பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதுவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தச் சூழலலைத் தீர்மானித்த இயற்கையானது வரலாற்றுப்போக்கில் வெகுவாகப் பாதிப்படைகிறது.மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதிய+க்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.இதன் உச்சபச்ச நுகர்வ+க்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்?

 

ஆபிரிக்கக் குடிகளும்,ஆசியக்குடிகளும் இப்போது எதிலிகளாகப்பட்ட நிலையால் இடம்பெயர்தல் தவிர்க்கமுடியவில்லை.அவர்கள் ஐரோப்பாவுக்கு உயிர்காக்கும் நோக்கில் அகதிகளாகக் குடியேறும்போது அதை ஐரோப்பா தடுத்து நிறுத்துகிறது.பாரிய கடற்பயணங்களைக்கூடத் துச்சமாக மதித்துத் தமது குழந்தைகளையாவது காத்திடத்துடிக்கும் மேற்கூறிய கண்டங்களின் மனிதர்கள் இடம் பெயர்கிறார்கள்.கடந்து பலநூற்றாண்டுகளாகக் கடல் கடந்து நாடுகள் பிடித்த ஐரோப்பியர் தமது நாட்டிற்கு உயிர்காத்திட வரும் அப்பாவி மனிதர்களை அநுமதிக்க விருப்பமற்றுக் கிடக்கிறார்கள்.உலகமெல்லாம் தமது இலாப வேட்டைக்காக மக்களின் உயிர்வாழ்விடங்களை நாசமாக்கும் ஐரோப்பியர்கள் தங்களால் அகதிகளாக்கப்படும் மனிதர்களை உடலியல்-உளவியல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தும் இன்றைய காலத்தில் மனிதவாழ்வின் உயர்வுக்கு என்ன செய்தாகவேண்டும்?எவரால்-எந்த மக்கள் கூட்டத்தால்-இனத்தால் நிம்மதியாக இருக்க-வாழமுடியும்?எந்தவொரு இனமும் அமைதியாக வாழும் நிலைகிடையாது!மூலதனத்தைத் திரட்டி வைத்திருக்கும் கூட்டம் தனது கொடூரமான குவிப்புறுதி நோக்கால் இந்தவுலகைச் சீரழிக்கிறது.


இந்தக் கேடுகெட்ட சமூக யதார்த்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் ,மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை,வாழ்வை,பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்மதியோடு வாழும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா?கற்பனைகளில் எவரும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.இன்றைய சூழலில் ஐரோப்பிய மக்கள் இனங்களே தமது தேசிய எல்லைகளுக்குள் பதட்டத்துடன் வாழ்வை எதிர்நோக்கும் பொருளாதார வாழ்வே அவர்களிடம் நிலவுகிறது.இத்தகைய நிலைமைகளை உருவாக்கி வரும் செல்வந்தர்களின் இலாபவேட்கையானது புவிப்பரப்பின் அனைத்து ஆதாரங்களையும் பணமாக்க முனைகிறது.நீர்,நெருப்பு,நிலம்,காற்று,ஆகாயம் எல்லாமே பணத்தால் தீர்மானிக்கப்பட்டு,விற்பனைக்கான பண்டமாக மாற்றப்பட்டுள்ளது!இதிலிருந்து எந்தத் தேசமும் தனது இறைமையைக் கொண்டிருப்பது சாத்தியமின்றிப் போனதன்பின் தனித்தவொரு இனத்தின் தேசியக் கோரிக்கைகள்தாம் என்ன?இதற்கென்றொரு அர்த்தம்தாம் உண்டா?இத்தகைய போராட்ட வாழ்வுக்கு இறுதி இலட்சியமாக மக்கள் நலன் முதன்மையடைந்திருக்கா?அத்தகைய நலனை முதன்மைப்படுத்தும் கட்சியை,அமைப்பை உலகச் செல்வந்தர்கள் சுயமாகச் செயற்பட விட்டுள்ளார்களா?இந்தச் செல்வந்தர்களின் ஆயுதத்தைவேண்டி, இவர்களின் முகவர்களான மூன்றாமுலக அரசுகளை ஓடுக்கப்படும் இனங்கள் வென்றுவிடமுடியுமா?சுயமான எந்தப் பலமுமற்ற இனக்குழுக்கள்,தமது போராட்ட அமைப்புகளால் இத்தகைய உலகக்கூட்டை உடைத்து மக்களின் இறுதிவெற்றியைத் தீர்மானிக்கும் சூழல்தாம் நிலவக்கூடியதா?


வெறுமனவே பிரேதேசவாரி, மொழிவாரி,மதவாரியாகக் கட்டியெழுப்பப்படும் மனித அடையாளங்களும்,மாண்புகளும் மனிதவுயிர்வாழ்வைக் காத்துவிடுமா?இந்தக் கேள்விகள் இன்று பலமாகக் கேட்பட வேண்டியதாகவிருக்கிறது.இயற்கைமீது கட்டியெழுப்பப்பட்ட வல்லாதிக்க ஆதிக்கமானது அந்தப் பொதுச் சொத்தைக் கொள்ளையிடும் பாரிய மனிதத் தேவையாக உணரப்படும் அதிகாரத் திமிராகவிரியும் ஒவ்வொரு தரணமும் மனிதவிரோதமாக விரிகிறது.இந்த நிலையில் பிரேதேசவாரி,மொழிவாரியடையாளமும்,மதவாரிப் பகுப்பும் மானுட வாழ்வை எந்தத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறது?

 

இஸ்லாமியப் பின்தங்கிய சமூகங்கங்கள் இன்றுவரை மனித இருத்தலைப் படுகேவலமாகச் சித்தரித்துவரும் நிலையில் அதன் வீச்சானது மக்கள் விரோத அரசியலாக முன்னெடுக்கப்படும் இந்தத் தரணத்தில் இந்த வாழ்வு அந்தப் பகுதி மக்களுக்குப் போராட்டமாக விரிகிறது, அந்த மதத்தின் எல்லைக்குட்பட்ட மனிதக்கட்டமைப்பில்.ஐரோப்பிய-அமெரிக்க நலனானது மத்திய கிழக்கில் இஸ்ரேலாகத் தோன்றியபோது இந்த வலயம் மிகக் கொடூரமான முறையில் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைகளை இன்னும் தூக்கிப்பிடிக்கும் நிலையை எய்தியது!இததாம் இன்றைய நிதிமூலதனத்தை அதிர வைக்கும் சங்கதியாகவும் இருக்கிறது.இத்தகைய சூழலில் மனித நடவடிக்கை சமூகத்தின் ஆன்மாவான மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது.இது தேசம் கடந்து எதேச்சதிகார உளவியலைச் சாதரண இஸ்லாமியர்களிடம் ஊன்றிவிடுகிறது.

 

Beantwortet eine junge muslimische Mutter so:
"Meine Tochter darf ohne Erlaubnis nach Israel fahren,um dort ein Selbstmordattentat zu begehen,die Klassefahrt darf sie aber nicht mitmachen."-Konkret 1/2006

 

ஜேர்மனியில் வதியுமொரு இளம் இஸ்லாமியத் தாய் பள்ளியில் படிக்கும் தனது பெண்பிள்ளையைப்பற்றி- அந்தப் பிள்ளை பயிலும் பாடசாலை அதிபருக்கு இங்ஙனம் பதிலளிக்கிறாள்:"எனது புதல்வி எங்களின் அநுமதியின்றி இஸ்ரேலுக்குச் சென்று அங்கே தற்கொலைப் போராளியாகத் தன்னை அழித்து இஸ்ரேலியர்களை அழிக்கலாம்.ஆனால் பாடசாலையால் ஒழுங்கு படுத்தப்படும் சுற்றுலாவுக்கு அநுமதியின்றிப் பங்குபற்ற முடியாது! ."

 

இத்தகைய மனம் யாரினால் தீர்மானிக்கப்பட்டது?

 

அமைதியாக உயிர்வாழவேண்டிய ஒரு இனம் இவ்வளவு கொடுமையாகக் "காய்யடிக்கப்பட்டு"வெறும் அராஜகக் காட்டுமிராண்டிகளாக வாழும் நிலையை யார் தீர்மானித்தார்கள்?

 

மேற்குலகத்தாரின் அதீத யுத்த நோக்கம் எண்ணையுலகை வெற்றி கொள்வதாக இருக்கிறது.இஸ்ரேலிய நாடு இந்த மேற்குலகத்தாரின்-அமேரிக்காவின் அடியாளகச் செயற்படும்போது அந்த இஸ்லாமிய மக்கள் தமது அரசியல் வாழ்வைத் தமது மொழிவழி,மதவழியாக நோக்குகிறார்கள்.அதைத் தீர்மானித்துவிடும் அடிப்படைவாத அரசியற் கட்சிகள்-இயக்கங்கள் தமது நலனை முதன்மைப்படுத்திவிட மக்களை அதற்கேற்ற வகையில் காய் அடிக்கிறார்கள்.

 

இன்றைய இஸ்லாமிய வாழ்சூழலோடு நாம் எங்ஙனம் ஒத்துப்போக முடிகிறது?

எங்கள் கோரிக்கைகள் என்ன? எமது போராட்ட வாழ்வு எத்தகைய அரசியல்,பொருளியல் வாழ்வையும்,அது சார்ந்த உலக நோக்கையும் தந்துள்ளது?நம்மிடமுள்ள உலக நோக்கு என்ன?எமது உள்ளத்தில் வடிக்கப்பட்டுள்ள வாழ்வின் மதிப்பீடுகள்தாம் எந்தத் திசையில் நம்மை அழைத்துச் செல்கிறது?இலங்கைத் தேசியயினங்களின் வாழ்வியல் மதிப்பீடுகளும், அவர்தம் வாழ்வும் இந்த இஸ்லாமியத் தாயின் கூற்றிலிருந்து வேறுபட்டதா,அவளின் ஒருவகைப்பட்ட"மனித மாதிரிக்கு"வித்தியாசமாகவா நமது மனிதமாதிரியுண்டு?இத்தகைய மனிதப் படுகொலைகளின்பின் நிகழ்வதென்ன?

 

காட்டுமிராண்டித் தனம்,பாலயில் பலாத்தகாரம்,கொலை,மனிதப் பெறுமானமற்ற உளப்பாங்கு!

 

இத்தகைய மனிதவுருவாக்கம் எந்தச் சூழலில் சகமனிதருக்கு,தனக்கு விடுதலையை நேசிப்பதாகவுணரும்?இத்தகைய மனித விழுமியத்தை உணரும் நிலையற்றவொரு மனிதவுயிர் விடுதலையை உணர்ந்துகொள்ளும்" தன்மீதான மனித நேசிப்பை"அகற்றிவிட்டு மக்கள் விடுதலையென்பது பொய்மையாக இல்லையா?

 

இன்றைய தமிழ் மக்களின் விடுதலையுணர்வானது எந்த மக்கள் விழுமியமுமின்றி,வெறும் மொழிவாரிக் கனவுகளாகவும்,அதற்காக யாரையும் பலி கொடுத்துவிடலாமெனவும் உணர்வதின் வெளிப்பாடு கொலைகளை,தனிநபர் பயங்கரவாதத்தைச் செயலூக்கமாக்கி விடுவதில் நம்மை ஊக்கப்படுத்துவது ஆரோக்கியமா?இது கிட்லரின்">>Du bist Deutschland<<"எனும் பாசிசச் சர்வதிகார மனிதனைத் தயார்படுத்தியதற்குச் சமனமாக இருப்பதையுணரமுடியாதா? ".


...Diese Hoffnung äusserte "Du bist Deutschland"Model Albert Einstein 1942,als er schon einige Jahre kein Deuscher mehr war und sein wollte.-Konkret1/2006


இத்தகைய நீயே ஜேர்மனியன்( தமிழ்ச் சூழலில்."நீயே தமிழன்-தமிழிச்சி",அல்லது துரோகி) அல்பேர்ட் ஐயன் ஸ்ரையினை நாசிசத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது அவரை ஜேர்மனியானக் கருத அல்ல அங்ஙனம் இருக்க விடவில்லை.சில ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை அவரை ஆட்டிப்படைத்தபோது அவரை இந்தச் சூழல் அமேரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து போக வைத்தது.காரணம் அவரது டொச்சுக்கெதிரான நிலைப்பாடும் ,வெளிப்படுத்தலும் இத்தகைய சூழலில் இன்னுமவரை அந்நியப்படுத்துகிறது...இத்தகைய நடவடிக்கையானது நீயே டொச்சு நாடென்பதிலிருந்து மற்றைய இனங்களைப் போல போட்டியுடைய சர்வதேச வியாபகமாகிற...

 

ஆனால் நம்மிடமோ இத்தகைய மனிதவாழ்வின்மீதான கண்ணோட்டமின்றி,சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது?இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்சையாக முடிவுகளை எடுக்கிறது.இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இங்ஙனம் நாம் நம்மைத் தயார்ப்படுத்தும்போது நமது உண்மையான மனித்தத் தன்மை நம்மால் உண்மையாக உணரப்படும்.இது ஐயன் ஸ்ரையனுக்கு ஏற்பட்ட உள நெருக்கடியைப் போன்று நம்மை, நாம் உணரவும் மற்றவர்களை மதிக்கும் மனிதர்களாகவும்,விடுதலையென்பது ஓரியக்கம்-அமைப்புச் சார்ந்த விடையமில்லையென்பதும் புரியும்.மக்கள் இனங்களின் பரஸ்பர ஒத்துழைப்பின்றி எந்தவொரு தனித்துவமான இனமும் இனிமேல் விடுதலையடைய முடியாது.நமக்குத் "தமிழ்மக்கள் விடுதலையென்பது" சிங்கள மக்களின் ,இஸ்லாமிய மக்களின் பங்களிப்பின்றி எப்பவும் சாத்தியமில்லை.இத்தகைய போராட்ட நெறிமுறைமைகள்தாம் ஒரு நாடு இன்னொரு நாட்டினிடமிருந்து விடுதலைபெறுவதன்றி மாறாக உலகப் பயங்கரவாதச் செல்வந்தர்களிடமிருந்து புவிப்பரப்பிலுள்ள முழுமொத்த மக்களின் விடுதலையை-உயிர்வாழும் சூழலைப் பத்திரப்படுத்தி வாழ்வாதராத்தைக் காக்கும்.

இதுதாம் மக்களின் உயிராதாரமான இயற்கையைக் காத்து அதன் இருப்பை நிலைப்படுத்தி,உயிர்வாழ்வுக்கான ஆதாரமாக மீள நிறுவிக்கொள்ளும் தேவையைச் சாதிக்கும்.இயற்கையை அழிவுப்படுத்தும் போர்கள்,தொழில் முன்னெடுப்புகளைத் தவிர்த்துவிட்டு ஓரினமோ,அல்லது ஒரு பிரதேசமோ விடுதலையடையமுடியாது.இதை ஒவ்வொரு தமிழ் மனமும் புரிவது அவசியமில்லையா?

 

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
08.01.2006


***மழலையின் படத்துக்கு உரிமை வசந்தன்.அவருக்கு நன்றி!