அதில் ஒன்று தான் புலியிசம். அது தன்னைத் தவிர அனைத்தையும் அவதூறாய் வைகின்றது., கொன்று போடுகின்றது. இதை நியாயப்படுத்தும் அறிவோ, நேர்மையோ கிடையாது. மாறாக சிந்தித்தால், மாற்றாக செயல்பட்டால், ஏன் கேள்வி கேட்டால், நியாயம் கேட்டால், அதை அவதூறு செய்து கொன்று போடுவதே புலியிசம்.

 

 

இந்த வகையில் புலியிசத்தின் பெயரால் கொண்டுள்ள புலித்தேசியத்தை, அதாவது பாசிசத்தை அறிவியல் பூர்வமாக அவர்களால் நிறுவமுடிவதில்லை. ஆகவே அவதூறு முதல் படுகொலைகளே அவர்களுக்கு தெரிந்த மொழியாகின்றது. இந்த வகையில் அண்மையில் எனக்கு எதிராக வெளிவந்த, புலியிச அவதூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இவை உண்மையில் அர்த்தமற்றதும், அரசியல் அடிப்படைற்றதும், அநாகரிமானதும் கூட. ஒருவிதத்தில் இந்த அரசியல் அவதூறுகளை எடுத்து வைத்து விவாதிப்பது அவசியமற்றதுதான்.

 

உண்மையில் புலிகள் அரசு என்ற எல்லைக்குள் விவாதத்தை நடத்துவதை, இதற்குள் காலத்தை செலவு செய்வதை விரும்புவதில்லை. இதற்கு வெளியில் சாதியம் உலகமயமாதல் பற்றிய 10 நூற்களை கொண்ட எனது ஆய்வை முடிக்க முடியாமால், இதனால் முழுமையாக தடைப்படுகின்றது. இதற்கு வெளியிலான குறித்த இந்த விவாதங்கள் காலத்தின் தேவையுடன் எம்மீது வலிந்து திணிக்கப்படுகின்றது.

 

இந்த நிலையில் என் மீதான அவதூறை எடுத்துக் காட்டுவதன் மூலம், 10000 மேற்பட்டவர்களை புலிகள் எப்படிக் கடந்தகாலத்தில் கொன்றார்கள் என்பதை புரிந்துகொள்ள அது உதவலாம். இன்னமும் கொலைப்படப்போகிறவர்களின் பலரின் கதைகள், இப்படித் தான் சோடிக்கப்படும் என்பதற்கு இது போதுமான வகை விளக்கம். அத்துடன் வரலாற்றின் பல சம்பவங்களை அம்பலப்படுத்தவும் உதவுகின்றது. அந்த வகையில் இதை அம்பலப்படுத்துவது அவசியமாகின்றது.

 

ஒரு புலி லூசு ஒன்று எனது கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது, அது வெளியிட்ட கருத்தைப் இத் தொடுப்பில் பாருங்கள்.

 

http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html (புலிக்காச்சல் ) என்கின்றது.

 

இந்த கட்டுரைக்கான எனது பதிலை நீங்கள் இங்கேயுள்ள இணையத் தொடுப்பில் சென்று பார்க்க முடியும்.

 

http://www.tamilcircle.net/unicode/general_unicode/206_general_unicode.html (ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக்காச்சலை உருவாக்குகின்றது) என்பதை புலி அரசியலிருந்து அம்பலப்படுத்தியிருந்தேன். எனது கருத்துக்கு மீண்டும் பதிலளிக்க முடியாத லூசும், அதற்கு ஏற்ற சில பன்னாடைகளும், வழமையான புலிப்பாணியில் சம்மந்தம் சம்பந்தமில்லாத வகையில் அவதூறுகளை பொழிந்து வம்பளக்கின்றது. கொலைகாரக் கும்பலைச் சேர்ந்த அந்த பாசிட்டுகளின் வம்பை http://sathirir.blogspot.com/2007/06/blog-post_04.html (ரா...ரா...ரயாகரா) இல் பார்க்க முடியும்.

 

எனது கருத்துக்கு ஒரு வரியில் தன்னும் பதிலளிக்க முடியவில்லை என்பதை நீங்கள் பார்க்கமுடியும். இது ஒருபுறமாக, மற்றொரு புலி தனது பகுத்தறிவற்ற சொந்த நம்பிக்கையைக் கொண்டு, பகுத்தறிவு பற்றி புலம்புவதை http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_3547.html (பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம் ) என்கின்றது.

 

புலிகள் தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, மற்றவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தபடி பகுத்தறிவு பற்றி பேசுகின்றனர். தாம் அல்லாத மற்றவர்கள் எலலோரையும் எதிரியாக முத்திரை குத்தி, நடத்துகின்ற சொந்த பாசிச நாடகத்தையே பகுத்தறிவு என்கின்றது இந்தப் புலி.

 

சரி புலிகள் பகுத்தறிவுள்ளவர்களா? சரி அறிவு நேர்மை ஏதாவது உள்ளவர்களா? பகுத்தறிவு என்றால் என்ன? தமிழ் மக்களின் தேசிய போராட்டத்துக்கும், புலிப் பாசிசத்துக்கும் இடையில் உள்ள, அந்த புலிப் பகுத்தறிவு தான் என்ன? கொலையே அவர்களின் பகுத்தறிவாகும். புலிகளின் நடத்தைகளை விவாதிக்க, விமர்சிக்க அனுமதியாத பகுத்தறிவு. இதையே இந்த புலி பகுத்தறிவு என்கின்றது. உண்மையில் எதையும் விவாதிக்க, தமது சரியான சொந்த நிலையை முன்வைக்க, அதனிடம் சொந்த பகுத்தறிவே கிடையாது. பகுத்தறிவுக்கு உட்படாத நடைமுறை அம்பலமாகும் போது, அதைப் பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் அனைவரையும், கொல்வதே அதன் பகுத்தறிவாகின்றது. இப்படித்தான் 10000 மேற்பட்டவர்களை கொன்றனர். புலியின் பகுத்தறிவுக்கு உடன்படாதவர்கள் என்பதால் பகுத்தறிவுள்ளவர்களை கொன்று போட்டனர். இதையே பகுத்தறிவு என்று, இந்தப் புலி குலைக்கின்றது.

 

ஒரு விவாதம் செய்பவர்கள் அறிவியல் பூர்வமாக, எமது வாதங்களை மறுத்து, தர்க்க ரீதியாக விவாதிக்கவேண்டும். எந்த பாசிட்டுக்கும், ஏன் பகுத்தறிவற்ற எவருக்கும் அந்த துப்புக் கிடையாது. திரித்தல், புரட்டுதல், அடிப்படையும் ஆதாரமுமற்ற அவதூறு, இதுவே அதன் எழுதும் பகுத்தறிவு மொழியாகின்றது. எழுதும் மொழி அவதூறு என்றால், அதன் நடைமுறை என்பது படுகொலை. இதுவே புலியிசத்தின் சாரம்.

 

என்னை நோக்கி அவதூறு செய்யும் அறிவற்ற லூசு, முதலில் எனது கட்டுரையையே திரிக்கின்றது. நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி அவதூறு செய்கின்றது. அத்துடன் அதைப் புரிந்து கொள்ளும் கல்வி அறிவற்று உளறுகின்றது. அதைச்சொல்லி பன்னாடையாய், தமது வடிகட்டிய முட்டாள்தனத்தை பினாற்றுகின்றது.

 

இந்த லூசு நான் சொல்லாததை, நான் சொன்னதாக கூறுவதைப் பார்ப்போம் 'இவரது வீர பிரதாபத்தை வெளிக்காட்ட இவர் விடும் இன்னொரு கதை யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் சங்கரும் தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாகவும் தனது தாயாரை திட்டியதாகவும் சொல்லியிருப்பதுமட்டுமல்ல" என்கின்றது.

 

இப்படி நான் எங்கே எப்போது கூறியுள்ளேன். (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" அவர்கள் என் பெயரில் கற்பனை செய்து கதை சொல்லுகின்றனர். நான் கூறியது என்ன? 'யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு."

 

இதுவே நான் எழுதியது. அதாவது 'என்னை தேடிச் சென்ற எனது அம்மா", 'என்னைத் தேடிச் சென்ற அம்மாவை" அவர்கள் நடத்திய விதம் பற்றி கூறுகின்றது. ஆனால் இந்த புலி லூசு, இதை மாற்றி (எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" எழுதி என் கதை தான் எழுதி, பாசிச வழிகளில் திரித்துக் கதை கூற முனைகின்றது.

 

அவர்கள் என்னைத் தேடி எனது வீடு சென்றதாக நான் குறிப்பிடவேயில்லை. இதைச் சொல்லும் புலி லூசுகளுக்கு அறிவில்லை என்பதா! எனது அம்மா நாள் தோறும் என்னைத் தேடி புலிகளிடம் சென்றவர். அங்கு நடந்த கதைகளில் சில இவை. தாம் பிடிக்கவில்லை என்று கூறி நடத்திய, நடத்துகின்ற அட்டகாசங்களோ இப்படி பற்பலவாறானவை. அவர்களின் முகாமேறி தாய்மையை பிச்சையாக கேட்ட அனைத்து (தமிழ்) தாய்மாருக்கும், இது போன்ற அழியாத பாசிச வரலாறுகள் பல தெரியும். தம்மால் வதைக்கப்படும் மக்களையும், அவர்கள் குடும்பங்களையும், புலிகள் கையாளும் மொழியும் வன்பேச்சும் அதன் வன்முறையும் உலகம் அறிந்தது. இது பகுத்தறிவுள்ள எல்லா மனிதனுக்கும் நன்கு தெரிந்ததே.

 

(எ)'தன்னை கைது செய்ய வீடு தேடி வந்ததாக" அவரே கதை சொல்லி பிறகு, அதற்கு ஒரு பன்னாடை விளக்கம். 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. மன்னார் மாவட்ட மற்றும் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவும் புலிகளின் தலைமைக்கு நெருக்கமாகவும் புலிகளின் வான் தொழில் நுட்ப மற்றும் புலிகளின் சர்வதேச விவகாரங்களில் நீண்ட காலம் செயற்பட்டு வந்தவருமாகிய சங்கரும் தேடி வந்ததாக சொல்வதின் மூலம் ரயாகரன் தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே இவரின் நோக்கமாகும்." என்கின்றார்.

 

சரி அண்ணை 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை கைது செய்ய ராதாவோ சங்கரோ போக வேண்டியதில்லை. 'இவர் போன்ற சாதாரணமான ஒருவரை" என்கின்றாரே. சாதாரணமல்லாத அந்த நபர்களாக, யாரை குறிப்பிடுகின்றீர்கள். உங்களால் கொல்லப்பட்ட 10000 பேரைப் பற்றியா சொல்லுகின்றீர்களா? யாரை? . 'கைது செய்ய" என்கின்றீர்களே. என்னை கைது செய்ய, எனது வீட்டுக்கு வரவில்லை. இப்படி எல்லாம் உங்களால் எப்படித்தான் கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து கற்பனை செய்யமுடிகின்றது. அவர்கள் திருடனைப் போல் ஊர் உலகத்துக்கு ஒளித்தபடி, இனம் தெரியாத ரவுடிகளைப் போல் வீதியில் வைத்துக் கடத்தியவர்கள். பின் எப்படி கைது செய்யமுடியும். பின் தாம் பிடிக்கவில்லை என்று அறிவித்தவர்கள். அப்படிப்பட்ட அரசியல் கோழைகள். வீரமாவது, மண்ணாங்கட்டியாவது. ஒரு துரோகியாக முதுகுக்கு பின்னால் நின்று கொல்வதோ வீரம்.

 

அன்று எனக்காக அந்த சமூகம் போராடும் என்பதால், அதை தவிர்ப்பதற்காய் அச்சத்தில் இரகசியமாக கடத்தியவர்கள். கடத்தலும் கைதும் வேறானதென தெரியாது. கைதாவது மண்ணங்கட்டியாவது. நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன் என்பதால், தமிழ் இயக்கங்களின் பாசிசத்தை எதிர்த்த பல போராட்டங்களை சமூகத்தினுள் நடத்தியவன் என்பதால், இரகசியமாக கோழைகளைப் போல் கடத்திச்சென்றவர்கள். புலிகளைப் பொறுத்த வரையில் 'சாதாரணமான ஒருவ"னா கருதப்பட்டல்ல கொல்லப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவனாய் கதையை முடித்துக்கட்டிய பின் கையை விரிக்கும் நோக்கில் கடத்தப்பட்டவன்.

 

'தன்னை புலிகளின் தளபதிகளிற்கே தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வதே" என்கின்றார். கைது செய்ய அவர்கள் வராத போது, இது எப்படி 'ஒரு வீராதி வீரனாக காட்டிக்கொள்வது" சாத்தியம். அண்ணே எப்படி அண்ணே? இப்படி எப்படி 'தண்ணி காட்டிய ஒரு வீராதி வீரனாக" இருக்க முடியும். அண்ணைமாரே, அந்த அதிசயத்தைச் சொல்லுங்கள். இதற்கு உங்களால் படுகொலையைத் தவிர, வேறு வார்த்தையில் பதில் சொல்லமுடியாது.

 

இப்படிப்பட்ட கொலைகாரக் கும்பல் தான் புலிகள். சுத்துமாத்து, முடிச்சுமாற்றித்தனம், இதற்கு இவை எல்லாம் சான்றுகள். அடுத்து புலித்தலைவர்கள் இது போன்ற கைதுகள் செய்ய செல்வதில்லையாம். அடிமாட்டு நிலைக்கு, ரவடிக்கும்பலாக சீரழிந்து வாழ்பவர்கள் யார்? புலிகள் தான். அறிவு நேர்மை எதுவுமற்று மாபியாக்களாகவும் கொலைகளைச் செய்தே தளபதியானவர்கள் யார்? உங்கள் தலைவர் பிரபாகரன் குரும்பசிட்டி நகைக்கடைக் கொள்ளை அடிக்கச் சென்றதும், அதை எதிர்த்த ஊர் மக்களை கொன்ற காட்சிகளையும் நாம் நேரடியாக கண்டவர்கள். உங்கள் தலைவர் கிட்டு வீதிவீதியாக பேசாதா தூசணமா ! , செய்யாத கோமாளித்தனமா! செய்யாத ரவடித்தனமா! யாழ் மக்கள் இதை நன்கு அறிவர். புலித்தலைவர்கள் எப்படி எந்த வழியில் வரலாற்றுக்குள் வந்தனர் என்பதற்கு, நீங்கள் பதில்சொல்ல முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு மனித விரோதிகளாக, ஈவிரக்கமற்ற கொடூரமானவர்களாக யார் எல்லாம் செயல்பட்டார்களோ, அவர்கள் தான் புலித் தலைவர்கள். இப்படியாக இவர்கள் எந்த எடுபிடிகளுமின்றி திரிந்த காலங்கள் உண்டு.

 

இப்படிப்பட்ட புலிகளுக்கு ஏற்ற புலி லூசு திரித்து புலம்பியதையே, இன்னொரு பன்னாடை தூக்கி வைத்து புலம்புவதைப் பாருங்கள். 'லெப்.கேணல்.ராதா கேணல்.சங்கர் போன்ற மூத்த தளபதிகள் வரை தன்னை தேடி தொல்லை தந்ததாக புது கிரைம் எழுதிப்புழுகித் தள்ளி ப.வி.வின் பைத்தியம் இவருக்கும் பிடிச்சிட்டுதெண்டு சொல்லியிருக்கிறார்." இப்படி நான் எழுதியதையே புரிந்து கொள்ள முடியாத எடுபிடிகள். இவர்கள் தான் கோசம் போடும் புலி ஆதரவாளர்கள். இதில் சில லூசுகள் விவாதம் செய்யும் அறிவாளிகள் போல், கொலைகாரரின் தேவைக்கு ஏற்ற அவதூறை புணருகின்றனர். இந்த பைத்தியங்கள் இந்திய தோழர்களுக்கு சிறப்பு வேண்டுகோள்கள் விடுகின்றனர். மாற்றுக் கருத்துடன் புலிக்கு தோழனா? அந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத மண்டுகள்.

 

இப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்ட அவதூறுகளையும் சம்பவங்களையும் திரித்து விடுகின்றனர். சொன்ன விடையத்தை விளங்க முடியாத புலி அலுகோசுகள் தான், 10000 மேற்பட்டவர்களை கடந்தகாலத்தில் கொன்று போட்டவர்கள்.

 

கொலைகார பாசிச புல்லரிப்பில் புலம்பும் மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம். 'நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார். இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி (N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார். பின்னர் இவர் இந்தியா செல்கின்றபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டு இறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது." கொலைகாரப் கற்பனை புலனாய்வு கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் கொலைகளை செய்ய புலனாய்வு செய்கின்றனர் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. தமிழ் தேசிய விடுதலை முன்னணி சண்முகதாசன் கட்சியியில் இருந்து வந்த ஒரு கட்சியின் நீட்சி. அது திடீரென்று தமிழ் தேசிய அலையில் தோன்றியதல்ல. நானும் சிலரும் தொடங்கியதல்ல.

 

நல்லது கொலைகார அண்ணை அவர்களே 'காணாமல் போய்விட்டார்" எப்படி பின்னால் 'இலங்கை கடற்படை சுட்டு இறந்தா"ர். எப்படி காணமல் போனவரை கடற்படையால் சுட முடிந்தது. இப்படி இவர்களால் மட்டும் தான் அறிவாக எழுத முடியும். காணமல் போனவரை எப்படி 'இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாக" கூறமுடியும். அதுவும் கடற்படைக்கு அல்ல இராணுவத்துக்கு. இப்படி புலிகள் 'அறிவியல் பூர்வமாக" சிந்தித்து கூறித்தான், கொலைகளையும் தம்மையும் நியாயப்படுத்துகின்றனர். இந்த நியாயத்தை பின்பற்றி எழுதும் பன்னாடை ஒன்று, "அறிவு பூர்வமாக" கூறுவதைப் பாருங்கள்.

 

'அதில் ஒரு 10 இலட்சம் ரூபாவை இந்த றா சாரு சுறுட்டிப்புட்டாருங்க. அதைக் கேட்கப் போன விஸ்வானந்தா தேவா சாரை இந்த றா சாரு பிளாட் இயக்கத்தின மென்டிஸ் சாரை வைச்சு அடிச்சுப்பிட்டாருங்க. பிளாட் இயக்கம் தன்னுடைய உட்கட்சிப் பிரச்சனையில் எப்பிடித் தலையிடலாம் என்று உமாமகேஸ்வரன் சாருகிட்ட நியாயம் கேட்க விசுவா சாரு தமிழ்நாட்டக்கு போட் ஏறினவர் தானுங்க. அதோட அவரோட கதை முடிஞ்சுதுங்க. இந்த றா சாருதாங்க முதல் முதலா விசு சாரை சிறீலங்கன் நேவி சுட்டுப் போட்டதா சொன்னவருங்க. ஆனா உண்மையில் அவரை நேவி சுடல்லைங்க. தங்கச்சி மடத்தில கரையேறின விசு சாரை பிளாட் சங்கிலிசாரின் ஆக்கள் கைது செய்து ஒரத்து நாட்டிலை இருந்த அவங்க பி முகாமிலை அடைச்சு வைச்சவையுங்க. அந்த நேரத்தில அவற்றை கதையை முடிக்கச் சொல்லி இந்த றா சார் தான் மெண்டிஸ் சார் மூலமா பின் தளத்துக்கு தகவல் அனுப்பினவருங்க. விசு சாரை சுட்டுக் கொண்டது சங்கிலி சாரோட தோஸ்து அலவாங்கு மோகன் என்பவருங்க.. இன்னொரு சமாச்சாரம்.. இந்த றா சாருக்கு அந்தக் காலத்திலேயே ரோ சாருங்கு கூட உறவிருந்ததுங்க. தமிழ் நாட்டு தோழர்மாருங்களே உசார இருங்க.ரோ சாரங்களோட ஆளுகள் தோழர் என்று செல்லிக் கொண்டும் வருவாங்க"

 

தங்கள் சொந்த பாசிச வழியில் சிந்தித்து எழுதும் லூசுக் கூட்டம் என்பது இது தான். அறிவு, நேர்மை எதுவுமற்ற பன்னாடைகள். வாயில் வந்ததை மாறி மாறி நக்கியெழுதுவது. பிறகு தமிழ்நாட்டு தோழர்மாருக்கு வேண்டுகோள். உங்கடை பணத்துக்கு கோமாளிகளான கோபாலசாமி, நெடுமாறன் வகையறாக்களுக்கு வேண்டுகோள் விட வேண்டியதுதானே. 'தோழர் என்ற செல்லிக் கொண்டும் வருவாங்க" என்று புல்லரிக்கும் ஆலோசனைகள்.

 

அந்த 'காணாமல் போய்விட்டார்" விசு பற்றி கதைகள் இவை. அவர் இந்தியா செல்லும் வள்ளம் ஏறும் வரை, இந்த புலி லூசுகள் கூறுவது போல் என்றும் காணாமல் போய்விடவில்லை. வள்ளம் ஏறிய பின்தான் காணாமல் போனவர். அதன் பின்னரான ஊகங்களைத் தவிர, வேறு எந்த ஆதாரபூர்மான தரவுகளும் இதுவரை கிடையாது. இவர்கள் கதை சொல்வதைப் பார்த்தால், அவர் வள்ளத்தில் ஏறிய பின் காணாமல் போன விடையத்தில், புலிகள் பற்றி உள்ள சந்தேகத்தை உடைத்துப் போடுவதாக உள்ளது. இதன் பின் விசு பற்றி கட்டும் கதை, மேலும் இதில் புலிகளின் சம்மந்தம் பற்றிய ஊகத்தை மேலும் எழுப்புகின்றது.

 

விசுவுக்கு என்ன நடநத்து என்பதை வைத்து, தெருநாய்கள் போல் ஒன்றையொன்று பார்த்து குலைக்கின்றது.

 

இந்த குலைப்பில் பொருத்தமற்ற முரண்பாடுகள் என்ன?

 

1. விசுவானந்ததேவன் அக்காலத்தில் என்.எல்.எவ்.ரி. இயக்கத்தில் இருக்கவேயில்லை. அவர் மற்றொரு அமைப்பில் இருந்தவர். இது கூடத் தெரியாத புலம்பல். அவர் என்.எல்.எவ்.ரி. யில் இருந்து பிரிந்த போது, ஒரு அரசியல் விவாதம், ஒரு விமர்சனம், அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடு கண்டு சமாதானமாகவே பிரிந்தவர். அவருக்கு பணமும் ஆயுதமும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் என்.எல்.எவ்.ரி. யால் வழங்கப்பட்டது. இணங்கி வேலை செய்யவும், தொடர்ந்து மீள இணையவும் கூடிய அரசியல் இணக்கப்பாடு இனம் காணப்பட்டது. அவரவர் வழிகளில் செயற்பட பூரண ஒத்துழைப்பு கூட பரஸ்பரம் இருந்தது. அமைப்பு ரீதியாக இரண்டு அமைப்புகள், ஆனால் நண்பர்களாக தோழர்களாகவே இவ் இரண்டு இயக்க உறுப்பினர்களும் செயற்பட்டனர். இது இலங்கை இயக்கங்களின் வரலாற்றில் இல்லாத ஒன்று. பலரும் அறியாத ஒன்று. இந்த புலி லூசுகள் தம்மைப் போல், தம் புத்தி போல், தம் பாசிச வழி போல் கருதியே கண்ணை மூடிக்கொண்டு கதை புனைகின்றனர்.

 

விசுவுக்கு வள்ளத்தில் சென்ற பின் என்ன நடந்தது என்று தெரியாத போதும், அவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மை. அந்த வகையில் யார் இதைச்செய்தனர்?

 

1. புலிகள் என்ற சந்தேகமே பெரும்பாலும் உண்டு. அவர் கடற்பயணம் செய்ய தங்கியிருந்து கரையோர இடம் பகிரங்கமானது. அவர் சென்ற வள்ளமோ பொதுமக்களை அகதியாக ஏற்றிச் சென்ற வள்ளம். 28 பேர் அளவில் வள்ளத்தில் சென்றனர். வள்ளம் புறப்பட்ட இடத்தில் பொது மக்கள் உட்பட புலிகள் இருந்தனர். புலிகள் இப்படிப்படட படுகொலைகளை அக்காலத்தில் செய்து வந்தவர்கள். இயக்க தலைவர்களை ஒவ்வொருவராய் சுட்டுக்கொன்றவர்கள். ஒபரேதேவன் முதல் பலர் கொல்லப்பட்டனர். ரெலொ அழிக்கப்பட்டு, அவ்வியக்கத்தில் பலர் கொல்லப்பட்டு இருந்தனர். புளாட் மென்டிஸ் அக்காலத்தில் புலிகளின் சிறையில் இருந்தவர் அல்லது கொல்லப்பட்டு விட்டார்.

 

2. இந்த விடையத்தில் இரண்டாவது சந்தேகம் ஈரோஸ் மீது உள்ளது. அந்த வள்ளத்தில் விசுவுடன் சென்ற இரண்டாவது நபரான கண்ணன், கரையில் நின்றிருந்த ஈரோசுடன் வாக்கு வாதப்பட்டிருந்தனர். அதாவது கடுமையான ஒரு மோதல் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கூட இதை செய்திருக்கும் வாய்ப்பு உள்ளது. இதே ஈரோஸ் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் நெப்போலியனை, மலையகத்தில் வைத்து ஒன்றாக படுத்த பாயில் வைத்துக் கொன்றவர்கள். அப்படி கொல்வதில் புகழ்பெற்றவர்கள்.

 

3. மூன்றாவது சந்தேகம் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் மீது உள்ளது. அன்று மற்றொரு வள்ளத்தில் சென்ற ராஜன், விசு இந்தியா வருவதை அறிவான். அவன் தன்னுடன் தனது வள்ளத்தில் விசுவை வரும்படி, கரையில் வைத்துக் கோரியவன். விசு நிராகரித்ததாய் அறிவித்தவன். விசு கொல்லப்பட்டதாக ராஜன் தான் இந்தியாவில் முதலில் அறிவித்தவன். முன்னராக புறப்பட்டு சென்ற வள்ளத்தில் இருந்த ராஜனுக்கு, எப்படி பின்னால் வந்த வள்ளத்திலிருந்த விசு கொல்லப்பட்டார் என்று கூற முடிந்தது என்பது மர்மம் தான். அப்போது றோவின் மிக நெருங்கிய சகவாக ராஜன் செயற்பட்ட காலம்.

 

4. நாலாவது சந்தேகம் கடற்படை மீது உள்ளது. கடற்படை மீதான சந்தேகம் பொதுவானது. ஆனால் 28 சடலங்கள் முதல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடற்படை செய்திருந்தால், அக்காலத்தில் சடலங்களை அப்படியே விடுவதே வழக்கம். அதுவும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று இலகுவாக அறிவித்து விடமுடியும். இச்சம்பவத்தை பொதுமக்கள் எவரும் காணவுமில்லை, அது பற்றிய பதிவுகள் எவையுமில்லை.

 

சந்தேகம் இயக்கங்கள் மீதே அதிகமாக உன்ளது. இந்த இயக்கங்கள் கொலைகார இயக்கங்களே. விசு காணாமல் போன காலத்தில் தான் பல்கலைக்கழக மாணவன் தலைவன் விஜிதரன் காணாமல் போனான். அதைத் தொடர்ந்தே புலிக்கு எதிரான புகழ்மிக்க போராட்டமும் நடந்தது.

 

2. அடுத்து இந்த சம்பவத்தில் மெண்டிஸ் இணைத்து சோடித்த புலிக் கூற்று நகைச்சுவையானது. விசு காணாமல் போன காலத்தில் மென்டிஸ் நீண்ட காலமாக கைது செய்யப்பட்ட நிலையில் புலிகளின் வதை முகாமில் இருந்த காலம். இக்காலத்தில் தான் மென்டிஸ் கொல்லப்பட்டார். விசுவுடன் மென்டிசை சம்பந்தப்படுத்தும் தகவல்கள் எல்லாம் முரணானதும் நகைப்புக்குரியதும்.

 

அத்துடன் சங்கிலி கடத்திச் சென்று கொன்ற தகவலோ நகைச்சுவையிலும் நகைச்சுவை. இக்காலத்தில் புளாட் பல துண்டுகளாக உடைந்தது மட்டுமின்றி, சங்கிலி போன்ற கொலைகாரர்கள் செயலற்றுப் போன காலம். புளாட் வதைமுகாங்கள் எல்லாம் வீங்கிவெம்பி சிதைந்து, சுக்குநூறாகின காலம். இப்படி கற்பனையில் எழுதுகின்ற போக்கிலித்தனம், புலியிசத்தின் உள்ளார்ந்த பாசிசமாகும். இது தன்னைப் போல், மற்றவனுக்கு அதை பொருத்தி வைப்பதே அதன் குள்ளநரித்தனம். வரலாற்றுச் சம்பவங்களைக் கூட தெரியாது, அதை திரித்து கயிறு விடுவதும். அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி அதை இணைத்து கதைசொல்லி நம்பவைக்கும் முடிச்சுமாற்றிகள் இவர்கள்.

 

3. விசு உமாமகேஸ்வரனை சந்திக்க சென்றாராம். வரலாறு தெரியாத, அரசியல் தெரியாத கற்றுக் குட்டித்தனம். தீப்பொறி உடைவு, அவர்களின் வெளியேற்றம் உட்பட அவர்களைப் பாதுகாத்தது வரை, விசு தலைமையில் இருந்த என்.எல்.எவ்.ரி. தான் முக்கிய பங்கு வகித்தது. முன் கூட்டியே நாம் அவர்களுடனான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். தீப்பொறி குழு , புதியதோர் உலகம் நூல் வெளியிட பண உதவி, அந் நூற்பிரதிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தது உட்பட, தீப்பொறி நபர்களை நாட்டுக்குள் அழைத்து வந்ததைக் கூட நாமே செய்திருந்தோம். அதன் பின்பாக சந்ததியாருடன் தொடர்சியான தொடர்பும், அவரை புளாட் கொன்ற போது அந்தக் கொலையை முதலில் அம்பலப்படுத்தியவர்களும் நாங்கள் தான். மண்ணில் அதை போஸ்ரர்கள் மூலம் அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். இவையெல்லாம் விசு என்.எல்.எவ்.ரி. யை விட்டு வெளியேற முன் நடந்தவை. விசு உமாமகேஸ்வரன் உறவு என்பது நினைத்து பாhக்க முடியாத ஒன்று. அந்தளவுக்கு புளாட் உட்படுகொலைகளை அக்காலத்தில் நாம் அம்பலப்படுத்தி வந்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் முன்னைய தலைவன் உமாமகேஸ்வரனை சந்திக்கச் சென்றதாக கூறுங்கள் நாங்கள் நம்புவோம்.

 

பாவம் அரை முட்டாள்களே 1983 பிந்தைய அவரின் வாழ்க்கை இந்தியாவில் தான் இருந்ததுடன், அவரின் மனைவி குழந்தை கூட இந்தியாவில் தான் இருந்தனர். அவர் சென்ற காரணத்தையே திரிப்பது, அவதூறு பொழிவது புலிப் பாசிசத்தின் இழிவுத்தனமாகும்.

 

இப்படி பொருத்தமற்ற வகையில், தமது அலுக்கோசுத் தனத்தை மெய்ப்பிக்க முனைவதே இவை. கொல்வதும், அதற்கு ஏற்ப எடுபிடிகள் காவடியாடுவதைத் தவிர, வேறு எதையும் செய்ய வக்கில்லாதவர்களின் அலம்பல் இது. இக்காலத்தில் தான் புலிக்கு எதிராக வீறு கொண்ட விஜிதரன் போராட்டம் நடந்த காலகட்டம். இப் போராட்டத்தின் போது மாணவர்கள் கோரிய அடிப்படை மனிதவுரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று துண்டுபிரசுரம் அடித்து வெளியிட்ட காலமுமாகும். மக்களின் எதிரிகளான புலிகள், மக்களின் தலைவர்களை வேட்டையாடி கொன்று குவித்த காலம் இது.

 


விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)


விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)


விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 03)


இக் காலத்திலே தான் நான் கடத்தப்பட்டேன். அதை இந்த லூசு 'இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்திரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார்" இப்படி எழுதி இதை இல்லை என்கிறதா இந்த லூசு? அல்லது புலித் தலைவர்களின் இது குறித்த அறிக்கையை இல்லை என்கின்றதா?

 

யாருக்கு கதை சொல்ல வெளிக்கிடுகின்றீர்கள். உங்கடை விரல் சூப்பும் விசுவாசிகளுக்கு சொல்லுங்கோ. உண்மையை அறிந்தவர்களுக்கு, உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு சொல்ல முடியாது. புலிகளின் உரை அடங்கிய ஒலி நாடா சொல்வதைக் கேளுங்கள். அது என்ன சொல்லுகின்து என்பதை கேளுங்கள். அதைக் கேட்க முடிவதில்லையோ அல்லது வேறு ஆதாரம் வேண்டுமோ?


 

புலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை


 

இந்த லூசுகளின் அறிவுக்கு புறம்பாக, புலித்தலைவர்கள் (மாத்தையா, தீலிபன், முரளி (புலி மாணவ அமைப்புத் தலைவன்) உள்ளிட்ட பலர்) உயிருக்கு உத்தரவாதத்தை, பல்கலைக்கழக மேடையில் பல ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் தருகின்றனர். அதை மேல் உள்ள உரை தெளிவுபடுத்துகின்றது.

 

இப்படி இருக்க இந்த புலி லூசு 'இவர் சொன்னது போல புலிகளால் இவரிற்கு ஆபத்து என்றால் அந்த இடத்தை விட்டு வெளியேறியதுமே புலிகள் இவரை கைது செய்திருக்கலாம். காரணம் பல்கலைக்கழகத்திற்கு மிக அருகிலேயே புலிகளின் இரண்டு முகாமும் இவரது வீட்டிற்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. பின்னர் இவர் பிரான்சிற்கு வந்த பின்னரும் அங்கு பிடித்த காச்சல் மாறவில்லை 85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது. ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான். ஆனால் இவரது கதைக்கு ஏற்றால் போல் நல்லதொரு பின்னணி இசையும் குடுத்து ஒரு பாட்டும் போட்டு கடைசியில் ஒரு நூறு புலிகளை தாக்கி சுட்டு தள்ளிவிட்டு சிறை மதிலை தாண்டி அகழியில் நீந்தி தப்பி வந்ததாக படமாக தயாரித்தால் இன்னொரு சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ படம் பாத்தமாதிரி இருக்கும்." என்கின்றார். சில்வெஸ்ரர் ஸ்ராலோனின் ரம்போ கதையை, முன்னைய புலித் தலைவர்களுக்கு மாறாக கூறுவது தான், இன்றைய புலியிசம்.

 

'ஒரு பத்துநாள் சாப்பாடு போடாமல் அடிச்சாலே ஒருதன் செத்திடுவான்." என்கின்றார். ஏதோ அவைகளை தானே செய்துணர்ந்தவர் போல் இவ்வளவு துல்லியமாக கூறுகின்றார். நான் 85 நாட்கள் சிறையில் இருந்தது உண்மை என்பதை, மாத்தையா உரை தெளிவாக கூறுகின்றது. அதை இல்லையென்று கூறுகின்ற நயவஞ்சகமே, புலிப்பாசிசத்தின் அரசியல் மூலமாகும். '85 நாட்கள் புலிகள் தன்னை நிர்வாணமாக்கி தலைகீழாய் கட்டித்தூக்கி அடி அடியென்று அடித்து மலசலம் கூட அப்படியே போன நிலையில் நித்திரை கொள்ள விடாமல் நீரும் உணவுமின்றி இருந்த நிலையில் 86 வது நாள் சிறையை உடைத்து தப்பி வந்ததாக இவர் எழுதும் கதை நன்றாகதான் இருக்கிறது." என்கின்றார். அப்படியாயின்

 

1. இந்த நாட்களில் புலிகள் என்ன செய்திருப்பார்கள்?
2. என்ன விசாரித்திருப்பார்கள்?
3. ஏன் அவர்கள் என்னைக் கடத்தவில்லை என்று மறுத்தனர். தமக்குத் தெரியாது என்றனர்?
4. அப்படியாயின் என்ன செய்திருப்பர்?
5. உயிருடன் விட்டிருப்பார்களா? எப்படி?
6. என்னைக் கடத்தாதவர்கள் எப்படி உயிருடன் விடமுடியும்.

 

இப்படி பல கேள்விகளை நாம் கேட்கமுடியும். இந்த லூசு புலம்பல்களின் பல வரலாற்று திரிப்புகளை அம்பலப்படுத்த முடியும். இதுவே போதும்.

பி.இரயாகரன்
16.06.2007