என்னுடைய பதிவு கடி பக்கோடி: KADI PAKODI


கடி இது தயிரில் தயாரிக்கப்படுவது. பாசிப்பருப்பு, அல்லது
மைசூர் பருப்பில் செய்யப்படும் கிச்சடி (பொங்கலுக்கு)
சூப்பர் ஜோடி இந்தக் கடி. கடிக்காகவே இன்னும் ரெண்டு
கரண்டி கிச்சடி சாப்பிடுவீங்க.

தேவையான பொருட்கள்:

கடி செய்ய:

தயிர் - 400 கிராம்.(கடைந்து வைத்துக்கொள்ளவும்)
கடலை மாவு - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு.
உப்பு தேவையான அளவு.
பச்சை மிளகாய் - 2
கடுகு,சீரகம் தாளிக்க எண்ணைய்.
தண்ணீர் 2 கப்.

பக்கோடி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 கப்
விரும்பினால் சோடா- 1 சிட்டிகை.
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
கொத்தமல்லித்தழை கொஞ்சம்.(பொடியாக அரிந்தது)
பெருங்காயம் சிறிதளவு.
(விரும்பினால் மசித்த உருளைக்கிழங்கு 1/4 கப்)
பொறிக்க எண்ணைய்.

செய்முறை:

பக்கோடி செய்முறை. மேற்சொன்ன சாமான்கள்
அனைத்தையும் ஒன்றாக பிசைந்து (தேவையானால்
கொஞ்சம் நீர் சேர்த்து) உருண்டையாகவோ,
சிறிய தட்டையாகவோ தட்டி எண்ணையில்
பொறித்து வைத்துக்கொள்ளவும்.

கடி செய்முறை:
கடலைமாவில் நீர் சேர்த்து கலந்து அடுப்பில்
வைத்து கொதிக்க விடவும். பச்சை வாடை
போக கொதித்ததும், கடைந்து வைத்துள்ள
தயிரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி
வைத்து கடுகு, பச்சைமிளகாய், சீரகம் தாளிக்கவும்.

பரிமாறுவதற்கு சற்றுமுன் பக்கோடியைச் சேர்த்து
பரிமாறாவும்.

http://pudugaithendral.blogspot.com/2008/07/blog-post_9573.html