தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் இந்த நோய் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

ஆனாலும் முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு `எய்ட்ஸ்' பரவும் வாய்ப்பை கணிசமாக குறைக்க முடியும். தென்ஆப்பிரிக்காவின் கவா சுலா பல்கலைக்கழக டாக்டர்கள் கடந்த பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1175429274&archive=&start_from=&ucat=2&