மேஃஸானா மாவட்டத்தில் குஜராத் மாநில விஹெச்பி பொது செயலாளரான திலீப் திரிவேதி, கிட்டத்தட்ட 1 டஜன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கொண்ட அவனுக்குக் கீழே வேலை செய்யும் ஒரு வழக்கறிஞர் அணியை வழிநடத்தக் கூடிய மூத்த வழக்கறிஞனாக நியமிக்கப்பட்டான். மேஃஸானா, கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுள் ஒன்றாகும்.


மேஃஸானாவில் குறிப்பாக இரண்டு வழக்குகள், விஸ்நகரில் நடந்த தீப்தா தர்வாஜா சம்பவமும் இன்னும் சர்தார்புரா சம்பவமும் - இங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கையாலும் மேலும் காட்டுமிராண்டித்தனமாக ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாகக் கொலைகள் செய்யப்பட்ட முறையால் - மனித சமுதாயத்தின் நெஞ்சத்தை உலுக்கியது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர மனு தாக்கல் செய்யும் போது அதை எதிர்க்க வேண்டியது தான் இவரது(அரசு தரப்பு வழக்கறிஞர்) கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக குற்றவாளி ஜாமீனில் வெளிவர உதவியதற்காக சமுதாயத்தால் குற்றம் சாட்டப்பட்டு, கண்டிக்கப்பட்டான். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை குஜராத் உயர்நீதி மன்றத்திலும் இன்னும் உச்சநீதி மன்றத்திலும் முறையிட்டப் பின், கலவர வழக்குகளுக்காக ஆஜர் ஆவதிலிருந்தும் திரிவேதி நீக்கப்பட்டான். ஜுன் 15ம் தேதி 2007ல் திரிவேதியை மேஃஸானா நீதிமன்ற வளாகத்திலிருக்கும் அவனது அலுவலகத்தில் வைத்து பார்க்க தெஹல்கா சென்றது.

 

விஹெச்பியின் பொது செயலாளர் என்ற அந்தஸ்தின் காரணத்தால், குஜராத் வன்முறை கலவரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் இவன் தான் ஒருங்கிணைத்துள்ளான். தெஹல்கா பத்திரிக்கையாளர், திரிவேதியின் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போதே கலவரம் தொடர்பான வழக்குக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிந்துக்களில் இரண்டு பேர் உள்ளே வந்தனர். குற்றவாளிக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் ஒருவரை அமர்துவது தொடர்பாக திரிவேதியின் உதவியை இவ்விருவரும் நாடினார்கள்.

 

தன்னைக் காண வந்தவர்களுக்குச் சரியான வழக்கறிஞரை பிடிக்க முயற்சி செய்யும் பொருட்டு சில வழக்கறிஞர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டான். அவர்களுடைய வழக்கிற்காக ஏற்கனவே வாதாடி வந்த ஒரு வழக்கறிஞர் நோயுற்று விட்டதால், வேறொரு புது வழக்கறிஞரை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பது இவனது பொறுப்பாகி விட்டதாக அவ்விருவரும் அவனது அலுவலகத்தை விட்டுச் சென்றப் பிறகு திரிவேதி கூறினான்.

 

அரசு வழக்கறிஞர்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைப்பதிலிருந்து கலவரம் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணை செய்யும் காவல்துறையினருடன் பேசுவது வரை அனைத்தையும் இவன் ஒருவனே நிர்வகிக்க வேண்டியதிருப்பது குறித்து முணுமுணுத்துக் கொண்டான். அவன் மேலும் கூறும் போது, கலவரம் தொடர்புடைய மொத்தம் 74 வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றாவாளி எனத் தீர்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.

 

"ஒரு வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான் மேல்மூறையீடு செய்து நிரபராதி எனத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தேன்.....இரண்டாவது வழக்கில் மேல்மூறையீடு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எல்லோரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். .. குற்றவாளி என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது."

 

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மேஃஸானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுபயங்கரமான கொள்ளைகள் மற்றும் கொலைகளைப் பற்றியத் தகவல்களை விவரிக்க ஆரம்பித்து விட்டான். சர்தார்புரா வழக்கு பற்றி இவன் (திலீப் திரிவேதி) கூறும் போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் பிணையில் ஏற்கனவே வெளியே வந்து விட்டதால் இந்தத் தடையைப் பற்றித் தான் கவலை படவில்லை என்பதாகக் கூறினான். இதன்பிறகு மேஃஸானா நீதிமன்றத்தில் சர்தார்புரா கலவரம் தொடர்பான வழக்கில் இவன் குற்றவாளிகளைப் பிணையில் விடுதலை செய்ய வைத்த போது, பாதிக்கப்பட்டவர்கள் எத்தகையக் கூக்குரல்கள் எழுப்பினார்கள் என்பது பற்றியும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை முதல் பக்கத்தில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்ததைப் பற்றி எழுதி தான் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றாவாளிக்கு ஆதரவாக நடக்கிறவன் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் விவரித்துக் கூறினான்.

 

தனக்கு எதிரான குற்றசாட்டுகள் உண்மையாக இருந்தும் கூட இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்று சந்தோசத்துடன் திரிவேதி கூறி பெருமைபட்டுக் கொண்டான். கலவரத்திற்குப் பின்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு முகாமிட்டு தங்கி அரசு வழக்கறிஞர்கள், (சங்பரிவார) தொண்டர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் சந்தித்து, கூட்டங்கள் நடத்தியதை அனைவரும் அறிவார்கள் என்றும் கூறினான்.

 

சபர்கந்தாவில் அரசு வழக்கறிஞரான பாரத் பட் என்பவனை தெஹல்கா சந்தித்தது. அவனும் விஹெச்பியின் மாவட்டத் தலைவராக உள்ளான். அவனால் முடிந்த அளவுக்குச் சிறந்த உதவிகளைக் குற்றவாளிகளுக்குச் செய்வதாகவும் பட் கூறினான். இந்த அரசு வழக்கறிஞர் சரியாக சொல்லப் போனால் தரகராக மாறிவிட்டான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீதிக்குப் போராடுவதை விட்டு விட்டு நீதிமன்றத்திறக்கு வெளியே பாதிக்கபட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து தீர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.

 

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html