தலை,காது, மூக்கு, கழுத்து,கை, மார்பு,விரல்,
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை, ரத்தின மிழைத்தநகை,
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள், உதடு,நாக்கு
நிறையநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்;
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே,
இனியபா ரததேசமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt170