அன்பு வாசகர்களே,புலம் பெயர் மா(ட்டு)ற்றுக் கருத்தாளர்களுக்குள் மலிந்து மேவும் வன்முறைகளைக் குறித்து,மாறிமாறி அறிக்கையெறியும் யுத்தமொன்று மெல்லவுருவாகி வருகிறது.வாசிப்பதற்குப் பொருத்தமான பல சுவையான நடாத்தைகளைக் கொண்டியங்கும் நமது நண்பர்கள்,

 

ஒரு வகையில் பெரும் புண்ணியஞ் செய்தவர்கள்.அதாவது, ஈழத்தில் இருந்திருந்தால் நிச்சியம் இன்னொரு "சவுக்குத் தோப்பை"(உயிர்ப்பலியெடுத்துப் புதைக்கும் காடு) உருவாக்கியிருப்பார்கள்.இதுள் காலம் அவர்களுக்கு நல்லதே பண்ணியுள்ளது!

 

இத்தகைய(அடிபிடி-ஆட்கடத்தல்-அவதூறு-அண்டிக் கெடுத்தல்-அள்ளிவைத்தல்...)பிழைப்பைச் செய்வதற்கேனும் இவர்களிடம் உயிர் எஞ்சியுள்ளது.இது,அவர்களுக்குப் புலிகளின் போராட்டம் அளித்த நன்கொடை.

 

மக்கள்தான் பாவஞ் செய்தவர்கள்!

 

எனினும்,நல்லகாலம் இலங்கையிலுள்ள மக்களுக்கும்தாம்.

 

இத்தகைய மனிதர்கள் அங்குபோய் மீளவும்,மக்களைக் கொல்வதற்குள், தமக்குள் அம்பலப்பட்டுப் போவதில் மக்களைக் காக்கின்றார்கள்.

 

அப்பாடா!

இப்படியொரு கொடிய நரமாமிசப் புசிப்புக்கூட்டம் உலகில் "மாற்றுக் கருத்தாளர்கள்"எனும் போர்வையில் ஐரோப்பிய நாடெங்கும் தமிழ்பேசியபடி..

.

இவர்களையா நாம் நம்பி,ஆரோக்கியமான தோழர்களாக எண்ணிக்கொண்டோம்.

இராகவன்"நாவலனை அயோக்கியன்"என்று அம்பலப்படுத்துகிறார்.

 

அசோக்"சோபாசக்தி,ஞானம்,சுகன் தேவதாசன்,இராகவன் ஆகியவர்கள் சூழ்ச்சிமிகு அராஜகக் கிரிமினல்கள்"எனச் சொல்கிறார்.

 

இராகவனும்"அசோக் கபடத்தனமாகத் தனிநபர்களைக் குழப்பும் பேர்வழி"என்கிறார்.

தமிழ்பேசும் மக்களின் குருதியை உறிஞ்சிய இந்தத் தலைமுறை,இனியும் ஒரு விதி செய்கிறது-அது,மக்களின் வாழ்வைக் காடாத்துவதென!

 

புலிகளின் தலைமை கொய்த தலைகள் மண்ணுள் இற்றுப்போவதற்குள்,இவர்களும் வரலாற்றில் தமது பங்கைப் பதியம்போடுகிறார்கள்?

 

இன்றைய நமது "மாட்டுக் கருத்தாளர்களை"க் குறித்து தோழர் இராயாகரன் பற்பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியபோது,நாம் இரஜாகரன்மீது சிலவேளை விசனப்பட்டதுண்டு-இவர்"எல்லோரையும் குறையுடைய மனிதர்களாக விமர்சிக்கிறாரே,இது சரியாக இருக்குமா"என யோசித்ததுண்டு.

 

இப்போது,இராயா சொன்வை அனைத்துமே உண்மையென்பது ஈழவிடுதலைப் போராட்டத் தத்துவத்துக்கு மட்டுமல்ல-இவர்களுக்கும் பொருந்துகிறது!

 

கடந்த கால் நூற்றாண்டாய் தோழர் இரயா சொன்னவை இப்போது ஒவ்வொன்றாக நிஜமாகிவருகிறது.

 

என்னவொரு விசேஷமெனின்,அது இராயாவின் ஆயுட்காலத்திலேயே சரியென்றும்,நிரூபணமாவதே!

 

உலகத்தில் பல தத்துவக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கள்,அவர்களின் மரணத்துக்குப் பின்பே சரியாதென நிரூபணமாகிறது.இதற்கு மார்க்ஸ் நல்ல உதாரணம்.

 

ஆனால்,தமிழரங்கத்துள் விரவிக்கிடக்கும் இராயாவின் பல் நூறு கட்டுரைகள்பேசும் தரவுகள்-கருத்துக்கள்-ஆய்வுகள் அனைத்தும் சரியான மதிப்பீடுகளென நிரூபணமாகிறது.இது நமது மக்களுக்கு ஆரோக்கியமானது-புரட்சிக்கு உரம் ஊட்டுவது!

 

புலம் பெயர் மாற்றுக் கருத்தாளர்களில் பலர் வேடதாரிகள்-மக்கள் விரோதிகளெனச் செய்யப்பட்ட மதிப்பீடுகள் சரியானதாகவே கீழ்காணும் இராகவன்-அசோக் போன்றோரின் கட்டுரைகளின்வழி நிரூபணமாகிறது.

 

இத்தகைய மக்கள் விரோதிகள் அனைவரும் தம்மாற்றாமே அம்பலமாகும்போது,நாம் மேலும் பல மக்கள் விரோதிகளை இனம் காணத்தக்கதாகவே இருக்கிறது.இங்கே, எத்தனை வடிவத்துள் இந்தத் தீங்குகள் முக மூடிதரித்தியங்குகிறார்கள்!-குருதியுறையுங் கொடுமை வாசகர்களே இது.

 

தொடர்ந்து,வாசியுங்கள் வாசகர்களே.

 

இவற்றிலிருந்து தமிழர்களின் சமூ உளவியலைப் புரிந்து,இன்றைய நமது மக்களின் அழிவுகளுக்குக் காரணமானவர்கள் "எவர்கள்-எந்தச் சக்திகள்"என்பதை புரிந்துகொள்ளலாம்.நாளைய நமது தலைமுறைக்கு இவர்களின் வாக்கு மூலங்கள் மிக ஆய்வுக்குரிய பல தகவல்களை-தரவுகளைத் தரமுடியும்!எனவே,இதை மீள் பிரசுரிக்கும்போது,"சத்திய"கடுதாசிக்கும்-இனி ஒரு-வதை செய் தளங்களுக்கு நன்றியெனச் சொல்வது கடமை:நன்றி!

 

நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

21.11.2008