மாலபேயில் அமைந்துள்ள சத்யம் (SATIM) தனியார் மருத்துவ கல்லூரியினை மூடுமாறு கோரியும், கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினையும் எதிர்த்தும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளாக பாரிய பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மருத்துவ பீட மாணவர்கள், அண்மையில் பல தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தொடர் சத்தியாகக்கிரக போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து குதித்துள்ளனர். அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டத்துடன் இணைந்து கொண்டு போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
நாளை 13ம் திகதி சத்தியாகக்கிரக போராட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஒருநாள் போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். யாழ் மருத்துவ பீட மாணவர்கள், நாளை யாழ் மருத்துவபீடத்திலிருந்து போதானா வைத்தியசாலை வரை தனியார் பல்கலைக்கழகங்களின் அனுமதியை எதிர்த்தும், இலவச கல்விக்கு ஆப்பு வைக்கும் அரசின் நடவடிக்கைகளையும் கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர்.
இன-மத பேதம் கடந்து, இலங்கை வரலாற்றின் இப்போ ஒன்றுபட்ட மாணவர் சக்தி திரண்டுள்ளது!