டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது

அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது

பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது

அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது

டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/46.html