முன்பக்கம்

உலாவுவோர்

We have 151 guests online

உலாவியோர்

Content View Hits : 4893020
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
304
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16784
11797
11230

+567
ஞாயிறு, 01 ஆவணி 2010
 
தமிழரங்கம்
யாழ் பல்கலைக்கழகத்தில் விமலேஸ்வரன் ஆற்றிய உரை PDF Print E-mail
அரசியல்_சமூகம் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Saturday, 03 July 2010 19:54

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல —விமலேஸ்வரன்

எமதருமை அன்பு மாணவன் விஜிதரனை இழந்த நிலையில் இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். விஜிதரனின் பெற்றோர்களுக்கும் எனதருமை மக்களிற்கும் என் அன்பான சக மாணவத் தோழர்கட்கும் பாசமிக்க விரிவுரையாளர்கட்கும் எமது மாணவர்களின் சார்பாக அதாவது இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கும் மாணவர்கள் சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நாங்கள் இன்று கூடியிருப்பது ஒரு வேதனையூட்டுகின்ற, போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து சக்திகளிற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை எதிர்த்து எமது சொந்த தார்மீகப் பலத்தில் நம்பிக்கை வைத்து மாணவர்களாகிய நாம் நடாத்தும் போராட்டத்தில் ஒர் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் இப்போது நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் எத்தனையோ நாட்கள் சிரித்தமுகத்துடன் எம்மோடு பேசி சிரித்து விளையாடிய தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் ஒவ்வொரு கணமும் தன் மொழிஆற்றலையும்  செலவுசெய்து போராடத் தயாராகவிருந்த  எமதருமை நண்பன் விஜிதரன் இன்று நம்மடையே இல்லை.

Last Updated on Saturday, 03 July 2010 23:02
 
ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...08 PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ரூபன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Thursday, 08 July 2010 19:11

ஆண்டு 1975, இரண்டாம் பகுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று முக்கியமான ஆண்டாக இருந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல 'விசித்திரங்கள்' நடக்கத் தொடங்கின.

முதலில் உள்நாட்டில்: சிறீமாவின் கூட்டு முன்னணிக்குள், வெடிப்புக்கள் உருவாகி இருந்தன. பல புதிய கட்சிகள் உருவாகின. (காங்கேசன்துறை வேட்பாளர் வி.பொன்னம்பலத்தின் முரண்பாடும் இவ்வாண்டில் வெளிப்பட்டிருந்தது - பாராளுமன்ற 'இடது அரசியலிலும்'. ...)

Last Updated on Thursday, 08 July 2010 19:51
 
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - செங்கொடியின் சிறகுகள்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Saturday, 17 July 2010 19:02

வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் “ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் “நமக்கு’ ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்” என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் அடுத்தடுத்து வந்த பம்பாய் உட்பட அவரது படங்களும் அவர் யாருடைய பிரதிநிதி என்பதை நிருபித்தன. ஆனால் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இராவணனை பார்ப்பது தடைபட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாய் மணிரத்ணத்தின் ராவணனை பார்த்தேன்.

Last Updated on Saturday, 17 July 2010 19:08
 
ஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் – (அய்யாமுத்து – பகுதி 3) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விஜயகுமாரன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Saturday, 17 July 2010 18:54

அறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். அவன் மனைவி, தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றினை பார்த்து அழுது கொண்டிருந்தாள். தன்னுடன் வேறு எவராவது வீட்டிற்கு வந்திருந்தால் மனைவியை அறுவைதாசன் கொடுமைப்படுத்துவதால் தான் தனியே இருக்கும் போது அழுகின்றாள் என்றல்லவா நினைத்திருப்பார்கள், என்று மனைவி மேல் கோபம் கோபமாக வந்தது. அத்தோடு தொடரில் நடிப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அழுகின்றார்கள், இவளோ பணத்தை கொடுத்து விட்டு அழுகின்றாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யாமுத்து வந்து சேர்ந்தான்.

Last Updated on Saturday, 17 July 2010 18:59
 
புலிப்பசிக்கு இரையான விருட்சங்கள் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கங்கா
பதிவேற்றியது தமிழரங்கம்   
Thursday, 22 July 2010 06:48

கிளைகளில் மொட்டுக்கள் அரும்பினால்
விதைகளைப் பரப்பிவிடும்
பட்சிகள் வரும்
கூடு கட்டும் குஞ்சுகள் பொரிக்கும்

Last Updated on Thursday, 22 July 2010 06:51
 
«StartPrev12345678910NextEnd»

Page 1 of 14
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner