்கள். தாச்சியில் ½ டேபிள் ஸ்பூன் பட்டர் விட்டு, வெங்காயம் போட்டு வதங்க மரக்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சாதத்தைக் கிளறி இறக்குங்கள்.

3. சிறிதளவு பட்டரில் வட்டமாக வெட்டிய கரட் துண்டுகள், கஜீ, பிளம்ஸ் வறுத்து எடுங்கள்.

4. சேவிங் பிளேட்டில் சாதத்தைப் போட்டு கரட், கஜீ பிளம்ஸ், வெங்காய வளையங்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு

பட்டாணிக்கறி, எண்ணைய்க் கத்தரிக்காய் சுவை தரும்.விரும்பிய கறிவகைகள் கொண்டு பரிமாறுங்கள். முட்டை இறைச்சி கடல்வகை உணவு ஏதாவது ஒன்றுடன் அசைவம் விரும்புவோர் பரிமாறிக் கொள்ளலாம்.


-: மாதேவி :-
http://sinnutasty.blogspot.com/2008/11/blog-post_24.html&type=P&itemid=76123