க்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே.

இங்கே அந்த ஆதாரங்களை யுத்த அரசியலூடாகத் தட்டிப் பறிக்கும் இலங்கைச் சிங்கள மற்றும் தமிழ்ப் புலிகளின் யுத்த ஜந்திரங்கள் மக்களின் விடிவுக்காகப் போரிடுவதாகக் கூறிக்கொண்டே அவர்களை பொருளாதாரத் தடையால் போராட்ட வலுவற்றவர்களாக்கித் தத்தமது இருப்புக்கேற்ற அடிமைக் கூட்டமாகவும்,தமது எஜமானர்களின் தேங்கிய சந்தைகளை மீளவும் உயிர் பெற வைப்பதற்காவும் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள் இருத்திவைக்கின்றார்கள்.இதிலிருந்து மீளமுடியாதபடி இனவாத அரசியல் முன்னெடுப்பை இலங்கையூடாகவும் அதை எதிர்ப்பதற்கானவொரு அரசியலையும், போராட்டத்தையும் மட்டுப்படுத்திப் புலிகளிடம் வழங்கியுள்ளது,அந்நியச் சக்திகள்.


இதை நோர்வே ஊடாகச் சிறுப்புறச் செய்து முடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் மக்களை இருவேறு முனைகளாகத் தாக்குகிறது.

ஒன்று பொருளாதாரத்தடை மூலமாகவும்,மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும்,பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகிறது.அதற்காகப் புலிகளை தேசியச் சக்திகளாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரதி நிதிகளாகவும் மக்கள் மத்தியில் செயற்பட அநுமதிப்பதிலும்,மக்களைத் துரோகி சொல்லி புலிகளை வைத்தே அழிப்பதிலும் அந்நிய நலன்கள் வெற்றி பெற்றே வருகிறது.அதன் அப்பட்டமான முன்னெடுப்பே இன்றைய யாழ்ப்பாண வாகரை நிலைமைகள்.ஒருபுறும் பொருளாதாரத்தடை,மறுபுறும் யுத்தம் இடப்பெயர்வு,அகதிய வாழ்நிலை.



இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனையையும் அணுகவில்லை.மாறாக ஈழப் போரை முன்னெடுப்பதாக மார்பு தட்டும் புலிகளைத் தமது ஆர்வங்களுக்கமையவே போரிடத் தூண்டுகிறது.அந்த ஆர்வங்களானது புலிகளுக்கான குறைந்தபட்ச இருப்பையும்,அதன் அரசியல் ஆதிகத்தையும் தமது முதலாளிய நலன்களுக்கிசைவாகவே வழங்கிக் கொள்கிறது.

இதனால் இலங்கைச் சிங்கள அரசினதும்,சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் பேரினவாதத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மீது இனவாத அரசியலை ஏவிவிடும் இந்த அரச கட்டமைப்¨புயும் அதன் வன்முறை ஜந்திரத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான சூழலுக்குள் தள்ளப்பட்டபோது,அந்த மக்கள் மத்தியில் மலர்ந்த எதிர்ப்புச் சக்திகள் இலங்கைமீது வலைவிரித்துள்ள அந்நிய அரசுகளால் கையகப் படுத்தப்பட்டு,அந்நிய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முறைகளைக் கருவாகக்கிக் கொண்ட அமைப்புகளை மேலும் உருவாக்க முனைகிறது,இந்த அந்நியநச் சக்திகள்!

 

அதிலொன்று புலிகளைப் பிளந்து கட்டப்பட்ட "கருணா அம்மான் என்று புலிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட" புலிகளின் தளபதியான மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா குழுவாகும்.இது இலங்கை அரசோடிணைந்து புலிகளுக்கும் கிழக்கு மக்களுக்குமான அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறியவும்,கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகப் பிரிக்கவும் முனைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவை இன்று சாத்தியமாக்கி வருகிறது.

இனங்களுக்கிடையிலான இனத்துவ முரண்பாடு மிகச் சாதுரியமாகத் தகவமைப்பட்டு வளர்தெடுகப்படுகிறது.இதன் தேவை இந்த அமைப்பு முறைக்கு அவசியமாக இருக்கிறது.இந்தத் தேவையினது ஒரு வெளிப்பாடாகவே புலிகள் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் மாற்றியக்கங்களைத் துரோகிகளென்ற நாசியப் பிரச்சாரம்போன்று மக்களின் மனங்களைக் காயடித்து அவர்களின் பிள்ளைகளைக் கொன்றார்கள்.

 

இவர்களின் இந்தத் தீயவினையானது திட்டமிட்ட அந்நியச் சக்திகளின் மேற்பார்வையோடும்,தூண்டுதலோடுமே நடந்தேறியது.இப்போது மக்கள் மத்தியில் தாமே நிற்பதாகவும்,இலங்கை இனப்பிரச்சனைக்கும்,இனவொடுக்குமுறைக்கும் எதிராகத் தாமே போராடுவதுமாக அறைகூவலிட முனைவதும் அந்நியச் சக்திகளின் ஆர்வங்களின் தூண்டுதலாகும்.

இது,புலிகளை ஒரு மட்டுப்படத்தப்பட்ட குறுகிய நிலப் பரப்புக்குள் தள்ளி அதன் உயிர்வாழும் தகுதியைத் தமது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருக்கும் இன்றைய பூகோள அரசியல், தமிழ் மக்களின் அனைத்துத் துயரத்துக்கும் காரணமாக ஈழவிடுதலைப் போரே என்பதையும்,அந்தப் போராட்டம் மக்களின் அனைத்து அடிப்படையுரிமையையும் இல்லாதாக்கிய மெய்ப்பாட்டை மிகவும் வலுவாக மக்களுக்கு அறியப்படுத்தும் நகர்வில் வெற்றியுற வைத்து, மக்களின் போராட்ட உணர்வை மெல்ல அழித்து வருகிறது.இதுவே மூன்றாம் உலகில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முளையில் கிள்ளியெறியும் இராஜ தந்திரம்.

புலிகள் சாரம்சத்தில் ஒரு விடுதலை அமைப்பல்ல.அது எப்போதும் மக்களைப் பலியிட்டுத் தமது அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஒரு சமூக விரோதக் கும்பல்.அந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்திருந்தால் தமிழ் மக்களின் உண்மையான விடுதலைக் கூறுகளைத் தமது இயக்கத்துக்குள் கடைப்பிடித்து அந்த இயக்கத்தை மக்கள் சார்ந்து கட்டியிருக்கும்.ஆனால் அந்த அமைப்பு அத்தகையவொரு வளர்ச்சியை எட்ட முடியாத நிலைக்கு அதைப் பின் தள்ளிய சக்திகள் இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சக்திகளாகும்

அந்நியச் சக்திகள் புலிகளுடாகவே தமிழ் மக்களின் பிள்ளைகளை நாசியக் கட்சியைப் போன்றே இனவாதத் தீயில் வாட்டியெடுத்துப் போருக்குத் தயாராக்கினார்கள்.புலிகளின் எந்தவொரு அரசியல் இலக்கும் மக்களைச் சார்ந்த அவர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை.மாறாகப் புலித் தலைமையின் இருப்புக்கூடாகவே அவை பிரதிபலிக்கின்றன.இத்தகைய வடிவத்தோடுதாம் புலிகள் அமைப்பை உருவாக்கும் தகமையைப் பாலசிங்கத்தின் மதியுரைப்பூடாக வளர்த்தது அந்நிய சக்திகள்.

 

இதனால் குறுகிய இயக்கத் தலைமையின் அதிகாரத்துக்கான யுத்தமாகவும் அந்த யுத்தின் வாயிலாக இலங்கைத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகளாகவும்,அவர்களின் அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் சட்பூர்வக் கிரிமனல் அமைப்பாகவும் இருக்க முனைகிறார்கள்.இதற்காக இலங்கை அரசின் அதீத இனவாதச் செயற்பாட்டை இவர்கள் தூண்டுகிறார்கள்.இதற்காகவே திட்டமிட்ட சிங்களப் பிரதேசக் குண்டுவெடிப்புகளைச் செய்கிறார்கள்.இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை இனவாதத்தூடாக வளர்ப்பதன் மூலம் இலங்கை அரசைக் காத்தும் வருகிறார்கள்.

மீளவும் அந்நியச் சக்திகளின் கண்காணிப்போடு புலித் தலைமை புதிய இலக்கு நோக்கித் தள்ளப்படுகிறது.இது மிகவிரைவில் இன்னொரு முகத்தோடு ஏகாதிபத்தியத்துக்கு விரோதமில்லாதவொரு அரசியலை விரைவில் பேசும்.அது ஈழத்துக்கு நேர் எதிராக இருக்கும்.

பல் தேசியக் கம்பனிகளின் மலிவுத் தொழிலாளரின் நீண்டகால வேலைச் சந்தையை இதனு}டாக உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை சமீபத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் வெற்றி பெற்று வருவதற்கு இத்தகைய விடுதலைப் போர்களென்ற ஏகாதிபத்திய யுத்தங்கள் உதவி வருகின்றன.ஆனால் மக்களோ அனைத்தையும் இழந்து செத்து மடிகிறார்கள்.சமத்துவத்துக்கான போராட்டம் மிகவும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய அழிவில் மக்களின் துன்பம் இருமடங்காகிறது.அது உயிர்வாழும் தகமையை வலிய வடிவில் இல்லாதாக்கி வரும் சூழலில் இலங்கையைத் தொடர்ந்து இருத்திவைக்க முனைகிறது.

இறுதியாக:

இந்த வலைப் பதிவில் தினமும் இலங்கை அரசியலை விமர்சிப்பவர்கள் நாம்.எமது அரசியல் விமர்சனமானது,இலங்கை அரசியலில் ஆதிக்கச் சக்திகள் யாவையும் அம்பலப்படுத்தி,இலங்கை மக்களின் இன முரண்பாடானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் பங்குப் பிரச்சனையால் எழுவதாகவும்,அது திட்டமிட்ட இனவழிப்பைச் செய்வதற்கான கால அவகாசத்தைக் கோருவதற்கான அரசியல் வலுவைச் சிறுபான்மை இனங்களுக்குள் உருவாகியுள்ள தரகு முதலாளிய ஆர்வங்களைக்கொண்டே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் மிக அவதானமாக அறியவேண்டும்,என்கிறோம்.

இங்கே இனங்களின் சுய நிர்ணயவுரிமையை இத்தகைய முரண்பாட்டை வளர்ப்பதனூடாக மெல்ல அழித்து வருகின்றார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2007