தேவை:

கடுகு: 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்
வெந்தயம்: 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்:100கி
புளி: எலுமிச்சை அளவு
எண்ணெய் :100மிலி
உப்பு: தேவைக்கு...


செய்முறை:

முதலில் மூன்று டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.

http://tamilmeal.blogspot.com/