பாஸ்ட பூட் உணவு வகைகளை அநேகம் விரும்பி உண்ணும் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நாங்களே இலகுவாக வீடுகளில் தயாரித்துக் கொள்ளலாம்.


ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து விடக் கூடியது. இரவிலே மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் காலையிலே செய்து கொள்ளலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதும் செய்து எடுத்துச் செல்லலாம்.


கறி ரொட்டி


தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு


1. மைதா மா – 2 கப்

2. ஈஸ்ட் - 1 ரீ ஸ்பூன்

3. உப்பு சிறிதளவு

4. மார்ஜரீன் - 1 டேபிள் ஸ்பூன்



கறி தயாரிக்க


1. மீன் துண்டுகள் - 1 கப்

2. வெங்காயம் - 1

3. பூண்டு - 2

4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்

5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்

6. மிளகாய்த் தூள் - ரீ ஸ்பூன்

7. மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

8. கறிவேற்பிலை சிறிதளவு

9. உப்பு, புளி தேவையான அளவு

10. ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்






செய்முறை


1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.


2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.


3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.


5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.


6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.


:- மாதேவி -:
http://www.tamilveli.com/showurl.php?url=http://sinnutasty.blogspot.com/2008/11/blog-post_17.html&type=P&itemid=74579