டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்

ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/21.html