எதுக்காகப் பாடினவோ முத்துமாமா -நாமும்
அதுக்காகப் பாடுவமோ முத்துமாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம் என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்துமாமா?

 

முதல் மனைவி நானிருந்தும் முத்துமாமா - அந்த
மூளiயை நீ எண்ணலாமா முத்துமாமா?
ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா - கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்துமாமா?
எது செய்ய நினைத்ததுவோ முத்து மாமா - நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்துமாமா - எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து - மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்துமாமா - நீதான்
எப்போதுமே என் சொத்து முத்துமாமா

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html