சமரின் கருத்து தொடர்பாக தூண்டிலில் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அது பற்றி அறிவது அவசியமாகிறது. மனிதம், சமர் இரண்டையும் ஒரு தட்டில் போட்டுப் பார்க்க முடியவில்லை. எனது நிலைப்பாடு சீனத் தலைமையும், மூன்று உலகக் கோட்பாடும் பிழை என்பதும், தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும், அவசரம் கூடாது எனவும் எண்ணுகிறேன். எதற்கும் ஒரு இதழுடன் முடிவுக்கு வருவது முட்டாள்தனம்.

தூண்டிலில் சமரும் அழிவுக்காரர் என்று சொல்லும் பாணியானது, தீண்டாமை மட்டும் தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறி, ஒரு அடைப்பு வாதத்துக்குள் வீழ்ந்த சீன சார்பு இடதுகள் தமிழ்த் தேசியப் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனை போல் கருதினார்கள். கூட்டணியும் சாதியப் பிரச்சனையை தீண்டத் தகாத பிரச்சனையைப் போல் கருதினார்கள். தமிழ்த்; தேசியப் போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது. வெளியேறிய சமூகவிஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டிருப்பவர்கள் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு கேலித்தனம் சேர்ந்தே தொனிக்கிறது என்றே எனக்குப் படுகிறது.

கருத்துகள் கருத்துகளாக மதிக்கப்பட்டு ஆராயப்படுதல் தான் இயங்கியல் போக்குக்கான அழகும், கருத்துக்கு மதிப்பளித்தலுமாகும் என்று நான் கருதுகிறேன். கருத்துக்கள் எள்ளி நகையாடப்படுதல் ஒரு பத்திரிகைக்கான ஜனநாயகத்தன்மையை மறந்து வாசகர்களை சரியாக சிந்திக்க விடாது மயக்க நிலையில் சில பிழையான அர்த்தத்தை உண்டு பண்ணி, அந்த நிலையில் கருத்துச் சொல்பவர் பத்திரிகையினை பிழையாக விளங்கிக்கொள்ள தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. (இது கடந்தகால சீன தலைமைகள் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதும் போதும் நான் இது பற்றி சீன சார்பு க.கட்சி தலைவர்களுடன் பேசும் பொழுது முதலாளித்துவப் பத்திரிகைகள் அப்படித்தான் கூறும் என்று கூறியே தப்பித்துக்கொண்டனர். இது தவிர கட்சிக்கட்டுபாடு என்று கட்டியே போட்டு விடுவார்கள். இந்த மாதிரியான துரோகத்தனமான நடவடிக்கையினால் கிடைத்த அனுபவங்கள் எம்மை மேலும் சிந்திக்கத் தூண்டியது. அடைப்புவாத போக்கு தமிழ் இயக்க ஆயுதக்கவர்ச்சி என்பன அக்கட்சி அழிவதற்கு காரணமானாலும் புதிய |ஜனநாயக கட்சி செந்தில்--மணியம் போன்றவர்கள் கட்சி சீர்குலைவுக்கு காரணமாகியது.

தமிழ் பகுதியில்(யாழ்ப்பாணம்) 70 பதுகளில் பலமான கட்சி ஒன்று இருந்ததும், அதிலிருந்து பிரிந்த செந்தில், மணியம்(இவர் இறந்து விட்டார்)தற்போது புதிய ஜனநாயக் கட்சி அமைத்துள்ளனர். இவர்களுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என சமர்(3) மூலம் அறிந்து கொண்டமையால் சில விடயங்கள் சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எழுதியுள்ளேன். இனங்கண்டு கொள்ள முடியுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் எழுதியுள்ளீர்கள் சீனத்தலைமையும் மூன்று உலகக்கோட்பாடும் பிழையென்று. இக்கருத்து தொடர்பாக சீனாவிலிருந்த மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று உலகக் கோட்பாட்டையும் பிழை என்கிறீர்களா? அல்லது இன்றைய சீனத்தலைமையையும் இலங்கையிலுள்ள சீனா கம்யூனிஸ்ட் கட்சியையும் பிழை என்று கூறுகிறீர்களா என்பதை கடிதம் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை. இருந்தும் இது பற்றி விவாதிக்க முற்படுகிறோம். மாவோ தலைமையிலிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அக்காலத்தில் தவறுகள் இருந்திருக்கலாம் அவை விமர்சனத்துக்குட்பட்டவை ஆனால் இன்று இருக்கும் சீனத்தலைமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று சீனாவில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் சீரழிந்த முதலாளித்துவ மீட்பாளர்களே. இவர்கள் இப்படியெனில் இலங்கையிலுள்ள சீன சார்பு கம்யுனிஸ்ட்டுகள் (புதிய ஜனநாயகக் கட்சிக்காரர்கள்) பிழைப்புவாதிகளாகவேயுள்ளனர். மற்றும் மூன்றுலகக் கோட்பாடு தொடர்பாக எம்மிடம் புத்தகமின்மையும், அது பற்றி நாம் ஒரு கருத்தையும் வந்தடையவில்லை இது தொடர்பாக பொதுவாக மூன்று உலக கோட்பாட்டை மாவோ வரையறை செய்தபோது, அக்காலத்தில் உலக நிலைமையோடு பொருந்;துவதாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே பொதுவானது என இன்று பாவிக்க முற்படுவது, பிழைப்பு வாதத்தின் அடிப்படைக் குணாம்சமே.

தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும்|| என்ற உங்கள் கருத்து தொடர்பாக சமுகத்தில் எழும் முரண்பாடுகளிலிருந்தே போராட்டம் வளர்த்து எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இனமுரண்பாடு 1983க்குபின் கூர்மையடைந்து. இம் முரண்பாட்டை எந்த மார்க்ஸிசவாதியும் கவனத்தில் எடுக்கதவறின் ஒரு புரட்சிக்கு தலைமை தாங்க முடியாது. குறிப்பிட்ட இம் முரண்பாடு இலங்கையில் தீவிரமடைந்து உள்ளது. இம் முரண்பாட்டை முன்னெடுத்தலுக்கூடாகவே தமிழீழம் அல்லது இலங்கைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அந்த வகையில் எம் மக்கள் மத்தியில் உள்ள இம் முரண்பாட்டை முன்னெடுக்கும் போது தமிழீழம் தீர்வாக முன் வைக்கப்படுகிறது. இப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் தமிழீழம் நோக்கி முன்னேறும் பொழுது, சிங்கள மக்கள் மத்தியில் எழும் ஒரு புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டுவதைப் பொறுத்தே ஜக்கிய இலங்கைக்கான மொத்தப்புரட்சியா என்பதை வழிகாட்டும். அப்படி சிங்கள புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டாமல் இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டம் தடைப்பட்டுவிடாது. தொடரும் அதன் வெற்றி தமிழீழத்தை உருவாக்கும்.

தூண்டில், சமரும் அழிவு யுத்தத்திற்காக என்ற பாணியானது என்று நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் புலிகளின் யுத்தம் அழிவு யுத்ததிற்கானது என சமர் சொல்லவில்லை. இது பற்றி இன்னும் சமர் கருத்துச் சொல்லவில்லை. குறிப்பிட்ட விடயத்தில் தூண்டிலின் பார்வையில் தீண்டாமை மட்டுமே தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறிய ஒரு அடைப்பு வாதத்திற்குள் விழுந்த சீன சார்பு இடதுகள் தமிழ்தேசிய இனத்தின் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனைபோல் கருதினர். தமிழ் தேசிய போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது வெளியேறிய சமூகவிஞ்ஞான கண்ணோட்டம் கொண்டவர்களிடம் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு நய்யாண்டிதனம் சேர்ந்தே தொனிக்கிறது என எனக்குபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் தூண்டிலின் பார்வையை நீங்கள் குறித்த வரையறைக்குள் பார்ப்பது தவறு. தூண்டிலின் அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிப்பது ஒர் ஆய்வின் தொடராகவே ஒழிய ஒரு வறட்டுதனமாகவல்ல. தமிழீழ போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரம் அதற்கான போராட்டத் தலைமையை உருவாக்கவும் தூண்டில் முனைகிறது. அந்த வகையில் புலிகளின் யுத்தத்தை அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிக்க முற்படுகின்றனர்.

கருத்துக்களை கருத்துக்களாக மதிக்கப்படவேண்டும் என்ற வாதத்தை சமர் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பார்வையை சிலர் தவறாகப்பயன்படுத்த கூறுகின்றனர். அதாவது கருத்தை விமர்சிக்கும் உரிமையை தடுக்கின்றனர். ஒரு கருத்தின் மீது மாற்றுக்கருத்தை முன் வைக்கப்படும் போது அக் கருத்து தொடர்பாகவுள்ள முக்கியத்துவத்தை ஒட்டி விமர்சனம் கடுமையானதாகவோ, மென்மையானதாகவோ அமையலாம். இவைக்குள் எள்ளி நகையாடப்படுவது கூட அமையலாம். இப்படியான விமர்சனம் மீது விமர்சனம் பிழை என வாதாட முற்படுபவர்கள், தங்களின் கருத்தின் மீதான பலவீலத்தை கொண்டே இப்படி வாதாடுகின்றனர்.

"கட்சி கட்டுப்பாடு என்று கட்டியே போட்டு விடுவர்" என்று நீங்கள் சொல்வதில் ஒரு வரையறைக்குள் பார்க்க முடியாது. கட்சிக் கட்டுப்பாடு ஒரு கட்சிக்குத் தேவையானது. ஓரு கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கு |ஜனநாயகம் இருக்க வேண்டும். அக் கருத்தை வைக்கும் ஒழுங்கு கட்சிக்குள் இருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் ஒரு கட்சி கட்சியாகவே இருக்காது. கட்சிக்கட்;டுப்பாடு என்று ஓரு கருத்;தை விவாதிக்கத் தடுப்பது பிழை. அதே நேரம் கட்சி தனக்கென ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கட்சி எப்பொழுதும்; ஜனநாயக மத்தியத்துவதத்தைக் கொண்டு செயற்பட வேண்டும்.

--ஆசிரியர்குழு---