மிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெள‌னம் சாதிக்கிறார்க‌ள்" என்று திமிராக‌ பேசும் த‌மிழ்ம‌ணி கும்ப‌லுக்கு எதிராக‌ உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்...


'தமிழ்மணி' என்கிற பெயரில் எழுதிவ‌ரும் பதிவர் கம்யூனிச எதிர்ப்பாளர், ஜனநாயகவாதி என்ற முகமூடியில் எழுதியிருந்த இந்துத்துவ கருத்துக்களையும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இணையத்திலிருக்கும் முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் அவர் எழுதியிருந்த கருத்துக்களையும் என்னுடைய கடந்த சில பதிவுகளில் எடுத்துக்காட்டியிருந்தேன், அத்தோடு அவரது பதுவுகளில் “பழைய அனானி” என்கிற பெயரில் எழுதி வந்த இந்துத்துவ வெறியனின் திராவிட வெறுப்பியல் கருத்துக்களையும் கூட எடுத்துக்காட்டியிருந்தேன்.

இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,

“பழைய அனானி” என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ வெறியனை நாம் அம்பலப்படுத்தி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பதிலளிக்காத அந்த உத்தமன், எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டுவது, அசுரன் என்று எனக்கு நாமகரணம் சூட்டுவது, நான் கூறிய கருத்துக்களை திரித்து கூறுவது, வதந்தி கிளப்புவது போன்ற நேர்மையற்ற ஆர்.எஸ்.எஸ் பாணி வாதங்களை கையாள துவங்கியிருக்கிறான். தமிழ்மணியினுடைய பதிவின் பின்னூட்டத்தில் அவன் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு எனது எதிர்வினையை இங்கே பதிகிறேன்

பெரியார் கம்யூனிஸத்திற்கு எதிர்த்தில்லை ஆனால் அவர் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தார் என்று தகுந்த ஆதாரங்களோடு சென்ற பதிவில் எடுத்துக்காட்டியிருந்தேன், ரஷிய புரட்சியின் 50வது ஆண்டு விழாவையொட்டி பெரியார் நடத்திய விடுதலை பத்திரிக்கை 1966ல் சிறப்பு மலர் வெளியிட்டதையும், அதில் எழுதிய தந்தை பெரியார்,

"இந்நாடு கம்யூனிச நாடாவதே என் விருப்பம். சோசலிசம், கம்யூனிசம், சமதர்மம் பரவுவதற்காக என்று இரசியாவே இங்கு வந்தாலும் நான் வரவேற்பேன்"

(9.2.1966 விடுதலை)

என்று எழுதியதையும், தனது இறுதி உரையில்

"இந்தக் கம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவானே, அவனல்லவா சத்தம் போட வேண்டும் எனக்கு பதிலாக? எங்களை தவிர நாதியில்லை இந்த நாட்டில்"(19.12.1973)


என்று அவர் பேசியதையும், எடுத்துக்காட்டியதோடு, தந்தை பெரியார் இங்கிருக்க கூடிய கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தாரேயொழிய அவர் என்று கம்யூனிச கொள்கைகளை எதிர்த்ததில்லை என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்லுகிற பழைய அனானி எனது கருத்தை எப்படி திரிக்கிறார் பாருங்கள்,

//பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.//

நான் எழுதியிருந்தது பெரியார் என்றுமே கம்யூனிஸ கொள்கைகளை எதிர்க்கவில்லை, தவறான நிலைப்பாடுகளோடு செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட்களையே அவர் எதிர்த்தார் என்று., அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே அவர் ஆதரித்து வந்தார் என்று நான் கூறியது போல எனது கருத்தை திரிக்கும் பழைய அனானி, "அவர் தி.மு.கவையும் ஆதரித்தார், காங்கிரசையும் ஆதரித்தார்" என்றெல்லாம் நம்மிடம் கூறுகிறார்.,

திராவிட வெறுப்பியல் கருத்து கொண்ட திருவாளர் பழைய அனானி அவர்களே நான் கூறிய கருத்தை கவனமாக படியுங்கள், கம்யூனிச கொள்கைகளை பெரியார் என்றுமே எதிர்த்ததில்லை என்றுதான் நான் கூறியிருக்கிறேன், அப்படி அவர் எதிர்த்திருந்தால் எடுத்துக்காட்டுங்கள், அப்படியொரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் தங்களது கடைகளில் வைத்துவிற்கிறார்களே, ம.வெங்கடேசன் எழுதிய "ஈ.வெ.ராவின் மறுபக்கம்" என்ற புளூகுமூட்டை புத்தகம், அதிலிருந்து கூட நீங்கள் எடுத்துக்காட்ட முடியாது.

//இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். //

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை வெளியிட்ட தந்தை பெரியார், பகத்சிங் வெள்ளையர்களுக்கு எதிராக‌ போராடிய‌ கார‌ண‌த்துக்காக‌ மட்டும் அதை வெளியிடவில்லை, பகத்சிங் ஒரு நாத்திகர் என்ற காரணத்திற்காக மட்டும் அதை வெளியிடவில்லை, குறிப்பாக பகத்சிங் ஒரு பொதுவுடைமையாளர் என்ற காரணத்துக்காகவே அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டார், அதனை அவர் அந்த‌ புத்த‌க‌த்தின் பின்னிணைப்பில் இருக்கும் குடியரசு பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். அத‌னால்தான் "ஆதாரம்: நான் நாத்திகன் ஏன்? எனற புத்தகத்தின் பின்னிணைப்பு" என்பதாக நான் குறிப்பிட்டேன்.,

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை இந்து மத அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் வெளியிட்டார் என்று சொல்வதை கூட வாதத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" அவர் ஏன் வெளியிட வேண்டும், அதில் இந்து மத அநீதிக்கு எதிராக ஒன்றும் இருக்காதே, பின்பு ஏன் பெரியார் அதை வெளியிட்டார், ஸ்தூலமாய் இருந்த இந்து மத அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த தந்தை பெரியார் "சுயமரியாதை சமதர்ம கட்சியை" தொடங்கி பொதுவுடைமை பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன? சொல்லுங்க‌ள் ப‌ழைய‌ அனானி, பெரியார் கம்யூனிச கொள்கை என்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தாரா? அதனை ஒரு நாத்திக கொள்கை என்பதாக மட்டும் புரிந்து வைத்திருந்தாரா? இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பேசும் பொழுது பெரியார் குறிப்பிட்டார்

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம்
பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்" என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை.
(13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. )


ஜாதிய வேற்றுமைக்கு எதிராக போராடாமல் வர்க்க வேற்றுமைக்கு எதிராக பேசும் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பெரியார் பேசியதுதான் மேலே இருப்பது, அதில் அவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள் "ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி." கம்யூனிச கொள்கையை தமிழகத்திற்கு எடுத்துவந்தவர் தந்தை பெரியார் என்பதன்றி இந்த வார்த்தைக‌ளுக்கு வேறு என்ன‌ பொருள் இருக்க‌ முடியும்?

அடுத்து கூறுகிறார் "கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர்." இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு கம்யூனிச கொள்கையே தெரியவில்லை அதனால்தான் சாதி ஒழிப்பு பற்றி பேசாமல், வர்க்க வேற்றுமை பற்றி பேசுகின்றனர் என்கிறார்.,

கம்யூனிசம் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரையே விமர்சித்த தந்தை பெரியாரைத்தான் அவர் கம்யூனிச கொள்கைகள் என்றாலே என்னவென்று அறியாதிருந்தது போலவும், நாத்திகவாதத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பதிப்பித்தது போலவும் கூறுகிறார் பழைய அனானி.

//அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.//

ரஸ்ஸலின் கம்யூனிச எதிர்ப்பு புத்தகங்களையா பெரியார் தமிழில் வெளியிட்டார்? அவரது நாத்திகவாதம் பேசும் புத்தகத்தை அந்த நோக்கத்திற்கெனவேதான் வெளியிட்டார், ரஸ்ஸல் என்றாலே யார் என்று தெரியாத என்னை போன்றவர்களுக்கு இன்றுவரை "பெட்னர்ட் ரஸ்ஸல்" என்பவரை "நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல" என்ற புத்தகம் எழுதியவராகத்தான் தெரியும்., பெரியார் அவரை எங்களுக்கு அவரை நாத்திகவாதியாகத்தான் அறிமுகப்படுத்தினாரேயொழிய கம்யூனிச எதிர்ப்பாளாராக அறிமுகம் செய்துவைக்கவில்லை.,

ஆனால் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' ஜாதிய வேற்றுமை, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு என எல்லா ஏற்ற தாழ்வுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அவர் வெளியிட்டாரேயொழிய நாத்திக கருத்துக்காக‌ வெளியிட‌வில்லை என்ப‌த‌னை சாத‌ர‌ண‌மாக‌ பார்க்கும் பொழுதே புரிய‌ கூடிய‌ ஒன்று.

//இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.//

பெரியார் த‌ன‌து இறுதி மூச்சுவ‌ரை க‌ம்யூனிச‌த்தை ஆத‌ரித்தே வ‌ந்தார் என்கிற‌ உண்மை புரியாம‌ல் அவ‌ரை க‌ம்யூனிஸ்ட்க‌ளுக்கு எதிராக‌ நிறுத்தி, பெரியாரிய‌வாதிக‌ள், க‌ம்யூனிஸ்ட்க‌ள் இருவ‌ரையும் மோத‌ வைத்து வீழ்த்த‌ வேண்டும் என்று எண்ணுவ‌து அப்ப‌ட்ட்ட‌மான‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.,

இந்த சதி திட்டத்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்துப‌வ‌ரை கம்யூனிஸ்டாக‌ லேபிள் ஒட்டி த‌ன‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்சார‌த்தில் இற‌ங்குவ‌து, சித‌ம்ப‌ர‌ம் கோவிலில் த‌மிழில் பாட‌ முய‌ன்ற‌ ஆறுமுக‌சாமியை ஒரு வ‌ம்ப‌ராக சொல்வதற்கும், இந்து ம‌த‌ புர‌ட்டுக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்தும் அக்னிஹோத்ர‌ம் தாத்தாச்சாரியை, அவருக்கு புராணமே தெரியாது என்று வ‌சைபாடி பிர‌ச்சார‌ம் செய்வதற்க்கும் ஒப்பான‌ ஆரிய‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.

//அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.//


இது ஒரு அப்ப‌ட்டமான பொய் அல்ல‌து அறியாமை என்று சொல்வ‌தை த‌விர‌ வேறு என்ன‌ சொல்ல‌ முடியும், ஸ்டாலின் கொலைகார‌ர் என்ப‌தான‌ க‌ருத்துக்க‌ள் 1956க‌ளிலேயே வெளிவந்திருக்கின்றன‌, பெரியார் 1966ல் விடுதலை ப‌த்திரிக்கையின் சார்ப்பாக ர‌ஷிய‌ புர‌ட்சியின் 50வ‌து ஆண்டுவிழா ம‌ல‌ர் கொண்டுவ‌ந்து இந்த‌ நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌துதான் என‌து விருப்ப‌ம் என்று எழுதுகிறார், 1973ல் த‌ன‌து இறுதியுரையில் க‌ம்யூனிச‌த்தின் மீது த‌ன‌க்கிருக்கும் ஈர்ப்பை வெளிப்ப‌டுத்துகிறார், இப்ப‌டியிருக்கும் பொழுது த‌ந்தை பெரியார் ஏதோ ஒன்றுமே தெரியாமல், எல்லோரும் போகிற‌ வ‌ழியில் ஆட்டும‌ந்தை போல‌ க‌ம்யூனிச‌த்துக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌து போல் எழுதுகிறார் ப‌ழைய‌ அனானி.,

//இந்த வரலாறு தி.கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.//

பிராம‌ண‌ எதிர்ப்பு என்று ப‌வ்ய‌ம் காட்டுகிற‌ ப‌ழைய‌ அனானிக்கு பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ச‌ட்ட‌ ரீதியாக‌த்தான் போராட‌ வேண்டும் என்ப‌தில் எவ்வ‌ள‌வு அக்க‌றை, ஏன் நாங்க‌ள் ச‌ட்ட‌த்தை மீறி இற‌ங்கினால் பூணூல்க‌ளும், குடுமிக‌ளும் அறுத்தெறிய‌ப்ப‌டும் என்கிற‌ ப‌ய‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் சூத்திர‌ன் என்ற‌ ப‌ட்ட‌த்தை இன்னும் எங்க‌ள் த‌லையில் சும‌த்தி வைத்திருக்கிற‌தே அதையே நிலைக்க‌ வைக்க‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் அவர்களுக்கு பாதுகாப்பாக‌ இருக்கிறதே, அந்த பறிபோய்விடக்கூடாது என்கிற‌ பாதுகாப்பு உண‌ர்ச்சியா?

அசுர‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இன்று திராவிட‌த்திற்கு ஆத‌ரவாக‌ பேசுகிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌த்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, சாதி ஆதிக்க‌தை ஒழிக்காமல், ஏழை ப‌ணக்கார‌ன் என்ற‌ பேத‌ம் ஒழிய‌ வேண்டும் என்று குர‌ல் கொடுத்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என்று பெரியாரிய‌வாதிக‌ளோடு கைகோர்க்கிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌வாதிக‌ளும், பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்க‌ளும் ம‌ன‌முவ‌ந்து வ‌ரவேற்க‌ வேண்டிய‌ ஒன்று.

உண்மையான‌ க‌ம்யூனிச‌ம் என்ப‌து சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சொல்கிறார்க‌ள் என்றால் அந்த‌ உண்மையான‌ க‌ம்யூனிச‌த்திற்காக‌ த‌வ‌றான‌ நிலைப்பாடு கொண்டிருந்த அந்த‌ கால‌த்திய‌ மார்க்சிஸ்ட்க‌ளோடு இடைய‌றாது போராடிய‌ பெரியாருக்கு இன்றைய‌ க‌ம்யூனிச‌வாதிக‌ள் ந‌ன்றி கூற‌ வேண்டும். பெரியாரை அப்ப‌டித்தான் அவ‌ர்க‌ளும் பார்க்கிறார்க‌ள் என்று நான் நினைக்கிறேன்.,

இன்று எந்த‌ க‌ம்யூனிஸ்டும் த‌ன‌து கொள்கைக்கு நேரெதிராக‌ கோல்வால்க‌ருக்கு உரிமை கோர‌வில்லையே(தமிழ்நாட்டில் ஒரு சொறிபிடித்த நாய்கூட அவனை சொந்தம் கொண்டாடாது என்பது வேறு விசயம்), பெரியாருக்குத்தானே உரிமை கோருகிறார்க‌ள், அது பெரியாரின் சாதி எதிர்ப்புக்கும் பார்ப்ப‌ன‌ எதிர்ப்புக்கு கிடைத்திருக்கும் ப‌ரிசு.,

ம‌ற்ற‌ப‌டி த‌மிழ்ம‌ண‌த்தில் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்கள் உண்மையை உண‌ர்ந்து மெள‌ன‌ம் சாதிக்கிறார்க‌ள் என்பதெல்லாம் ப‌ழைய‌ அனானி த‌ன்னைத்தானே தேற்றிக்கொள்வ‌த‌ற்கு சொல்லிக்கொள்ளூம் வாதங்கள்தான்.

த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணியை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு வாழ்த்து தெரிவித்து இங்கு ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌ அத்த‌னையும் அசுரன் போன்ற கம்யூனிஸ்ட்கள் போட்ட‌வையா? பின்னூட்ட‌மிட்டிருக்கும் எல்லோருமே திராவிட‌ ஆத‌ர‌வு க‌ருத்து கொண்ட‌வ‌ர்க‌ள் போட்ட‌வைதானே., வேண்டுமானால் பழைய‌ அனானிக்கு நிரூபிப்ப‌த‌ற்காக‌ தோழ‌ர்க‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என‌து வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்,

ந‌ண்ப‌ர்க‌ளே, முற்போக்காள‌ர்க‌ளை மோத‌விடும் பார்ப்ப‌ன‌ ச‌தியை நான் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளிலும் இந்த‌ ப‌திவிலும் அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறேன், இந்த‌ ச‌தியை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள், க‌ண்டிப்ப‌வ‌ர்க‌ள், இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங்க‌ளை ஓரிரு வார்த்தைக‌ளிலாவ‌து பதிவு செய்யுங்க‌ள்!!

ந‌ம‌து மெள‌ன‌ம் பார்ப்ப‌ன‌ ச‌திக்கு அனும‌திய‌ளிப்ப‌தை உண‌ர்ந்து, அந்த‌ மெள‌ன‌த்தை உடைந்த்தெறிந்து உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்!!

நன்றி சம்பூகன்