தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணையை விட்டு, மீண்டுன் கலக்கவும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை எடுத்துக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_22.html