Language Selection

பி.இரயாகரன் - சமர்

திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது.

1978 வரையப்பட்ட இனவாத அரசியல் சட்டம் "சிறீலங்க குடியரசு என்பது பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும். பௌத்த சாசனத்தையும் தர்மத்தையும் பேணிக்காக்கும் பொறுப்பு அரசுடையதாகும்." இந்த இனவாத மதவாத அரசில் சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையை தெளிவாகவே அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கின்றது. போலிச் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டனின் நலன்கள் சார்ந்து உருவான அரசியல் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்தே காணப்பட்டது.

 

1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.

இனவாதம் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்தவர்கள் அதற்காக கையேந்தக் கோரினர். இலங்கை பிரஜாவுரிமை வேண்டுமாயின் விண்ணப்பிக்க கோரினர்.

இனவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெதுவாகவே தலைகாட்டத் தொடங்கியது. 1911 இல் "இந்திய வம்சாவழித் தமிழர்" என்று உத்தியோகபூர்வமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த கோப்பிச் செய்கைக்கு அந்த மலைகளின் அடிவாரங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை பயன்படுத்த முடியாமைக்கு இருந்த பிரதான காரணம் என்ன.

 

மூலதனத்தை திரட்ட விசேட நிலச்சட்டம் 1810 லும், 1812லும் நிலம்பற்றிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி ஐரோப்பியர் 4000 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கவும், ஐந்து வருடத்துக்கு வரியேதும் கட்டத் தேவையில்லை என்ற விசேட சலுகை வழங்கப்பட்டது.

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.

 

இலங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE