Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ - என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."

மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் "புரட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய்
"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை...?"

உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஸ்கியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய் 
"உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால்..."

இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ "நான் அதை எப்படிப் பார்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
"சரி அந்த நிலையில் எப்படி..."

உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்லுவாய்
"நிக்கி இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா ?"  

சோபசக்தி  11.12.1998 எச்சில் 4 பக்கம் 11இல்  "பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை குறித்த நினைவுக் கல்வெட்டு" இப்படித்தான் தொடங்குகின்றது. அ.மார்க்ஸ்சை இந்தியாவில் சந்தித்ததன் பின்பாக, ஈழப் போராட்டத்தில் புலிக்கும்  -  அரசுக்கும் எதிரான வர்க்க அரசியல் நிலைப்பாட்டை – செயற்பாட்டை தகர்க்க, பி.றயாகரன் முதலில் இலக்கு வைக்கப்பட்டார். சோபாசக்தியும் வேறு சிலரும் இணைந்து கொண்டு, வர்க்கத்தை – வர்க்க அரசியலை கருவறுக்கும்  எதிர்ப்புரட்சிக் கும்பல், கல்வெட்டுடன்  களமிறங்கியது. இந்தக் கல்வெட்டு பல பக்கங்களைக் கொண்டது. இன்று அவர் தன்னை மூடிமறைத்துப் புலம்பும் சோபாசக்தி, அன்று தன் நோக்கத்தை மூடிமறைக்க உளறியது முதற்கொண்டு, அவரின் கற்பிதக் கோட்பாடுகளையும் இந்தக் கல்வெட்டில் காணமுடியும். இந்தக் கல்வெட்டு வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு, இதனால் இரண்டாக உடைந்ததுடன், ஒரே பெயரில் - ஒரே இலக்கத்தில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தது. இதிலொன்று பின்னால் தன்னை உயிர்நிழல் என்று மாற்றிக்கொண்டது.

இப்படி இருவரும் வெளியிட்ட சோபாசக்தியின் கல்வெட்டில் இருந்து சில பகுதிகள் (முழுமையாக பார்க்க எக்சில்-4 12.1998)

"பாரிஸில் "இருள்வெளி"க்கு (இது புகலிடவாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர், தமிழ் அரசியல் குறித்த பின்நவீனத்துவப் படைப்புக்களைத் தாங்கும் ஒரு புகலிடத் தொகுப்பு 12.07.98 ல் ஓர் பன்முகவாசிப்புக் கூட்டம் நமது தோழிகளாலும், தோழர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு ஓர் அழைப்பிதழும் வெளியிடப்பட்டது. உடனே, சூட்டோடு சூடாகவே நேர் சீராக இருக்கும் சமூகத்தை நாம் சீரழிக்கத் தொடங்கிவிட்டோம் என்ற கண்டனத்துடன் "ஓர் சமூகச் சீரழிவின் தொடக்கம்..." என்று தலைப்பிட்டு றயாகரனாலும் அவர்  தம் அரசியற் கூட்டாளி அசோக்காலும் ஓர் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அந்தப் பிரசுரத்தின் சிறப்பு எதுவெனில். றயாகரன் சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டதை அது செவ்வனே அறிவித்ததே. "இருள்வெளி" அழைப்பிதழ் இப்படி ஆரம்பமாகிறது.

'இருள்வெளி' தொகுப்பின் முன்னுரையில் தூரத்தில் விடிவெள்ளிகள் இல்லை! இருள்! அப்பாலுக்கும் அப்பால்! இருள்! இருள்வெளி 'என்று எழுதினார் தோழர் சுகன். ஆனால் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தோழியரும் தோழர்களும் 'இருள்வெளியே இல்லை' யென்றும், 'இருள்வெளியே எல்லை' என்றும், இன்னும் வித்தியாசம் வித்தியாசமான புரிதல்களை முன்வைக்க அனைவரின் கருத்துக்களுக்கும் களம் அமைக்குமுகமாக அழைப்பிதழ் பிரதி கட்டமைக்கப்பட்டது. இந்தப் பிரதியை றயாகரன் எப்படி வாசிக்கிறார் பாருங்கள் (தயவு செய்து கவனிக்கவும் கூடவே அசோக்கும்) 
"இங்கே சுகிக்க பெண் மட்டும் இல்லை அதையும் போட்டிருந்தால் மேலும் பின்நவீனத்துவ வழியில் கட்டுடைத்த மாதிரி இருந்திருக்கும்" (துண்டுப் பிரசுரத்தில் இருந்து) இங்கு ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அலைய றயாகரன் எதற்கலைகிறார்? என்ற எமது அவதானிப்பை சுட்டிக்காட்ட தயவுசெய்து தோழியரும் தோழர்களும் எம்மை அனுமதிக்க வேண்டும். சுகிப்பு என்பதற்கு நல்லனுபவம்இ இன்பமனுபவித்தல், செல்வங்களை அனுபவித்தல் என்று அகராதி அர்த்தம் தருகிறது. (நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்- தமிழ் அகராதி. அகராதியை விட்டுத்தள்ளுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு வாசகர்கள் மில்லியன் கணக்கான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதற்கு பில்லியன் கணக்கான சாத்தியங்கள் உண்டு.

ஆனால் றயாகரனுக்கு சுகிப்பதென்பதற்கு தெரிந்த ஒரே அர்த்தம் ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான். சரி றயாகரனின் மண்டைக்குள் சுகித்தல்! நல்லனுபவம்! இன்பமனுபவித்தல் போன்ற சொற்களுக்கு உடலுறவைத் தவிர வேறெதையும் யோசிப்பதற்கு இடமில்லையென்றே வைத்துக்கொள்வோம். 'சுகிப்பதற்கு பெண்கள் மட்டும் இல்லை' என்று எகத்தாளமாய் எழுதுபவரால் 'சுகிப்பதற்கு ஆண்கள் மட்டும் இல்லையென்று ஏன் எழுத முடியாமல் போனது?” 'ஏன் பெண்ணை மட்டும்தான் சுகித்கலாமோ? ஆணைச் சுகித்தால் சுகிபடாரோ? என்று எமது தோழி ஒருவர் கேட்கிறார். என்ன சொல்லப் போகிறார் பச்சை ஆணாதிக்கவாதி றயாகரன்?

'இருள்வெளி' அழைப்பிதழில் "நாலு நியாயத்தை அடிச்சுக் கதைக்க வைன் பிஸ்கி பியர் .."  என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுவாரா புனித றயாகரன். மோகன்தாஸ்காந்தி, ராஜகோபாலாச்சாரி 'றேஞ்சில்' கடும் எதிர்ப்புக்காட்டி இப்படி எழுதினார் "நாலு நியாயத்தை அடிச்சுக் கதைக்கவும் வைன், விஸ்கி, பியரைக் குடித்து கூத்தாடவும் சமூகப்பற்றாளர்களை அழைத்து, போராட்டத்தை, கேவலப்படுத்த அழைத்த இந்த முற்போக்கு வேடமிட்ட பிற்போக்குகளை இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டியது சமூக அக்கறை கொண்டோரின் இன்றைய வரலாற்றுக் கடமையாகும். (துண்டுப்பிரசுரத்தில் இருந்து) றயாகரனின் வேண்டுகோளை சிரம்மேல் ஏற்றுக்கொண்டு தமது வரலாற்றுக்கடமையை செய்து முடித்த நமது சைவவேளாள, செம்புவேளாள, ஒழுக்கவாத நண்பர்கள் நாம் உடுக்கை இழந்து நிற்கும்போது ஓடி ஒழித்து விட்டார்கள். இந்த வைன், விஸ்கி விசயத்தில் இழுத்தடித்து சளாப்பிப் பேசுவதற்கு எதுவுமில்லை. கட் அன்ட் றைற்றாய் பேசிவிடுகிறோம்.

நாம் விடிந்தால் பொழுதுபட்டால், காசிருந்தால் றிஸ்க் எடுக்காமல் கடையில் வாங்கி, காசில்லாவிட்டால் றிஸ்க் எடுத்து சுப்பர்மார்க்கட்டுக்களில் திருடி தண்ணியடித்துவிட்டு அண்ணன் தேவாவின் கானாப் பாடல்களைப் பாடிக்கொண்டு பாரிஸ் வீதிகளில் திரிபவர்கள்தான். ஒழுங்காய் வேலைக்கு போய்வருதல், குடும்பம், அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்புக்கள், கட்சிகள், இயக்கங்கள், அனைத்தையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர்கள்தான். ஆனாலும் எங்களிடமும் சொல்வதற்கு எங்களின் கதை இருக்கிறது, எங்களிடம் சொல்வதற்கென்று எங்களின் வாழ்வும் எதிர்க்கலாச்சாரமும் இருக்கிறது. எங்களிடமும் அடிச்சுக் கதைக்க நாலு நியாயம் இருக்கிறது. மதங்களும், மகாத்மாக்களும், ஆதிக்கவர்க்கமும், சாதியும்! பாலும் கட்டமைத்திருக்கும் அறநெறிகளை கவிழ்த்துப்போடும் தைரியமிருக்கிறது. அதை பப்பிளிக்காய் நோட்டிஸில் போடும் நேர்மையும்  இருக்கிறது.

….

இப்போது புலம்பெயர் அரசியல்- இலக்கியத்தை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது. அது தலித் பூதம்தமிழ்த்தேசியம் என்ற கதையாடலுக்குள் ஆதிக்க சாதியின் தலைமையின் கீழ் அணிதிரளமுடியாது என்கிறது அந்தப்பூதம். இதுவரை நிறுவப்பட்ட, அனைத்து இலக்கியப் புனிதங்களையும் கட்டுடைத்துக் கடாசிவிட்டு தனக்கெனவொரு கலை இலக்கியத்தடத்தை வரித்துக்கொள்கிறது அந்தப்பூதம். வர்க்க சாராம்சத்தின் பேரில் நிபந்தனையில்லாமல் இணையக்கோரும் சநாதன மார்க்சியர்களுக்கு சவால் விடுகிறது அந்தப்பூதம் தமிழ்க் கலாச்சாரம், தமிழ்மொழி, தமிழிலக்கியம், எனப்படுவதெல்லாம் ஆதிக்க சாதிக் கலாச்சாரமும், ஆதிக்கசாதிமொழியும், ஆதிக்கசாதியினரின் இலக்கியமுமே என எதிர்க்குரல் கொடுக்கிறது இந்தப்பூதம். எமக்கென்று தனித்துவமான கலாச்சாரமும், தனித்துவமான இலக்கியமும், தனிமொழியும் இருக்கிறது என ஆர்ப்பரித்து எழுகிறது. இந்தப்பூதம். தமிழ்த்தேசியவாதிகளும், சநாதனமார்க்சியர்களும்,  வெள்ளைவேட்டி இலக்கியக்காரர்களும் கிலிபிடித்துக் கிடக்கிறார்கள். றயாகரனையும் 'டக்கெனக் கெலிபிடிக்க அங்கிங்கின்னாதபடி எங்கும் தலித் அரசியலுக்கு எதிராக பேசியும் எழுதியும்  வருகிறார் (பார்க்க சமர் 23 பக் 21, சமர் 22 பக் 19, அம்மா 7 பக்கம் 21)

தலித்துகளுக்கும் வர்க்கம் இருக்கிறது. தலித் முதலாளி, தலித் பாட்டாளியென எதிர்வுகள் இருக்கின்றன என்கிறார் றயாகரன். வர்க்கத்துக்குள்ளும் சாதி இருக்கிறதே, தலித்தொழிலாளி, ஆதிக்க சாதித் தொழிலாளி போன்ற எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனவே என்கிறோம் நாம். 

காலங்காலமாய் கலப்பைகளில் பூட்டி உழப்பட்டு, செருப்பால் அடிபட்டு, சாணிப்பால் பருக்கப்பட்டு, வீதியில் காவோலையை கழுத்தில் கட்டியவாறே நடக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு, இந்துக்கோயில்களுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்டு, தேவாலயங்களில் துப்பட்டிபோடும் உரிமை மறுக்கப்பட்டு, கயிறுகட்டி பிரிக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு, அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் தடைகளை உடைத்துக் கொண்டு நிச்சாமம் என்வும், சங்கானை எனவும், சின்னமடு எனவும், கீழவெண்மணி எனவும், கொடியன்குளம் எனவும், குறிஞ்சாங்குளம் எனவும் இரத்தம் சிந்தி முடித்து எமக்கான அரசியல் இயக்கத்தை - தலித் அரசியலை - முன்னெடுக்கும்போது இவர், றயாகரன் அதை அழித்துவிடுவாராம். இவர் அழிக்கவரும்போது தலித்துக்களின் கைகள் என்ன புளியங்காயா புடுங்கிக்கொண்டிருக்கும்?
..

நாம் கட்டற்ற சுதந்திரக் காதல் குறித்துப் பேசுகிறோம். றயாகரன் சிறுவர் சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதைக் காரணம் காட்டி விவாதிக்கிறார். சுதந்திரத்திற்கும் வல்லுறவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட றயாகரனால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. ஓரினச்சேர்க்கையாளர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களின் பட்டியலைவிட எதிர்ப்பால் சேர்க்கையாளரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களின் பட்டியல் பெரிது. அதைக்காரணம் காட்டி எதிர்ப்பாலுறவை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனமானது றயாகரனின் வாதம்.

றயாகரன் மீண்டும் தொடருகிறார் "கட்டற்ற சுதந்திரம், சுதந்திரக்காதல், சுதந்திர அன்பு என்ற அனைத்துக் கோட்பாடும் பூர்சுவா கண்ணோட்டத்துடன் கூடிய இன்றைய திறந்த பொருளாதார கொள்கையின் உலகமயமாதலினை ஊக்குவித்து பாதுகாக்க முனனையும் வண்ணக்கலவையாகும்." (சமர் 23 பக் 20).

எந்தவித நிபந்தனைகளும், நிர்ப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று விதியாமல் பெண்ணும், பெண்ணும் - ஆணும் , ஆணும்  - பெண்ணும், ஆணும், ஒரு கூட்டம் ஆண்களும், ஒரு கூட்டம் பெண்களுமோ காதல் செய்கையில் அறத்தின், ஒழுக்கத்தின், சட்டத்தின், புரட்சியின் பெயரால் விளக்குப் பிடிக்கவோ,
விலக்குப்பிடிக்கவோ எந்தக்கொம்பனுக்கும் உரிமை கிடையாது. கொஞ்சம் அயர்ந்தால் கட்டிலுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டு "இன்ன இன்ன முறையில்தான் படுத்து எழும்பவேண்டும், அந்தக் கோணங்களில்தான் இயற்கையாக உறுப்புக்கள் அமைந்துள்ளன. வேற பொஸிஸனில் ஏதாவது செய்தீர்கள் என்றால் அது ஏகாதிபத்திய உடலுறவு" என்று சொல்லக் கூடியவர் றயாகரன்.

றயாகரன் முடிக்கின்றார் " கட்டற்ற சுதந்திரம் என்பது, கட்டற்ற விபச்சாரத்தையும், கட்டற்ற குடும்ப சிதைவையும் கட்டற்ற குடும்ப உறவையும் தொடங்க அடிப்படை மகுடியாக
உள்ளது." (சமர் 23: பக்20) என்று அழுதே முடிக்கிறார்.

பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட நடப்பிலிருக்கும் சமூக அமைப்புக்குள்ளேயே கட்டற்ற செக்ஸ் தொழில் நடந்து கொண்டுதான் உள்ளது, என்பதையும் றயாகரனுக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளதையிட்டு கவலையுறுகிறோம். எங்கெல்லாம், யாரெல்லாம் பாலியல் அடிமைத்தனத்கையும், குடும்ப மதிப்பீடுகளையும் உடைத்துக் கொண்டு வெளிவருகின்றார்களோ, அங்கெல்லாம் நாம் நின்று றயாகரன் போல் குடும்பம் சிதைகிறதே என்று வாயிலும் வயிற்றிலும் அழுத்துக்கொள்ள மாட்டோம். மாறாக இருகரம் தட்டி வரவேற்கிறோம் அதிகார மையமாக விளங்கும் குடும்ப அமைப்புமுறையை மறுத்து ஒரு 'கொம்யூன்' வாழ்க்கைக்கு வரச்சொல்லி அழைக்கிறோம்…"

…..

சோபாசக்திக்கான எனது பதில்கள்

இப்படி அன்று பக்கம்பக்கமாக உளறி, அதை மூலதனமாகக் கொண்டு பணத்தை, பாலியலை .. இலக்காகக் கொண்டு செயற்படும் சோபாசக்திக்கு அன்று எழுதியதற்கு எதிரான பதில் கீழ் பார்ப்போம். அன்று நாம் சொன்னது எப்படி உண்மையானது என்பதை தெரிந்து கொள்ளவும், பலர் திட்டமிட்டு மறந்துவிட்டதால் அதை மறுபிரசுரம் செய்கின்றோம்.  இரண்டு கட்டுரைகள் வெளியானது.  

01. சமர் 25 பக்கம் 32, இல் உள்ளது 
ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது!

02 உயிர்நிழல் 01 பக்கம் 57 வெளியானது கட்டுரை கீழ் உள்ளது.     


ஆம், சோபாசக்தி புலிகளில் இருந்த காலத்தில் நான் கைது செய்யப்பட்டது எதற்காகவோ அதற்காகவே இன்று சோபாசக்தி மீள கல்வெட்டில் செய்துள்ளார்.

நான் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்திற்காக போராடியபோது அது புலிகளுக்கு உளறலாக இருத்தது. மீளமீள வீதியில் இறங்கிப் போராடியபோது அது புலிகளுக்கு விளங்கவில்லை, புரியவில்லை. ஆனால் இதை எப்படித் தடுப்பது என்பதில் என்னை அறியாமல் என்னைப்பின்தொடர்ந்தனர். எப்படிக் கடத்துவது, எப்படி உரிமை கோராது விடுவது, எப்படிக் கதை கட்டுவது என எல்லாம் செய்த பின் ஏ.கே 47 ஜக் காட்டிக் கடத்தினர். கடத்திச் சென்றவர்கள் என்னை முழு நிர்வாணமாக ஆக்கினர். முதற் கேட்ட கேள்வி “தற்கொலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்? ". ஆம், இது கல்வெட்டுக்கு முந்திய நிலை.

ஆம் இப்படிக் கடத்திச் சென்றதை இது எதிர்ப் புரட்சிகரமானது என நினைத்தேன், சொன்னேன். ..... அவர்களுக்குக் கூட.

இன்று கல்வெட்டு எழுதிய சோபாசக்தி என்னை அறியாமல் என்னைக் கற்பழித்து வன்முறையை அன்று புலிகள் போல் செய்கின்றார். நான் சமூகமாற்றம், மக்களின் துன்பம், பெண்ணின் விடுதலை, சாதி ஒழிப்பு என சொல்லுவது புரியவில்லை, விளங்கவில்லை என்பாய் ஆனால் அன்று போல் உனது வக்கிர நோக்கத்துக்கு பதில் பேனையால் அறைந்த அரசியல் அன்று நீ புலி செய்தது போல் ஒரே மாதிரி இருந்த வரலாறுதான் சோபாசக்தியின் இன்றைய அரசியலாகும்.

கல்வெட்டு பாடலில் நான் சொல்வது புரியவில்லை, விளங்கவில்லை, உளறலாக உள்ளது என்று கூறிய நீ உன்னால் எனது கோட்பாட்டை எப்படி (புரியவேண்டுமாயின் குறைந்தபட்ச சமூக அக்கறை வேண்டும்) புரிய முடியும். எனது கோட்பாட்டுக்குக் கல்வெட்டு அல்ல றயாகரன் உயிருக்குத் தான் கல்வெட்டு என்பது வெள்ளிடை மலை.

என் கோட்பாட்டுக்குக் கல்வெட்டு விடவேண்டும் எனின் என் கோட்பாட்டை நீ மறுத்து நிறுவவேண்டும். அதை நீ குறிப்பிடும் பேராசான் மார்க்ஸ் போல் செய்ய வேண்டும். மார்க்ஸ் எப்படிச் செய்கின்றார் எனப் பார்ப்போம்.

சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் ஆராயும் வழி என்ன? இந்த ஆய்வுமுறை இருக்கும் போக்கின் மீது வால் பிடித்துச் செல்வதற்குப் பதில் பிரச்சினையை நுணுகி ஆராயக் கோருகின்றது. மார்க்ஸிற்கு எதிரான அவதூறுகள் மற்றும் ஆய்வுகள் மீதான விவாதத்தில் மார்க்ஸின் ஆய்வு என்ன என “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான” முன்னுரையை எழுதியவரின் வரிகளை மீள மார்க்ஸ் மூலதனத்தில் பக்கம் 38ல் கூறுவதை எடுத்துவைப்பதன் மூலம் கீழ் நான் எழுப்புபவைகளை ஆராய்வதற்கும் எனது அரசியல் நிலையையும் மற்றவர் அரசியல்நிலையையும் ஒப்பிட சுயமாக உதவும் என்பதால் அதை நாம் முதலில் பார்ப்போம்.

“மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதே. குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமல்ல அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்ச்சியடைவது பற்றிய, அதாவது ஒரு வடிவத்கிலிருந்து இன்னொரு வடிவத்துக்கு, தொடர்பூகளின் ஒரு வரிசையிலிருந்து வேறாரு வரிசைக்கு
மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அதனை சமூகவாழ்வில் வெளிக்காட்டுகின்ற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கின்றார். ஆதலால் மார்க்ஸ் ஒன்றைப்பற்றி மட்டுமே கவலை கொள்கிறார். சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விடாக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும் அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்தளவு பாரபட்சமின்றி நிலை நாட்டுவது பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்கமுடியாமலே மறைந்து அதனிடத்திற்கு வரவேண்டிய இன்னொரு அமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகழுமென்பதையும் அவர் ஒருங்கே நிருபித்துவிட்டாலே இதற்குப் போதுமானது. மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அம்சம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றதென்றால், நாகரிகத்தை கருப் பொருளாகக்கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது என்பது கருத்தன்று, பொருளாதாயப் புலப்பாடே என்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வை கருத்துக்களோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோதவிட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்றுகொள்ளும். “முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வெவ்வேறு அம்சங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வெவ்வேறு கட்டங்கள் வெளிப்படுகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக்கிரமங்கள் மற்றும் சங்கிலித்தொடர்களை விடாக்கண்டிப்புடன் பகுத்தாய்வதாகும்.”  இதை அடிப்படையாகக் கொண்டு கீழுள்ளவைகளை ஆராய தயாரானவர்கள் மட்டுமே சமூக இயக்கத்தின் உயிர்நாடியை சரியாகக் காணவும், அதன் ஒளியில் மக்களை விமோசனத்துக்கான மார்க்கத்தை சுட்டிக்காட்டவும் போராடவும் முடியும் என்பது கேள்விக்கு இடமற்றது.

தலித்தியம், பின்நவீனத்துவம், ஓரினச்சேர்க்கை, சாதிஒழிப்பு, ஆணாதிக்கம், பெண்விடுதலை, இராணுவவாதம், சனநாயகம், திம்புக்கோரிக்கை, வன்முறை, இலக்கியம், அதிகாரம்.... என நீ அவைகளை பேச மறுத்து தாவிச்செல்லும் விடயங்களை என் கோட்பாட்டின்மீது, மறுத்து விஞ்ஞானபூர்வமாக நிறுவு. எனது கருத்து விஞ்ஞானபூர்வமாக ஏன் தவறு என நிறுவு. அதில் உனது விஞ்ஞானபூர்வமான ஆய்வை வை. ஒரு பிரச்சினை இயற்கையில் எப்படி இருந்தது, எப்படி மாறி வந்தது, எப்படி இன்று உள்ளது, எப்படி மாறிச் செல்லும் என முடிந்தால் எனது கருத்துக்களை மறுத்து வை. இதை விட்டு, கல்வெட்டு அடித்தால் என் கருத்து முடிவுக்கு வந்துவிடுமா?

நான் உனது விமர்சனம், கதைகளை ஒட்டி வைத்த ஆய்வுகள் எதையும் உன்னால் மறுக்க முடியாது போய், அதற்குப் பதிலாக அதுபற்றி எதுவும் பேசாது கல்வெட்டு எனில், அதன் அர்த்தம் தனி நபருக்குத்தான் என்பது சொல்லாமலே புரியக் கூடியதுதான்.

ஏன் அன்று ஒரு திருமணத்தில, கட்டுடைத்த தலித் வெறி ஏறமுன் என் மனைவியிடம் முன்பின் தெரியாத நிலையில், நீ சென்று “நான்தான் சோபாசக்தி” என்று விட்டு போனாயே, அப்போது எனக்கு புரிந்தது நீ எனக்குத்தான் கல்வெட்டு என்பதையும், என் கருத்துக்கு அல்ல என்பதையும். சாதாரண இந்த சமூகத்தின் பிரதிநிதியாக உள்ள என் மனைவியிடம் சென்று கட்டுடைக்க, அதிகாரத்தைத்தகர்க்க, ஆணாதிக்கத்தை ஒழிக்க வீம்பு பண்ணிய உனக்கு அது அப்படியே அதிகாரத்தால், ஆணாதிக்கத்தால், கட்டிப்போட்ட உனது தனிநபரின் வக்கிரத்தை அன்று நிரூபித்தாய், இதை நாம் அன்று போராடியபோது வெளியாகிய சுவரொட்டி பதில் தரும்.

 
"மனிதனைத் துப்பாக்கி முனையில் 
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டு 
புறங்காலால் மண்ணைத் தள்ளி 
மூடிவிட்டு வந்து 
தெருவோரச் சுவரில் குருதியறைந்து 
நிபாயம் சொல்கிறார்களாம்
நியாயம் !?

(யாழ் பல்கலைக்கழக மாணவர்கள)

நாங்கள் (மார்க்சியவாதிகள்) எப்போது ஒரு பொருளை பகுதியில் அல்ல முழுமையில் ஆராய்கின்றோம். அதன் முழுமையில் தீர்வுகளைக காண்கிறோம். இப்படி முடியுமா உன்னால்? நான் சொல்லாதவைகளை அடைப்புக் குறிக்குள் எனது பெயரில் போட்டும். நான் சொன்னதாக திரித்தும் கல்வெட்டில் சேறடித்து எழுதுவதை விடுத்து, கோட்பாட்டில் நான் சொன்னதை அப்படியே நேர்மையாகக் காட்டி உன்னால் பதிலளிக்கமுடியும் எனின், மாற்றுக் கருத்து என்றாலும் உனது கருத்தை மதிக்க நான் எப்போதுமே தயாராக உள்ளேன். இதை விடுத்து வர்க்க எதிரிகள் தனிநபரை அழிக்க மரணதண்டனை தீர்ப்பளிப்பது போல், நீ கல்வெட்டு அடித்தால் அதன் அர்த்தம் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என்பதே.

றயாகரனுக்கு பிரிவாற்றாமையை குறித்த நினைவுக் கல்வெட்டு ஒன்றை உயர்ந்த கலைப் படைப்பாளி (இதை உள்ளடக்கத்தில் எப்படி என சொல்ல தெரியாதவர்கள்) என பலரால் போற்றப்படும் சோபாசக்தி (அம்மா சஞ்சிகையில் விமர்சனம் இன்றி உப்புச்சப்பின்றி எழுதும் வாசகப் பெருங்குடிகளின் அரசியல் இரட்டைத்தனத்தின் ஒரு பக்கத்தால் அம்மாவில் எழுதுவோர்) வெளியிட்டுள்ளார்.

இது எனக்கு வெளியிட்ட இரண்டாவது கல்வெட்டு. முதல் கல்வெட்டூ யாழ் பல்கலைக் கழகத்தில் ராகிங் என்ற ஆணாதிக்க, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடியபோது நான் சுயபுத்தி இழந்த மனநோயாளி எனக்குறிப்பிட்டு துண்டுபிரசுரம் போட்டு, அதைப் பத்திரிகையில் பிரசுரித்தது முதல் கல்வெட்டு. இது அதற்காகவே வேறு கோணத்தில் மரணமடைந்ததாக கூறி கல்வெட்டுவிட்டது எனக்கு இரண்டாவது கல்வெட்டு.

"மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை.
ஒரு அநாதையாய் ஒரு நடைப்பிணமாய் புதிய
எஜமானர்களுக்காய் தெருக்களில் மரணிப்பதை .
நாங்கள் வெறுக்கிறோம்."

(யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்)

என்னவோ புரியவில்லை. புலிகளில் இருந்ததோ என்னவோ அரசியல் முரண்பாட்டுக்கு மரண தண்டனை அல்லது கல்வெட்டுத்தான் இதுதான் புலியின் இராணுவவாத, சூனியவாத அரசியலாகும்.

சோபாசக்தியின் எழுத்துக்கள் எப்போது புலி அரசியலையும், பூர்சுவா அரசியலையும் தாண்டிச் செல்லாத நிலையில், இன்று ஏகாதிபத்திய சீரழிவுக்குள் குப்பென்று விழுந்துள்ளார். இதை அவர் மறுத்து நிறுவமுடியாது. சவால் விடுகின்றேன். மறுப்பதாயின் முதலில் ஏகாதிபத்தியம் இவரின் முடிவுகளில் எப்படி முரண்படுகின்றது என நிறுவவேண்டும். 

கல்வெட்டுப்பாடல் வழக்கம்போல் ஆணாதிக்கம் எதைச் சொல்கின்றதோ அதையே என்மீது என்னையறியாமல் செய்யும்போக்குத்தான் ஆணியத்தின் பாலியல் மேலாண்மையாகும். இது ஓரினச்சேர்க்கையாக இருந்தாலும், குடும்பத்திலும், வெளியிலும் ஆண் பெண்ணாக இருந்தாலும் என்மீதான அத்துமீறல், என் அனுமதியின்றிய நடவடிக்கையே அதிகாரத்துவமாகும். இது அதிகார கட்டமைப்பை இருப்பாகக் கொள்கின்றது.

இனி கல்வெட்டு பாடலைத் தொடர்ந்து செல்லும் கட்டுரையைப் பார்ப்போம். “முன்னொரு காலத்தில் பேச்சு, எழுத்து, போன்ற சனநாயக உரிமைக்காக அனுங்கி அனுங்கி குரல் கொடுத்தவர்...” என்கிறார் என்னை. முதலில் நான் ஏதோ கருத்து எழுத்து சுதந்திரத்துக்கு குரல்கொடுத்தேன் என்பதை மறுக்க முடியாமல், அதைக் கொஞ்சமாக ஒத்துக்கொண்டு சேறடிக்கிறார். அது சரி நண்பரே, முன்பு யார் யார் எல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தனர்? அவர்கள் எப்படி அனுங்கி அனுங்கி இன்றி போராடினர்? நான் அவர்களில் இருந்து எப்படி வேறுபட்டுப்போனேன்? எப்படி நான் அனுங்கி அனுங்கிப் போராடியது தவறு, எப்படிப் போராடியிருக்க வேண்டும்? இதைச் சொல்லாதது வேறு என்பது ஒட்டு மொத்த கருத்து, எழுத்து, பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான அவதூறுகளே. இது அன்று எ.கே 47 இன்று பேனை, இரண்டும் அரசியல் ரீதியில் ஒன்று அல்லவா?

அது சரி முன்னொரு காலம் என்றால் நீர் அன்று புலியில் இருந்த காலம் அல்லவா? அப்படியாயின் அன்று அனுங்கி அனுங்கி குரல் கொடுத்ததாலா நீங்கள் என்னைக் கடத்தினீர்கள்? சித்திரவதை செய்தீர்கள்? கொல்ல முயன்றீர்கள்? என்னைத் தேடினீர்கள்? எனது நண்பர்களைத் தோழர்களை வீதி வீதியாக படுகொலை செய்தீர்கள்? கூறும் ஐயா எதற்காக முன்னொரு காலத்தில் இதை எனக்குச் செய்தீர்கள்?

மக்களின் பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களை அனுங்கி அனுங்கி அல்ல தலைமை கொடுத்துப் போராடினோம். திலீபன் முதல் மாத்தையாவரை ஒரே மேடையில் எதிர்த்து நின்று இதற்காகப் போராடினோம். சிலரை இழந்தோம் இதற்காகவே நண்பரே.

நான் முன்னொரு காலத்தில் கொல்லப்பட்ட சனநாயக போராட்டவாதிகளில் முன்னணியில் நின்றோம். அந்த தியாகிகளுக்கும், அந்த மக்களுக்கும் என்றும் அன்று போல் துரோகம் இழைத்ததில்லை. ஆனால் நீங்கள் அன்று என்ன செய்தீர்கள் என்பதற்கு எமது போராட்டம் யாருக்கு எதிரானதாக இருந்தது (சனநாயகத்துக்காக அதிகாரத்தை எதிர்த்து) என்ற போராட்ட வரலாற்றை வரலாற்றில் இருந்து கல்வெட்டு அடித்து சேறடித்து அழிக்க முடியாது.

அடுத்த புல்லரிக்கும் விடயத்தைப் பார்ப்போம். “...வன்முறையில் கட்டப்பட்டுள்ள சமூக ஒழுங்குகளில் ஒரு சின்ன ஒழுங்கவிழ்ப்பு நிகழினும் துடித்துப்பதைத்து...” நான் போராடுவதாக எழுதுகின்றார். இது எது எனின் நான்கு கட்டவிழ்ப்பாளர்கள், பின்நவீனத்துவவாதிகள், தலித்திய பவுசு பேசுவோர், தலித்தின் கட்டவிழ்த்த வெறியில் எழுதி வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் இருந்துதான் இதைப் பேசுகின்றார்.

மக்களைப் பற்றிய அக்கறையின்றி, எம் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அதன் தியாகங்களை ஏறி மிதித்த அனைத்துக் கட்டவிழ்ப்பும், ஒழுங்குமீறலும் மக்களைச் சாராத நிலையில் அது கேடுகெட்ட பன்றித்தனத்தின் கேவலம்தான்.

அது சரி சோபாசக்தி, வன்முறையை உடைத்துத் தகர்த்த சமூகம் உமது மூக்கில் அந்தரத்திலா தொங்குகிறது. இல்லையே. நீங்கள் உடைத்து சுதந்திரமடைந்ததாக நம்பும் உங்கள் அனைத்து செயலும் மீளவும் வன்முறை சமூகத்துக்குள் அல்லவா புழுத்துப்போய் உள்ளது. கனவு காண்பவன்தான் வன்முறை மீறலை செய்வதாக கற்பனை பண்ணுகிறான், புலம்பித் திரிகிறான். மீறியது வன்முறைக்குள் தான் என்பதையும், அது அதற்குள் தான் என்பதையும் புரியாமல் போனால், புரிய மறுத்தால் இந்த ஏகாதிபத்திய வன்முறை அமைப்பு வாழ்க எனகோசம் போட மட்டும்தான் லாயக்கு. 

அடுத்து "கருக்கலைப்புக்கு எதிராக புயல்வேகப் பிரச்சாரம் செய்வதில்...” நான் பின்நிற்கவில்லை என்கிறார். கருக்கலைப்புத் தொடர்பான எமது சுயவிமர்சனம் ஒன்றை நாமாகவே சமர்-16இல் 'கருக் கலைப்பில் எமது சரியும் தவறும்' என்ற தலைப்பில் செய்து இருந்தோம்.

தனிநபரான என்னைத் தாக்க வெளிக்கிட்டபின் என் சுயவிமர்சனத்தைக் கூட காணத் தவறுபவர்கள், எப்படி அதிகாரத்தை யதார்த்தத்தில் கட்டுடைக்கமுடியும். கேள்வி ஞானம், தனிநபர் காழ்ப்புணர்வுதான்
கோட்பாட்டுக்கு வெளியில் எஞ்சியதை இது காட்டவில்லையா?

அம்மா-7இல் சுவிஸில் புளட்டினால் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினரான, பெண்ணின் பெயர் தெரியவில்லை என எழுதும்போது, சமர்-14இல் அப்பெண்ணின் படம், பெயர், வீட்டுப்பெயர் என அனைத்தும் இருந்ததைக் காணமுடியாதபோது, சமரை ஆய்வுக்குள்ளாக்காத தனிநபர் தாக்குதலுக்கான தகவல் திரட்டியதைக் காட்டவில்லையா?

அதே 'அம்மா'வில் ஐரோப்பாவில் தற்கொலை செய்வதை எல்லாம் (தற்கொலை எல்லாம் ஆணாதிக்கத்தின் செயலால் என வேறு கற்பனையில் கதை அளக்கின்றார்) ஆவணமாக்காது எப்படி பெண்ணிலைவாதிகள் ஆவணமாக்காது உள்ளனர் எனப் பொறுப்பை மற்றவர்மீது சுமத்தியவர், ஏன் அதைத் தான் செய்யவில்லை? அப்படி யாரும் கேட்க இந்த இலக்கிய உலகில் யாருக்கும் துணிவு கிடையாது என்ற நம்பிக்கை. அத்துடன் அது தனது கடமை அல்ல அது பெண்ணிலைவாதிகளின் கடமை என்பதன் ஊடாக தான் ஒரு ஆண் என்பதை வேறு அழுத்தந் திருத்தமாகச் சொல்கின்றார்.

அது சரி, வெட்டிப்பிடுங்கி எம்மை 'லிமிட்', 'அனுங்கி அனுங்கி' சனநாயகத்துக்காக குரல் கொடுத்ததாக சொல்லும் நீர், உமது கால மீறல்களை எங்கே ஜயா ஆவணமாக வெளியிட்டுள்ளீர்? அதைச் செய்யாத நபர், எப்படி பெண்ணிலைவாதிகளிடம் கேட்கும் உரிமை மட்டும் வந்து சேர்கிறது. ஏன் உமது முன்னொரு கால சில நடவடிக்கைகள் (நீர் உட்பட குழுக்கள்) செய்ததையிட்டு நான் அல்ல வேறு நபர்கள் கேட்டால், அவைபற்றி தெரியாது என ஒரேயடியாகவே மறுக்கும்போதே, ஏதோ மறைக்கப்படுவது தெளிவாகின்றது. சம்பவம் அச்சுற்றுவட்டத்திற்கே தெரிய, அந்த குழுவில் இருந்தவருக்குத தெரியாது போக முடியுமோ?

_மற்றவனைக் குற்றஞ்சாட்ட முன்பு உனது கைக்குப் பின்னால் மறைந்து போனதை இலக்கியத்திலோ, கட்டுரையிலோ கட்டுடைக்க முடியாது மறைந்துபோன மர்மம் தான் என்ன? ஆனால் சிலதை மற்றவர் மீது சுமத்துவது மட்டும் நீடிக்கின்றது. அன்று நடந்த ஒரு திருமணத்தில் கட்டுடைத்த, ஒழுங்கு மீறிய எல்லைதாண்டலில் ஒரு பெண்ணிடம் “நீ அந்த காம்ப் பொறுப்பாளர்” என தலித்வெறியில் கேட்ட போது அப்பெண் கேட்கவில்லை நீ என்ன செய்தாய்? எங்கே உன் வரலாறு? என்று. ஏன் இந்தகட்டுடைத்த, அதிகாரத்தைத் தகர்த்த மௌனங்கள் நடிக்க போலித்தனங்கள் அரங்கு ஏறுகின்றன.

இனி தொட்ட விடயத்தைப் பார்ப்போம். கரு அழிப்பு என்பது பூர்சுவா வர்க்கம் தனது அற்பத்தனங்களில்தான் செய்கின்றது. இந்த அற்பத்தனம் கூட இந்த சமூக பொருளாதார விளைவாக உள்ளதாலும் அதற்கு எதிரான போராட்டத்தில் கரு அழிப்பு இல்லாது ஆக்கப்படும். இது வர்க்க எல்லைக்குள் தொடரும் அதேநேரம் பூர்சுவா வர்க்கம் தனது சமரசத்தை கோரும் சனநாயக எல்லையை நாம் காணத் தவறியதை நாம் சுயவிமர்சனம் செய்தோம். ஆனால் தனிநபர் மீது திட்டு. சோபாசக்தி புலியில் இருந்து எப்ப எதற்காக விலகினார். கோட்பாட்டு ரீதியில் என்ன சுய விமர்சனம் செய்தார்? அவரின் எழுத்து அரசியல் சுய விமர்சனம் இன்றி எல்லை தாண்ட, மாடு இல்லாத வண்டி போல் கீச்சு இட்டு இழுபடுவதுதான் அவரின் உன்னதமான படைப்பு எல்லை அமைந்துள்ளது என்பதை அவரால்கூட தன் படைப்பு பாட்டாளிவர்க்க தீர்வு மீது நின்று மறுக்க முடியாது.

அடுத்து, “கடந்த காலத்தில் லிமிட் பண்ணிய வகையில் சனநாயக உரிமைக்காக குரல் கொடுத்தும்...” என்கின்றார் என்னை. எங்களுக்கு உங்கள் கூட்டத்தைப் போல் அரசியலற்ற புலிக்காய்ச்சல் கிடையாது. புலிகளைத் திட்டித் தீர்க்க எண்ணும் வக்கிரம் கிடையாது. நான் அவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவன்தான். அதை நான் அவர்களின் அரசியல் மீது விமர்சிக்கிறேனே தவிர, நபர்களைத் திட்டித் தீர்ப்பதால் எமது அரசியல் அற்ற வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கத்தான் முடியும்.

தமிழ்மக்களின் போராட்டம் ஒரு சனநாயகப் போராட்டம். கரு அழிப்பு , ஓரினச்சேர்க்கை, தலித்தியம்... ஒரு சனநாயகப் போராட்டம் என அங்கீகரிக்கும் நீங்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதில்லை. இப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான சனநாயகப் போராட்டத்தை நாம் கோரினால் என் மீது புலி முத்திரை. இதுபோல் புலியை ஏற்காததால் எமக்கு அரசு சார்பு முத்திரை. இதுதான் இந்த எதிர்நிலையில் அரசியல் மட்டுமின்றி, அதன் துல்லியமான மக்கள்விரோதத்தனமாகும். நாங்கள் சனநாயகத்தைக் கோருவதென்பது இரு தளத்திலும் எம்மை எதிர்த்தளத்துக்கு முத்திரை குத்துவது புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைவரை ஒரே மாதிரி அரசியலால் ஒன்றுபட்டு உள்ளனர். தேசியத்தை சனநாயகமாக அங்கீகரிக்க மறுத்து புலி சார்பு என காட்டும் நீங்கள், இதுபோல் உங்கள் கட்டுடைத்த ஒழுங்கு அவிழ்த்த சனநாயகத்தில் சுரண்டலை எதிர்த்துப் போராடுவதில்லை. இதுதான் உங்கள் அரசியல் அடிப்படை.

தமிழ் பேசும் மக்களின் துன்பம், துயரம் இதற்கான போராட்டப்பாதையில் புலிகள் உள்ளதால் அவர்களை மக்களின் நலனைச் சார்ந்து போராடக் கோருவதும், அதே நேரம் மக்களுக்காக போராடும் சனநாயகத்தை அங்கீகரிக்கக் கோருவதுமே எமது நிலை. உங்கள் போல் அரசு. புலி இரண்டையும் ஒரே அளவில் எதிரியாகக் காட்டியபடி, ஈபியுடன் கூடிக் குலவிக்கொண்டு (இங்கு ஈபியின் அரசியல் கூட புலிப் பாணியானதே) மக்களா? என்று கேட்டபடி புலிகளைத் திட்டினால், மக்கள் என்ன செய்வார்கள். மக்கள் தவிர்க்கமுடியாது புலிகளின் பின்னால் உள்ளனர் என்பதே யதார்த்த நிகழ்வாக உள்ளது.

மாற்றுத் தலைமை, புலிகளை மக்களுக்கு சனநாயகம் வழங்கக் கோரும் கோரிக்கைதான் இன்று சரி, அன்று சரியும் எமது நிலை. இது லிமிட் அல்ல எமது அரசியல் நிலை. லிமிட்டைத் தாண்டினால் அரசுக்கு சேவகம் செய்து நக்கத்தான் முடியும். சரி, நீங்களும் உங்கள் கட்டுடைத்த“கூட்டாளிகளும் இந்த சனநாயகத்தைப் பற்றி அதற்காக என்ன செய்துள்ளீர்கள்? லிமிட்டே வேண்டாம் என்றால் சனநாயகமே வேண்டாம் என்ற அன்றைய புலி அரசியல் நிலை அல்லவா சோபாசக்தியின் அரசியல் கோருகின்றது.

நாங்கள் லிமிட் அனுங்கி அனுங்கி குரல் கொடுத்தோம் என ஒத்துக்கொள்ளும் நீர், அதை முழுமையில் செய்தோரைக் காட்டமுடியுமா? நீங்கள் செய்தீர்களா? அதைத்தானே நீங்கள் லிமிட், அனுங்கி அனுங்கி எனக்கூறி சேறடித்து எப்போதோ முடிவாக்கினீர்கள்.

அடுத்து “நேர்சீராக இருக்கும் சமூகத்தை நாம் சீரழிக்கத் தொடங்கிவிட்டோம் என்ற கண்டனத்துடன், ஓர் சமூகச் சீரழிவின் தொடக்கம்---” என சோபாசக்தி எமது துண்டுப்பிரசுரத்தைச் சொல்லி எழுதுகிறார். இப்படி எழுதுவதன் மூலம் எம்மை மறுப்பதன் மூலம் சீரழிந்த சமூகத்தை மேலும் சீரழிக்கின்றோம் என்று அல்லவா சொல்கின்றார்.

சீரழிந்த சமூகத்தை நேராக்கவில்லை அல்லவா? நேராக்குவது என்றால் என்ன? சீரழிவது என்றால் என்ன? நாம் சமூகம் நேர்சீராக இருக்கின்றதென்று எங்கேயாவது சொன்னோமா? இங்கும் திரிபா? நாம் சீரழிந்துள்ள சமூகத்தை நேராக்க குரல் கொடுத்தோம். சீரழிவுச் சமூகத்தில் தொடரும் சீரழிவுகள் இயல்பானது. அது சமூகத்தையிட்டு அக்கறைப்படாது. அதற்கு வழி காட்டாது. அதில் நக்கி பிழைக்கத் தொடங்குகின்றது. சமூக மாற்றம் என்பது பொறுப்புணர்ச்சிக்கு உட்பட்டது. இதை கேலியும் கும்மாளமும் அடிக்கும் பிரிவுகளால் சமூகத்தின் மாற்றத்தைச் செய்யும் சாத்தியமில்லை. அது மேலும் சீரழிவுக்கு வழிகாட்டும். 

எமது துண்டுப்பிரசுரம் “சேடம் இழுக்கின்றது” என்கிறார். எப்படி ஐயா? விளக்கியிருக்கலாமே? மக்கள், மக்களின் துன்பம், அதன் அரசியல் என துண்டுப்பிரசுரத்தில் கதைத்தோம். பதில் இல்லை. சேடம் என்கின்றார். ஆம். சமூக அக்கறை சேடம். இழுக்க இழுக்க, மற்றவர்கள் சேடம் இழுப்பது போல் கண்ணுக்கு மின்னும்.

“அதுவும் கடி, சுகித்தல் அதிகரிக்க அதிகரிக்க மெய்மறக்கும் - நினைவு இன்றி உளறும்போது கல்வெட்டுத்தான்- சேடத்தின் முடிவாகத் தெறியும், சுகிப்புக்கு மூன்று அர்த்தம் உள்ளதாக குறிப்பிட்டு
அதை நல்லனுபவம், இன்பமனுபவித்தல், செல்வங்களை அனுபவித்தல் என்று எடுத்து வைக்கின்றார். றயாகரனின் இன்பமனுபவித்தல் மட்டும்தான் தெரிகின்றது என்கின்றார். நல்லது ஷோபாசக்தி, இந்த மூன்று அனுபவமும், பாட்டாளிவர்க்கத்தினதோ, பெண்ணினதோ, தாழ்த்தப்பட்ட மக்களினதோ, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களினதும் அனுபவங்கள் அல்ல நண்பரே. இது மேல்மட்ட வர்க்கங்களின் அதிகாரவர்க்க ஆண்சார்பு பார்ப்பனிய நிலையாகும். கீழ்பட்ட வர்க்கங்கள் இதை எதிர்மறையில், இதன்
துயரத்தால், ஒடுக்குமுறையால் உள்ளது சோபாசக்தி அவர்களே.

சுகித்தல் என்பது வழக்கில் பெண்சார்ந்து மட்டுமே அதுவும் மலின பாலியல் வக்கிர புத்தகங்களில் வக்கிரத்தை தூண்ட போடப்படுபவைதான். ஏன் நீங்கள் உங்கள் கூட்டாளிகள் நாலு பேரும் சேர்ந்து எழுதிய துண்டுப் பிரசுரம் சரி, பின்னால் நீங்கள் கட்டுடைத்த, புரட்டிப்போட்டது எல்லாம் சுற்றிச் சுற்றி செக்ஸ்சுக்குள் (பாலியலுக்குள்) மட்டுமேதான். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களைச் சுற்றி குடும்ப உறவுகளைச் சரி, அதை ஒட்டிய இயக்கத்தில் சரி, எப்போதுமே கட்டுடைத்தது கிடையாது.

மாறாக உங்கள் செக்ஸ் பிரச்சினைக்குத் தீர்வு தான் கட்டுடைப்பும் புரட்டிப்போடுதலும். ஏன் இருள்வெளி மலர் விட்ட சுகன், அதை ஒட்டிய கூட்டு சுகிப்பு அழைப்பு எப்படி இருக்கமுடியும் என்பதற்கு சுகனின் எழுத்துக்களை கொஞ்சம் சொன்னால் எது என புரிய வைக்கும் அல்லவா ? தனது அண்ணன்-அண்ணியின் கட்டில் கிறீச்சிட்டதை எப்படி பார்த்து வக்கிரக் கவிதை வரையவோ, விமானப் பணிப்பெண் என்ன குடிக்கிறாய் எனக் கேட்க உன் மார்பை எனக் கூறத் தயங்காத கவிதையும், பிரெஞ்சுப் பெண் ஐந்து தரம் படுக்க லாயக்கு என்றும் பெண்கள் மார்பகத்தை இந்தா பிடி, இந்தா பிடி என அலைபவர்கள் எனவும் கவிபாடிய கவிஞர் ஆனவர், சுகித்தலுக்கு சரியான அர்த்தத்தை பிசகு இன்றிக் கூறியது தவறு அல்ல. சோபாசக்தி எனக்கு வெளியிட்ட கல்வெட்டுக்கூட என் அனுமதி இன்றி அதே சுகித்தலிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தபோது எஞ்சியது பாலியல்
வக்கிரமும் அதன் சுகிப்பும்தான்.

அடுத்து சோபாசக்தி சின்னப் பாப்பா போல் கேட்கின்றார், பெண்ணை மட்டுந்தான் சுகிக்கலாமோ ஆணைச் சுகிக்க முடியாதோ என்கின்றார். இது ஆணாதிக்க உலகம் ஐயா. ஆண் மட்டும்தான் சுகிக்கிறான். ஆணுக்காக மட்டுமே இந்த சுகித்தல் என்ற சொல் ஆண்களால் உருவாக்கப்பட்டது. பெண்களுக்காக அல்ல. சுகித்தல் என்ற சொல் இன்று வக்கிரத்துக்காக மட்டுமே வழக்கில் உள்ளது. ஆணாதிக்கத்தை ஏகாதிபத்திய பண்பாட்டால் உள்வாங்கியவர்கள் சந்தித்த கூட்டத்தில், ஆண் சுகித்தல் மட்டுமே ஆண் சார்ந்து நிகழ்கின்றது. ஒரு பெண் கேட்டார் என்கிறாய். அவர் ஆணாதிக்க எல்லைக்கு உட்பட்டுத்தான் என்று உங்கள் ஆணாதிக்க தோழியருக்கு கூறுங்கள், றயாகரன் சொன்னான் என்று,

அடுத்து, “ஒழுங்காய் வேலைக்கு போய் வருதல், குடும்பம், அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அமைப்புகள், கட்சிகள் இயக்கங்கள் அனைத்தையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர்கள்தான் என்கின்றனர். வாழ்க என வாழ்த்துவோம். ஆனால் இந்த உலக, சரூக ஒழுங்குகளுக்குள் வாழ பின்நிற்கவில்லை. இந்த சமூகத்தில் வாழ்ந்தபடி எப்படி அதற்கு வெளியில் சுயாதீனமாக வாழமுடியும்? எதிர்க்கின்றீர்கள் என்றால் மாற்றம் எப்படி யாருக்கும் புரிந்தால் எனக்கு கூறுங்கள் எப்படி என்று, எதை வந்தடைய முடியும். ஒரு சமூகத்தை மீற சமூகத்தால் மட்டுமே முடியும். அச் சமூகம் அதை நோக்கி அமைப்பாக்கப்பட வேண்டும். இல்லாத வரை எப்படி மாறும். கற்பனையில் பேசலாம், எழுதலாம், சுகித்து தண்ணியடிக்கலாம். ஆனால் சமூகம் அமைப்பு மாற்றம் இன்றி பாதுகாக்கப்படும்.

வேலைக்குப் போக மறுப்போம் என்றாய். அப்படியானால் யாரும் உழைப்பதில் சுரண்டி வாழவும் சுகிக்கவும் முயல்கின்றாய் என்பது புரிகின்றது. ஒவ்வொரு உழைப்பாளியும் அரைக் கஞ்சிக்காய் முதலாளிக்கு ஓடாய் உழைத்து அந்த அற்பப்பிறவிகளை, உழையாது வாழும் முதலாளி போல் அராஜகவாதிகளும் (அனார்க்ஸிஸ்டூகள்) சுரண்டி வாழ்பவர்கள்தான். உழைப்பு இன்றி இயற்கையை மட்டும் சார்ந்து மனிதன் இன்று வாழமுடியாது. உழைப்பு ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கடமையாகும். இது எல்லோருக்கும் பொதுவாக்கப்படவேண்டும். இதற்காக உழைப்பவர்கள் - அமைப்பாகி தமது ஆட்சியை நிறுவ வேண்டும். இதன்மூலம் தேவைக்கு ஏற்ப இயலுமானவரை உழைப்பது சமூகக் கடமையாக இருக்க வேண்டும். இதை மறுத்து முதலாளிபோல் மறுப்பது சுரண்டல் கோட்பாடுதான். இதை அராஜகவாதிகள் (அனாகிர்ஸிஸ்டுகள்) என்று சொன்னாலும் ஒன்றுதான்.

அடுத்து "..மதங்களும், மகாத்மாக்களும் ஆதிக்க வர்க்கமும் - சாதியும் - பாலும் கட்டமைத்திருக்கும் அறநெறிகளை கவிழ்த்துப் போடும் தைரியமிருக்கிறது." என்கிறார். எங்கே எதற்குள் எப்படிக் கவிழ்த்துப் போட உள்ளீர்கள்? அது தண்ணி அடியில், அதன் உச்சத்தில் வெளிப்படும் துண்டு காகிதத்தில் மட்டும்தான் இது முடியும். வெறி முறிந்தால் வேலை, உழைப்பு, சமையல், அண்ணா -அக்கா, சடங்குகள் என்று எல்லாம் ஒழுங்கு கவிழ்ப்பு இன்றி பேசனாக அரங்கு ஏறுவதா கவிழ்ப்பு. புலம்புவதையும் பொருத்தமாக யதார்த்தமாகப் புலம்பவேண்டும். சொல்வதில் நேர்மையிருக்கவேண்டும். வீம்புக்கு வலிந்து காட்டும் சொற்கட்டுகள், எதுவுமற்ற கற்பனைக் கனவுகளாகத்தான் போகும்.

மூலதனம் பாகம் 1, பக்கம் 146இல் கார்ல் மார்க்ஸ் கூறுவது இங்கு சாலப்பொருந்தும். “தம்மளவில் சரக்குகளாயிராத மனச்சாட்சி, கௌரவம் போன்றவை அவற்றை உடையவர்களால் விற்பனைக்கு முன்வைக்கப்படுவதும், இல்லாது தனது விலையின் மூலம் சரக்குகளாக வடிவம் பெறுவதும் சாத்தியமே. எனவே ஒரு பொருளுக்கு மதிப்பு இல்லாமலே விலை இருக்கலாம்.” இன்று கவிழ்த்துப்போடும் தைரியத்தை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் கூடத்தான் உங்களைவிடச்சிறப்பாக செய்கின்றது. நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் அதன்மேல் ஏகாதிபத்தியம். சமூக இயக்கத்தில் அனைத்துத் துறையிலும் முன்னையதை ஈவிரக்கமின்றி கவிழ்த்து புரட்சி செய்யவில்லையா?

கவிழ்த்துப்போடுவது எந்த வர்க்கத்தின் சார்பாக எந்த வடிவத்தின் ஊடாக என்பதுதான் பிரச்சனை, கவிழ்க்கின்றபோது அதுவே புதிய எல்லைக்கு சிறையை அமைத்துவிடுகின்றது. கட்டுடைப்பும் கவிழ்த்துப் போடலும் எல்லாம் எல்லா சமுதாயப் பாய்ச்சலிலும் விதிவிலக்கின்றி நடக்கின்றது. எனவே மக்களின் நலனுக்காக (தனி ஒருவருக்காக கவிழ்க்காது சமுதாயத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்கான கவிழ்ப்பு என்பது மற்றைய கவிழ்ப்புகளில் இருந்து முற்றாக வேறுபட்டது. மற்றைய கவிழ்ப்புகள் புதிய
கொடூரங்களை இனம் காட்டும். இதை முன்கூட்டியே கூறவும் முடியும். அதையே உங்களை நோக்கி நாம் சுட்டிக்காட்டும் அடிப்படையாகும்,

பாதிச்சுதந்திரமே இந்தப் பாடுபடுத்தினால் மீதிச்
சுதந்திரமும் வரும்போது யாரும் மிச்சமிருக்க
மாட்டார்கள். சிம்மாசனம் ஏறும் வரைக்கும் தான்
சீர்திருத்தவாதிகள். ஆசனத்தைப் பிடித்துவிட்டால் 
. அராஜகவாதிகள் - ஆனாலும் நெருப்பு சருகுகளை
நிச்சயம் தோற்கடிக்கும்.
(யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்)

அடுத்து நான் வேலணை மத்திய மகாவித்தியாலயம் பழைய மாணவர் ஒன்றுகூடலில் ஒழுக்கம் பற்றி பேசியது குறித்து சுட்டிக்காட்டி, தமது சுகித்தல் கூட்டத்தை நியாயப்படுத்தியுள்ளனர். வேலணை மத்திய மகாவித்தியாலயம் மட்டுமின்றி மக்கள் பங்குகொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் பங்குகொள்ளவும் கருத்துக் கூறவும் விமர்சிக்கவும் எப்போதும் மக்களை நேசிப்பவர்கள் தயாராக இருக்கவேண்டும். இப்படி நிகழ்வுகளில், மக்கள் கூடும் இடங்களில் பல முரண்பாடுகள் இருக்கலாம். சில இடங்களில் எமக்கு முற்றாக எதிராகவும் கூட இருக்கலாம். ஆனால் இவைகளில் கருத்துக்கூறவும் எதிர்த்து போராடவும் வேண்டும். ஏனெனில் மக்கள் தம்மை அறியாமல் இருக்கும் சமூகக் கட்டமைப்பில் செயற்படுகின்றனர். இன்று புலம்பெயர் சமூகத்தில் மக்களின் பொழுதுபோக்கு மையமாக மட்டும் இன்றி, சமூக ஒன்றிணைவு மையங்களாக எஞ்சிப் போயுள்ளது. உங்கள் அராஜக தனிநபர்வாதங்களுக்கு எதிராக மக்கள் தமது ஒன்றிணைந்த செயல்மையங்களாக, பொழுதுபோக்கு இடங்களாக உள்ளதில் நாம் பங்குகொள்ள எப்போதும் தயாராக உள்ளோம்.

ஆனால் கட்சிகள், இலக்கிய ஒன்றுகூடல்கள், பிற்போக்கு நிறுவனங்கள் (மக்கள் தன்னிச்சையாக இணையாதவை)உம், மக்கள் ஒன்றிணைவும் ஒன்றல்ல. மக்கள் தன்னிச்சையாக அல்லாத ஒன்று இணைவுகளில் அரசியல், கோட்பாடு, நோக்கம் தெளிவானது. இப்படியான இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள்பற்றி என்ன நிலையை கொண்டுள்ளனர் என்பது மட்டும்தான், எமது அடிப்படையான ஆய்வும் எமது தீர்வுமாகும்.

வேலணை பழைய மாணவர் சங்கம் சரி, வேறு மாணவர் சங்கம் சரி உங்களைப்போல் வெட்டிப் புடுங்க சபதம் ஏற்காவிட்டாலும், தமது சொந்த உழைப்பில் சமூகத்துக்கு வேலைசெய்யும் குறைந்த பட்ச நோக்கம் தெளிவாக உள்ளது. அது உங்களை விட மிக உயர்ந்த அளவில் நேர்மையானது என்பது வெள்ளிடைமலை.

அடுத்து "இப்போது புலம்பெயர் அரசியல் - இலக்கியத்தை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகின்றது. அது தலித்பூதம்...” என்கிறார் சோபாசக்தி. சோபாசக்தி உச்சவெறியில் உளறுகிறார். சோபாசக்தி, சுகன், சேனன் சரி உங்கள் தலித் விடுதலைக் கோட்பாட்டை வையுங்களேன் முடிந்தால்? எப்படி எந்த வழியில் விடுதலை என்று. எவ்வாறு சாதி ஒழிப்பு என்று. இவ்வாறு தலித் பூதம் என்பது வலிந்து காட்டும், ஒரு புலுடாவே. ஏன் அண்மையில இந்தியா சென்று ரொக்சியத்தில் இருந்து அ.மார்க்சின் ஆசியும் அருளும் பெற்று புது அவதாரம் எடுத்தவரான சோபாசக்தி, அங்கு பெற்ற தலித் ஆசியில்கூட போராட்ட மார்க்கத்தை தலித்-ரொக்சிய கோட்பாட்டில் வைக்க முடியுமா? சவால் விடுகின்றேன். எப்படி சாதி ஒழிப்பீர்கள் என்று.

இப்படிக் கேட்டால் வெள்ளாளன் திமிர் என்பீர்கள். இது என்னை புலி என்றது போல்தான். நான் சாதி கடந்தவன். அதற்காக நான் போராடிய துரும்பைக்கூட உங்களால் செய்யமுடியாது. நான் சாதி கடந்துதான் திருமணம் செய்தவன். எனது சொந்த ஊரில் எனது சொந்த உறவினரை எதிர்த்து (பிளாட் தலைவரும் வெள்ளாள சாதி தடிப்பு கொண்ட உமாமகேஸ்வரன் ஊர்மட்டும் இன்றி எனது உறவினர்கூட) எனது சொந்த ஊர் பள்ளர் பள்ளிகளை கோயிலில் நுழையவைத்து அங்கு பலாத்காரமாக வெள்ளாளரை மீறி அவர்களை சபை இருத்தியவன். இந்த மக்களில் பல போராட்டத்தை சாதி கட்டமைப்பில் நடத்துவதில் பலமுறை போராடியதால, எமக்கு ஏற்பட்ட பிரச்சினையின்போது அவர்கள் எமக்காக போராடியதுடன் ரெலோவுக்கு எதிரான தமிழ்மக்கள் தேசியவிடுதலைப் போராட்டத்தில் இயக்கத்துக்கு எதிரான முதல் சனநாயகப் போராட்டத்தை அவர்கள்தான் நடத்தியவர்கள். இந்த மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பு நடந்தபோது, உணவுப் பங்கீடு நடந்தபோதும் சரி, இயக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் சாதி எதிர்ப்பு போராட்டமாக பலமுறை நடத்தியவன். இதற்காகவே உமாமகேஸ்வரன் என்னைக் கொல்ல வாமதேவனை அனுப்பினார். அதையும் புளட்டுக்குள்ளிருந்த எமது நட்பு சக்தியின் உதவியால் அறிந்து, அதை அவனுக்கு முன்னால் மக்கள் கூடி நின்ற இடத்தில் அம்பலப்படுத்தி, அவனை திரும்பி ஓட வைத்தவன். இது என் சொந்த ஊர் வரலாறு. இப்படி பல இடத்தில் போராடியவன்.

நான் கேட்கின்றேன் 'தலித் பூதம்' எப்படி சாதியை ஒழிக்கும். வையுங்கள் தலை வணங்குகிறேன். வார்த்தைப் பூதம் வேண்டாம். எப்படி எனச் சொல்லுங்கள் அலட்டல் வேண்டாம்.

அடுத்து தாழ்ந்த சாதிகளை வர்க்க அமைப்பில் இணைய நான் கோரியதையும், தலித்துக்குள் முதலாளி பாட்டாளி உள்ளதை சமரில் நான் எடுத்துக் காட்டியதையும் மீள கூறிய சோபாசக்தி வர்க்கத்துக்குள் ஆதிக்கம் ஆதிக்கமல்லாத சாதிகள் உள்ளது எனவே இணையமாட்டோம் என எனக்கு பதில் அளித்துள்ளனர். எனவே தலித் பாட்டாளி தலித் முதலாளியும் ஒன்று இணைய வேண்டும் என்பதை மறைமுகமாக வர்க்க அமைப்பில் இணைய மறுத்து பேராசான் கார்ல் மார்க்சுக்கு எதிராகவும் ரொக்சிக்கு எதிராகவும் கோருகின்றார்.

எனது கட்டுரையில் வர்க்க இணைவு என்பது சாதி கடந்த இணைவுதான் என மீளமீள கூறப்பட்டுள்ளது. பார்ப்பானும்-பள்ளனும் தத்தம் அடையாளங்களுடன் பாட்டாளி கூட்டு என்பது மார்க்சியமே அல்ல என்பது எதிரிக்கு கூடத் தெரியும். ஆனால் தலித் முதலாளிக்கு வக்காலத்து வாங்கும் சோபாசக்திக்கும் - அ. மார்க்சுக்கும் இது தெரிவதில்லை. சோபாசக்திக்குள் இருக்கும் சிந்தனை புலி அரசியலைத் தாண்டியது அல்ல என்பதும், ரொக்சியம் வெறும் கோசம்தான் என்பதையும் புலி அரசியலில் இருந்த மார்க்சியத்தை புரிந்து வைத்துத்தான் இப்படியான பதிலால் விளக்கமுடிகின்றது.

இன்று வர்க்கப்போரை முன்னெடுக்கும் அமைப்புகளில் இணைந்த எல்லா புரட்சிகர அமைப்புகளிலும் சாதி கடந்த வர்க்க ஒன்றிணைவை முன்வைத்து போராடவும் ஒன்றிணையவும் முடிந்தது, முடிகிறது, முடியும். ஆனால் தலித்துக்கள் தமக்குள் உள்ள சாதியைக்கூட கடக்க தயாரற்று, அதனைப் பாதுகாத்து (அவைகூட பார்ப்பானிய சாதிக்கட்டுமானங்கள்தான்) எப்போதும் முதலாளிக்கு கீழ் தொழிலாளியை ஒன்றிணைவதுதான் வரலாறாக உள்ளது. இல்லை எனில் எப்படி என விளக்குங்கள்பார்க்கலாம். எந்த தலித் பூதமும் சரி.

“தலித்துகள் நிபந்தனைகளுடன் ஒடுக்கப்படும் பெண்கள், தொழிலாளர், விளிம்புநிலை மக்கள்...” உடன் ஜக்கியப்பட தயாராக உள்ளனராம். இங்கு பாட்டாளி அதாவது சுரண்டப்படும் மக்களுடன் அல்ல எனில் பூர்சுவா வர்க்கத்துடன் மட்டும் என்பது அல்லவா. மற்றவனுக்கு நிபந்தனைக்கு முன் தலித்துக்கள் எப்படி சாதி கடந்த சாதி ஒழிக்க உள்ளீர்கள் என்பது அல்லவா அடிப்படையும் நிபந்தனையும் கேள்வியுமாகும். அது இல்லாமல் எப்படி மற்றவனுக்கு நிபந்தனை வைக்கமுடியும்? சாதி ஒழிப்பு அல்ல அரசிடம் சலுகை கோரமுடியும் அவ்வளவே. அதாவது தலித் எழில்மலை போல் பார்ப்பனியத்துக்கு கைகட்டி சேவகம் செய்யமுடியும். இல்லையா எப்படி? அதன் அரசியல் வரையறை என்ன?

அடுத்து நான் தலித், பின்நவீனத்துவத்தையும் கோமாளித்தனமாக புரிந்துகொண்டு உள்ளேனாம். ஏனெனில் எனது சாதித்தடிப்பாம். நல்லது கோமாளி அல்லாத, சாதித்தடிப்பு அற்ற தாங்கள் நான் வைத்ததை மறுத்து எப்படி விவாதிக்காது புலம்புகிறீர்கள். வர்க்க சமுதாயத்தில் அதற்காகவே உருவாக்கப்பட்ட சாதி ஒடுக்குமுறையைச் சொல்லி இது தலித், பின்நவீனத்துவ வழியில் தர்க்கிக்க முடியும் எனின் நான் கேட்கின்றேன் மீளவும் எப்படி? அதை முதலில் செய், பிறகு கோமாளி என்றோ சாதித்தடிப்பு என்றோ கல்வெட்டில் பதி, முதலில் சொல்லு எப்படியென்று. பின்நவீனத்துவம் தலித்தியம் எப்படி சாதியை ஒழிக்கும். நீயும் வலிந்து பேசித்திரியும் உங்கள் வாய்சவடால் பூதங்களும் சரியாக முரண்பாடு இன்றி சொன்னாய் ஆனால் நான் உனக்கு கீழ் போராட வருகின்றேன். உன்னைத் தலைவனாக ஏற்கின்றேன். விவாதி. பழைய அதே அரசியல் வழியில் கல்வெட்டு அடித்து மரணதண்டனையை தனிநபருக்கு பரிசாக்காதே. இந்த அரசியல் கேவலமானது.

நான் இப்படிக் கேட்டால் தனது தலித்தை நான் அழித்து விடுவதாக கூறி விண்ணான மார்க்சியம் (பேராசான் கார்ல் மார்க்சுக்கும் சேர்த்துக் கூறுகின்றார்) பேசினதும் தலித் சும்மா இருப்பானா என்கின்றார். நான்தான் பேசுகின்றேன். உங்கள் கோட்பாட்டில்கூட ஒரு சுவடு எடுத்து வைக்க லாயக்கு கிடையாது, உளறல் மட்டுமே எஞ்சியுள்ளது. ஐயா! நாங்கள் மார்க்சியம் பேசி அந்த மக்களின் விடுதலையில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள் என்பதை மறக்காதே. அதற்காக எம் தோழர்கள் பலர் உயிரோடு இல்லை என்பதைச் சேறடிக்காதே.

ஓரினச்சேர்க்கை இச்சமூக அமைப்பில் சமரசம் செய்துகொளளும் போக்கு என நான் சமரில் எழுதியதை எடுத்து குடும்ப அமைப்பில் ஈடுபடுபவர்களை மட்டுமே இச் சமூக அமைப்போடு சண்டை செய்பவர்கள் என நான் சொல்லாததை சொல்லி திரித்து எழுதுகின்றார். ஓரினச்சேர்க்கையும், இந்த சமூக குடும்ப அமைப்புகளும் அடிப்படையில் வேறுபட்டவை. குடும்பமும் அதன் போராட்டம் என்பதும் இயற்கையில் அடிப்படைப் பண்பை மீறாதவை. ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையை மறுப்பதாகும்.

இயற்கை என்பது ஒரு ஒழுங்குக்கு உட்பட்டது. இந்த ஒழுங்கு என்பது மாறும்போது புதிய ஒழுங்கு உருவாகின்றது. இதன்மீதான மனித உயிர்வாழ்தலுக்கான தேவையையொட்டி செயற்கையில் இயற்கைமீது செயல்படும் போது இயற்கை ஒழுங்கு குலையாதவகையில் சேர்க்கை ஒழுங்கு இருக்க வேண்டும். இதை மீறுகின்ற (இதை எல்லா முதலாளியும் கட்டுடைத்து தலைகீழாக்குகின்றனர்). எல்லாப் போக்கும் இயற்கையை நாசமாக்கி ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பிற உயிரனைத்துக்கும் அழிவை ஏற்படுத்துகின்றன. இதை இன்று ஒழுங்குமீறலாகச் செய்து கொண்டிருப்பது சுரண்டூம் வர்க்கமே.

சுரண்டும் வர்க்கம் இயற்கையை அழிக்கும்போது அதன் பக்கவிளைவுகள் கூட இயற்கையை நாசமாக்குகின்றன. இது சமூக இயக்கத்தில் சுரண்டுபவன் ஒப்பிடும் போது பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது. முதல்காரணிக்கு தீர்வு காணாமல் பக்கவிளைவுகளைத் தீர்க்க முடியாது. இதனால் மனித செயல்களின்போது இவைகளில் பல சனநாயகக் கோரிக்கையாக மாறிவிடுகின்றது.

இதில்தான் ஓரினச்சேர்க்கை உள்ளது. சுரண்டும் வர்க்கம் தனது ஆணாதிக்க உலக ஒழுங்கில் பெண்களை அடிமையாக்கியதால் ஏற்பட்ட பக்க விளைவுதான் ஓரினச்சேர்க்கை, விபச்சாரம் இப்படிப் பல. இது இயற்கைக்கும் இயற்கையின் பரிணாமத் தேர்வுக்கும் புறம்பானது.
இது இயற்கையை அழிப்பதுமாகும். இயற்கையை பாதுகாக்கும் போராட்டமும் உயிரியலில் மனித உயிர் வாழ்தலைப் பாதுகாக்கும் போராட்டமாகும்.

அனைத்து சமரசவாதிகூட முரண்பாட்டில் சமூகத்துக்குள் போராடுகின்றான். ஆனால் அது சரியான போராட்டத்துக்கு வெளியில் இருக்கும் சமுதாயத்தில் சலுகை கோரி அங்கீகரிக்கக் கோருவதுடன் (தலித் போல்), மீள மீள இச்சமூகத்தினுள் புழுக்கின்றது. இதுதான் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு என பல. இதுதான் ஓரினச் சேர்க்கையிலும் நடக்கிறது.

அடுத்து நான் ஸ்டாலின், பொல்பொட் தத்துவத்தை வழிதவறாது பின்பற்றுபவன் என குறிப்பிட்ட தொடரில் கட்டுரை முரண்பாட்டுடன் இடையில் ஸ்டாலினிஸ்டாக இருக்கவே லாயக்கு கிடையாது என்கிறார். இது எப்படி? 

அவருக்கே ஒளிவட்டம். ஸ்டாலின், பொல்பொட் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதை என்றும் வானளவுக்கு உயர்த்திப் பாதுகாப்பேன். அதற்காக பெருமைப்படுகிறேன். இதை, எதிர்ப்பவர்கள் ஏகாதிபத்திய வாலில் தடம் பிடித்து முன்னேற போராடுகின்றவர்தான்.

அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பாதையில் விட்ட தவறுகளை எப்போதும் நாம் விமர்சித்து அவைகளை ஒதுக்கித் தள்ளுகிறோம். இவைகளை விமர்சிக்க மறுத்து ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்திய விருப்பம் போல் ஒரே மாதிரி எதிர்ப்பதால் ஏகாதிபத்தியவாதிகள் என்கின்றோம் அவ்வளவே.

அடுத்து அமெரிக்காவில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டது 'லெஸ்பியன்கள்' என்பதால் என காதுக்கு பூசுற்றி புதுக்கரடி விடுகிறார். இது நிறப்பிரிகை மொழிபெயர்ப்பு. பின் அதை சரிநிகரும் வேறு சஞ்சிகையும் வர்க்க விசுவாசத்துடன் தமது பத்திரிகைகளில் போட்டு அங்கீகரித்தன. அவர்களின் கைது அரசியல் காரணத்துக்கானதை மழுங்கடித்து பாலியல் லெஸ்பியன்கள் எனக் காட்டுவது என்பது அமெரிக்காவின் அரசியல் கைதின் நோக்கை மறைமுகமாக மறுத்து அமெரிக்கா சேறடிப்பதுதான். இதையே எல்லாப் பத்திரிகையும் பிரசுரித்த நோக்கத்தின் பாலியல் வடிவில் மீளச்செய்துள்ளனர்.

கட்டற்ற சுதந்திரம்பற்றி ஏகாதிபத்திய சீரழிவாளர்களை எழுதியதை சமர்-23இல் விமர்சித்ததை எடுத்து
அதில் ஓரினச்சேர்க்கையாளனின் வன்முறையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் என்னால் இந்த வித்தியாசத்தைக் காணமுடியவில்லை என்கின்றான்.

கட்டற்ற சுதந்திரம் என்பது விபச்சாரத்தைக் கோருவதே. இது நான் மட்டுமல்ல. இது லெனினால் முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது. (பார்க்க அம்மா 7, சமர்-23) ஏன்?

கட்டற்ற சுதந்திரம் என்பது சமுதாயத்தில் இருந்து ஒரு பகுதி கட்டற்ற சுதந்திரத்தை (அப்படி சாத்தியமில்லை என்றபோதும்) அடைந்ததை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திரம் எல்லோரும் பெற்றால் அங்கு சுதந்திரம் கற்பிதமாகி மறைந்துவிடும். கட்டற்ற சுதந்திரம் பெற்றதைக் கோருவது என்பது ஒரு பகுதிக்கு உள்ளபோது மறுபகுதிக்கு மறுப்பாக உள்ளதை மட்டும் அடையாளப்படுத்துவது. இது அடிப்படையில் செக்ஸ்சுக்கு நகரும் போது விபச்சாரமாக மாறுகின்றது.

இந்த இடத்தில் எக்ஸில்-3 இல் என்னைத் திரித்து எழுதும் அநாமத்து: பெயர்வழி கொறந்தியார், நான் சுதந்திரமாக இருப்பதாக கருதிக் கொள்கிறார் என என் பெயரில் தனது வம்பளப்புக்கு எழுதிவிட்டு, அது சரி நான் எங்கேயாவது நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று எழுதி உள்ளேனா? அவர்தான் பதில் சொல்ல வேண்டும். பெண்கள் விபச்சாரத்தைக் கோருகின்றனரா என்கின்றார்.

ஆனால் யதார்த்தத்தில் விபச்சாரம் எப்படியுள்ளது. ஒருபுறம் சமூக ஒடுக்குமுறையால் மற்றையவை (டிஸ்கோ, காபரே, நீலப்படங்கள்...) கட்டற்ற சுதந்திர விபச்சாரிகளாக உள்ளனர்.

ஐரோப்பிய பெண்கள் கட்டற்ற சுதந்திரத்தைப் பெற்றுவிட்டதாக சரிநிகரில் சங்கமன் எழுதியபோது (நான் சொன்னதாக அநாமாத்து பெயர்வழி கொந்தியார் திரிக்கின்றார்) அதை நான் கட்டற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் எப்படி சிறுவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகின்றனர் என எடுத்துக்காட்ட பயன்படுத்தியவையே. கட்டற்ற சுதந்திரத்தை பெண்கள் பெற்று விட்டார்களென்றால் ஆண்களும் பெற்றுவிட்டார்கள் அல்லவா? அப்படியாயின் ஐரோப்பாவில் சுதந்திரம் மறைந்து கற்பிதமாகி இருக்கவேண்டும். பின் எப்படி பாலியல் பலாத்காரம் ஆண் பெண்ணில் நடத்தப்பட முடியும். (அடுத்த சமர்- 25 பெண்கள் தொடர்பான விரிவான கட்டுரை இதை மேலும் விளக்கிச் சொல்லும்) ஐரோப்பாவில் (பிரான்சில்) ஒவ்வொரு நூறு தந்தையரும் 27 குழந்தையையும், 100 தாய் 43 குழந்தையையும், சகோதர சகோதரிகள் 49 குழந்தையையும்.... ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துகின்றனர். இது கட்டற்ற சுதந்திர விபச்சாரத்தின் வெளிப்பாடு ஒழிய வேறல்ல.

உதாரணமாக பல்கலைக்கழக ராக்கிங் (பெயரில் பகிடிவதை) முன்னைய தலைமுறை பின்னைய தலைமுறைக்கு மேல் கையாளும்போது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகும் அதேநேரம் மௌனமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எதிர்த்தபடி ஏற்றவன் அடுத்த தலைமுறைக்கும் அதையே செய்கின்றான். பாலியல் வன்முறையை எதிர்ப்புடன் ஏற்ற குழந்தை அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் போக்கும் அதற்கான ஆதரவுதான் ஐரோப்பிய ஓரினச்சேர்க்கையான பொதுவான ஆதரவு நீரோட்டங்கள். இதற்கு கட்டற்ற சுதந்திரம் எப்படி உடந்தையாக உள்ளது என்பதைக் காட்ட இப்புள்ளி விபரங்கள் உதவுகின்றன. ஓரினச் சேர்க்கை எப்படி எந்த விஞ்ஞான வழிகளில் தோன்றின என்ற ஆய்வு அல்லவா சரியா பிழையா என வாதிட உதவும். (இதை சரிநிகரில் ஓரினச்சேர்க்கை அண்மையில் அ.மார்க்சின் புத்தகம் படித்துப் பெற்ற அறிவில் எழுதும் கோமதிக்கும் சேர்த்தே கேட்கின்றேன்) நான் இவை தொடர்பாக பலமுறை எழுதி உள்ளேன். மறுங்களேன் பார்ப்போம். இதைவிட்டு என்ன வம்பளப்புத்தான் எஞ்சி உள்ளது. கட்டற்ற சுதந்திரம் (இது ஏகாதிபத்திய உலகமயமாதல் சுதந்திரம்) ஆணாதிக்கத்தால் நாறும் போது அது விபச்சாரமாக மட்டுமன்றி, ஓரினச்சேர்க்கையாகக்கூட வெளிப்படுகின்றது.

சுதந்திரக்காதல், சுதந்திர அன்பு, கட்டற்ற சுதந்திரம் எப்படி இன்று சாதிக்குள், வர்க்க எல்லைக்குள், மத எல்லைக்குள், இன எல்லைக்குள், நிற எல்லைக்குள்... மட்டும் நீடிக்கின்றது. இப்படி நடிப்பதைத்தான் பூர்சுவா சுதந்திர அன்பு, சுதந்திர காதல் என நான் குறிப்பிட்டேன்.

அடுத்து சுதந்திரம் என்பது மறுக்கப்பட்டவர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் இடையிலானது. இதனால் எப்போது சுதந்திரம் உண்டு என்கிறோமோ அப்போது வேறு ஒருவருக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டே இருக்கும். 

மார்க்ஸ் மூலதனம் 1, பக்கம் 153இல் “உண்மைக் காதலின் பாதை கரடுமுரடானது” என்கின்றார். இதனால் சுதந்திரம் உண்டு எனில் இது பூர்சுவா வர்க்கத்துக்கு மட்டும் உரித்தானது. மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளிக்கு உரித்தானது அல்ல. 'சுதந்திரம்' இதுதான். இந்த சனநாயக ஏகாதிபத்திய அமைப்பின் அடிப்படை சமூக மற்றும் அரசியலாகும். 
:
இங்கு உங்கள் காதலை கட்டுப்படுத்துவதாக என் மீது குற்றம் சாட்டுவது என்பது உண்மையில் சுதந்திரம் மறுக்கப்பட்ட காதலை (பூர்சுவா காதலை நியாயப்படுத்தியும் அத்துடன் ஒரு பக்கம் மட்டும் உள்ள) கட்டுப்படுத்தும் உரிமையைத்தான் என்பது வெள்ளிடைமலை.

சாதிக்குள் மட்டும் சுதந்திரக் காதல், அன்பு, கட்டற்ற சுதந்திரக் போட்பாடு உள்ளதால் (இது போல் எல்லா துறைக்குள்ளும்) நாம் அதைக் கோட்பாட்டில் எதிர்த்துப் போராடுவோம். இதை எதிர்ப்பவன் சாதிக்குள் உள்ள சுதந்திர பூர்சுவாக் காதலை ஆதரித்து சாதியை சுதந்திரக் காதலின்பின் பாதுகாப்பதுதான். இதை எதிர்ப்பது எப்போதும் எமது அடிப்படையாகும். தனிமனித இணைவுகளையல்ல. இந்த காதலில் போலித்தனத்தை, அதன் பூர்சுவா அழுக்கை அதன் முரண்பாட்டை எதிர்த்து போராட சுதந்திர காதல், சுதந்திர அன்பு பின் உள்ள எல்லா பூர்சுவா சுரண்டும் வர்க்கத்தின் கோட்பாட்டைத் தோலுரிப்போம்.

எங்கள் சுதந்திரக் காதலில் (சாதிக்குள், இனத்துக்குள், நிறத்துக்குள், பொருளாதாரத்துக்குள்) தலையிட எந்த நாய்க்கும் அதிகாரம் கிடையாது என்கின்றார். எல்லா முதலாளியும் எல்லா முதலாளித்துவ அரசும் தன் சுதந்திரம் மீது பாட்டாளியைப் பார்த்து 'எந்த நாய்க்கும்' தலையிடும் அதிகாரம் இல்லை என்கின்றனர். தலையிடும் உரிமையை சுதந்திரத்தின் பேரில் மறுக்கின்றனர். ஆனால் பாட்டாளி சுதந்திர நாய்களை தன் பகையாக காண்கின்றது. அதற்கு எதிராக வர்க்கப்போரை சுதந்திரமான அதிகார வர்க்கத்துக்கு எதிராக சாகும்வரை எல்லாத் தளத்திலும் நடத்துகின்றனர். 

அடுத்து ஆண்-பெண் நிபந்தனை இன்றி கூட்டம் கூட்டமாக காதல் செய்யமுடியும் என்று கூறி, இது இன்று பாலியல் செக்ஸ் தொழிலாக இந்த சமூக அமைப்பிலேயே நடக்கிறது என பெருமைப்பட எனக்கு சுட்டிக் காட்டுகின்றார். ஆம் அப்படிப் பார்த்தால் இந்த பாலியல் கூட்டுக்கலவி பணக்கார மாளிகைகள், செக்ஸ் விடுதிகள், காபரேக்கள், டிஸ்கோக்கள், மசாஜ் மையங்கள் நடத்தும் முதலாளி தான் கட்டற்ற சுதந்திரத்தின் பிரதிநிதியாக, கடடுடைத்த, கூடும்ப அமைப்பைத் தகர்த்த, அதிகாரத்தை
மறுத்த, உயர்ந்த சனநாயக வழியாக சுரண்டலுக்கு வெளியில் (தலித் போல்) உள்ளனர். அவர்கள் மக்களின் விடுதலைத் தலைவராக, சோபாசக்தியின் குருவாக உள்ளனர். இதனால்தான் முதலாளிக்கு நாய்கள் விசுவாசமாக வாலாட்டுகின்றன.

“1903ம் ஆண்டு பிரெஞ்சு பூர்சுவா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரொட்ஸ்கி எப்படிப் புரட்சியாளராக இருக்கமுடியும்” என்ற கேள்வியுடன் எனது பெயரில் சோபாசக்தி தனது வரிகளில் எழுதுகின்றார். அதுவும் எனது பெயரை அடைப்புக் குறிக்குள் போட்டு. அடைப்புக் குறிக்குள் போட்டது எனது வரிகள் அல்ல. சோபாசக்தியின் கற்பனை இலக்கியப் புனைவு ஆகும். 1903 பிரெஞ்சு பூர்சுவா அரசில் ரொட்ஸ்கி பங்குபற்றினாரா என்ற கேள்விக்கு, நான், ரொட்ஸ்கியைப் புகழ்ந்து எழுதிய நூலில் இருந்தே (ரொட்ஸ்கிய ஆவணமாகப் பிரகடனம் செய்த நூலில் இருந்தே) எடுத்து எழுதியிருந்தேன். அதை மீளப் பார்ப்போம்.

“ரொட்ஸ்கி பிரான்சுக்குச் சென்று, பூர்சுவா அரசாங்கத்திலே அமைச்சராகி பின்னர் வேலைநிறுத்தங்களை முறியடிக்க முயன்ற மில்லரண்டை எதிர்த்து பாரிஸ் தொழிலாளர் நடத்திய கிளர்ச்சியிலே பங்குபற்றினார்." என்று கதிரி ராமசாமி எழுதிய ரொட்ஸ்கி வாழ்க்கை வரலாறு, பக்கம் 17இல் உள்ளது. இதைத்தான் நான் எடுத்து எழுதினேன். இது எனது கற்பனை அல்ல. மாறாக ஒரு நூலில் அதுவும் ரொட்ஸிச சார்பு நூலில் இருந்து எடுத்துக் கையாண்டேன். சோபாசக்திபோல் கற்பனையில் போடவில்லை.

தவறு நிகழ்ந்து இருப்பின் அது அந்த நூலின் தவறேயன்றி நேரடியாக எனது தவறல்ல. அதைப் புரிந்துகொள்ள முடியும். றயா தவறு இழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி பொய் சொல்வதுடன் ரொட்ஸ்கி பற்றி அறிய பல ஆவணங்கள் உள்ளது என்கிறார். சிரிக்க வேண்டியுள்ளது. ரொட்ஸ்கியை அறிய தமிழில் என்ன ஆவணம் உள்ளது. அவரின் நூல் எதுவும் தமிழில் உள்ளதா? நானும்தான் தேடுகிறேன். ரொட்ஸ்கி பற்றிய நூலில் இருந்தே (அவர் கூறும் நூல்களில் இருந்தே)எழுதினேன். தவறு எனில் தொகுத்தவரின் தவறேயொழிய நேரடியாக நான் பொறுப்பல்ல.

இதைச் சொன்ன சோபாசக்தி றயாகரன் பற்றி 'எக்ஸில் புரளிகள் சிறப்பிதழ்' ஒன்றை வெளியிட வேண்டி வரும் என்கின்றார். எக்ஸில் ஆசிரியர் குழுவில் இல்லாத ஒருவர் அப்படி வெருட்டும் போக்கு எப்படி நிகழமுடியும். எக்ஸில் உடைவை முன்கூட்டியே திட்டமிட்ட நீங்கள், அதை உரிமையுடன் கூற முடிகிறது. இது ஒரு எக்ஸில் சதியாகும்.

வெருட்டாதே முதலில் முடிந்தால் எக்ஸில் புரளி இதழை எனது எழுத்தில் இருந்து மட்டும் (உனது கற்பனைகளை அல்ல) தொகுங்களேன் முடிந்தால். அதை கல்வெட்டு, மரணதண்டனை வழியில் செய்யாது கோட்பாட்டில் செய்யுங்கோ முடிந்தால்.

“பிரெஞ்சு அரசாங்கத்தில் இருந்ததை நிரூபிக்கவில்லை. யாரும் றயாகரனை கேள்வி கேட்டதாகவும் தெரியவில்லை.” என்கிறார். அன்று என்னிடம் வந்து நீங்கள் இதைக் கேட்டீர்களே மறந்து போனது ஏன்? நான் உங்களுக்கு புத்தகத்தைக் காட்டியதை மறந்து போனது ஏன்? பார்த்தீர்கள். மொழிநடையில் உள்ள தவறை விவாதித்ததை மறந்து போனது ஏன்? ஆனால் பின்னால் நீங்களும் இல்லையென (ரொட்ஸ்கியின் ஆவணங்கள் மூலம்) நிறுவ மறந்ததை மறந்து போனது ஏன்? உங்களிடம் உள்ள அல்லது றயாகரன் தவறு இழைக்க முடியாத ஆவணங்களைக் கொண்டூ நீங்களும் நிறுவ மறந்து போனது ஏன்? அந்த புத்தகத்தைப் பார்த்த நீங்கள் புத்தகத் தவறை விமர்சிக்கத் தவறி என்மீது தனிநபர் தாக்குதலை நடத்த நாயாக அலைந்ததைத்தான் இது துல்லியமாக நிறுவுகின்றது.

நீங்கள் அன்று (நீங்கள் மறந்துபோன) என்னுடன் விவாதிக்கும்வரை, நான் உங்களுக்கு புத்தகத்தை அன்று நேரடியாகக் காட்டும்வரை, உங்களுடன் இது பற்றி விவாதித்தபோது சரி, நான் தவறு இழைத்திருக்கவில்லை. நீங்கள் கூறியபடி ஆவணத்தில்தான் பாரத்தேன். நீங்கள் அல்லவா எனக்கு அதை நிரூபித்து தவறைத் திருத்தக் கோரியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட சில வருடத்தின் பின் தாக்குவதன் அர்த்தம் தனிமனித வக்கிரமே. அப்புத்தகமொழியால் ஏற்பட்ட தவறு எனின் அது சுயவிமர்சனத்திற்குரியது என்பதில் சந்தேகமேயில்லை. இதைச் செய்ய நாங்கள் என்றும் தயாராக இருந்துள்ளோம். அது சரி ரொட்ஸ்கி பற்றிய எனது விவாதத்திற்கு பதிலளிக்க முடியவில்லையே ஏன்?

அடுத்து புலிகளின் போராட்டம். இராணுவவாதத்துக்குள் மட்டும் எஞ்சிப் போயுள்ளது என எனது கருத்தை எடுத்து, நான் புலிக்கு அரசியல் கிடையாது என நான் கூறுவதாக கற்பனையில் திரிக்கின்றார். இதில் பிரச்சினை என்னவென்றால் சோபாசக்தி அன்று புலியில் இருந்தபோது புலிகள் அரசியலை நிராகரித்து இராணுவவாதத்தை முதன்மைப்படுத்தினார். அரசியல் இராணுவத்துக்குக் கீழ்பட்டதாக்கினார். இந்தப் போக்கு மேலும் தீவிரமாகி, அதன் அணிகளில் அரசியல் என்பது இராணுவத் தாக்குதலுக்குள்ளும், ராணுவ கருவிகளுக்குள்ளும் எஞ்சிப் போயுள்ளது. இது அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு அரசியல் விமர்சனமாக இருந்து இருக்கின்றது. ஆனால் அன்று புலிகள் (சோபாசக்தி உட்பட) இதை ஏற்றுக்கொண்டது இல்லை. இப்படி விமர்சித்தவர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் புலிகள் ஏற்றுக்கொண்டது இல்லை. இன்றும் சோபாசக்தி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மரண தண்டனை வழங்கி கல்வெட்டு அடிக்கின்றார். அரசியல் ரீதியில் மாற்றம் செய்துள்ளதாக நாம் சோபாசக்தியில் பார்ப்பது இம்மியும் சாத்தியமில்லை.

புலிகள் 1990களில் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் அமைப்பை உரு வாக்கியதும், பின் கலைத்ததும் தௌளத் தெளிவானது. புலிகள் அரசியலை அல்ல இராணுவத்தை ஆணையில் வைக்கின்றனர். நாம் எமது விமர்சனத்தை புலிகளின் அரசியலை (எந்த அரசியலாக இருந்தாலும்) ஆணையில் வைக்கக் கோருகின்றோம். இது தவறுகளைக் குறைக்கும் என்பதால். புலிகளைத் தரகு முதலாளிகள் என்கின்றார் நல்லது சோபாசக்தி. புலிகள் தரகு முதலாளிகள் என தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலில் வைத்தது சமரே அது மட்டுமன்றி தூண்டில், மனிதம், உயிர்ப்புடன் ஒரு சுற்று விவாதத்தைக் கூட நடத்தியவர்கள். பின் நாம் அரசியல் இல்லை என்று கூறியதாகக் கதை அளந்து, நாம் முதல் வைத்ததை வைத்து சுத்துமாத்துத் தொழிலில்
இறங்குகின்றார்.

புலிகளின் இராணுவவாத போக்கு ஒரு அரசியலை பிரதிபலிப்பதாக உள்ளது. பூர்சுவா இளைஞர்களின் அபிலாசையில் உருவான புலி அதன் தொடர்ச்சியில் அரசியலைப் பின் தள்ளி (புளட் - புலி உடைவு கூட இதற்குள் நடந்தது மட்டுமின்றி புளட் மீள இராணுவவாதத்துக்குள் சிக்கியபோது உடைந்த அரசியல் சக்திகள் ஒதுங்கினர்) இராணுவ நடவடிக்கையே போராட்டமாக மாறியது. இதன் போக்கு இராணுவத்துக்காக கருவிகளைச் சார்ந்து அரசியல் நகருகின்றது. அதன் பூர்த்தியும் வெளிப்பாடும்தான் புலியின் அரசியலாக செய்முறையாக இராணுவத்துக்குக் கட்டுப்பட்டு உள்ளது. (இது ஒரு விரிவான கட்டுரைக்குரியது. சுருக்கம் கருதி விடுகின்றேன்)

அடுத்து எக்ஸில் 4 - 1இல் 51ம் பக்கத்தில் சமர் 22 :பக்கம் 43 எனப்போட்டு எனது பெயரில் கற்பனைப் புனைவுகளை புனைகின்றார். "புலிகளில் சட்ட ஒழுங்கு, கொலை, நிதி நீதி பரிபாலனங்கள் இன்னும் இறுக்கப்பட வேண்டியவை என்கிறார் றயாகரன்” என எழுதும் சோபாசக்தி என்னைத் திரித்து புரட்டி எழுதுகிறார். நான் புலிகளில் இராணுவவாதம், அதன் பிற்போக்கு அம்சங்களில் புலிகளின் அணிகள் ஒரு வரைமுறையற்ற அராஜக (அனார்க்ஸிஸ்டுகள்) ஒழுங்குவெளியில் நிதி சேகரிப்பு, மற்றும் நீதி, தண்டனைகள்.... என பலவற்றைக் குறிப்பிட்டு, இதன் துன்பத்தைக் குறிப்பிட்டேன். உரிமை கோராத கொலைகள், கைதுகள், பண வசூல்கள் என நீண்டு உள்ள அராஜக (அனார்க்ஸிஸ்ட் வழியில்) நடக்கும் முறைகேடுகளை விமர்சித்தேன்.

இது அவருக்கு நேரடியாக சுடுகின்றது என்பது புரிந்ததே. முன்பு புலியில் இருந்தபோது புலியின் பெயரில் சட்டவிரோதமாக இயற்கையை அழித்து அராஜக (அனார்க்ஸிஸ்ட்) வழியில் மணல் விற்றபோது (புளட் இல் இதுபோல் செயல்பட்ட ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து) புலிகளின் தண்டனையினால் இன்று அதற்கு எதிராக கோட்பாட்டில் மோதுகின்றார்.

இப்படி இயக்கப் பேரில் தனது சொந்தத் தேவைக்கும், அல்லது இயக்கத்துக்காகவும் நடத்தும் அனைத்து அராஜக தன்னிச்சையான நடவடிக்கைகள் மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கும். முறையிடக்கூட நாதியற்று மக்கள் பயங்கரங்களுக்குள் நடுங்கிச் சாகத்தான் முடியும். இதை விமர்சித்ததால் திரித்து கதையளந்தால் அது சரியாகி விடுமோ? அதுதான் நாம் உழைக்கமாட்டோம் களவெடுத்தும் குடிப்போம் என மார்தட்டிப் பேசுகிறீர்களா?

ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்பு கோபம் என்பவற்றிற்கேற்ப மக்கள் தாளம் போடும், போடவைக்கும் அனைத்தையும் விமர்சித்தால் அதே தமக்கு தேவைப்படி திரித்து எழுதினால் எல்லாம் சரியாகிவிடும் என நம்பும் உலகம் கிடையாது. ஏனெனில் வாழ்க்கை நிர்வாணமானது. அண்மையில் மூன்று தொழிலாளர்பாதை உறுப்பினர்கள் விடுவிக்கப்படக் கூடியதாக இருந்தது, ஒழுங்குபடுத்தப்பட்ட புலியின் நிர்வாகத்துக்குள் மட்டுமே ஒழிய வெளியில் அல்ல.

அடுத்து நாம் திம்புக் கோரிக்கையை உயர்த்துவதை மறுத்து, அதைக் கொச்சைப்படுத்தி மூன்று பேர்தான் ஞாபகப்படுத்துகிறேன் என்கிறார்.

1.இது ஒருவரின் பெயராம்.
2.புலிக்கு ஐந்து வருடம் தொண்டமான் ஆட்சியைக் கொடுக்கக் கோருகின்றாராம்.
3.றயா

நல்லது சோபாசக்தி. முன்னொரு காலத்தில் புலியில் இருந்தபோது திம்புக்கோரிக்கையை எப்படிப் புரிந்து இருந்தீரோ அதில் இம்மியும் மாற்றம் செய்யாததைத்தான் இது காட்டுகின்றது. அதனால்தான் அன்றைய கனவான ஐந்து வருட ஆட்சியைச் சொல்லி இன்று எதிர்க்கினறீர்.

திம்புக்கோரிக்கை புலிக்கு வெளியில் அரசியல் ரீதியில் அன்றும் இன்றும் சரியாகப் பலர் புரிந்துள்ளனர். திம்புக்கோரிக்கை என்ன?

1.இலங்கைத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தல் 
2.இலங்கைத் தமிழர்களுக்கு வரையறுக்கப்பட்ட பாரம்பரிய பிரதேசம் உண்டு என்பதை அங்கீகரித்தல் வேண்டும்.
3.தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்.
4.இலங்கையைத் தமது சொந்தத் தாயகமாகக் கொண்ட எல்லாத் தமிழர்களுக்கும் அடிப்படை உரிமைகளும் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

இதையே சோபாசக்தி மறுக்கின்றார். இதையே இலங்கை சிங்கள பேரினவாத பாஸிஸ்டுகளும் மறுக்கின்றனர். என்ன வேறுபாடு எனில் பூச்சியம் தான். இடதுசாரி, சனநாயகவாதி, கட்டுடைப்புவாதி, ஒழுங்கு மறுப்புவாதி என ஒரு தேசிய இன மக்களின் உரிமையை அங்கீகரிக்காது என்ன வேண்டிக் கிடக்கிறது.

திம்பு ஒரு இனத்தின் சுயநிர்ணயத்தை (பெண் ஆணிடம் கோரும் உரிமையை) கோருவது தவறாம். மலையக மக்களின் குடியுரிமையைக் கேட்பது தவறாம். ஒரு பாரம்பரிய பிரதேசம் உள்ளது என்பது தவறாம். இதுதான் சோபாசக்தியின் பெரும்தேசிய வாதமாகும். இதில் இருந்துதான் எம்மை புலி முத்திரை குத்துகின்றார்.

இன்று திம்புக்கோரிக்கையை நவசகாப்தம், சமர், தேசபக்தன், சுவடுகள், சுமைகள் மற்றும் அனைத்து சனநாயகவாதிகளும், புலிகள் (மீள) என அனைவரும் இதை மீள உயர்த்தியுள்ளனர். ஆனால் இதை நீர் மறுக்கின்றீர். 

ஒரு தேசிய இனத்தின் தீர்வு என்ன? சுயநிர்ணயம் என்பது ஏன் தவறு?

இது புதிய எசமானை உருவாக்குமா? இல்லை. இது எப்போதும் உனது அரசியல் என்ன என்பதில் மட்டுமே சார்ந்துள்ளது. சுயநிர்ணயக் கோரிக்கையில் அல்ல. திம்புக்கோரிக்கையைப் புரிந்த புலி அரசியலில் அப்படித் தான் இருக்கும். லெனின் சுயநிர்ணயத்தை புரிந்த வழியில் பாட்டாளி வர்க்கப் புரட்சியாக இருக்கும். இதில் ஒட்டும் உறவும் நேரெதிர்த் தன்மையானவை. இதுதான் எமக்கும் -உமக்கும் அன்றும் - இன்றும் உள்ள அரசியல் தெளிவான வேறுபாடு. இது அன்றும் சரி, இன்றும் சரி ஒரே மாதிரி உம்மிடம் உள்ளது அவ்வளவே.

அடுத்து “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நமது பேராசான்கள்...” குறிப்பிடுவதுபோல் என மார்க்ஸ் -எங்கல்சை போற்றும் இவர் அந்த பேராசான்களை எதிர்ப்பதில் யதார்த்தத்தில் எப்படி உள்ளார் எனப் பார்ப்போம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை, அமைப்பு வடிவத்தை, கட்சி ஒழுங்கை, தலித் வர்க்கத்தை பார்ப்பதை சமூக ஒடுக்குமுறைக்கு பொருளாதார அடிக்கட்டுமானமே அனைத்துக் காரணம் என பலவற்றை நிறுவியதால் மட்டுமே அவர்கள் பேராசான்களாக இருக்கின்றனர். ஆனால் சோபாசக்தி இதற்கு எதிராக உள்ளார். பின் பேராசான் எனச் சொல்லுவது அவர்களைச் சொல்லி நக்கத்தான். பேராசான்கள். இந்த மாதிரி மறுப்பவர்களுக்கு வர்க்கப்போரில் எதிரிகளாவர். 

அடுத்து றயாகரன் சிறைப்பட்ட கதையை முறிந்தபனையில் சொன்னத்துக்காகத்தான் ரஜனியைப் பறிகொடுத்தோம் என்கின்றார். றயா அல்ல, கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்துக்காக ரஜனி போராடியதால் மட்டுமே பறிகொடுத்தோம். அதனால் தான் நான் கைதுசெய்யப்பட்டேன். அதனால்தான் ரஜனியும் கொல்லப்பட்டார்.

நான் சுரண்டும் வர்க்கம், ஆணாதிக்கம், சாதியம், இனவாதம்...போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் அதைத்தடை செய்யக் கோருவதால் அதன் அரசியலால் நாம் ரஜனியைப் பறிகொடுக்கவில்லை.

மாறாக சுரண்டல், ஆணாதிக்கம், சாதியம், இனவாதம், நிறவாதம்... அரசியலைக் கேள்விக்கு உட்படுத்தி, அதை தடை செய்யும் போராட்டத்தில்தான் ரஜனியை இழந்தோம். இதை பாதுகாக்கும் படைப்பை பாதுகாக்க கோருபவர்களின் கோட்பாடுகளின் அமைப்புத்தான் கொன்று போட்டன. மறுக்கமுடியுமா? இதற்காகத்தான் நீ எனக்கு கல்வெட்டை அடித்தாய். மறுக்க முடியுமா?

அடுத்து நடக்கப்போகும் வன்முறைக்கு றயாகரனும்  பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார். ஆம். இந்த சமூகத்தின் மனிதன் என்ற வகையில் அதை எதிர்த்துக் குரல்கொடுப்பேன். அதற்காக அன்றுபோல் மரணம் வரை போராடுவேன். மரணத்துக்குப் பின்னும் என் கோட்பாடு போராடும். ஆனால் பொறுப்பு எடுக்கவேண்டியதில்லை. மாறாக நீங்கள் பொறுப்பு எடுக்கவேண்டும். ஏனெனில் இதைச் செய்பவர்கள் ஆணாதிக்கம், சுரண்டல், சாதியம், இனவாதம், நிறவாதம்... என அனைத்தின் பிரதிநிதிகளாக, அதன் இலக்கியக் குடையில் பாதுகாப்புப் பெற்றுள்ளதால் அவ் இலக்கியம் தடை செய்யப்படுவதையும் அதற்கு எதிராகப் போராடுவதை சனநாயக விரோதமாக காட்டி, அதிகாரத்துவமாகக் காட்டியும், அதைக் கட்டுடைத்துப் பாதுகாத்து வரும் நீங்கள்தான், அவ் இலக்கியத்தை பாதுகாத்த பொறுப்புக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற விளைவுகளைப் பொறுப்பெடுக்கவேண்டூம். நாசூக்காக மற்றவர்கள்மீது கட்டுடைத்துத் தள்ளிவிட்டு குளிர்காய்வது கட்டுடைத்த பார்ப்பனியத்தனம்.

.. அடுத்து சமர்-23இல் எழுதிய இலக்கியம் தொடர்பான கட்டுரையில் சோசலிச சமூகத்தில் சில எழுத்துக்கள் தடைசெய்யப்படும் என்பதை, அதன் முன்-பின் பகுதிகளை விட்டுவிட்டு தனக்கு இசைவாக திரித்து தொகுத்து இலக்கியம் தடை செய்யப்படும். அதுவும் எனக்கு..  எனப்போட்டு கதையளக்கின்றார்.

மீண்டும் சொல்லுகின்றேன் இன்று ஐரோப்பாவில் நாசிப்படைப்புகள் தடைசெய்யப்படுவது மட்டுமன்றி தண்டனையும் வழங்கப்படுகின்றது. ஏன் அண்மையில் பிரஞ்சு நாசித் தலைவன் லுப்பென் நாசிப் படைப்பை நியாயப்படுத்திப் பேசியதற்கு நீதிமன்ற விசாரணை நடக்கின்றது.

இதற்காக ஐரோப்பிய பாராளுமன்ற சிறப்புரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது. அந்த நாசிப் படைப்பைப் புகழ்ந்ததுக்கே 5-10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாம் இந்த இலக்கிய தண்டனையை ஆதரிக்கின்றோம். அந்த நாசித் தலைவனுக்கு எதிராகப் போராடுகின்றோம். 

இது போல் சோசலிச சமூகத்தில் ஆணாதிக்கம் சாதியம் நிறவாதம் இனவாதம் மதவாதம்... சார்பான அனைத்தும் தடை செய்யப்படும்.
தண்டனை என்பது அதை எப்படி மக்களைப் பிளக்கும் படைப்பாளி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்து வழங்கப்படும். இதை நாம் எமது வர்க்கப் போரில் எமது கடமையாகக் கொள்கின்றோம்.

இங்கு எந்த ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட இலக்கிய சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. அவர் படைக்க முடியும். ஆனால் அது சமூகத்துக்குள் எடுத்துச் செல்லும் போது மட்டும்தான், தனிமனித சுதந்திர எல்லை தாண்டிய சமூகநிலையாக மாறும்போதுதான் படைப்பும், தனிமனித சுதந்திரமும் கேள்விக்கு உள்ளாகின்றது. தனிமனிதன் தன் படைப்பைத் தன்னுடன் மட்டும் வைத்து இருப்பானாயின் நாங்கள் அதில் தலையிடமாட்டோம்.

இதை எதிர்த்து அனைத்துக்கும் சனநாயகம் என்றால் இந்த சனநாயகம் சவக்குழியில் போக. சோசலிச சமூகத்தில் ஆணாதிக்கம் சுரண்டலை... என ஆதரித்து எழுதினால் விளைவு ஒன்றுதான். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் சுரண்டும் வர்க்கத்துக்கு இலக்கிய சுதந்திரம் கிடையாது. இங்கு இலக்கியம் சுதந்திரம் சமூகத்துக்குள் செல்லும்போதே ஒழிய தனிநபர் படைப்பதை அவர் மலம்துடைத்தால் என்ன, கற்பனை பண்ணினால் என்ன தலையிடுவதில்லை. இதை மீறி மக்களுக்கு சுரண்டும் வர்க்கம் சார்ந்து வெளியிடும் உரிமை வேண்டும் என்றால் சுரண்டும் வர்க்கம் வாழ்க என கோசம் போட மட்டுமே லாயக்கு. நாங்கள் வர்க்கத்தை ஒழிக்க விரும்புகின்றோம். நாம் வன்முறை இந்த சனநாயக அமைப்பில் எழுத்திலும் உள்ளது என்கின்றோம். அது உன்னதமான இலக்கியங்களிலும் உள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக ஒரு தனிமனிதனை சுரண்டும் வர்க்கம் சார்ந்து பாதுகாக்கும் படைப்பு எமக்குத் தேவையில்லை. எமக்கு மனித சமூகம் தான் முக்கியமே ஒழிய தனிநபர்கள் அல்ல.

ஒரு தனிமனிதன் சமூகத்துக்கு வெளியில் சுதந்திரம் என்றால் (அது காதலாகவோ பொருளாதார சுதந்திரமாகவே) சமூகத்தைச் சூறையாடுவதுதான். எல்லா முதலாளித்துவ மற்றும் அராஜகவாத (அனார்க்ஸிஸ்டுகள்) முதல் ஏகாதிபத்தியம்வரை மீளமீள சுதந்திரத்தின் பின் வாழ்கின்றனர். இதைத்தான் பாட்டாளி வரர்க்கம் கோருவதுடன், அதை அவர்களுக்கு மறுத்து மீளமீள எழுந்து போராடுகின்றது, வேர் அறுக்கின்றது.

இவர்கள் மீதான வர்க்கப் போரை மறுத்து பாதுகாத்து இது கொலை எனக்கூறி என்னைச் செத்துப் போனவர் என்று கூறுவதும் வர்க்கப்போரை மறுத்து புலிகள் முதல் ஏகாதிபத்தியங்கள் ஈறாக வர்க்கப் போராளிகளை கொன்று போடுவதும் ஒன்றுதான். அங்கு சுரண்டும் வர்க்கம் கொன்றதும் தமது சனநாயகத்தை பாதுகாக்கத்தான். இங்கு சோபாசக்தி கல்வெட்டு அடித்து செத்துப்போனார் என்பதும் வர்க்கப்போரை மறுத்துத்தான். மறுக்கமுடியுமா? 

பி. றயாகரன்

உயிர்நிழல்-01 (01.1991)