நாம் ஸ்ராலினின் வரையறையான நிலத்தொடர், பொதுப்பாண்பாடு, ஒருமொழி, பொதுவான பொருளாதாரம் என்பது ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் மிக அடிப்படையாக தேவையானவை இதில் ஏதாவது ஒன்று இல்லாத தேசம் ஒன்றைக் கூடக் உலகில் காட்ட முடியாது, உருவாக்க முடியாது.


இதில் ஏதும் இல்லாத அல்லது வளரும் வர்க்க நிலையில் இருப்பின் அவை வளர்த்தெடுக்கும் வகையில் நாம் போராட வேண்டுமே ஒழிய அவைகளை தேசமாக வரையறுத்துக் கொள்வது என்பது உண்மையில் அதை அவர்களுக்கு மறுப்பது ஆகும். ஏனெனில் எது இல்லையோ அதை வளர்த்தெடுப்பதற்குப் பதில், பிரச்சனையை திசைதிருப்பி அவர்களின் அடிப்படைப்பிரச்சனையை இல்லாது ஒழிப்பதாகும்.


ஸ்ராலின் வரையறை ஆகக் குறைந்த வரையறையே ஒழிய கூடுதல் வரையறை அல்ல. ஆனால் மார்க்சியத்தின் பேரில் உள்ள எதிரிகள், திரிபு வாதிகள் ஸ்ராலினின் வரையறையை ஆகக் கூடிய வரையறையாகத் திரித்துக் காட்டுவதன் மூலம் பிரச்சனையைத் திசைதிருப்பி தமது மார்க்சிய விரோத, பாட்டாளி வர்க்க வெறுப்பை இனங்காட்டுவது என்பது, அவர்கள் அடிப்படை விடுதலையை சிதைக்க முனைகின்றனர் என்பதாகும்.


ஸ்ராலினின் வரையறைக்கு கூடுதலாக இவர்கள் காட்டும் காட்டாத மதம், நிறம்,சாதி, என எவையாக இருப்பினும். இவை ஒரு தேசிய இனம் இருக்க அடிப்படையானவை அல்ல. இவை ஸ்ராலினின் வரையறை மேல் செயல்படும் அங்கமாக இருக்குமே ஒழிய நிபந்தனை அல்ல.


ஸ்ராலினின் வரையறையைக் கொண்டிராத ஒரு தேசம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல் மேலதிக நிபந்தனை ஒரு தேசத்துக்கு அடிப்படையான விடையமல்ல.


மதம், நிறம் மட்டும் கொண்டு ஸ்ராலின் வரையறையில் எதாவது ஒன்று இன்றி தேசம் உருவாக முடியும் என்ற அ.மார்க்ஸ், எஸ்.வி.இராஜதுரை, உயிர்ப்பு, மனிதம், சரிநிகர், வேறு சிலரின் வாதங்கள் அடிப்படையில் உண்மையான ஒரு தேசம் உருவாகக் கூடாது என்ற அடிப்படையில் எழுவதாகும். இது ஏகாதிபத்தியத்தியத்தின் இன்றைய சர்வதேச கனவுமாகும்.


ஒரு நிலத் தொடர் இல்லாத யூதர்க்கு மதம் என்ற அடிப்படையை நாலாவது வரையறை கொண்டு, சோவியத் எப்படி எங்கே நிலத் தொடரை சோவியத் யூனியனுக்குள் ஒதுக்க முடியும் என இந்த திரிபு மார்க்சிய வாதிகள் காட்ட முடியுமா?


புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் பொதுப்பண்பாடு, வரையறுக்கப்பட்ட உள் சுற்று சந்தை, பொது மதம், பொது நிறம், பொது மொழி என பலவற்றைக் கொண்ட இன, நிற எதிர்ப்பை சந்திக்கும் இவர்களை அந்தந்த நாடுகளில் ஒரு தமிழ் தேசிய இனமாக வரையறுக்க முடியும். என்பதே இந்த மார்க்சிய திரிபுவாதிகளின் கோட்பாட்டு அடிப்படையாகும்.


உண்மையில் இந்த மார்க்சிய திரிபுவாதிகள் ஸ்ராலினின் வரையறை தவறானது என வாதிடுவது என்பது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை போராட்டத்தை மறுப்பதாகும். அது தான் தேசியத்தை கற்பிதம் என வேறு கூறுகின்றனர். இன்று உலகமயமாதல் உலகில் தேசமாக உருவாகி உள்ள, மற்றும் தேசியத்தை கொண்ட நாடுகளினதும் பொருளாதாரம், பொதுப்பண்பாட்டை, நிலத் தொடரை ஒரு மொழியை என நான்கு அடிப்படையையும் தகர்க்கின்றது.


இதற்குப் பதிலாக ஏகாதிபத்திய பண்பாடு, பன்னாட்டுப் பொருளாதாரம், ஏகாதிபத்திய மொழிகள், நிலத் தொடர் கடந்த நிலை என தமக்கு சாதகமானவற்றை மட்டும் முன்வைக்கின்றனர்.


இதன் மூலம் தேசியத் தன்மையை சிதைத்து உலகமயமாதலை நடத்துவதன் மூலம், தமது சுரண்டலை உச்ச நிலைக்கு கொண்ட செல்ல முனைகின்றனர்.


இதற்கு எதிராக எல்லா நாடுகளிலும் தேசியத் தன்மையை பாதுகாக்கும் போராட்டம் எழுகின்றது. இது தேசிய எல்லைக்குள் தமது சுரண்டலைக் கோரும் ஒரு பிரிவு கடுமையாக எதிர்க்க முனைகின்றது. அதேநேரம் அதன் சுரண்டல் போக்கும், அதன் ஜனநாயக இன்மையும் அதன் தலைமையை பாசிசமாகவோ அல்லது சரணடைவதற்குள் இட்டுச் செல்கின்றது.


இதேநேரம் பாட்டாளி வர்க்கம் உலகமயமாதலின் பன்னாட்டு சுரண்டலை எதிர்த்து உலகளவில் அழைப்புவிடுவது மட்டுமின்றி, உள்நாட்டு தரகுப்பிரவை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் நிலை என்பது அடிப்படையில் தனது தேசிய ஜனநாயக உரிமையாகும். அதேநேரம் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் அறைகூவல் விடுக்கின்றது.


அதாவது சோவியத் புரட்சியின் போது சோவியத்தில் இருந்து பல்வேறு தேசிய இனத்தின் சுயநிர்ணயத்துக்காக போராடிய அதேநேரம், சோவியத்தில் வர்க்கப் புரட்சியை நடத்தியது போன்று, இன்று உலகளவில் உலக மயமாதலை எதிர்த்து தேசத்தின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கும் போரும், சர்வதேச பாட்டாளி வர்க்கப் போரும் அரங்கில் உள்ளது.


உருவாகி உள்ள தேசத்தை பாதுகாக்கும் போர் சுயநிர்ணயத்துக்காக போராடும் ஒரு புதிய தேசத்தில் இருந்து பண்பியல் ரீதியில் வேறுபட்டது. ஏனெனில் அங்கு ஒரு அரசு உள்ளது. இந்த அரசை சொந்த மக்களினதாக மாற்றக் கோரிய தேசியப்போரை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கும் அதேநேரம் பாட்டாளி வர்க்க சர்வதேசப் போரை தொடுக்கின்றனர். சுயநிர்ணயத்துக்காக போராடும் நாட்டின் ஐனநாயகக்கோரிக்கைக்காக போராடும் அதே நேரம், சர்வதேசியப் போரையும் நடத்தவேண்டியுள்ளது.


இன்றைய உலகமயமாதலை எதிர்க்கும் நாடுகளிலும், இன முரண்பாடு ஆயுதப் போராட்டமாக உள்ள நாடுகளிலும் புரட்சியின் வடிவம் சர்வ தேசியமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுக்கு அல்லது முதலாளித்துவப் பிரிவுக்கு எதிராக உள்ளது.


நாம் இதன் தொடர்ச்சியில் நிறப்பிரிகை குழு குறிப்பிடும் அடுத்த மார்க்சிய விரோத கூற்றைப் பார்ப்போம்.


"தேசியத்தை பிள்ளைப்பிராய முதலாளியம், பொதுச்சந்தை ஆகியவற்றோடு இணைத்துப் பேசும் செவ்வியல் மார்க்ஸிய அணுகல் முறையின் பொருத்தமின்மையை வலியுறுத்தினோம். மார்க்சிடம் மறையாதிருந்த n:கலியத் தாக்கம், பொருளாதார வாதம் ஆகிவற்றின் வெளிப்பாடே இது எனச் சுட்டிக் காட்டினோம்." என்று மார்க்சை கொச்சைப்படுத்தியபடி ஏகாதிபத்திய வடிவங்களை எப்படி முன்வைக்கின்றனர் எனப்பார்ப்போம்.


முதலாளித்துவ, பொதுச் சந்தை இல்லாத தேசியம் உண்டு என்ற அ.மார்க்சின் வாதம் எதையும் விளங்கப் படுத்த முடியாது மார்க்சுக்கு n:கலின் பட்டம் சூட்டி திசை திருப்பமட்டுமே முடியும்.


ஏகாதிபத்தியமும், உலக மயமாதலும் ஒரு தேசியத்தின் குறைந்த பட்சம் எதைப் பறித்து எழுகின்றது. தேசிய முதலாளித்துவத்தை, அதன் பொதுச் சந்தையைத்தான் என்பது அரிவரி படிக்கும் அரிவரி அரசியல் வாதியும், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடியதே.


இலங்கை இந்தியாவை எடுப்பின் அல்லது அதற்குள் உள்ள தேசிய இனத்தை எடுப்பினும், அதன் பொதுச் சந்தை , முதலாளித்துவ உற்பத்தி என்பன பறி போய் கொண்டிருப்பதை நாம் நாள் தேறும் நடைமுறையாகக் காண்கின்றோம். அதை பறித்தபடி மேல்கட்டுமானமும் பறிபோகின்றது.


இப்படி இருக்க, தேசியம் இது இல்லை எனக் கூறும் எஸ், வி ராஜதுரை, அ.மார்க்ஸ், அவர்களின் சீடர்கள் உண்மையில், ஏகாதிபத்தியம் எதை மறுத்து அழிக்க முனைகின்றதோ, அதையே மார்க்சியத்தின் பெயரால் இல்லை என்பது, அடிப்படையில் ஏகாதிபத்திய, உலக மயமாதலின் குரல்களே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.