எந்தவொரு தனிப்பட்ட ஆண், பெண் உறவு குறித்தும், ஒழுக்கம் குறித்துமானதல்ல, "பெண்ணியத்தின்" பெயரிலான ஆணாதிக்க விவகாரம். அது "பெண்ணியத்தின்" பெயரிலான முதலாளித்துவ கோட்பாடு சார்ந்தது.
யாரும் தனிப்பட்ட ஒருவரின் பாலியல் "நடத்தையை" கேள்வி கேட்ட முடியாது. "ஒழுக்கம்" குறித்து பேசவும் முடியாது. இவை அனைத்தும் இந்தச் சமூகத்தில் இருப்பவையே. அதாவது ஆணாதிக்க குடும்ப அமைப்பில் தனிப்பட்ட ஆணின், பெண்ணின் "நடத்தையை" எப்படி கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முடியாதோ, அதே போல் தான் எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்;. இங்கு கேள்வி கேட்பது தொடங்கி அதை பாதுகாப்பது வரை, இத்தகைய முதலாளித்துவ ஆணாதிக்க உறவுக் கோட்பாடுகளின் மீதேயொழிய, தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதல்ல.
