நம் உடலில் உள்ள (protein) கொரட்டின்(keratin) ஆகியவையே நகமாக வளர்ச்சி பெறுகிறது.

கருப்பையில் கருதரித்ததும் முதலில் உற்பத்தியாகும் உறுப்பு கண்தான்.

உடல் பருமனாக உள்ளவர்கள் நீச்சல் பயிர்ச்சியை விரைவாக கற்றுக் கொள்ள முடியும். இவர்கள் அதிக நீரை அகற்றுவதால் சுலபமாக மிதக்க முடியும்.

ஒரு மனிதன் சராசரி உயரம் அவன் தலையின் நீளத்தைப் போல சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

கண்கள் பழுப்பு,நீலம்,கறுப்பு ஆகிய எந்த நிறத்தில் இருந்தாலும் அதற்கும் பார்வைத் திறனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

----

சாதாரன மனிதன் சுவாசிக்கும் காற்றில் இருப்பதைவிட மீசை,தாடி வளர்ப்போர் சுவாசிக்கும் காற்றில் பினால்,பென்சின்டோலுன்,அம்மோன��யா போன்ற பல்வேறு நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக சோவியத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.

ஓருவரின் கைரேகையைப் போலவே மற்றவருக்கு இருக்காது.இது இயற்கையின் அற்புதமான செயல்.இந்த உண்மையை சீனர்கள் தான் முதன் முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர்.

அப்போது சீன அரசர்கள் முக்கிய பத்திரங்களிள் தங்கள் கட்டை விரல் ரேகையைப் பதித்தனர்.


1892 ல்,ஆங்கிலேயே விஞ்ஞானி சர் பிரான்ஸிஸ் கால்டன் என்பவர் எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை நிருபித்துக் காட்டினார்.

கைரேகையக் கொண்டே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் முறையை சர் எட்வர்ட் ஹென்றி என்பவர் பிரபலபடுத்தினார்.

1901ஆண்டு முதல் லண்டன் ஸ்காட்லாந்து யார்டு போலிசார் இந்த முறையைப் பின் பற்றி வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் இம்முறை பின்பற்றப்படுகிறது.