தொழு உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி வெட்ட வேண்டும்।



குழியில் அடுக்கடுக்காக சாணக்குப்பையை போட வேண்டும்.

முதல் அடுக்கில் முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை போடவேண்டும். அன்றாடம் சேரும் சாணக்குப்பையை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழியில் சேகரித்து வரலாம்.

முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை வந்ததும், அதன் மேல் கால் அடி அளவு மண் போட்டு நிரப்ப வேண்டும்.

மண்ண போட்டு முடித்ததும், இரண்டாவ அடுக்கு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவ அடுக்கில் முக்கால் அடி சாணக்குப்பையை போட்டு அதன் மேல் கால் அடி அளவு மண் போடவேண்டும்.
இரண்டாவ அடுக்க அமத்த பிறகு குழியில்மீதம் ஒரு அடி இருக்கும்.

இதில் மூன்றாவ அடுக்கு சாணக்குப்பையை போட்டு, கால் அடி மண் போடவேண்டும். குழி தரமட்டத்திற்கு நிரம்பிவிடும். குப்பை மக்க ஆரம்பித்தம் அடுக்குகள் இறங்கிவிடும். இதனால் பள்ளம் ஏற்படும். இத தடுக்க மேலும் தரமட்டத்திற்கு மேல் 1 அடி உயரம் மண் போடவேண்டும்.

மண் மேட்டின் மீது தண்ணீர் தெளித்து மெழுகிவிடவேண்டும். இது ஆறு மாதத்தில் நன்றாக மக்கிவிடும்.

வெட்டிப்பார்த்தால் கருகருவென மக்கிய தொழு உரம் காணப்படும்.

தொழு உரத்திலுள்ள சத்துகள் :

0.4-1.5 சதவிகிதம் தழைச்சத்து
0.3-0.9 சதவிகிதம் மணிச்சத்து
0.3௧.9 சதவிகிதம் சாம்பல் சத்து

நன்றி :http://www.indiagriline.com/

http://vayalveli.blogspot.com/search/label/தொழு%20உரம்