ஒரு குழந்தையின் வாழும் சூழ்நிலையும் வளர்ப்பு முறையும் தான் அதனுடைய பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்கிறதா? இது பற்றி ஆராய்ந்த அமெரிக்காவின் தேசிய மனநலக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனின் பழக்கவழக்கங்களைத் தீர்மானிப்பது மரபணுக்கள் தான் என்று முடிவுகட்டியுள்ளனர். வில்லியமஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு அழர்வமான மரபணு மாற்றம் உள்ள மூளையை உடைய மனிதர்கள், சமூக நிகழ்வுகளின் போது அசாதாரணமாகச் செயல்படுவார்கள். ஏறுக்கு மாறாக நடந்து கொள்வார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். சமூகத்தில் பழகுவது என்பது மனிதர்களின் அனுபவத்துடனும் அவர்களின் நலனுடனும் தொடர்புடையது. மனநலன் கெடும் போது—அதாவது பைத்தியம் என்ற நிலைக்கு வரும் போது, இந்தப் பழக்கவழக்கங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன என்று, அமெரிக்க தேசிய மனநலக்கழக இயக்குநர் தாமஸ் இன்செல் கூறுகிறார்.மரபணுக் கோளாறினால் மூளையின் பாதையில் செயல்பாட்டுக் கோளாறுகள் ஏற்பட்டு, அசாதாரணமான பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றனவா என்ற முதலாவது ஆய்வாக இது இருக்கக் கூடும்.

 

ஆய்வுக்கு உட்படுவதற்காக விரும்பி முன்வந்த ஆரோக்கியமான தொண்டர்களின் மூளையுடன் வில்லியமஸ் சிண்டரோமினால் பாதிக்கப்பட்டவார்களின் மூளையை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்தனர்.

 

சமூகப் பழக்க வழக்கங்களை நிர்ணயிக்கும் மூளைத் தொடரமைப்பையும், சுற்றுச்செயல்பாட்டையும் கண்டறிந்து, இந்த இருவகைப்பட்டவர்களின் செயல்பாட்டில் உள்ள வித்தியாசத்தைக் காண்பது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

 

வில்லியமஸ் சிண்டரோம் என்னும் மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் 7 குரோமோசோமில் சுமார் 21 மரபணுக்களைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையால்தான், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்று அவர்களால் தீர்மானிக்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்டவர்கள் முற்றிலும் புதிய மனிதர்களிடம் ஏதோ வெகு நாள் பழகியவர்கள் போல பேசத் தொடங்குவார்கள். அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்டுவார்கள். மிகவும் பயப்பட வேண்டிய தேவையே இல்லாத போது, பயந்து போய், பரபரப்பாக செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உயரத்தைக் கண்டால் பயம், சிலந்தியைக் கண்டால் பயம் என்று சின்னச் சின்ன விடியங்களுக்கு எல்லாம் பயப்படுவார்கள்.

 

இப்படிப்பட்ட விநோதமான பழக்கவழக்கங்களுக்கும், மூளையின் உள்ளே வாதுமைப்பருப்பு வடிவில் உள்ள ஒரு சிறு கட்டிக்கும் தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்தனர். இந்தச் சிறுபருப்பு போன்ற கட்டிதான் ஒரு தகவலைச் சரிபார்த்து, அந்த நேரத்தில் மனிதன் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்த வாதுமைப் பருப்பு வடிவிலான மூளைக்கட்டிக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் போது, மனிதனுடைய சமூகப் பழக்கவழக்கங்கள் கெடுகின்றன. இதைத்தான் வில்லியமஸ் சிண்ட்ரோம் என்கிறார்கள்.

 

இப்படிப்பட்டவர்களின் மூளையை, சாதாரண மனிதர்களின் மூளையுடன் ஸ்கேன் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்ததில், புதிதாக ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்த வாதுமைப் பருப்பு வடிவிலான மூளைக் கட்டி தானாகவே சேதம் அடைகிறதா? அல்லது மூளையின் இதர பாகங்களை அது கட்டுப்படுத்தும் முறையினால் பிரச்சினை உண்டாகிறதா?

 

சாதாரண மனிதர்களின் மூளையில் வாதுமைப் பருப்பு வடிவிலான கட்டியை கட்டுப்படுத்தக்கூடிய நியூரான் எனப்படும் ஒரு சிக்கலான நரம்பியல் தொடரமைப்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், வில்லியம்ஸ் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நரம்பியல் தொடரமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

இப்படிப்பட்டவர்களை குழந்தைப் பருவத்திலேயே மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அதற்கு ஏற்ப கல்வி கற்பித்தால் குணப்படுத்தி விட முடியும். பயப்பிராந்தி அல்லது குற்றச்செயல் போன்ற மன நோய்களுக்கு மக்களை தள்ளக்கூடிய மரபணுக்கள் யாவை என்பதை ஏதாவது ஒரு நாள் கண்டு பிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

 

http://tamil.cri.cn/1/2006/01/09/22@28328_1.htm