கடந்த 19.04.2005 குறிப்பொன்றில் புதிய போப் பெனடிக்16 நாசிய மாணவனென்றும்,அவன் தொடர்ந்த பாதையானது மனித விரோதப்பாதையெனவும் சுட்டிக்காட்டினோம்.இதை பெரும்பாலானவர்கள் புரிந்தார்களோ அல்லது விடுபேயனின் குறிப்பென ஒதுகப்பட்டதோ தெரியாது.எனினும் இன்னொரு குறிப்பையெழுதுவதில் மீளவும் எமது முயற்சி முனைப்பிட்டபடியே...


இன்றிருக்கும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்சூழல் நமது சமூகப்பிரக்ஜைமீது பாரிய செல்வாக்கைச் செலுத்துகிறது.இதன் அருட்டலில் நமக்கான விருப்புறுதி உளமானது நேரத்தின் அதிகபட்ச ஒத்துழைப்போடான ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீளும்போதே சற்றெதையாவது செய்யத்தூண்டுகிறது.இந்த அதீத ஜந்திரத்தனமான உலகில் நொறுக்குத்தீனி எழுத்துக்களே விருப்பத்துக்குரிய ஜேர்னலிசமாகியுள்ளதால் எம்மால் சமுதாயத்தின்பாலான நோக்குநிலையிலிருந்து ஒன்றைச் செய்துகொள்ள முடியாதுள்ளது.இது நம்மீது பாரிய எஜமானயாகிய இந்த வர்த்தகச் சமுதாயத்தின் அழுத்தினால் உருவாக்கப்பட்ட சமூகச் சூழலே!


இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துக்குள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி 'ஏதோ எப்படியோ'சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.இதன் நோக்கம் மானுடநேயமென்பது வர்கக்ஞ்சார்ந்ததென அறிவதும்-மதங்களின் மானுடதர்மமென்பது 'இருப்பவனிடம் இல்லாதான் கையேந்திக்காலந்தள்,அடிமையாய் இரு'என்பதுதாம்-என்றதைப் புரிந்துகொள்ளும் முயற்சியே.


உலகத்திருச்சபைகளுக்குத் தலைவரான புதிய போப்பாண்டவர் என்றுமில்லாதா கடைந்தெடுத்த இனவாதியோ-ஆதிக்க்காரனோ அல்ல.கடந்தகாலங்களில் திருச்சபைகளுக்குப் பொறுப்பான பற்பல போப்பாண்டவர்கள் இவரைவிடப் பன்மடங்கு பிற்போக்குவாதிகள்தாம்.இவர்களால் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.அது அந்தக்காலத்தில் ஆண்டான் அடிமை முறைகளின் மிச்சசொச்ச நிலமான்ய சமூதாயத்தின் மன்னராட்சி முறைமைக்குள் நடந்தது.இன்றோ பெரும்ஜனநாயமெனும் பீற்றும் காலமாகும்.இது இசங்களைக் கடந்து-மதங்களைக் கடந்து மனிதரைப் பாரெனப் பீற்றுங்காலம்.இங்கு சோஷலிசம் காலங்கடந்தது-மார்க்சியம் பொருட்காட்சிக்குப்போகவேண்டியதென வாதிக்கப்படும் பின் நவீனத்துவக் காலம் என்பதாகக் காட்டபடும் அறிவு(!?) நிரம்பிய காலம்.இந்தக் காலத்தில் இப்படியொரு படுகேவலமான இனவாதியும்-பெண்ணடிமைவாதியும்,ஆதிக்கத்தை அன்பாகக்காட்ட முனையும் அரசியல் கிரிமனலும்-யூதர்களுக்கெதிரான வன்முறையிலீடுபட்டு அவர்களைக் கொன்றுதள்ளிய குருதிக்கரம் எப்படி மீளவும் இந்த உலகமக்கட்டொகைக்குத் மதத் தலைவராக முடியும்?


இது முடியும்!


திருச்சபைகள்,மடங்கள் யாவும் முதலாளியத்தின் மேல்மட்ட கருத்தியல் ஒடுக்குமுறைவடிவந்தாம்.இது எப்பவுமே மானுடவிரோத அமைப்புகள்.எனவே இதற்குள் பயிற்றுவிக்கப்படும் எந்த மனிதர்களும் ஒடுகப்படுவோரைக் காப்பாற்றி விடுதலைக்கு வித்திடுபவர்களில்லை.எனவே பாசிஸ்டுக்களாகிய இந்தப் பெரிய மனிதர்கள் மக்களை அடக்கித் தமது நலன்களைக் காக்க முனைவதே வரலாறாக விரிகிறது.நாம் இந்த நோக்கத்தோடு இருப்பினும்,நமது கேள்வியெல்லாம் முதலாளியத்தின் மிகவிரிந்த கூறாகிய அதன் பாசிஸத்தை எப்படி அங்கீகரிப்பதென்பதே! இது சகலமட்டங்களிலும் மக்களைக் காவுகொள்வதை இனியும் அனுமதிக்க முடியுமா? இப்படி அனுமதித்தகாலத்தை -இப்போது 'தவறென்று'- விமர்சிக்கும் புத்திஜீவிகள் புதியபோப்பாண்டவர் குற்றமற்றவரென்று தீர்ப்புச் சொல்கிறார்கள். இது சரியானதா?


இது குறித்து இவர்கள் முன்வைப்பதைப் பார்ப்போம்:


Der Historiker und Hitler-Biograph Professor Joachim Fest, 78 Jahre:


Britische Medien werfen dem neuen Papst vor, daß er Mitglied der Hitler-Jugend war. Was sagt die Mitgliedschaft in Hitlers Jugendorganisation über einen Menschen aus?

Prof. Joachim Fest: Gar nichts! Das glückliche England hat nie eine Diktatur erleben müssen. Nur aus dieser Unkenntnis heraus kann man so alberne Vorwürfe erklären, wer Hitler-Junge war, sei damit ein Nazi gewesen.

Was war die Hitler-Jugend?

Fest: Das waren Jungs wie andere auch. Sie mußten zum Dienst braunes Hemd und Hose tragen, kamen einmal die Woche zum „Heimabend" zusammen. Dort wurden NS-Lieder gesungen, Propagandaschriften vorgelesen, „Geländespiele" vorbereitet, die sich meist als Kriegsspiele im Wald entpuppten.

Eine Vorbereitung auf das Leben als Soldat?

Fest: Ja. Aber nicht so plump, wie viele sich das vorstellen. Die Jungen wurden mit ihren eigenen Interessen gelockt: Heldentum, Kampf, Abenteuer, Lagerfeuer – das gab es auch schon in den zwanziger Jahren. Die Nazis haben das System einfach nur perfektioniert. Und die Mitgliedschaft 1939 für alle Kinder zur Pflicht gemacht.


10–14jährige kamen automatisch ins „Jungvolk", 14–18jährige in die „Hitler-Jugend", bei den Mädchen war es der „Bund Deutscher Mädel".

Gab es kein Entrinnen?

 

Fest: Nein. Mein Vater weigerte sich zwar, mich und meine Brüder in die HJ zu schicken, aber er riskierte damit Kopf und Kragen, sogar die Haft im KZ. Aber als ich dann 1941 in ein Internat kam, wurden wir zwangsrekrutiert, landeten in der „Pflicht-HJ". Das hieß, daß wir offiziell Mitglieder der Hitler-Jugend waren, aber auf dem Schulhof marschieren und robben mußten, während die anderen Jungen im warmen Klassenraum ihre Lieder sangen.

 

Ist die Mitgliedschaft in der HJ ein Grund, sich zu schämen?

Fest: Nein. Niemand konnte dem entkommen. Die Hitler-Jugend, das waren Kinder, keine Verbrecher! -Bild Zeitung vom 22.04.05


கிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும்-அரசியல்நடவடிக்கையையும் அத்துடன் நாசிகள்பற்றிய வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக அணுகுவதில் இந்தப்பேராசிரியர் ஜோக்கிம் பெஸ்ற் தனது பங்களிப்பைச் செய்பவர்.ஜேர்மனியில் நாசிகளின் கருத்தியலுக்கெதிரான பல தொலைக்காட்சித்தொடர்களைத் தயாரிக்க இவரது அயாராத உழைப்புக் காரணமானது.80களின் மத்தியிலும் இறுதியிலும் எடுக்கப்பட்ட பல தொடர்களில்-குறிப்பாக'மரணத் தேர்வு'(Todes Wahl))போன்ற அற்புதமான தொடர்களையும்-இன்றைய 'வெல்ட் உன்ரகாங்;'கையும் முன்வைத்த இந்தப் பேராசிரியர்,ஜேர்மனிய நலன் என்று வரும்போது நாசிக்குற்றவாளிகளைக் காபாற்றிவிடுகிறார்.இதே பாணியிற்றாம் புதிய போப்பாண்டவர்மீதான அவரது பார்வையும்.

பிரத்தானியப் பத்திரிகைத்துறை புதியபோப்பின்மீது கிட்லரின் இளைஞரென கண்டெனக் கருத்தெறிகிறது,கிட்லர் இளைஞர் அமைப்பு உறுப்பினர்வடிவம் மனிதர்களுக்கு எதைக் குறித்துரைக்கிறுது?'-பில்ட சைற்றுங்.


'எதுவுமே இல்லை.நல்லநேரமுடைய(நல்லநேரம்,கெட்டநேரமெனும் அர்த்தத்தில்)இங்கிலாந்து ஒரு சர்வதிகாரியின் கீழ்வாழவேண்டியிருக்கவில்லை.இந்த புரியாத அநுபவமற்ற நிலையால் மிகச் சிறுபிள்ளைத்தனமான-உதவாத கண்டனத்தை-நிந்தனையூடாக விளக்குகிறார்கள்,'யார் கிட்லரின் இளைஞர் படையில் உறுப்பினரோ அவர் நாசி'என.-பேராசிரியர் ஜோக்கிம் பெஸ்ற்-


'என்னதாம் இந்தக் கிட்லர் இளைஞர் அணி?-பி.சை.
'

அதுவந்து மற்றைய இளைஞர்களைபோன்றதே.இவர்கள் காரியமாற்றும்போது காக்கிச் சட்டையும்,காற்சட்டையும் கட்டாயமா அணியவேண்டும்.கிழமைக்கொருமுறை 'தாயக மாலை'நிகழ்வில் கூடிக்கொள்ளுதல்,அங்கே நாசிகளின் பாடல்களைப் பாடுதல்-பரப்புரை எழுத்துக்களை ஒருவர்முன்னொருவராய் வாசித்தல்,பிரதேச விளையாட்டுக்களில் ஈடுபடுதல்-பொதுவாகக் காடுகளுக்குள் யுத்தவிளையாட்டில் ஈடுபட்டு சுயத்தை வெளிக்கொணருதல் போன்றவையில் ஈடுபடுதல்.'-பேராசிரியர்.


' சிறார்வாழ்வை இராணுவமாக்குவதற்கு( யுத்தத்திற்காக) இதுவொரு முன்தயாரிப்பு?'பி.சை.


'ஓம்.ஆனால் அவ்வளவு கொடுமையாக இருக்கவில்லை,எவ்வளவென கற்பனைசெய்யமுடியவில;லை.இளைஞர்கள் சுயவிருப்பின்பொருட்டேதாம் அதற்குள் சுருண்டார்கள்.வீரச் செயல்கள்,போரிடல்,பொழுதுபோக்கு,விடுதியில் முன்நெருப்புமூட்டி மகிழ்தல்-இந்த வகை நெருப்புமூட்ல் 20 களில் இருந்தது.நாசிகள் முறைமைகளை முழுமையாககுவது மட்டுஞ் செய்தார்கள்.அத்தோடு இந்த கிட்லர் அணி உறுப்பினர் முறைமை1939களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய முறைமையாக்கப்பட்டது.10-14 வயதுப் பராயத்துக்கு தன்னிச்சையாக இந்த இளைய மக்கள் நிலை வந்துவிடும்.14-18 வயதுப்பராயம் கிட்லா இளைஞர்கள் நிலை.பெண்குழந்தைகளுக்கு'சமஸ்டிடொச்சு மகளிரணி' என்பதாக இருந்தது.-பேராசிரியர்.


'இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு வழியிருக்கவில்லையா?'-பி.சை.


பேராசிரியர்:'இல்லை. என் தந்தையார் என்னையும்; என் சகோதரரையும் இந்த அமைப்புக்கு அனுப்புவதை மறுத்தார்.ஆனால் கடும் பிரயத்தனஞ்செய்தார் தலையை முட்டிக்கொள்ளும் நிலைமையில் மறியலும்கூடவே கிடைக்கும்.ஆனால் நான் 1941;ல் கல்லூரிவிடுதியிலிருந்து வலுகட்டாயமாகக் கடத்தப்பட்டு கிட்லர் இளைஞர் அமைப்புக்குள் நிறுத்தப்பட்டோம்அதன் பொருள் நாங்கள் சட்டப்படி கிட்லர் இளைஞர் அணி உறுபினர் என்பதாகும்.(நாசிகளைக்காப்பாத்துகிறார்.சட்டத்துக்குட்படுதல் எனும்...)என்றபோதும் பாடசாலை மைதானத்துக்குள் படைகள் உட்புகுந்து எம்மை வேட்டையாடினார்கள்,மற்றைய மாணவர்கள் சூடான வகுப்பறையில் அவர்தம் பாடல்களைப் பாடிகொண்டிருக்கும்போது.'


'இந்தக் கிட்லர் இளைஞரணி உறுப்பினர் நிலையால் ஒருவர், வெட்கப்பட இது காரணமாக அமையுமா?'-பி.சை.


'இல்லை.யாருமே அதிலிருந்து(கிட்லர் இளைஞர் அணி) தப்பித்துக்கொள்ளமுடியாது.கிட்லர் இளைஞர் அணி வந்து குழந்தைகள்,அவர்கள் கிரிமனல்கள் இல்லை.'பேராசிரியர்.ஜோக்கிம் பெஸ்ற்.


இங்குதாம் பில்ட் சைற்றுங்(நாளிதழ்) தனது ஊடகயுத்தைப் போப்புக்குச் சார்பாக நடாத்துகிறது.அதாவது ஆனானப்பட்ட வரலாற்றுவிற்பனனே அது தவறில்லையெனும்போது நீங்கள் ஏன் சஞ்சலம் அடையணும்? நமது போப் குற்றமற்ற குழந்தை.பாவம் அறியாத பச்சை மண் என்பதற்கு பழைய கிழடுகள் பலரையும் பேட்டிகண்டு'நாங்கள் கிட்லர் இளைஞர் அமைப்பிலிருந்தது உண்மை அதற்காக வெட்கப்படப்போவதில்லை' என்று கூறவைத்துள்ளது. இந்தவகை கருத்தியலை எந்த மனிதநேயமுள்ளவர்களும் புரிவதற்குமுன் இதற்குப் பலியாகிவிடுகிறார்கள்.ஆனால் ஜேர்மனிய சமுதாயத்தின் அதீத ஆதிக்க மனேபாவம் அந்தச்சமூகத்தின் அடித்தளத்திலுள்ள பாசிசப்போக்கை நமக்கு மிக இலகுவாகக் காட்டிவிடுகிறது.


பேராசிரியரோ இளைஞர்கள் தமது விருப்பப்படிதாம் நாசிப்படைக்குப்போனார்கள் என்று கூறும்போது தனது கல்வியைச் சந்தேகிக்கும்படி ஆக்கிவிடுகிறார்.உண்மையில் இவர் பேராசிரியரா, அல்ல போப்பின் அடிவருடியா? பாலகர்களை கட்டாயமாகப் பிடித்துச் சென்று விசத்தையூட்டி மூளைச்சலவை செய்த பின் அவரெடுக்கும் முடிவானது எதுவாக இருக்கும்? புறநிலையினது தன்மையைத் தமக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு அதன் சிந்தனைத் தளத்தை அகவயக் குறைபாட்டுக்குள் தள்ளும் போராசிரியரை என்னவென்போம்! நாளாந்தம் இனவாதத்தையும் வீரதீரக்கட்டுக்கதைகளையும்-இனப்பெருமையையும் சொல்லி வளர்த்த'காயடிக்கப் பட்ட'சிறார்கள் எப்படிச் சுயவிருப்புறுதி கொள்வது? இன்று உலகம் பூராக இதே புலுடா தானே கோலாச்சுகிறது? எதற்கெடுத்தாலும் சுயவிருப்பின்பேரால் என்பதை'எங்கப்பன் குதிருக்குள் இல்லை'மாதிரித்தாம்.இதையும் பேராசிரியர் தனது அநுபவத்தின் துணையோடே கூறுகிறார்.இத்தகைய மனிதர்களைப்பார்த்துப் பெருமைப்பட ஆதிக்கச் சக்திகளால் மட்டுமே முடியும். என்றாலும் கிட்லரே இத்தகைய புத்திக்கள்ளன்களை அம்பலப்படுத்துகிறா(ன்)ர்:

 

"Diese jugend, die lernt ja nicht anderes als deutsch denken,deutsch handeln.Und wenn nun dieser Knabe und dieses Maedchen mit ihren zehn jahren in unsere Organisationen hineinkommen und dort nun so oft zum ersten mal ueberhaupt eine frische Luft bekommen und fuehlen,dann kommen sie vier jahre spaeter vom Jungvolk in die Hitlerjugend und dort behalten wir sie wider vier jahre und dann geben wir sie erst recht nicht zurueck(...)sie werden nicht mehr frei,ihr ganzes Leben."-(Adolf Hitler in Einer Rede Am 2.Dezember 1938-Der Holocaust in Europa seite17)
'

 

'இந்த இளைஞர்கள், ஜேர்மனியர்கள் சிந்திபதிலிருந்தோ அல்லது செய்வதிலிருந்தோ வித்தியாசமாக எதையும் கற்கவில்லைத்தாம்.எப்போது சிறுவர்களும்,சிறுமியரும் எங்கள் அமைப்புக்கு இவர்தம் பத்து வயதில் வருகிறார்களோ அப்போதங்கே முற்றுமுழுதான புதியகாற்றைச் சுவாசிப்பதுடன் உணரவும் செய்வார்கள்.அதன் பின் நான்காண்டுகளில் 'இளைய மக்கள்'கட்டமும் அதனூடே கிட்லர் இளைஞர் அணிக்காக நான்காண்டுகள் அவர்களை எம்மோடு வைத்துக்கொள்வோம்,இதன்பிறகு இவர்களை நாம் மீள விடுவதில்லை(...)அத்தோடு அவர்கள் வாழ்க்கை முழுதும் சுதந்திரமானவர்களில்லை.'-அடோல்வ் கிட்லர். ஒரு முக்கியமான கூட்டத்தில் உரை:02.12.1939.ஐரோப்பாவில் கோலோகவுஸ்ற் பக்கம்:17.


கிட்லரின் இந்த வாசகம் எதைக் குறித்துரைக்கிறது?
இந்த கிட்லர் இளைஞர் அணி முற்று முழுதாக நாசியக் கருத்துக்களால் வார்ப்புக்குள்ளானவர்கள்.இவர்களால் இனிமேல் இதைவிட்டு மீளமுடியாது.இவர்கள் காயடிக்கப்பட்ட இளைஞர்கள்.நமது ஜந்திரங்கள்.நாம் சொல்லும்போது செத்து நம்மைக் காக்கும் நமது உயிராயுதங்கள் என்பதாகும்.இந்தப் புதியபோப்போ 1944 வரை கிட்லரின் ஞானப் பால் குடித்தவர் அவரின் நிலையை நாம் சொல்லிய தெரியணும்?


இதோ அவரே பொய்சொல்லப்போய் உண்மையைக் கக்கிவிடுகிறார்:


Frage: „Waren Sie in der Hitler-Jugend?"

Ratzingers Antwort: „Wir waren zunächst nicht dabei, mit der Einführung der Pflicht-HJ wurde allerdings mein Bruder pflichtmäßig aufgenommen. Ich war noch zu jung, wurde aber später vom (Priester-)Seminar aus in die HJ hineingemeldet. Sobald ich aus dem Seminar weg war, bin ich nicht mehr hingegangen. Und das war schwierig, weil die Schulgeldermäßigung, die ich wirklich nötig hatte, mit dem Nachweis des HJ-Besuchs verbunden war. Da gab es aber Gott sei Dank einen sehr verständnisvollen Mathematiklehrer. Er war selber ein Nazi, aber ein redlicher Mann, der zu mir gesagt hat: ,Geh doch einmal hin, damit wir das haben ...‘ Als er sah, daß ich einfach nicht mochte, hat er gemeint: ,Ich versteh’ dich, ich bring’ das in Ordnung‘, und so konnte ich davon frei bleiben."
'

நீங்கள் கிட்லர் இளைஞரணியில் இருந்தீர்களா?'-பில்ட் நிருபர்.


மதிப்புக்குரிய போப்பாண்டவர்:' நாங்கள் முதலில்-ஆரம்பத்தில் இல்லை.இதை சட்டாமாக்கியதற்குப் பின்பான காலத்தில் எனது சகோதரர் கடமைக்கமைய இதில் பங்கேற்றார்.நான் அப்போதோ ரொம்பச்சிறியவன்.ஆனால் பின்பு வேதகாமக் கல்விக்காக அங்கே கி.இ.அணியுள் பதியப்பட்டது.எவ்வளவு கெதியாகப் பாடம் முடிந்தவுடன் நான் வெளிவந்துவிடுவேன் அதன் பின் அங்காலபோவதில்லை.அதோடு இது மிகவும் கடினமானது,கல்வி பயிலும் செலவைப் பெறுவதற்கு கிட்லர் இளைஞரணியின் அத்தாட்சிவேறு தேவையானது.கடவுளேயெண்டு அங்கே எனக்கு ரொம்பப் புரிந்துணர்வுள்ள கணக்கு வாத்தியார் இருந்தார்.அவர்கூட சுயமாக ஒரு நாசி.ஆனால் மிக நேர்மையான மனிதர்.அவரே எனக்குச் சொன்னார், போ-ஒருக்காய் போவிட்டு வா.அதற்குப் பின் நீ அதில் இருப்பதாக இருக்கும். இப்படி அவர் கூறுவார்,ஆனால் எனக்கு விருப்பமில்லை.அதனால் அவர் வெறுப்படைவார்.பின்பு 'நான் உன்னை புரிந்துகொள்கிறேன் என்றுவிட்டு-நான் எல்லாத்தையும் பார்க்கிறேன் என்று என்னை இதிலிருந்து தப்பிக்க விடுவார்.'


போப்பாண்டவர் ரொம்பவும் பம்மாத்து விட அவரது தலைவனோ அனைத்தயும் போட்டுடைக்கிறார்.எது எப்படியோ பதவி-பவிசு,சொத்துச் சுகம் அனைத்தையும் இழக்க போப்பு என்ன கார்ல் மார்க்ஸ்'சா?


இன்றைய உலகத்தில் எந்தப் பக்கத்திலாவது பாசிஸ்டுக்கள் மக்களை அடிமைப்படுத்தாமல்-ஏமாற்றாமல் இருந்திருக்கிறார்களா? கிட்லர் முதல் இன்றைய சிறிய, பெரிய -மகாப்பெரிய தலைவர்கள் எல்லாம் பாசிஸ்ட்டுக்களாகவே உருமாறுகிறார்கள்.அதாவது பதிவிச் சுகமும் பணமும்-படாடோபமும்,அதிகாரத்திமிரும் மக்களைக் கழுமரத்தில் ஏற்றுவதில் முந்திக்கொள்கிறது.இதற்கு இந்த மதப்பீடங்களும் விதிவிலக்கல்ல.


சிறார்களைத் திட்டமிட்ட கருத்தியல் வன்முறையால் காவுகொள்ளும் ஆதிக்கக் கனவானது இறுதியில் அந்தச் சமுதாயத்தையே பாழாக்குகிறதென்பதற்கு இந்த ஜேர்மனிய மக்களே சாட்சி.

இன்றுவரையும் இந்த மக்களின் சமூக உளவியலானது ஆதிக்கத்தையும்-அதிகாரத்தையும் விருப்புறுதியோடு ஏற்றுக்கொண்டு மாற்றார்மீது சவாரி விடுகிறது.


இதற்கு இந்த அரசும் ஒத்துழைக்கிறது.


ஆனால் ஜேர்மனிய அரசும், ஊடகங்களும் இந்த நாசிப்போப்பைக் காக்கப்போடும் கருத்தியல் யுத்தமானது உலகத்தை பொருளாதாரத்தால் மட்டும் சுரண்டுவதற்காக மட்டுமல்ல,மாறாக சமூக ஏகாதிபத்தியமாகவும்-டொச்சு மொழியை மாற்றினத்திடம் திணிக்கவும்-ஜேர்மனியச் சந்தையை கிழக்கைரோப்பாவில் ஸ்த்திரப்படுத்தவும் போடப்படும் வலையே இது.


23.04.2005
ப.வி.ஸ்ரீரங்கன்