"வெருகலில்" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.
கிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. புலிகளின் அதே அரசியலையே கொண்டு, யாருடைய மேலாதிக்கம் என்பதை பிரிவினைவாதம் மூலம் முன்வைக்கின்றனர். அதாவது "யாழ்ப்பாணிக்கு" பதில் "கிழக்கான்" என்ற பிறப்பு சார்ந்த - இது சாதியக் கோட்பாட்டு அடிப்படையுமாகும். எந்த மண்ணில் பிறந்தனர் என்று, பிறப்பை முன்னிறுத்தி முரண்பாட்டையும் - பிரிவிiனையையும் முன்னிறுத்;தும் குறுக்கிய அரசியல்.