பி.இரயாகரன் - சமர்

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

மேலும் படிக்க: உயிர்ப்பின் திசை மாற்றம்

அன்றைய கவிஞர்

இயற்கை அழகைப் பாடினார்

பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள்

பால் நிலா, பாடிவரும் தென்றல்

பொழியும் மழைத்துளிகள்

பச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,

பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள்

இவைகளைத் தொட்டன

ஆனால்.........

இரும்பு எஃகுமே

இன்றைய நிலையில்--நமது

பாட்டின் இதயக் கருப்பொருட்கள்!

கவிஞனின் பணி--

கவிதை மட்டுமா.....?

ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று

நடத்தவும் வேண்டும்.

 

---ஹோ-சி--மின்-----

 

 

சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ், சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதை எடுத்த எடுப்பில் பார்த்தால் யார் எமுதியது என்ற குழப்பமே வாசகர்களுக்கு எஞ்சும்.

 

கட்டுரையை வாசிக்கும் போதே அ.மார்க்சை மறைமுகத் தலைப்பி;ட்டு அறிமுகம் செய்யும் நோக்கில் அதன் ஆதரவாகக் சத்தியா செயற்பட்டுள்ளது புரியும்.

 

இச் செய்தியில் மறைத்த விடயத்தைச் சுட்டிக்காட்டி நாம் எழுதிய விமர்சனத்தை வழக்கம் போல் குப்பைக்குள் வீசிவிட்டது சரிநிகர். இனி அவர்கள் என்ன கூற முற்படுகிறார்கள் எனப் பார்ப்போம்.

 

நவ உலக செய்திகளை தமிழில் கொண்டு வந்து தமிழில் பரப்பும் ஒரு மேதை எனப் பாராட்டும் சத்யா இலங்கை இந்தியாவில் நவினத்தின் ஒரு நிழலும் இல்லாத உலக ஒழுங்கைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை. 90 வீதமான மக்கள் கிராமப்புற சேரி வாழ்க்கையிலும் பட்டினியிலும் வாழ்கின்றனர். 10 வீதமான மேட்டுக்குடியின் சீரழிவை எடுத்து பின் நவீனத்துவம் என கூறி அ.மார்க்ஸ் போன்றோர் ஏகாதிபத்தியக் கனவைப் பூர்த்தி செய்ய கோட்பாட்டு வடிவம் கொடுக்கின்றனர்.

 

இது ஒரு புறம் இருக்க சத்யா மேலும் அ.மார்க்ஸினதும் அவரின் நிறப்பிரிகைப் பத்திரிகைக் குழுவினரும் தீவிர நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறிப் பாராட்டுகிறார்.

 

1994 ஆம் ஆண்டு ‘இந்தியா ரூடே’யின் சிறப்புமலரின் பார்ப்பனத்திமிரைக் கண்டித்து நிறப்பிரிகை ஆசிரியர் குழு இந்தியா ரூடேயைக் கிழித்து மலம் துடைத்து இந்தியா ரூடேயிற்கே அனுப்பினர். நல்ல நடவடிக்கை தான். இதைத்தான் சரிநிகர் 114 -ல-; இனை வாசிக்கும் ஒரு வாசகன் நம்புவான். ஆனால் இன்னும் ஒர் உண்மையை சத்தியாவும், சரிநிகரும் திட்டமிட்டு மறைத்துவிட்டனர்.

 

1995 ஆம் ஆண்டு அதே இந்திய பார்ப்பன சிறப்பு மலருக்கு அந்தோனிப்பிள்ளை மார்க்சின் வலது கரமும் நிறப்பிரிகை ஆசிரியருமான ரவிக்குமார் கதை எழுதி வெளிவந்த கதையை சத்யா உட்பட சரிநிகர் மறைத்துவிட்டது. அ.மார்க்சின் கலகம் என்பது மோசடியாகும். தமக்கான பங்கை கோரிய கலகமே தவிர கொள்கை கிடையாது. இது சத்யா கூறுவது போல எமக்கு ""தன்னடக்கமான வார்த்தையல்ல"" கோபத்திற்குரிய கணைகளாகும். இதை மூடிமறைத்து சத்யா, சரிநிகர் ஆசிரியர் குழுவும் தேவை தான் உங்களுக்கு சரிசமன் என்ற பெயரில் ''சரிநிகர் "" என்ற ஒரு பத்திரிகை. வாழ்க நடுநிலைமை தவறாத பக்கச்சார்பு செம்மல்களின் இலவச மூடி மறைத்த பொய் விளம்பரங்கள்.

 

இதை விட இந்த சிறப்பிரிகை குழுவினரின் வேறு சில மோசடிகளைப் பார்ப்போம்.

ஈழத்துக்கவிஞர் செல்வி எழுதிய கவிதைக்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்ததை நாம் எல்லோரும் அறிந்ததல்லவா. அந்த நேரம் அந்தக் கவிஞர் புலிகளின் வதை முகாமில் சிக்கி இதுவரை வெளிவரவில்லை.

 

(இந்த விருது கிடைத்த நேரம் பாலசிங்கம் இவர் குறித்து விசாரணை முடிய விடுவிப்பதாக அறிவித்தும் இருந்தார்)

 

இந்த பெண் கவிஞரை விடக் கோரியும் மனித உரிமையை மதிக்கக் கோரியும் அந்தோனிப்பிள்ளை மார்க்ஸ் உட்பட பலர் கையெழுத்திட்டு ஒர் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டது நாம் எல்லோரும் அறிவோம். இந்த அந்தோனிப்பிள்ளை இரகசியமாக பாரிஸ் வந்த போது இதைப் புரட்சியின் கலகமாகக் கருதிய நண்பர்கள் அதைப் பாராட்ட திடுக்கிட்ட அ,மார்க்ஸ் எனது விருப்பம் இன்றியே எனது பெயரைப் போட்டு விட்டார்கள் என்றார். அ.மார்க்ஸ் புலியின் தயவை நாடியதைத் தொடர்ந்து செல்வியின் கைது ஜனநாயகம் எனக் நினைக்கின்றார் போலும் கேட்டுப்பாருங்கள் அ,மார்க்சையும் நிறப்பிரிகை பத்திரிகைக் குழுவையும்.

 

அடுத்த கதையைப் பார்ப்போம். அண்மையில் பாரிசில் நாதன், கஜன் படுகொலையைக் கண்டித்து நிறப்பிரிகைக் குழுவும் வேறு பலரும் சேர்ந்து கண்டன அறிக்கை விடுத்து பிரஞ்சுத் தூதுவராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட் டம் செய்தனர்;. நல்ல விடயம். மக்கள் மீது சவாரி செய்வதே கொலைகாரரின் நோக்கம் என்பதால் அது தெளிவாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பது எல்லா ஜனநாயகவாதிகளினதும் விருப்பமாகும். இதே நேரம் இதே பாரிசில் அ.மார்க்ஸ் அவர்களின் ஜரோப்பிய விஜயத்தின் போது கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை பற்றி ஏன் இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. விஜயம் தொடர்பாக எழுதிய புத்தகத்தில் கூட ஒரு வரி குறிப்பிடவில்லை. அ,மார்க்சின் பாரிஸ் விஜயம் இதற்குள் முழுமை பெற்று சுருங்கிய மன உழைச்சலைக் கூட புத்தகம் கொண்டு வரவில்லை ஏன்?

 

சபாலிங்கம் கொலையின் போதும் சரி கஜன் நாதன் கொலையின் போதும் சரி சபாலிங்கம் பற்றிக் கதைக்காத அரசியல் தான் என்ன, அ,மார்க்ஸ் என்ற புரட்சி எழுத்தாளரே?

 

இவர்களுடன் கூட்டு அரசியல் நடத்த எஸ்.வி பற்றி பார்ப்போம்.

 

அண்மையில் ஜரோப்பிய விஜயம் செய்த தீவிர அரசியல் விமர்சகர் எஸ்வி நான் அரசியல் கதைக்க மாட்டேன் ஏன் எனில் அரசியல் கதைப்பின் ஜனநாயகம் . . எனக் கேள்வி எழும். தனது சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்புக்கு வேட்டு வைத்து விடும் என்பதால் அரசியல் கதைக்க மாட்டேன் என்றார். புரிகிறதல்லவா, இவர்களின் பம்மாத்து அரசியல்.

 

தமிழீழப் போராட்டம் தேக்க நிலையடைந்து, தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்து. த-ஈ-வி-புலிகளும் ஜ-தே-க- அரசும் பல தடவைகள் பேச்சுவார்த்தை நாடகம் காட்டியதையும் மக்கள் அறிவார். இதில் ஒரு கட்ட தொடர்சியான தற்போதைய பொலிஸார் விடுதலையும், பொருளாதார தடைநீக்கமும் மக்களுக்கு வித்தை காட்டுவது போல் காட்டப்படுகின்றன.

 

ஒரு கொத்து அரிசி 50 ரூபா விற்கும் நிலையும் மக்களின் அவலமும் சற்றேனும் நகரவி;ல்லை. எது எப்படி இருந்தபோதிலும் த-வி-பு- அதிகாரிகளுக்கு பொருட்கள் வந்து சேர்ந்து விட்டன. இச் சூழ்நிலையிலேயே சமர் தனது 8 இதழை வெளியிடுகின்றது.

 

தீவிர இடதுசாரிகள்! கறாரானபோக்கு! போன்ற பதங்களால், ஜரோப்பிய விமர்சகர்களால் சாடப்படும், சில மனிதத்துவவாதிகளால் நாம் பண்பற்றவர்களாக ஒரு பக்க நியாயம் கூறப்பட்டும், எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் பொருளாதார முன் நிபந்தனை அவசியமில்லை, என்று விவாதிக்கும் திரிபுவாதிகள், மக்களை மூளைச்சலவை செய்வதையும் எதிர்கொள்ளும் சமர் அறிவுபூர்வமாகவும், பொருள்முதல்வாத நோக்குடனும், கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்தும் விவாதிக்குமென்பதை சமர் வாசகர்களுக்கு கூற வேண்டிய நிர்ப்பந்தம் இச்சூழ்நிலையில் எமக்குண்டு. இன்றைய நிலையில் ஜனரஞ்சகமான பாணியில் நேர்மையான புரட்சிகர அரசியல் நடத்த முடியும் என்பதில் சமருக்கு உடன்பாடில்லை.

 

பேச்சில் ஒன்று, எழுத்தில் ஒன்று, இசைவானோர் மத்தியிலிலொன்றும் பேசி எதிர்காலத்தில் எலும்புத்துண்டுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளில் தங்கள் பெயரை பதிவு செய்தவர்களும், ஜரோப்பிய அரங்கில் முற்போக்குப் பிரமுகர்களாக வேடமிட்டுத் திரிவோரையும், தொடர்ந்து அம்பலப் படுத்த சமர் உறுதி பூண்டுள்ளது.

 

இச் சேவையினுடாக ஆரோக்கியமானதோர் ஜக்கிய முன்னணியைக் கட்ட சமர் தனது பங்களிப்பைச் செய்ய முனைவதை தனது கடமையாகவே கருதுகின்றது. திரிபுவாதத்துக்கெதிரான போக்கில் எவ்வித ஈவிரக்கமற்ற போக்கையும், அனைத்துப் போராட்டங்கட்கும், வர்க்கப் பார்வையை முதன்மைப்படுத்தி, பாட்டாளிவர்க்க சிந்தனையை மக்களை முன்னணிப் படையாக்கும் பணியில் சமர் முன்னோக்கி பயணிக்கும் என்பதையும் கூறி வைக்கிறோம்.

 

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். மார்க்சிசமானது உழைக்கும் மக்களின் தத்துவமானது வென்றே தீரும். அதை நாம் உறுதியாக நம்புவோம். ஏனெனில் அது விஞ்ஞான பூர்வமானது. இன்றைய உலகின் ஆக முன்னேறிய தத்துவம் அதுவேயாகும்.

மேலும் படிக்க: வாசகர்களும் நாங்களும்

பிரேமதாசாவின் அரசியல் அர்த்தமுள்ள கொலை நடந்துள்ள இவ்வேளையில் ராஜீவ்காந்தியின் கொலையையும், அதுபற்றி அவ்வேளையில் ஜரோப்பிய சஞ்சிகைகளும், சில அரசியல் பிரமுகர்களும், அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்களால் பழி தீர்த்துக்கொள்ளப்படும் போது, இவ்வதிகாரவர்க்க தரகு முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்கி மனிதநேசம் பேசியதை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

 

இந்நினைவிலிருந்து நமது கண்ணுக்கு தென்படும் அரசியல் பரிணாமம் யாதெனில் அநேகமான சஞ்சிகைகள் பிரேமதாசாவின் கொலையை வரவேற்றே எழுதியுள்ளனவாகும். ஆனால் பிரமுகர்கள் எப்படியோ யாமறியோம்.

 

பிரேமதாசா கொலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் நாளேடுகள் அவர் ஏழைகளின் தலைவனாகவும், மக்களுக்காக வாழ்ந்தவராகவும், அடிமட்டத்திலிருநது உயர்ந்த மாமனிதனாகவும் சித்தரித்து எழுதுவதை நோக்குமிடத்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் பத்திரிகை சுதந்திரத்தை ஒட்டு மொத்தமாகப் பறித்தெடுத்த பிரேமதாசாவை வளர்த்துவிட்டதும் விழுந்த மாட்டுக்குக் குறிசுடும் இப்பத்திரிகையாளர்கள் தான் என்பதை நாம் மறப்பதற்கில்லை.

 

இலங்கை அரசியல் வரலாற்றில் பல முக்கிய காலகட்டங்கள் கடந்துள்ளன. அதில் பிரேமதாசாவின் காட்டாட்சியை மக்கள் எப்போதும் மறபபதற்கில்லை. ஒருலட்சம் சிங்கள மக்களையும் பல்லாயிரம் தமிழ்மக்களையும் குறுகிய காலத்தில் கொன்று ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்ட இவர், தனது அரசியல் எதிரிகளையெல்லாம் ஒழித்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டி மக்கள் வாழ்வை ஒட்ட சுரண்ட, ஏகாதிபத்தியங்களுக்காக கதவுகளை அகல திறந்து அவர்களின் காவல்நாயாகவும் இருந்த இவரை தொழிலாளர் தினமான மே தினத்தை கழியாட்ட விழாவாக சித்தரித்து மக்களை மந்தைகளாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டது நல்ல சகுனமாகவே நாம் கருதலாம்.

 

அனைத்துப்பிரிவு மக்களும் இவர் மீது ஆத்திரம் கொண்டிருந்ததும் பலரும் இவரை கொல்ல முயல்வர் என இரகசியப் பொலிசாh எச்சரித்து பாதுகாப்பு மிகவும் பலமாக்கப்பட்டிருந்த போதிலும், தாக்குதலின் பாணியை வைத்து, புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவாலே கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

 

பிரேமாவினால் கொலை செய்யப்பட்ட ரஞ்சன் விஜேரத்ன, லலித், கொப்பபடுவ ........ போன்றவர்களை புலிகள் தாமே கொலை செய்ததாக உரிமை கோரி பிரேமாவைக் காப்பாற்ற முயன்றனர். தற்போது பிரேமாவை தாம் கொலை செய்யவில்லையென மறுத்துமுள்ளனர். இம் முரண்பாடு விசித்திரமானதில்லை. இது புலிகளின் தேசியத்தன்மையுமல்ல. இது புலிகளுக்கும், பிரேமாவுக்கும் இடையில் சுரண்டலில் ஏற்பட்ட பங்கு முரண்பாடேயாகும். ஏகாதிபத்திய சுரண்டலில் தமக்கிடையிலான பங்கு தொடர்பாகவே பிரேமா(சிங்கள தரகுக் கும்பல்) முழுதாகச் சுரண்டுவதை புலிகள் அங்கீகரிக்க தயாரில்லை. தமிழ் மக்களை அங்கீகரிக்கபட்ட அரசு ஸ்தாபன வடிவங்களினூடாக புலிகள் தாம் சுரண்டகோரும் உரிமையை, பிரோமா விட்டுக் கொடுக்கத் தயாரில்லாது யுத்தத்தைத் தொடர்ந்ததோடு சதுரங்கத்தில் சிறுபிள்ளைகளோடு விளையாடும் பெரிய மனிதன் போன்று காய்களை நகர்த்தியதாலும் புலிகள் சினம் கொண்டு எடுத்ததோர் நடவடிக்கையே இக்கொலை.

புதிய ஜனாதிபதி விஜயதுங்காவிடம் சுரண்டலில் பங்கு தொடர்பான விட்டுக்கொடுப்பை எதிர்பார்த்து, தமிழ்மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க புலிகள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை கோரிவருகின்றனர். புலிகளும், ஜ-தே-கயும் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவைபுரிய மக்களைச் ஒட்டசுரண்டவதில் எக்கருத்து வேறுபாடுமின்றியும் ஜக்கியப்பட்டபடி புலிகள் தனிநபர்களை அழித்து சுரண்டலில் பங்கு கோருகின்றனர். அதேவேளை பேரத்தை செழுமைப்படுத்த, தீவிரப்படுத்த, சிங்கள முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாகவும் அழிக்கின்றனர். பிரேமா, லலித், ரஞ்சன், கொப்பேகடுவா..... போன்றவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருந்த போதிலும், மக்கள் விரோதச்செயல்களில் போட்டி போட்டே நடைமுறைப்படுத்தினர். இவர்கள் ஒட்டுமொத்த சமூகவிரோதிகளே. இவர்கள் பழிவாங்கப்படவேண்டியவர்களும் கூட. ஜ-தே-க ஏனைய சிங்களக் கட்சியினரும் புலிகளுக்கு தமிழ்மக்களை சுரண்டும் உரிமையைக் கொடுக்காமல் இன்றைய சூழ்நிலையில் எதையும் சரியாக நடைமுறைபடுத்த முடியாது என்பதை அறிந்திருந்த போதிலும், அல்லது விரும்பினும் கையாலாகாதவர்களாகவே உள்ளனர். ஏனெனில் இவர்களே தான் சிங்கள மக்களை பேரினவாதத்துக்கு இழுத்துச் சென்று அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள், இவர்கள் அரசஸ்தாபான வடிவினூடாக கொடுக்க முயலும் எத்தகைய அமைப்பையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. மாறாக இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள். தற்போது நீதியரசர்கள், இராணுவத்தளபதிகள், கல்விமான்கள் போன்றோர் மீண்டும் இந்திய இராணுவத்தை கோருமாறும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளதும், இம ;முரண்பாட்டிலிருந்து தங்களை விடுவித்து பதவியைக் காப்பாற்றவேண்டிய அவசியத்தின் வெளிப்பாடே. இந் நிலைமை சர்வதேச அரசியல் மாற்றங்கள் நடைபெறும் போது, அல்லது அழுத்தங்கள் ஏற்படும்போது தலைகீழாய் மாறுவது எதிர்பாராததாகவே நாம் கருதவேண்டும்.

 

பிரேமதாச பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்கயையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாவேண்டும். யந்திரிக வேள்விகளிலும், யாகங்களிலும் அதீத நம்பிக்கை கொண்ட பிரேமா தனது குண்டர்படை மூலம் தென்னிலங்கையில் பல சிறுவர்களை கடத்தி பலி கொடுத்ததாகவும், இவர் தாய்ப்பாலில் குளிப்பதற்காக பல இளம் தாய்மார்கள் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. (ஜொன் வின்சட் கோமே) என்னும் சர்வாதிகாரி எழுதவோ, படிக்கவோ, கையெழுத்திடவோ தெரியாதவனாய் இருந்த போதிலும் 27ஆண்டுகள் வெனிசுலாவை ( 1908-1935) ஆண்டான் என்பது வரலாறு. இவரது காலத்தில் பல போராட்டங்கள் நடந்ததால் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரது நேரடி கட்டளையில் சித்திரவதைக்குட்பட்டு கொல்லப்பட்டார்கள். இவரை கிட்லருக்கு சமமாகவே உலகு கணித்தது. நமது பிரேமா போன்றே யாகங்களிலும், யந்திரீகங்களிலும் மிகவும் நம்பிக்கை கொண்டு வேள்விகள் நடத்தி 27 ஆண்டுகள் வெனிசுலாவை ஆண்டான் எனபதை நினைவுபடுத்தும் போது பிரேமா (கோமேயை) பின்பற்றியுள்ளார்). என்பது நன்கு புலப்படுகின்றது.

 

பிரேமாவின் மரணத்திற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பத்திரிகையாளர்களே. றிச்சட் டீ சொய்சா, சரத்முத்தட்டுவேகம, உபதிஸ்ச கமநாயக்க, றோகண விஜவீரா, விஜகுமாரணதுங்கா, சனத்கறுபியக், லங்காபுற, தம்மிக்கித்துள்...... போன்ற சட்டத்தரணிகள், பத்திரிகையாளாகள், எதிர்கருத்துக்கொண்ட அரசியல்வாதிகள் போன்றோரையும் கொல்லப்பட்ட அப்பாவிமக்களையும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோரின் கொலையில் பிரேமாவுக்கு கணிசமான பங்கிருந்ததையும் நினைவுபடுத்திப் பாருங்கள் எனக் கோருகின்றோம். பிரேமதாசா தனது தம்பிமாராக குறிப்பிட்ட துரோகிகள் டக்ளஸ் தேவானந்தாவும், அஸ்ரப்பும் அண்ணனையிழந்து என்ன செய்வார்களோ..... யாம் அறியோம்.

 

லலித்

கடந்த பல வருடங்களாக இலங்கையில் அரசியல் படுகொலைகள் நடந்து வருபவை நமக்கு புதியனவல்ல. இக் கொலைதொடர்ச்சிகளில் ஒன்றாக முன்னை நாள் ஜ-தே-க அமைச்சர் லலித் கொலை நடந்தேறியுள்ளது. கொலைக்கலாச்சார அரசியல் நடத்தி பிழைத்தவர்கள் கொல்லப்படும் போது நாம் கூக்குரல் இடுவதைத் தவிர்த்துள்ளோம். கொலைகளே அரசியல் மரபாகிப் போய்விடாதிருக்கவும், இக் கொலை ஏன், எதற்காக யார் செய்கின்றனர், என்பதில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய அவசியம் எம்மெல்லோருக்கும் உண்டு.

 

இலங்கையில் சி-ல-சு-கயை ஆக்கிரமித்துள்ள குடும்ப மேலாதிக்கத்தைக் கவனத்தில் கொண்டு, டட்லி சேனநாயக்காவின் சகோதரரின் மகன் ருக்மன் சேனநாயக்காவின் குடும்ப அரசியல் ஆதிக்கத்தை ஜே-ஆர் -ஜ-தே-கயில் இருந்து உடைத்தெறிந்தார் என்பது உண்மையே. இருப்பினும் கண்டிய உயர்குல சிங்களவருக்கு முன்னுரிமை கொடுத்ததோடு மிகச்சிறிய வயதிலிருந்த காமினி திசநாயக்கா போன்றோரையும் தலைமை அந்தஸ்துக்கு உயர்த்தினார். தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பிலிருந்து உருவான நீண்டகால கட்சி உறுப்பினரும், இலக்கியவாதியும், நடுத்தரவர்க்கத்தையும் அடிமட்டத்திலுள்ளோரையும் கவரக்கூடிய சிறந்த பேச்சாளருமாகிய (எம்-ஜீ-ஆர் போல்) பிரேமதாசாவின் இயல்பான வளர்ச்சியினூடாக கட்சியின் சரி பாதி அங்கத்தவர்களின் மதிப்பையும் ஆதரவையும் பிரேமதாசா பெற்றிருந்ததை ஜே-ஆர் ஆலோ மற்றும் உயர் குல ஜ-தே-க- தலைவர்களாலோ எதுவும் செய்ய முடியாதிருந்தது. இதன் நிமித்தமே ஜே-ஆர் காலத்தில் பிரதமர் பதவியும், 88ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி வேட்பாளராகவும் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

 

ஜனாதிபதித் தேர்தலில் பிரேமா வெற்றியீட்டி பாராளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்த பின்னர் லலித் அத்துலத் முதலி பிரதமராக நியமிக்கும்படி கட்சியில சிலரும் ஜே-ஆர் குழுவினரும் அழுத்தப்படுத்தியும் பிரேமா நிராகரித்தார். மக்களால் எவ்வித எதிர்பார்ப்புக்கும் உட்படாத விஜதுங்காவை எதிர்பாராத வண்ணம் பிரதமராக்கி லலித்தையும் ஜே-ஆர் குழுவையும் அவமானப்படுத்தினார் என்றால் மிகையில்லை.

 

இதனால் விரக்தியும் ஆத்திரமும் அடைந்த லலித்தும் காமினியும் நேரம் வரும் வரை கட்சியோடு ஒட்டிக்கொண்டு பொறுத்திருந்தனர்.

 

ராஜீவ்காந்தியின் மரணச் சடங்கிற்குச் சென்றிருந்த காமினி இந்தியாவிலேயே மிகவும் சுதந்திரமாக சி-சு-கயினரை சந்தித்துப் பேசி ஜனாதிபதி பிரேமா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர ஒழுங்கு செய்து இலங்கை வந்ததும் நடைமுறையில் துரிதப்படுத்தி செய்து முடிக்க முயற்சித்தனர். ஆனால் பிரேமா பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் பயமுறுத்தல் ஊடாகவும், பணம் கொடுத்து விலைக்கு வாங்கியும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்தார். இதன் பின்னர் இவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். இக் காலகட்டத்தின் பின்னரே இவர்கள் புதிய கட்சியை ஜனநாயக ஜக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்து ஜனநாயகவாதிகளாக முக மூடியணிந்து கொண்டனர். இதன் பின்னரே பிரேமதாசாவின் ரயர் கலாச்சாரம், புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தமை, இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்பு ஏற்படுத்தியமை, போன்ற விடயங்களை மக்கள் முன பேச முனைந்தார். ஜனநாயகத்தை உண்மையில் லலித் நேசித்தவராயிருந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கும் போதே இவ் விடயங்களைக் கூறியிருக்கவேண்டும். மாறாக இவர் ஜ-தே-க யில் இருந்த போதும் பிழைப்புவாதமே முன்னணியிலிருந்தது . அதற்காகவே புதிய கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருக்கும் ஒரு தனிமனிதனிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதை ஜே-ஆர் காலத்தில் ஏற்றுக்கொண்ட இவர் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் முதன் முதல் பிரேரித்தவரும் இவரே.

 

பிரேமதாசா லலித்துக்கு பிரதமர் பதவி கொடுக்காமலும, அரசு இயந்திரத்தில் இவரது முக்கியத்துவம் நிராகரிக்கப்பட்ட பின்னருமே இவர் ஜனநாயக விசுவாசியாக மாறினார். தனிமனித சாகசங்களில் மயங்கும் மூன்றாவது மண்டல நாட்டு மக்களின் பண்புக்கு விதிவிலக்கில்லாமல் நமது நாட்டில் ஒரளவு செல்வாக்கு இருந்தது உண்மையே. சிங்கள மக்கள் மத்தியில் இச் செல்வாக்கிற்கு காரணம் கடந்த காலத்தில் இவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்து தமிழ்மக்கள் மீது குண்டு மழை பொழிந்ததேயாகும். வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இவரது பெயரை உச்சரிப்பதைக் கூட சிறுவர்கள் தொடக்கம் முதியோர் வரை வெறுப்பவர்களாகவே காணப்பட்டனர். நாட்டைச் சூறையாடும் திறந்த பொருளாதாரக் கொள்கையையே பிரேமதாசாவுக்கு நிகராகக் கடைப்பிடிப்பதாக அறிவித்தார். தேசிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வாக யுத்தத்தைக் கடைப்பிடிப்பது, தொடக்கம் பிரேமதாசாவின் அனைத்துக் கொள்கையிலும் உடன்பட்ட இவர் அதிகாரபீடம் தொடர்பாக மாத்திரமே முரண்பட்டிருந்தார். ஜ-தே-க பேரினவாதிகளுக்கு கால் கழுவி விடும் பாஸ்கரலிங்கத்தைக் (பிரேமதாசாவின் அந்தரங்க உளவாளி) குறித்து ஜனாதிபதி மாளிகையில் புலிகள் தான் தற்போது முக்கிய முடிவுகள் எடுக்கிறது என்று மேடையில் கூறி இனவாதத்தை மேலும் கிளறியவர். பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண்மையை ஒரு அரசியல் சித்தாந்தமாகவே இவர் கருதியவர். தேசிய பாதுகாப்பு அமைச்சராக இவர் இருந்தபோது தெலைக்காட்சியில் இவர் ஆற்றிய உரைகள் இதை மிகவும் துல்லியமாக எடுத்தியம்புகின்றன. பிரேமதாசாவின் அரசியல் கேடித்தனம் அவரது அதிகாரவரம்புக்குளேயே இருந்தது. இவர்களது ஆட்சிலும் மக்களுக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவர்களது மரணத்திலும் மக்களுக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவர்களது மரணத்திலும் மக்கள் நடுங்கிப்போயுள்ளனர். எதிர்காலமும் இதே நிலையை நோக்கி நகர்வதை மக்கள் கவனத்தில் கொள்கின்றனர்.

 

 

சமருக்கு மறுப்பு என மனிதம் 21 இல் ஆசிரியர் குழு ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். மனிதம் 18 இல் ஆசிரியர் குழு வைத்த விமர்சனத்துக்கான எமது பதில் விமர்சனத்தில் நாம் வைத்த சில பிரச்சனைகளை விமர்சிக்காமலேயே நழுவியுள்ளனர். அவைகளை ஒட்டியும், மார்க்சியத்தை பாதுகாத்து வளர்த்து எடுக்கும் நோக்கில் மீண்டும் நாம் மனிதத்தின் விமர்சனத்தை விமர்சிக்கின்றோம். மற்றும் மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை ஒட்டியே எமது விமர்சனம் ஒன்றை மனிதத்தில் பிரசுப்பதற்காக மனிதம் 21 வெளிவரும் முன்னே அனுப்பியுள்ளோம்.

 

திரிபுவாதம் முதலாளித்துவ மீட்சி சமூக ஏகாதிபத்தியம் போன்ற பதப் பிரயோகம் 20 வருடங்களுக்கு முன் ஒரு வித தார்மீக கலகத்தைத் தான் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய சர்வதேச சூழல் இப் பதப் பிரயோகங்கள் ஒரு கேலிக்குரியதாகவே தோன்றுகின்றது. என மனிதம் ஆசிரியர் குழு (கரிகாலன் அல்ல) கூறுகின்றனர். இதில் கேலிக்குரியதென கூறி சமரை கேலி செய்துள்ளனர். நீங்கள் எம் மீதும் மார்க்சிசத்தின் மீதும் தவறான எநத விமர்சனத்தையும் முன்வைத்தாலும் அதை கருத்துப்பலம் மூலம் எதிர்கொள்ளும் நம்பிக்கையுடையவர்கள.; நீங்கள் குறிப்பிடாமல் விட்டுவிட்ட சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம், ஓடுகாலித்தனம், ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம் என எல்லாக் கருத்துக்களும் வாக்க சார்புடையது. மார்க்சியத்தின் கருத்துக்களுக்கு அர்த்தமுடைய இவைகள் கூட மனிதத்துக்கு கேலிக்குரியவையே. திரிபுவாதம், முதலாளித்துவ மீட்சி, ஏகாதிபத்தியம் போன்ற சொற்பதங்கள் கேலி செய்யப்படுவது உண்மையே. யாரால் என்பதே இங்கு பிரச்சனை. முதலாளித்துவ வாதிகள் ஏகாதிபத்தியவாதிகள் திரிபுவாதிகள், பிழைப்புவாதிகள்..... போன்றோரே மார்க்சிசத்தை கேலி செய்கின்றனர். இதில் மனிதம் தனது ஊசலாட்டத்தை கைவிட்டு இவர்களுடன் இணைந்துள்ளனர். திரிபுவாதம் சோசலிசத்தின் பின்னடைவுடன் முன்வைக்கப்பட்டதாக உண்மைக்கு மாறாக மனிதம் ஆசிரியர் குழு முன் வைத்துள்ளனர். திரிபுவாதம் என்ற பதம் மார்க்கிசம், சமூக விஞ்ஞானமாக உருவான நாள் முதல் மார்க்சிசத்தை சமூகவிஞ்ஞானத்துக்கு முரணாக திரித்தபோது பயன்படுத்திய சொற்பதங்களே. இவைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ... என அனைத்து மார்க்சிஸ்ட்டுக்களும் பயன்படுத்தியதே. இன்று மார்க்சிசத்தை திரிப்பது அற்று விட்டது(எனக்கேலி செய்தனர்) எனக் கூறியுள்ளனர். இது இருபது வருடங்களுக்கு முன் நடந்தது என்றும் கூறியுள்ளனர். சமூகம் ஏதோ(?) வகையாக மாறித் திரிப்பது அற்றுவிட்டது என வாதிட்டு திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். உதாரணமாக, இன்று எம் மண்ணில் நடக்கும் ஒரு சம்பவம் ஊதிப்பெருக்கி திரிபுபடுத்தி வருவதில்லை என்று வாதாடுகின்றனர். இதே மனிதத்தில் வெளியாகிய கேள்ளிக்குறியான என்ற கதையில் ஒரு பெண் பற்றி, முற்போக்கு பற்றி கதைப்படி ஒருவர் செய்த அவதூற்றை சந்தப்பவாதம், பச்சோந்தி என இனம் காட்டுகின்றார் தமயந்தி. அம் முற்போக்குவாதியின் செயற்பாட்டைக் குறித்தே அவர் பெண் பற்றி திரித்து கூறியது என்பது திரிபுவாதமே. இவைகள் எல்லாம் 20 வருடங்கள் முந்தைய நிலையில் மட்டுமல்ல இன்றுமுள்ளது. இவைகளையெல்லாம் கேலிக்குரியதென சொல்லி திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். இதில் சோவியத்தில் நடந்ததை பின்னடைவு என்று வாதிட்டுள்ளனர். இவர்களின் பின்னடைவு என்ற வாதத்தில் ஏதோ சோசலிச அமைப்புக்கள் ஏதோ தத்துவக் குறைபாட்டால் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். இப் பின்னடைவை நிவர்த்திசெய்வதனூடாக (இவர்கள்; குறிப்பிட்ட நபர்களின் தத்துவத்தை பார்ப்பதனுடாக ) மீண்டும் சோவியத்தில் இருந்த திரிபுவாதகட்சிக் கூடாக சோசலிசத்தை நிறுவ முடியுமென வாதிட்டுள்ளனர். இதிலிருந்தே முதலாளித்துவ மீட்சியை கேலி செய்துள்ளனர். குருசேவ் முதல் ஜெல்சின் வரை சோவியத்தில் முதலாளித்துவ மீட்சியை படிப்படியாக செய்து வருவதை கேலிக்குரியதென சொல்லி, இதை பின்னடைவு என கூறி தமது திணிப்பை எவ்வாதாரமும் இன்றி திணித்துள்ளனர். ஒரு கட்சி, ஒரு நபர் கம்யூனிஸ்ச கோட்பாட்டை கைவிட்டு திரிபை, முதலாளித்துவ பாதையை முன்னெடுக்க முடியும். இதை மனிதம் மறுப்பதனூடாக இயங்கியலையும், சமூகத்திலுள்ள முரண்பாட்டையும் மறுக்கின்றனர். இதை இல்லையென கேலிக்குரியது என்ற விடயத்துக்கு ஊடாக மனிதம் மறுக்கமுடியுமா? இலங்கை கம்யூனிசகட்சி, புதிய ஜனநாயககட்சி, இந்திய கம்யூனிஸ்ச கட்சி சீன கம்யூனிஸ்ச கட்சி ,சோவியத் கம்யூனிசகட்சி ... என நீண்ட இக் கட்சிகள் மார்க்சிசத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டு வருபவர்களே. இது கேலிக்குரியதல்ல. இவைகள் பின்னடைவுகள் அல்ல. ஏதோ தத்ததுவக் குறைபாடு ஏற்பட்டே (மனிதம் குறிப்பிட்ட நபர்களின் தத்துவம் ஆராயாமல்) இவர்கள் பின்னடைவை ஏற்படுத்தியதாம். இவர்கள் முதலாளித்துவத்தை மீட்டபோது அக் காலத்தில் முன்வைத்த திட்டமே இவர்கள் மார்க்சிசத்தை திரித்ததையும் முதலாளிதுவத்தை மீட்டதையும் தெளிவுபடுத்தி விடுகின்றது. இதற்கு ஏதிராக காலத்துக்கு காலம் கம்யூனிஸ்ட்டுகள் (இவர்கள் மரபு வாதிகள் அல்ல) போராடி வருவதனால் இன்றும் மார்க்சிசம் உலகை சரியாக ஆராய்கின்றது. இந்த வகையில் இரண்டாம் அகிலத்துக்கு ஏதிராக லெனின், சோவியத்துக்கு எதிராக சீனாவும் என அனைவரும் காலத்துக்கு காலம் போராடினார்கள். அப்போது போராடியவர்களை பழைமைவாதம் மரபுவாதிகள் எனக் கூக்குரல் இட்டனா.; மனிதம் ஆசிரியர் குழு முழுமையானதல்ல எனச் சொல்லி அந் நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைமை, நபர்கள் செய்யும் துரோகத்தனத்தை அங்கீகரிக்கின்றனர். அவர்கள் திரிக்கமுடியாது, முதலாளித்துவத்தை மீட்க முடியாது என்ற வாதத்தினுடாக திரிபை பாதுகாத்து முதலாளித்துவத்தை காப்பாற்றுகின்றனர். இக் கட்டுரையில் ஒரே பந்தியில் தமக்கு இடையில் முரண்பட்டுள்ளனர். உலகின் அனைத்தும் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களும் சோசலிச நிர்மாணத்திலிருந்து விடுபட்டுள்ளன அல்லது இச் சமுதாயங்களிலும் முதாலித்துவ மீட்சி ஏற்பட்டுள்ளது என வாதிட்ட மனிதம் கீழ் முதலாளித்துவ மீட்சி போன்ற காரணங்கள் இன்றைய சூழ்நிலையில் முழுமையானதல்ல. என ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்டுமுள்ளனர். நடந்தது முதலாளித்துவ மீட்சியே என்பதை சோவியத்,சீனா என அனைத்திலும் நடந்தது என்பதை முரண்பட்டுக் கொண்டே தங்களை அறியாமல் சொல்கின்றனர்.

 

நடைமுறைத்தத்துவங்கள் வரை நீண்டு செல்லும் கட்சி அமைப்பு முறை, கட்சி நடைமுறை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்னும் சோசலிச கட்டுமானம் என அனைத்தும் ஆய்வுகள் விவாதங்கள் ஒளிவு மறைவின்றி எவ்வித அச்சமுமின்றி மேற்கொள்ள வேண்டிய சூழல் இது என கூறியுள்ளனர். உண்மையில் எந்த மார்க்சிஸ்ட்டும் மார்சிசத்தை ஏற்றுக்கொண்ட நாள் முதல் கடைப்பிடிப்பவையே. இவை இன்று மட்டும் சிறப்பாக செய்யும் சூழல் இதுவென சொல்வனுடாக மார்க்சிசத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். மார்க்சிசம் உருவான நாள் முதல் இவ் விவாதம் நடைபெறுவதையும், நாட்டுக்கு நாடு வேறுபட்ட தன்மையில் போராட்ட வடிவு மாறுபாட்டுடன், இவர்கள் அடிப்படை மார்சிசத்தை கடைப்பிடிப்பதையும் மனிதம் மறுத்துள்ளனர். ஏதோ இயங்கியல் மாhக்சிசம் நிராகரித்து நிலையாக இருந்ததாகவும், வளராமல் செயலற்றுப் போய் இருந்தமையால் இன்று ஆராயவேண்டிய சூழல் எனச் சொல்லி மார்சிசத்தை கொச்சைப்படுத்தி திரிபுபடுத்தியுள்ளனர். இன்று நடைபெறும் போராட்டங்கள் ஆகிய பிலிப்பையின்ஸ், பெரு, பர்மா, எல்சல்வடோர்,....என அனைத்தும் மார்க்சியத்தை இயங்கியல் நிலையிலிருந்து விலக்கி வெறும் நிலையானதாக கருதி செயற்படுவதாக மனிதம் கேலி செய்துள்ளனர். மார்சிஸ்ட்டுக்கள் சமூகத்தை ஆய்வு செய்யும் போது மார்க்சியத்தின் இயங்கியலை நிராகரித்து மார்க்சியத்தை திரிபுபடுத்துவதை கடுமையாக அம்பலப்படுத்தி வருகின்றனர். அப்படி அம்பலப்படுத்தும் போதும் முத்திரைகுத்தல், சாவாதிகாரம்....என கூக்குரல் இடுகின்றனர். உதாரணமாக எம் மண்ணில் நடைபெறும் சம்பவங்களை விமர்சிக்கின்றோம். அதே நேரம் திரிபுபடுத்தி வரும் தகவல்களை முற்றாக அம்பலப்படுத்துகின்றோம்.

 

நூறு மலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பதற்கான சூழலிது, இதில் கருத்துக்கள் கருத்துக்களால் வெல்லப்பட வேண்டும். பதிலாக முத்திரை குத்துகின்ற விமர்சனங்கள் மூலம் கருத்துக்களை தடைசெய்யக்கூடாது என மனிதம் எம் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பதற்கான சூழலிது என்பது இன்றைய நமது நிலையை நியாயப்படுத்தவே. ஏன் எனில் கருத்துக்கள் மனித இனம் உள்ள வரை நூறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கும் இங்கு சூழலிது என்பதற்கூடாக கட்சியமைப்பு உருவாக்கிய பின் நூறு கருத்துக்கு இடம் இல்லை என வாதிடும் வகையில் இவ் விவாதம் அமைந்துள்ளது. சமர் கூட மாற்றுக்கருத்தை பிரசுரிக்க தயாராக உள்ள அதே நேரம் அதன் மீது விமர்சனத்தை முன்வைக்க தயாராகவுள்ளோம். எமது விமர்சனம் முத்திரை குத்தியதாக மனிதம் முந்திய விமர்சனத்திலும் இன்றைய விமர்சனத்திலும் கூறியுள்ளனர். அப்படி முத்திரை குத்தல் எனின் ஆதாரங்கள் விளக்;கங்கள்---------ஊடாக முன்வைக்க வேண்டும். இதை எமது முந்தைய விமர்சனத்திலும் சுட்டிக் காட்டினோம். ஆனால் அது பற்றி இவ் விமர்சனத்தில் விளங்கப்படுத்தாமல் தமது முயலுக்கு மூன்று கால் தான் என வாசகர் மீது திணித்துள்ளனர். முதல் வரியில் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும் எனச் சொன்னவர்கள் எமது விமர்சனத்தை முத்திரை குத்தல் எனச் சொல்லி அதற்கான விளக்கத்தை அளிக்க தவறியுள்ளனர். இது கட்டுரையில் பலவிடயங்களில் கையாண்டுள்ளனர். கட்டுரையை திரித்திருந்தால் நாம் திரிபுபென எமது கட்டுரையில் விளககங்களுடாகச் சொன்னோம். இது முத்திரை குத்தல அல்ல. இது மார்க்சிசத்தை திரித்து முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் ஒரு கோட்பாடே. ஒரு சம்பவத்தை, கோட்பாட்டை திரித்து கூறினால் அது திரிபு தானே. இது முத்திரை குத்தல் எனச் சொன்னால் வால் வைத்த திரிபை அங்கீகரிக்கக் கோருவதே. இதைத்தான் மனிதம் செய்கின்றனர். ஒரு முதலாளித்துவ வாதியே (ஏன் பாசிசப் புலிகளே) தமக்கெதிராகக் கருத்து வரும் போது எதிர்த்துப் போராடுகின்றனர். இந் நிலையை கரிகாலன் முன்னெடுக்கவோ, மனிதம் முன்னெடுக்கவோ கருத்துப் பலம் இன்மையே கருத்துக் கூறாமையும், முத்திரை குத்தல் (ஆதாரமின்றி) எனச் சொல்லி இதைத் தாக்குதலா? விமர்சனமா? என பிரச்சனையைத் திசை திருப்பியுள்ளனர். உங்களுககு கருத்துத்தடை இல்லைத்தானே. முடிவெடுக்க முடிந்தால் திரிபு தொடர்பாக நாம் சொன்ன திரிபு என்ற வாதத்திற்கெதிராக வாதிட்டிருக்கலாம் தானே.

 

பொதுவாக திரிபுவாதம் போன்ற பதப்பிரயோகங்களை வன்மையாக மறுக்கின்றோம் என்னும் நீங்கள் அப்படியாயின் ஏன் புலிகளை பாசிச சக்திகள் என்ற பதங்களை பயன்படுத்துகின்றீர்கள். தேசிய சக்திகள் என வாதிடும் ஒரு பகுதியினர் (முற்போக்கு பிரிவினர்) புலிகள் நடவடிக்கையை பாசிசம் என்பதை எற்கவில்லை. ஏகாதிபத்தியம் முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்.... என்ற பதங்களையும் பயன்படுத்துவதை கூட மறுக்கின்றார்களா? அப்படி இல்லையெனில், ஏன் திரிபு போன்ற பதங்களை எதிர்க்கின்றீர்கள். இவை எல்லாம் ஒவ்வொரு கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காய் பயன்படுத்தப்படுபபை தான். சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பிரமுகத்தனம், பச்சோந்தி..... போன்ற பதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஏற்றுக்கொள்ளவில்லையெனின் மேற்கூறிய நபர்கள் கட்சியில் இருக்க முடியாது என வாதிடும் பலம் உங்களுக்கு உண்டா? ஏற்றுக்கொள்ளின் ஏன் திரிபை மட்டும் எதிர்கின்றீர்கள். இது அடிப்படையில் திரிபை பாதுகாத்து முதலாளித்துவத்தையும், சீரழிந்த பண்பாட்டையும்(திரித்துப்பரப்புவோர்) அங்கீகரிப்பதாகும். இதை விட பழைமைவாதம், மரபுவாதி போன்ற பதங்களுக்கு உரியவர்கள் கேலிக்குரியவர்கள் ஆக தெரியும் உங்களுக்கு அவைகளை ஆதாரங்கள், விளக்கங்களுடன் வைக்கும் பண்பாடு தெரியாமல் போனது ஏன்? மனிதத்துக்கு மதிப்பீடு என்பது அவ்வளவு எளிமையானதா என்ன?

 

இக் கருத்துகளைப் (இன்றைய இச்சர்வதேசச சூழல்) புரிந்து கொள்வதற்கு முதலில் மார்க்சிய இயங்கியல் விதியினை ஓரளவேனும் விளங்கிக் கொண்டு மார்க்சியத்தையொரு மரபாகக் கருதுகின்ற குறைப்பார்வையிலிருந்து சமர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். என்ற வேண்டுகோளுடன் சமரின்... .... நன்றி. இப்படி சொன்னவர்கள் நாம் இன்றைய சூழலுடன் இயங்கியலை கைவிட்டு மரபாக பயன்படுத்தியதை ஆதாரங்கள் விளககங்களு,டன் புரிய வைத்திருக்க வேண்டும். என்ன மனிதத்துக்கு மதிப்பீடுகள் கற்பனையில் உருவாக்கி அதை மேதாவித்தனத்துடன் கூறி வாசகர்களுக்கு திணிப்பதாக (ஆதாரங்கள இன்றி) புகுத்திவிட முயல்கின்றனர். நாம் இன்றைய சர்வதேச நிலையை இயங்கியலுக்கு அமைய எப்படிப் புரிந்து கொள்ளவில்லையென புரிய வைக்க முடியாத நிலையில் தமது திரிபை (இங்கு கரிகாலனின் வாதம் திரிபு இல்லையென மனிதம் வாதிடுகின்றது) திணிப்பதாக வெளியிட்டுள்ளனர். இன்றைய சர்வதேச நிலைமையில் மார்க்;;;;;;;;;;;;ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ..... போன்றோரின் மார்க்சிச வாதங்கள் எப்படித் தவறாகியுள்ளது என்பதை கரிகாலன், சிவகுமாரன், மனிதம் ஆசிரியர் குழு என எவரும் ஆதாரங்கள் விளக்கங்களுடன். புரியவைக்க முடியாதவாகளாக இருந்து கொண்டு, இவர்களின் வாதங்களைப் பழமைவாதம், மரபு எனக் கூறி அவைகளைக் கேலிக்குரியதாக்கியது மட்டுமின்றி ஆதாரங்களற்ற தமது கருத்தை திணிப்பாக நிகழ்த்தியுள்ளனர். மனிதத்தின் விவாதத்தில் வார்த்தைகளுக்கப்பால் எநத விளக்கங்களோ, ஆதாரங்களோ கிடையாது. எந்த ஆதாரங்களுமின்றி மார்க்சிசத்தை மரபாக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுபவர்கள், மார்க்சிசம் இயங்கியல் அடிப்படையில் இயங்குவதை ஏற்றுக்கொண்டவர்களல்லர். மார்க்சிசத்தை மரபாக பயன்படுத்துவதாகக் கூறும் இவர்கள் மார்க்சிசம் சரியான பக்கத்தில் வளர்வதைக் கண்டு இப்படியொரு குற்றச்சாட்டை வைத்தபடி வாக்கப்போராட்டத்துக்கு எதிராக நின்று எதிர்ப்புரட்சிக்குப் சேவை செய்கின்றனர். இன்று உலகில் எழும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மார்க்சிசம் விளக்கம் தரும் வல்லமை கொண்டுள்ளது. அதற்கு தீர்வை வைக்கும் வல்லமையும் உள்ளது. மனிதம் எம்மை மரபாக பயன்படுத்துவதாக கூறியவர்கள் எந்த ஆதாரமோ விளக்கமோ இன்றி கொச்சைத்தனமாக முன்வைத்ததுடன் கேலியும் செய்துள்ளனர். மனிதம் இவைக்கு ஆதாரம் வைக்கும் தகுதியை இழந்ததோ என்னவோ அதிலிருந்N,த சமருக்கு புரியவருகிறதோ இல்லையோ---- எனச் சொல்லி தமது திணிப்பை நிகழ்த்தி திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். மனிதம் இப் புத்தகத்தில் வேறு ஒரு கட்டுரையில பயன்படுத்தியது போல் மதிப்பீடு என்பது அவ்வளவு எளிமையானதா, என்ன? இதற்கு ஆதாரங்கள் விளக்கங்கள் தேவை. இதுவே பத்திரிகை தர்மம் மட்டுமின்றி விமர்சன பண்பும் கூட.

 

எமது அமைப்பு வடிவம் சமரை பொறுத்த வரையில் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாகவோ, அல்லது சில வேளை ஜீரணிக்க முடியாததாகக் கூட இருக்கலாம். என மனிதம் தமது அமைப்பு வடிவம் பற்றி குறிபிட்டு உள்ளனர். இவ் விமர்சனங்கள வரும் முன்பே மனிதத்தில் பிரசுரிக்க என (இனனும் பிரசுரிக்கப்படவில்லை) அனுப்பிய எமது விமர்சனத்தில் மனிதம் குழு தொடர்பாக விளங்கப்படுத்தியுள்ளோம். இருந்தும் மீண்டும் ஆராய்வோம். மனிதத்தை பார்த்து ஆச்சரியப்படவோ, ஜீரணிக்க முடியாத வகையில் சமர் உலகை ஆராயும் தகுதியை இழந்து ஒற்றை வரியில் (உங்களைப் போல்) முடிவுகளை வைத்து விடுபர்கள் அல்ல. கடந்தகாலப் போராட்டத்தில் பல குழுக்கள் வீங்கி பல கருத்துடன் அரசுக்கு எதிராக மட்டும் இருந்தபோது அவர்களை விமர்சித்தோம். அரசே எமது பிரதான எதிரி என சொன்னபடி சொந்த இயக்கத்துக்குள்ளும் தமக்கிடையிலும் விமர்சனத்தை முன்வைக்க வராமையும், தமது கருத்துக்களை பகிரங்கமாகச் சொலலாமையும் (அமைப்புக்குள் சில குழுக்கள் தனிபபட்ட பலர் மாறுபட்ட பல கருத்தை கூறினர்) மனிதத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. நாம் அன்றும் இன்றும் இப் போக்கை கண்டு ஆசசரியப்படவில்லை. அது போல் ஜீரணிக்க முடியாமல் அவதியுறவுமில்லை. இவர்களின அழிவை உணாந்த போதும் நாம் இவர்களுக்கு எதிராக அணிதிரட்டுவதில் பல தவறுகளை(முரண்பாடுகளுடன்) இழைத்தோம். மனிதம் குழு சிறப்பாக புளொட்டை ஞாபகப்படுத்துகின்றது. புளொட்டுக்கும், மனிதத்துக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆயுதம் ஏந்தாமையும், அதன் வெளிப்பாடாக அதன் தன்மையை(வேறுபட்ட கருத்துடையோர்)வெளிக்காட்டாமையுமே. மற்றபடி பி-எல்-ஒ-டி(புளொட்) க்குள் மேலிருந்து கீழ் வரை வேறுபட்ட பல கருத்துகள் இருந்ததே அது போல் தான் மனிதமும் உள்ளது. பி-எல்-ஒ-டி இல் பிற்போக்குகள் படிப்படியாக முன்னேறி பி-எல்-ஒ-டி-யை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போல் மனிதத்துக்குள் திரிபுவாதம் படிப்படியக முன்னேறி வருகிறது. இந் நிலையில் தமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளனவாம். அதனால் கருத்துக் கூற முடியாதாம். ஒரு பத்திரிகை என்பது ஒரு ஆசிரியர் குழுவைக் கொண்டது. இவர்கள் இச் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகள் மீது கருத்துக் கூற வேண்டும். அதுவே பத்திரிகை. இல்லாத போது பலரை திருப்திப்படுத்த(பி-எல்-ஒ-டி போல்) யார் யாருக்கு உடன்பாடில்லையோ அவர்களை கைவிட்டு சமரசத்தை நாடுவதே. இது (ஈறோஸ்) மற்ற இயக்கத்துக்கும் மககளுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களில் கருத்தில்லை(முடிவில்லை) எனக் கூறியபடி சந்தர்ப்;பவாதமாக நடந்ததை மனிதம் மீண்டும் நினைவுபடுத்துகின்றனர். இங்கு மனிதம் ஈறோஸ் பி-எல்-ஒ-டி-க்கிடையில் சில சில, விடயஙகள் வேறுபட்டபோதும் சாரத்தில் அவை ஒன்றே. அன்று அரசு எதிரியெனக்கூறி தமக்கிடையில் ஜக்கியம் போல் நடித்தனர். இவை போல் மனிதம், அரசு, புலிகள் போன்ற ஒரிரு விடயத்தில் உடன்பட்டபடி மற்றய கருத்துக்களை விரும்பியபடி(பி-எல்-ஒ-டியை போல்) யாரும் எதையும் கூற முடியும் என்கின்றனர். இதிலிருந்தே மனிதம் முடியாதாம். இதை சிறப்பாக வேறு ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் சமூகவிடுதலைக்கு எனப் போராடும்போது, மனைவி, குடும்பம் தடுப்பார்களாயின் குடும்பம் ஒத்த முடிவுக்கு வரும் வரை போராடக்கூடாதா? (மனிதம் கருத்து சொல்லக்கூடாதா?) இதே போல் ஒரு பெண் பெண்விடுதலைக்குப் போராட முற்படும்போது கணவன், குடும்பம் தடுப்பார்களாயின் அப் பெண் போராடக்கூடாதா? இதில் மனிதம் நிலை போராடக்கூடாது என்பதே. ஏன் மனிதம் கூறிப்பிட்ட விடயங்களில் ஒரு பொதுமுடிவுக்கு (கருத்து முரண்பாடற்ற) வந்துவிட முடியுமா? அப்படி வந்துவிட முடியுமாயின் மாற்றுக்கருத்தை மறுக்கும் வாதமே. நீங்கள் உடன்பாட்டுக்கு வந்த ஒரு விடயத்தில் முரண்பாடு ஏற்படின் அதை மனிதம் சார்பாக கருத்துக் கூற மாட்டீர்கள் தானே. இவையெல்லாம் ஒரு பக்கத்தில் கருத்து மறுப்பாக பரிணமிக்கின்றது. நீங்கள் முடிவுக்கு வராத விடயங்களில் ஒரு பொது முடிவை அடைந்தபின் ஒரு போராட்டத்துக்கு தலைமை தாங்குகின்றீர்கள் என வைப்போம். அப்போது புதிய பல பிரச்சனைகள் உருவாகியபடி (இதுவே இயங்கியல்) இருக்கும். அப்போது உடனடித் தீர்வுக்கு வரும்போது எமக்கு முரண்பாடு எனக்கூறி (உங்கள் வாதப்படி) வழிகாட்டத் தவறின் போராட்ட சக்திகள் மட்டுமின்றி மக்களும் அழிக்கப்படுவர். இவை தான் மரபு வாதம். பிரச்சனையை நிலையானதாக கருதுவதும் புதிய பிரச்சனைகள் உருவாகாது எனப் பார்ப்பதும் இயங்கியலை நிராகரிப்பதாகும். இன்று உள்ள பிரச்சனை நாளை மறந்து போகலாம். பிரச்சனை உள்ள நேரம் கருத்துக்கூற மறுப்பது இயங்கியலை ஏற்காமையே. மனிதர்கள் உள்ளவரை பிரச்சனைகள் தோன்றும். முரண்பாடுகள் உருவாகும். அவைகளுக்கு அக் காலத்தில் கருத்தும் தீர்வும் சொல்லாமல் சந்தர்ப்பவாதமாக இயங்குவது, பிரச்சனைகள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை மனிதம் இந் நிலையையே தொடரமுடியும். மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல முடியாத சந்தர்ப்பவாதிகள் ஒருக்காலும் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது. . நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களை நாம் கட்சியாகப் பார்க்கவில்லை. உலகில் உருவாகும் எப் பிரச்சனைக்கும் வர்க்க மூலம் உண்டு. உங்கள் குழுவிற்கும் வர்க்கத்தன்மையுண்டு. அதில் எந்த வர்க்கம் வெல்லும் என்பது கருத்து சொல்லும் போது வெளிப்படும். அப்போது மனிதம் பி-எல்-ஒ-டி-போல் சிதறும். கருத்து கூறாமல் சந்தர்ப்பவாதப் போக்கை கடைப்பிடித்தால் சிலர் விரக்தியடைவார்... எனத் தொடரும். நாம் கருத்து கூறும்படி கோருவது எதிர்காலத் தலைமையை உருவாக்க அணிகளின் சேர்க்கையை ஊக்குவிக்கவே. இங்கு மாற்றுக்கருத்தை பிரசுரிக்கும் போது பெரும்பான்மை, சிறுபான்மை எனச் சொல்வதனூடாக, எல்லாக் கருத்தின் மீதும் பெரும்பான்மை தனது கருத்தைக் கூற வேண்டும். இதுவே போராட்டத்தை விரும்பும் ஒரு பத்திரிகையின் கடமை. இது உங்கள் பார்வையில் சமரின் அடம்பிடிக்கும் போக்கு ஆக மட்டுமே தெரிகின்றது.

 

ஒரு சிலர் மட்டும் சேர்ந்து பத்திரிகை விடும் போது அல்லது ஒரு குழுவின் ஒரு சிலரின் கருத்துக்கள் மட்டும் மேலாண்மை செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு கட்டுரை சார்பாகவும் கருத்தை தெரிவிக்கவேண்டும். மனிதத்தின் இவ் விவாதம் தவறானது. மனிதம் கருதுவது போல் கருத்துக்கூறுபவர்கள் ஒரு சிலர் சேர்ந்து பத்திரிகை நடத்துபவர்கள் அல்ல. ஒரு பெரியகட்சி, பல நபர்கள் கொண்ட வடிவம் கூட கருத்து கூறமுடியும். இது வரலாறு முழுக்க நீண்டுள்ளது. மற்றும் ஒரு சிலரின் கருத்து மேலாண்மை செலுத்துவது என்பது அவர்களின் கருத்தை அவ்வமைப்பு ஏற்பதினால் தான். இவை எல்லா அமைப்பு வடிவத்துக்கும் பொருந்தும். எல்லா அமைப்பு வடிவத்திலும் கருத்து மேலாண்மையிருக்கும். அதுவே பெரும்பான்மை. இதை நிராகரிப்பவர்கள் அராஜகவாதிகளாக (மார்க்சியத்தில் அராஜகம் என்ற சொல்லின் அர்த்தத்தில்) இருக்கின்றனர். மனிதம் அராஜகவாதிகளாக அமைப்பு வடிவ ஒழுங்கை நிராகரிக்கின்றனர். தமக்கு கருத்து கூறுவது பொருந்தவில்லை என வாதிடின் அவர்கள் சமரசவாதியாகவும் உள்ளனர். மனிதம் இதழில் வெளிவந்த தேசியசக்திகள் தொடர்பான நான்கு கட்டுரைகளையும் பார்ப்போம். இதில் இரு கட்டுரை திரிபை திணிப்பாக நிகழத்தியுள்ளனர். சிவசேகரத்தின் கட்டுரை பிரச்சனையிலிருந்து விலகி பாசிசம் என்ற சொற்பிரயோகத்தின் மீது விவாதிதுள்ளார். ஈழத்திலிருந்து வந்த கட்டுரைத் தலைப்பை விட்டு விலகி புதிய வேறு பிரச்சனைக்குள் சென்றுள்ளது. அவரின் ஒரு இரு வாதத்தை பார்ப்போம். (தமிழ் மார்க்சிஸ்டுக்கள் மத்தியில் தமிழீழப்போராட்டத்திற்கூடாகவே எல்லாப் பிரச்சனைகளையும் பார்க்கும் குறுகியபார்வை காணப்படுகின்றது. அதனால் தான் சிங்கள மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி வெறுமனே நையான்டி பண்ணும் ... என தொடர்கிறார். இங்கு சரியான மார்க்சிஸ்ட்டுக்கள் எனக் கூறி எந்த பிழைப்புவாத மார்க்சிஸ்டுக்கு வக்காலத்து வாஙகு;கின்றார்? குறிப்பாக தமிழீழப்போராட்டத்தினூடாக மார்க்;சிசத்துக்கு அறிமுகமான எமது தமிழ் இளைஞர்கள் என திமிராக இருந்தபடி நக்கலடித்துள்ளார். இங்கு மார்க்சியத்துக்கு அவர் போன்ற பழம்பெரும் புத்திஜீவிகளே இருக்க முடியும் என கூறியுள்ளார். கடந்த 15 வருடப் போராட்டத்தில் காணாமல் போன இவர் மீண்டும் புதிய மார்க்சிஸ்ட்டுக்கள் என நக்கல் வேறு. இப்படிப் பல, அவை தனியான ஒரு பெரிய கட்டுரையாகவே அமையும். இவைகளின் கட்டுரைகள் கருத்துக்களை கருத்துக்களால் வெல்லும் தன்மையில் சமர், தூண்டில், உயிர்ப்பு கருத்துக்களை விளக்கங்கள் ஆதாரங்கள்.... உடன் ஆராயாமையை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதில் தூண்டில், சமர் இடையில் தத்தம் கருத்துக்களை விளக்கங்களுடன் ஆராய்ந்துள்ளனர். உயிர்ப்பு ஒரளவு ஆராய்ந்த போதும் மேல் எழுந்தவாரியாக அமைந்துள்ளது. இந் நிலையில் மனிதத்தில் வெளிவந்த கருத்துக்காக (ஆதாரமற்ற) மனிதம் வாதிட முற்படுவது (கருத்துமுரண்பாடு என கூறியபடி )திரிபை பாதுகாத்தபடி தமது சந்தர்ப்பவாதத்தை பேணவே.

 

ஒரு கட்டுரையில் கருத்தாடல் எனத் தலைப்பிட்டால் அதில் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பில்லையென வாதிட்டுள்ளனர். இங்கு மனிதம் பொறுப்பு ஏற்பது வழக்கு, வன்முறை, திரிபை பாதுகாத்தல்..... போன்றவைக்கு மட்டுமே. இங்கு கருத்துக்கு அல்ல. கருத்தாடல் என போட்ட சிவகுமாரனின் கட்டுரையில் கருத்தாடல் நிராகரித்ததை அங்கிகரீத்துள்ளனர். இதை மனிதத்துக்கு எழுதிய விமர்சனத்தில் (மனிதத்தில் பிரசுரிக்க) விளக்கியுள்ளோம். நாம் எல்லா வகையான கருத்தையும் பிரசுரிக்கமாட்டோம் என மனிதம் 13 ஆசிரியர் தலையங்கத்தில் கூறியவர்கள் எந்த வகையான கருத்தை பிரசுரிப்பீர்கள் என்பதற்;கான மனிதத்தின் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. இதில் எல்லாக் கருத்தையும்; பிரசுரிக்கமாட்டோம் என்ற வாதத்தினூடாக பிரசுரிக்கும் கருத்துக்கு ஏதோ ஒரு வகையில் மனிதம் பொறுப்பேற்கின்றது. பிரச்சனையென வரும் போது எம் கருத்தில்லை, அது கரிகாலனின் கருத்து என கூறி நழுவிவிடுவதனூடாக அக் கருத்திலுள்ள திரிபை பாதுகாக்க அதைக் கருத்தில்லையெனக் கூறி வக்காளத்து வாங்கியுள்ளனர். திரிபுபென்பது ஒரு கருத்தின் வகையே. தமக்குப் பொறுப்பில்லை அது கரிகாலன் கட்டுரையென சொன்னவர்கள் இதே மனிதத்தில் சக்தி தொடர்பான ஒரு விமர்சனத்தை வைத்துள்ளனர். கருக்கலைப்புத் தொடர்பாக சக்தியில் ஒரு பெண்ணின் கருத்தை (மனிதத்தின் கரிகாலன் கட்டுரைபோல்) ஒட்டி சக்தியின் மீது (மனிதத்தின் பத்திரிகை தர்மத்தை) குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இது எந்த (மனிதத்தின் பாணியில்) பத்திரிகை தர்மம். உண்மை ஒன்றாயிருக்க (தம்மையறியாமல் வெளியிடுவது) தமது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த முயல்வதே சமர் மீதான மனிதத்தின் நிலை. இதே போன்றே கருக்கலைப்பு தொடர்பாக (உண்மைநிலையை தங்களையறியாமல் மனிதம்16 இல் கூறியவர்கள்) சொன்னவர்கள் இன்று அதற்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். இது தொடர்பாக ஒரு விவாதம் நிகழ்ந்து வரும் இன்றைய நிலையில் ஒற்றைவரியில் ஆ-கு முடிவைச் சொல்லி திணிப்பை நிகழ்த்தியுள்ளனர். மனிதத்துக்கு ஆதாரங்கள், விளக்கங்கள் தேவையில்லை. கருவை சுமப்பதுடன், உளரீதியில் அனுபவிப்பது பெண்கள் தான் என்பதால் கருக்கலைப்புச சுதந்திரம் பெண்களின் உரிமையென்பதே எமது நிலைப்பாடு. அப்படியாயின் பெண் உடல் உள சம்மந்தப்பட்ட விபச்சாரம், குழந்தைக்கு பால் கொடாமையைக் கூட மனிதம் அங்கீகரிக்கின்றனர். இதே போல் உடல், உள சம்பந்தப்பட்ட தன்னினச்சேர்க்கையை கூட மனிதம் அங்கீகரிக்கின்றனர். கருக்கலைப்பு தொடர்பாக சமர், சக்தியில் வெளிவந்த வெளிவரவுள்ள கருத்துக்களை ஒட்டி பதில் அளிக்கக் கோரும் அதேநேரம் திணிப்பை நிகழ்த்துவதை (விளக்கமற்ற) கைவிடக் கோருகிறோம்.

 

தமக்கு இருந்த பொறுப்புணர்வு காரணமாக திரிபுவாதம் என்ற முத்திரை குத்தல் பிரயோகத்தை வன்மையாக மறுக்கின்றோம் என மனிதம் முழுதாக விட்டுவிட்டு என்ற நிலையை நியாயப்படுத்தியுள்ளனர். இவை தொடர்பாகவும் நாம் மேலே விவாதித்துள்ளோம். இதில் கருத்து வேறு, விளைவு வேறான ஒன்றுடன் ஒன்று சம்மந்தம் இல்லாததாக பிரச்சனையை காட்ட முற்பட்டுள்ளன. கருத்தும் விளைவும் வேறுவேறானது அல்ல. இரணடும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததே. இரண்டும் தனித்தனியாகப் பார்ப்பது என்பது கருத்துச் சொல்ல சில மேதாவிகள் இருப்பர், நடைமுறைப்படுத்த சில அப்பாவிகள் இருப்பார், நடைமுறைப்படுத்தி பெறப்படும் வெற்றியை மேதாவிகள் கைப்பற்றுவர். இதுவே மனிதத்தின் நிலை. கருத்தின் தன்மையை அது வெளிப்படுத்திய பரிணாமத்தின் விளைவே திரிபு. இதே இடத்தில் இதே மனிதத்தில் வெளியாகிய தமயந்தியின் சிறுகதையான கேள்விக்குறிகள் என்ற கதையைப் பார்ப்போம். கதையில் தமயந்தி பயன்படுத்திய சந்தர்பவாதியோட, ஒரு பச்சோந்தியோட என்ற சொற்பிரயோகங்களை மனிதம் ஏன் வன்மையாக கண்டிக்கவில்லை. இவை கூட முத்திரை குத்தல்(உங்கள் பார்வையில்) தானே. தமயந்தி கதையாக எழுதிய விடயத்தை நாம் நேரடியாக கருத்துக்கள் மீது பயன்படுத்துகின்றோம். தமயந்தியின் கதையில் கற்பனைப்பாத்திரத்தில் உள்ளவை எமது விமர்சனத்தில் நேரடியாக அமைந்துள்ளது. இரண்டும் ஒரே விடயத்தைதான் சொல்லுகின்றது. ஒன்று கதை மற்றது நேரடி விமர்சனம். இவை ஏன் புரியாமல் போனது. இக் கதையில் ஒரு பெண் பற்றி திரித்துக் கூறியது திரிபாகவுள்ளது. நபர் சந்தர்ப்பவாதியாக, பச்சோந்தியாக நடந்தபடி ஒரு பெண் பற்றி திரித்துக்கூறும் முற்போக்கின் தன்மையை அம்பலப்படுத்துகிறார். இதில் முற்போக்கு என்பது கதையில் பயன்படுத்தியது போல் முற்போக்கு எனச் சொல்லித் திரியும் அணியில் (மனிதத்துக்குள்ளும் இருப்பர்) சந்தர்ப்பவாதமும்.... இருப்பர். அவர்களை திரிபு, சந்தர்ப்பவாதம்... எனச் சொல்வதெல்லாம் முத்திரை குத்தலாக இருப்பது இல்லை. இவைகளை ஆதாரங்கள், விளக்கங்கள் உடன் புரியவைக்கும் போது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதை மறுக்கும் மனிதம் திரிபை பாதுகாத்து தனது சந்தர்ப்பவாத நிலையை பேணுகின்றனர்.

 

வசனத்தை பிரித்து எடுத்து கருத்தை சிதைத்துள்ளது என மீண்டும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இப்படிச் சொன்னவர்கள் மாவோவின் மேற்கோளை வசனத்தை பிரித்தெடுத்து கருத்தை சிதைத்ததை மேற்கோளை ஆராயும்போது விளக்குகின்றோம். நாம் கடந்த விமர்சனத்தில் ஆதாரத்தை முன்வைக்க கோரியும் முன்வைக்காமல் மீண்டும் இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர். எமது கடந்த விமர்சனத்தில் கூறினோம் அப்படி சிதைத்ததை ஆதாரமாக வைத்தால் நாம் சுயவிமர்சனம் செய்ய தயாராக உள்ளோம் என கூறியிருந்தோம். மீண்டும் இதை கூறும் நாம் ஆதாரமாக வைக்கக் கோரும் அதே நேரம் திணிப்புக்களை கைவிடக் கோருகின்றோம். அப்படி ஆதாரமாக வைக்காத வரை இது விமர்சனத்தை தடைசெய்யும் நோக்கில், திரிபை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்படும் திசைதிருப்பலே.

 

எதிர் நிலைக்கு செல்லல் என்பது முற்போக்கு, பிற்போக்கு என இரண்டாக பிரிய முடியும். இதில் பிற்போக்கு பகுதியில் புலிகள் இருப்பதால் எதிரணிக்குள் அடங்கி விடுகின்றனர். இங்கு நடுநிலை எனச் சொல்பவர்கள் இதில் ஏதோ ஒரு பகுதியை தெரிந்தோ, தெரியாமலோ ஆதரிப்பவர்களே. இது விமர்சனத்துக்கு (மனிதம் பார்ப்பது போல்) உரியது அல்ல. உளவியல் சம்மந்தப்பட்டது எனச் சொல்லி சமரசத்தை நிலைநிறுத்த முன்னெடுத்த வாதமே. எப் பிரச்சனையும் உளவியலுக்கு உள்ளாகிறது. அது அல்லது இது என உளவியலுக்கு உட்பட்டு முடிவுக்கு வருகிறது. வெறுப்பூட்டும் விமர்சனத்துக்கு ஊடாக எதிர் நிலைக்கு தள்ளுவதை தாம் குறிப்பிடுவதாக மனிதம் கூறிய இக் கூற்றில் எந்த வாதமும் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது. வாதத்தின் கருத்தை பார்க்கும் தன்மையை இழந்த எவருக்கும். வெறுப்பூட்டுவதாகவே அமையும். அப்படியானவர்களை கருத்தைப் பார்க்கும்படியே கோரமுடியும். அவரின் நிலைக்கு கீழ் இறங்கி(மனிதம் போல்) வெறுப்பூட்டுவதாக கூறியபடி கருத்தை ஆராயாமல் செல்பவர்கள் எதிர் நிலைக்கே செல்வர். இவர்கள் இயல்பாக நீண்டகாலத்தில் பிற்போக்கைக் கடைப்பிடிப்பர். எமது விமர்சனத்தில் உள்ள திரிபை திரிபல்ல எனச் சொல்லும் மனிதம் ஆதாரங்கள், விளக்கங்கள்..... ஊடாக புரிய வைக்கமுடியாத நிலையில், இதை மரபு,வெறுப்பூட்டுவதாக சொல்லி ஒற்றை வரியில் திரிபை பாதுகாத்து அதை திணித்து விடுகின்றனர்.

 

மனிதம் மாவோவின் மேற்கோளை கருத்தைச் சிதைக்கும் வகையில் வசனத்தை பிரித்தெடுத்து, மேற்கோளை தவறான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர். நாம் மாவோவின் மேற்கோளை முழுமையாக தருகிறோம். இதில் கீழ் கோடிட்டது மட்டும் மனிதம் பிரசுரித்து கருத்தை சிதைத்து தவறான இடத்தில் பிரசுரித்து இருந்தனர். இதில் வசனத்தில் உள்ள மாற்றம் பற்றியது அல்ல. வசன மாற்றத்திலுள்ள விடயம் ஒன்றே.

 

......பிழைகளை அம்பலப்படுத்தி, குறைபாடுகளை விமர்சனம் செய்வதில் நமக்குள்ள நோக்கம் வைத்தியர் ஒருவர் நோய்க்குச் சிகிச்சை அளிப்பது போல, நோயாளியைக் காப்பாற்றுவதற்ன்றி அவர் இறப்பதற்குச் சிகிச்சை அளிப்பதல்ல. குடல் வால் நோயுடைய ஒருவர், அறுவை வைத்தியர் அவருடைய குடல்வாலை அகற்றியதும் காப்பாற்றப்படுகிறார். தவறுகள் இழைத்த ஒருவர் சிகிச்சைக்கு அஞ்சித் தனது நோயை மறைக்காத வரையில் அல்லது சிகிச்சை செய்ய முடியாமல் போகுமளவுக்கு தனது பிழைகளில் அழுந்தி நிற்காத வரையில், அவர் உண்மையாகவும் விசுவாசமகவும் குணப்படுத்த விரும்பி தனது தவறுகளைத் திருத்தும் வரையில் நாம் அவரை வரவேற்று அவர் நல்ல ஒரு தோழராய் மாறுவதற்காக அவருடைய நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

---- கட்சி நடைமுறையைச் சீர் செய்வோம்-----மாவோ-1942------

 

நீங்கள் கருத்தைச் சிதைத்து வெளியிட்ட மேற்கோள் எல்லோருக்கும் பயன்படுத்த முடியாது என்பதை மாவோ தெளிவாக கூறியுள்ளார். அதை திரித்த மனிதம் பிழையான இடத்தில் இம் மேற்கோளை பயன்படுத்தியுள்ளனர். குறைபாடுகளை, பிழைகளை ஏற்றுக் கொண்டு வருபவர் இடத்தில் மட்டும் மட்டும் இவ் வாதம் பயன்படமுடியும். தனது நிலையில் அழுந்தி நிற்காத வரையில் கையாள முடியும். தனது நோயை சொல்ல வேண்டும். விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது. தனது நிலையை தெளிவான விளக்கங்கள், ஆதாரத்துடன் சொல்லவேண்டும்.

 

மாற்றுக் கருத்தை தனது ஆதாரத்துடன், விளக்கத்துடன் விமர்சிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் போது அம்பலப்படுத்தி அக் கருத்தை அழிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய(கருத்தை சிதைத்து) அவ் விடயத்தை மட்டும் பார்ப்போம். நோயாளி யார்? இங்கு நோயாளி கிடையாது. இரண்டு வைத்தியர் மருந்து கொடுப்பது தொடர்பாக விவாதிக்கின்றனர். ஒரு மருந்து(எமது) வழமையாக கொடுத்துவருவது. அது நோயை தீர்க்கும் வல்லமை கொண்டது. உ-ம்- முன்னைய சோவியத், முன்னைய சீனா, பிலிப்பைன்ஸ், பெரு,.... இரண்டாவது வைத்தியரின் மருந்து முன்பே பலரைக் கொன்றது. ஆனால் கொல்லாது என்கிறார். (2ம் அகிலம் சோவியத்---)அவ் வைத்தியர் எமது மருந்து கொல்லும் என்கிறார். ஆனால் ஆதாரத்தை முன்வைக்க முடியவில்லை. இரண்டாவது வைத்தியரின் மருந்து எமது மருந்துடன் கலந்து இருந்தமையால் சிலர் இறந்து போகின்றனர். (உ-ம்-முன்னைய சோவியத், சீனா முதலாளித்துவ மீட்பு.....) உடனே எமது மருந்து தான் கொன்றது என மற்றய வைத்தியர் வாதாடுகிறார். 2வது வைத்தியரின் மருந்தைக் கைக்கொண்ட சிலர் இறந்து போகின்றனர். (உ-ம் திரிபை கொண்ட கட்சிகள்) இங்கு பிரச்சனை ஒரு வைத்தியருக்கு உட்பட்ட மருந்துக்கள் அல்ல. இது அல்லது அது எனத் தீர்மானிக்க. இரண்டு வேறுபட்ட வைத்தியர் இரண்டு வகையாக சிந்திக்கின்றார்கள். இதுவே பிரச்சனை. இதை பிழையான இடத்தில் பயன்படுத்தி கருத்தை சிதைத்துள்ளனர்.

 

இதில் சமருக்கு புரியுதோ இல்லையோ வாசகர்களுக்கு (சமர், மனிதம்) நிச்சயம் புரிய வரும் எனக்கூறி, தமது சமரசத்துடன் கூடிய திரிபை பாதுகாத்து திணிப்பாக புகுத்த முயன்றுள்ளனர். திரிபு இல்லையென கருத்தியல் ரீதியில் வாதிட வக்கற்று, எம்மை மரபுவாதிகள் எனச் சொல்லி கேலி செய்ததுடன் தமது வாதம்(சந்தர்ப்பவாதம்) சமருக்குப் புரியாதென கூறி வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் எனச் சொல்லி கருத்தை பின்பக்க கதவுகள் மூலம் திணிக்க முயன்றுள்ளனர்.

 

குறிப்பு இக்கட்டுரையில் நாம் குறிப்பிட்டபடி மனிதத்துக்கு அனுப்பிய கட்டுரை எமக்கு மனிதம் ஆசிரியர் குழு திருப்பியனுப்பியுள்ளனர். மனிதம் பிரசுரிக்க மறுத்த நிலையையொட்டி ஒரு கடிதத்தை இணைத்துள்ளளர். அக் கடிதம் உட்பட எமது கட்டுரை அடுத்த இதழ் 9 இல் பிரசுரிக்கப்படும்.

 

 

1. இத்தாலி

கடந்த பல மாதங்களாக புனிதக்கதைகள் மூலம் இத்தாலியில் மிகப்பெரிய அளவில் வெளிக்கொணரப்பட்ட ஊழல் நடவடிக்கை முழுநாட்டையையுமே ஆட்டம் காண வைத்துள்ளது. இந் நடவடிக்கை மூலம் அனைத்து அரசியல் கட்சிகளின் மாபெரும் தலைவர்கள் முதல் நாட்டில் பெரிய அரசு தனியார் ஸ்தாபனங்களின் தலைவர்கள் பல வியாபாரிகள் வரை லஞ்சம் ஊழல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுமுள்ளனர். இதுவரை ஊழல் பேர்வழிகளின் எண்ணிக்கை 1000 ஜத் தாண்டியுள்ளது. இன்று வரை குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் இத்தாலிய சோசலிசக் கட்சியின்(முன்னைய) தலைவர் பெத்தினேகிருக்கி ஆவார். இவர் கட்சியின் நிதியை தவறாக கையாண்டு ஊழல் செய்தார் எனவும் களவாடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொண்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சித் தலைவர் பதவியைத் துறந்துள்ளார். இதே போல் இவரது கட்சியைச் சேர்ந்த இன்றைய ஆட்சியில் நான்கு அமைச்சர்களும் புனித கரங்களின் விசாரணைக்கு உட்பட்டிருப்பதால் தமது பதவிகளை இழந்துள்ளனர். கடைசியாக பதவியை இழந்தவர் நிதி அமைச்சர் கிளனிடிமோ மாற்றெல்லியாவார். தனியார் துறையைப் பொறுத்தவரையில் பியட் கார் கொம்பனியின் சிரேஸ்ட தலைவர்கள் இருவரும் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய ஓயில் கொம்பனியின் தலைவரான கபறியல் கலாகிற இதே கொம்பனியில் சிரேஸ்ட மூன்று அதிகாரிகள்( )என்ற எஞ்சினியரிங் கொம்பனியின் தலைவர் பிராங்கோ சியாத்தி என்போர் கடைசியாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் குறிபிடத்தக்கவர்கள். அடுத்துக் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர் றிப்பப்பிளிங்கள் கட்சியின் தலைவர் ஜேர்ஜீயோ மால்பா ஆவார்.'

 

இவ்வாறு முழு அமைப்பும் ஊழல், லஞ்சத்தால் உழுத்துப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள வேளையில் சோசலிச கட்சியின் தலைவரும் தற்போதைய அரசின் பிரதமருமான அமாத்தோ( )தனது சகாக்களை காப்பாற்றும் முயற்சியில் மக்களின் விருப்பத்துக்கெதிராக செயல்பட முனைந்துள்ளதை செனட் சபை அங்கத்தவர்கள் முதல் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர் இந்த அதிகாரவர்க்க பெருச்சாளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் புதிய கேவலத்துக்குரிய அரசியல் ஆலோசனையை முன் மொழிந்துள்ளார். அதாவது அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் வியாபாரிகளும் தமது தவறுகளை ஏற்று பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதைப் போல் மூன்று பங்குபணத்தை திருப்பி கையளித்து பொதுவாழ்விலிருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்குரிய சிறைத்தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படலாம். அத்துடன் அடுத்த யோசனை அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாகப் பெறும் கள்ளப் பணத்தை ஒரு குற்றமற்ற செயலாகக் கருதல்( )ஆகும். ஆனால் இவ்விரு யோசனைக்கும் எதிராக பரந்து பட்ட மக்களின் ஆத்திரமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

 

இதன் வெளிப்பாடாக இவ் யோசனைகளுக்குரிய தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி லூயிஜி ஸ்கால் பனோ தனது கையெழுத்திடாமல் நிராகரித்துள்ளார். உண்மையில் தற்போதைய பிரதமர் அமாத்தோவின் இந்த யோசனைகள் குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே. இந ;நடவடிக்கை பற்றிய தனது விமர்சனத்தில்( )பத்திரிகை சாதாரணத் திருடர்களை விட இந்த கள்வர்கள் ஏன் மேலானவர்களாகக் கணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென வினா எழுப்பியுள்ளது.

 

ஆனால் இது தான் முதலாளித்துவ அமைப்பின் நடைமுறை என்பது; ஒரு அப்பட்டமான உண்மை. ஏனெனில் எந்தவொரு அமைப்பும் அந்த வர்க்க சார்பானதாகவே செயற்படும்.

 

இதற்கொரு சிறந்த உதாரணம் இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரையில் வெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய ஏழைக்கூலி விவசாயிகளையும் பெண்கள், குழந்தைகள் வயோதிபர்களையும் ஒரு குடிசையினுள் (அவர்கள் பயந்து ஒளிந்திருந்து)வைத்துக்கொழுத்திய சம்பவத்தில் நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும் நீதிபதியால் அவர்கள் பணக்காரர்கள் நாகரீகமானவர்கள் எனவே அவர்கள் இவ்வாறான குற்றம் செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது கைக்கூலிகளும், முன்னை நாள் திரிபுவாதிகளும் இன்றைய முதலாளித்துவ மீட்சியாளர்களும் இந்த உண்மையை மறைக்க முயல்கின்ற வேளையிலேயே இவ் அமைப்பின் உண்மைச் சொருபம் தானாகவே அம்பலப்பட்டுப் போயிருக்கிறது.

 

 

ஜப்பானில் அரசியல் பாவங்கள்.

ஜப்பானிய அரசியலில் ஞானபிதா என அழைக்கப்படும் சின் கனேமாரு இன்று வரி ஏய்ப்பதற்காகவும், லஞ்சம் பெற்றதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இவரது வீட்டிலும், அலுவலகத்திலும் தேடுதல் நடத்திய போது 100 கிலோகிறாம் நிறையான தங்கப்பாளங்களையும் 30 மில்லியின் யு-எஸ் டொலர் பணமும்  கைப்பற்றியுள்ளார்கள். மொத்தப் பெறுமதி 51 மில்லியின் யு-எஸ் டொலர்களாகும். இதற்கு முன்னர் அன்றைய அரசியல் தலைவர் தனாக்கா கொம்பனியின் லஞ்சம் பெற்றதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. ஆனாலும் தனாக்கா நீதி மன்றத்தால் லஞ்சக் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும் அதற்கு அப்பீல் செய்து சிறை செல்லாததுடன் ஒரு குற்றவாளியாகவே இருந்து கொண்டு நாட்டை ஆண்டார். இந்த இருவருமே ஜப்பானைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் தலைவர்களாக இருந்து நாட்டை ஆண்டவர்கள், திரு கனேமாறு சென்ற வருடம் இடம் 500 மில்லியன் யென் அன்பளிப்பாக பெற்றுக் கொண்டார். இந்த லஞ்சப் பணம் பெற்றதை கனேமாறு ஏற்றுக் கொண்டு ஆரம்ப தண்டமாக 2 லட்சம் யென்களை செலுத்தி தப்பிக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் மக்கள் எதிர்ப்பு மேலோங்கிய நிலையில் பாராளுமன்றத்திலிருந்து விலகிக்கொண்டார். பினனர் கைது செய்யப்பட்டார்.

 

அன்று தனாக்கா தப்பிக் கொண்டார். ஆனால் இன்று கனேமாறு மாட்டிக்கொண்டார். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது அதாவது ஜப்பானிய மக்கள் சீரழிந்த முதலாளித்துவத்தின் தலைவர்களையும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இன்று ஜப்பானில் இவர்களைப் போன்ற வரி ஏய்ப்பாளருக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இத்தாலியைப் போன்று பல நூற்றுக்கணக்கான அதிகாரப் பேர்வழிகள் அம்பலப்படலாம்.

 

3) தென்கொரியா

 

தென்கொரியாவின் தற்போதைய அதிபர் தனது அமைச்சரவையில் உள்ள மூவரை ஊழல் காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்துள்ளார். இதற்கு முன்னர் நாம் அமெரிக்காவின் வாட்டர் கேட், ஈரான் கேட், ஊழல்களையும், இந்திய அதிகாரவர்ககத்தின் போர்பஸ்; ஊழலையும் அறிந்துள்ளோம்.

 

இவ்வாறு ஏகாதிபத்திய முதலாளித்துவ சமுக அமைப்பு அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் இவர்கள் கையாலாகாத்தனமான செயலாக நவ நாஜிகள் அமைப்புக்கள் புதிய வேகத்தில் முளைத்து வருகின்றன. ஏகாதிபத்தியவாதிகளின் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்கு பாசிசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இதை அனைத்துலக மக்களும் விழிப்புடன் இருந்து ஆரம்பத்திலிருந்தே முறியடிக்காவிட்டால் எதிர்காலம் பயங்கரமான அழிவுகளை மனித சமூகத்திற்கு ஏற்படுத்திவிடும்.

 

தமிழ் ஈழ அரசியல் இயக்கங்களின் ஆரம்ப காலத்தில் அவர்களும் இதே வர்க்க சார்பு நிலையை கொண்டிருந்தனர். அன்று பசி பட்டினியால் பத்து ரூபாய் களவு எடுத்தவர்களையும் கோழி திருடியவர்களையும் கூட மரணதண்டனை வழங்கி கொலை செய்தார்கள். அதேவேளை மக்களை கொள்ளையடித்த முதலாளிகளையும் பதுக்கல்காரர்களையும் பாதுகாத்தார்கள். அன்று பல இயக்கங்களும் இந்த வழியில் செயற்பட்டாலும் ஒரு உறுதியான முதலாளித்துவ வர்க்கச்சார்பான நிலைப்பபாட்டில் செயற்பட்டவர்கள் புலிகள் மட்டுமே. எனவே தான் தமிழ் தரகு முதலாளித்துவம் அவர்களை தனக்குள் இன்று முற்று முழுதாக ஆகர்சித்துக் கொண்டது.

 

----- நிர்மலன்------

 

இது போன்ற ஊழல் மறறும் இன்று உலகு எங்கும் பல போராட்டடங்கள் நடைபெறுகின்றன. இப்படி நடைபெறும் போராட்டங்களை சில பிழைப்புவாத கட்சிகள் ஒழுங்கு செய்வதும், சில தன்னிச்சையாகவும் நிகழ்கின்றன. மூறாம் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டஙகள் ஒரு சரியான கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் கீழ் நடைபெறவில்லை. தமது நலன்களின் அடிப்படையில் இப்போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந் நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் ஏமாற்றப்படுகின்றனர்.

 

இன்று, உலகில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இரண்டு வழிகளில் மட்டுமே தீர்கக முடியும். ஒன்று உலகை மறுபடி பங்கிட ஒரு உலக யுத்தத்தை நடத்துவது. இரண்டாவது ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துவது. இன்று மேற்கு நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை ஒரு சில உதாரணம் ஊடாக பார்ப்போம். பிரான்சில் மாசி மாதம் நடைபெற்ற தேர்தல் காலத்தில் 30 இலட்சமாக இருந்த வேலையில்லாத திண்டாட்டம் மே மாதம் 35.5 இலட்சம் உயர்ந்துள்ளது.

 

அதாவது மாதம் சராசரியாக 45 ஆயிரம் பேர் வேலை இழக்கின்ற அதேநேரம் வருடம் 60ஆயிரம் தொழில் நிலையங்கள் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் 30 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இது ஜரோப்பாவை மட்டுமல்ல உலகம் முழுமையாக இதுவே இன்றைய நிலை. இன்று அமெரிக்கா, ஜப்பான், ஜரோப்பாவுக்கு இடையில் நடைபெறும் பொருளாதார போராட்டம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சிறு தேசிய உற்பத்திகளை கூட முற்றாக ஒழித்து விடுகின்றனர். இந் நெருக்கடியை ஒரு உலக யுத்தத்தின் ஊடாக உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம் மீண்டும் சமநிலையடைய முயல்வர்.

 

இவ் நெருக்கடியையொட்டி சிலர் தற்காலிகமானது என வாதிடுகின்றனர். ஒரு உலக யுத்தமின்றி வாக்கப் போராட்டமின்றி இடைத்தீர்வை பெறமுடியும் என வாதிடுகின்றனர். இதில் எம்மவர்கள் தமது மேற்கத்தைய இருப்பிலான நம்பிக்கை சிதைந்து போகாத வகையில் கூறிக் கொள்ளும் சமாதானமே. இன்றைய பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். இதை சுருக்கமாக பார்ப்போம். இன்று அமெரிக்கா, ஜரோப்பா இடையில் தமது பொருட்களை விற்பதில் போட்டியிடுகின்றனர். முன்னைய சந்தை போட்டியின் இடையில் சிக்கி சமநிலை உடைந்து மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் உலக நாடுகளில் இருந்த தேசிய உற்பத்திகள் நிர்ப்பந்தம் மூலம் மூடப்பட்டு வருகின்றன. இவ் ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியாத வகையில் தேங்கி விடுகின்றன. இன்னொரு பக்கத்தில் மக்கள் பொருட்களை வாங்கும் சக்தியை இழந்து விடுகின்றனர். பொருட்களின் உற்பத்தியின் குறைப்புடன் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். வேலை நீக்கமும், பொருட்களின் விலை அதிகரிப்பும் காரணமாய் மேலும் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கின்றனர். இதனால் மேலும் உற்பத்தி தேக்கம் நிகழ்கின்றது. இதனால் மேலும் மேலும் உறபத்தி குறைப்பும் வேலை நீக்கமும் சுழற்சியாக நிகழ்கின்ற போது மேலும் பொருளாதர நெருக்கடி தீவிரம் அடைகிறது. அத்துடன் இவ் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான போட்டியை மேலும் தீவிரமடையச் செய்கின்றது. தொடரும் இந் நிலை சீர்திருத்த முடியாத வகையில் இன்று உலகை இராணுவப்பலம் கொண்டு அடக்க ஆரம்பித்துள்ளனர். இது மூன்றாம் உலக யுத்தத் தயாரிப்பின் ஆரம்பக் கட்டங்களே.

 

இன்றுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியில் ஒரு வர்க்கப் போராட்டம் சாத்தியமா? மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ஒரு சரியான கம்யூனிஸ்ட கட்சிகள் இல்லை என்றே அடித்துக் கூறலாம். சில நபர்கள் இருக்கின்ற இன்றைய நிலையில் இவர்கள் அறைகூவல் எதிர்காலத்தில் சரியான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் சந்தர்ப்பத்தை தீவிர பொருளாதார நெருக்கடிகள் உருவாக்கும். மூன்றாம் உலக நாடுகள் மற்றும் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் என அனைத்திலும் சிறிய பெரிய சரியான கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டுள்ளன. இவையே இன்று வர்க்கப் போராட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் சரியான வகையில் மக்களை அணிதிரட்ட ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை இன்று உலகம் கோருகின்றது. அதுவே மக்களின் எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய ஒரே தீர்வாகும்.

 

ஆசிரியர் குழு

 

 

நித்தியானந்தன் அ-ஆ-இ 13 இல் தற்கொலையை வீரம், தியாகம் எனக் கூறியது மட்டுமின்றி சமர் மீதும் மார்க்சிசத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் மீதும் பெயர் குறிப்பிடாத தாக்குதலை நடாத்தியுள்ளார். இது போன்று சிவசேகரமும் சுவடுகள் 44 இலும் வேறு சஞ்சிகைகளிலும் மார்க்சியத்தின் மீது தாக்குதலை நடாத்தியுள்ளார். தற்கொலையை ஒட்டிய கருத்தை ஆராய முன்பு இவர்கள் மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாணியை ஆராய்வோம்.

 

நித்தி தனது கட்டுரையில் மார்க்சிசத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் அறிவிலிகள், மூடர்கள் எனக் கூறி தனது மார்க்சிச விரோத உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எந்த மனிதனும் எந்த வர்க்கம் சார்பானவனோ அதன் மீது அறிவைக் கொண்டுள்ளனர். ஒருவனைப் பார்த்து அறிவிலி, மூடர்கள் எனச் சொல்வது என்பது பேராசிரியர்மாருக்குரிய அகங்காரத்தன்மையிலிருந்தே. அது தான் பேராசிரியர்கள் தமது பெயருடன் பேராசிரியர் என்ற பட்டத்தையும் இணைத்து மற்றவர்களை மந்தைகளாக இருக்க தாம் மேய்ப்பவர்களாக இருக்க விரும்புகின்றனர். நித்தியானந்தன் மார்க்சியத்துக்கெதிராக இன்றல்ல புலிகளில் இருந்தபோதே தாக்குதலைத் தொடுத்தவர். அன்று செந்தோழர் என கவிபாடியும் (வசைபாடியும்) பசைவாளிகள் என நையாண்டி செய்தும் (இவை விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் வெளிவந்தவை) பின் ரஜனி திராணகமவின் நினைவுக் கூட்டத்தில் ஆரம்பத்தில் மார்க்சிசத்தின் மீது தாக்குதலை நடத்தி...... தனது எதிர்ப்புரட்சி வர்க்கத்துக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

 

இவர் விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் கைதிகளை சித்திரவதை செய்யாதே எனப் பத்துக்கு மேற்பட்ட மாவோவின் கோட்பாட்டை அன்று போட்டு மக்களை ஏமாற்ற முனைந்தவர். இப்படிப் பல. பரீஸ் இலக்கியச்சந்திப்பில் மார்க்ஸ், பெண் உழைப்பு பற்றி கூறவில்லை மாறாக ஆண் உழைப்பு பற்றி குறிப்பிட்டதாக பொய்யைக் கூறி சபையின் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டார். இன்று இக்கட்டுரையில் மாவோ மாபெரும் புரட்சியாளனாக கூறியபடி மாவோவை துணைக்கு அழைத்துள்ளார். இவர் அ-ஆ-இ இதழ் 12 இல் இலக்கிய சந்திப்பு தொடர்பாக எழுதிய மொட்டைக் கடிதத்தில் (இது அ-ஆ-இ இல் பிரசுரிக்கப்பட்டது.) இப் பத்திரிகையில் தத்துவாயுதம் செய்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்து சமூகத்தை ரட்சித்து விடப் போவதாக சில சூனியங்கள் பிதற்றுவதிலிருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் தத்துவம் எழுதுவதை தமது பிழைப்புக்காக என்பதையும் தனது எதிர்ப்புரட்சி சேவையையும் ஏற்றுக் கொண்டுள்ளார். எம் மண்ணை உண்மையில் நேசிப்பவர்களை சூனியங்களாக காட்டி தமது மேதாவித்தனத்தை தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்திப் புலிகளைப் பாதுகாக்கின்றார். அன்று புலிகளிலிருந்த போது தேடிய தற்கொலைக்கான ஆதாரத்தை இன்று முன் வைத்துள்ளார். புலிகளின் தற்கொலையைக் கோழைத்தனமென மக்கள் முன் சொல்லின் புலியின் வீழ்ச்சியை கண்டு அஞ்சி முண்டியடித்து புலிககாக குரல் கொடுத்துளளார். அவர் மீது நாம் வைத்த முநதைய விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க முடியாதவர் புலிகள் பாதிக்கப்படும் போது சிவரமணியைச் சொல்லி புலிக்கு வக்காலத்து வாங்குகின்றார்.

 

பேராசிரியர் சிவசேகரம், நாம் சுவடுகள் இதழ் 43 இல் எழுதிய தற்கொலையை ஒட்டிய கருத்துகளுக்குப் பதிலளிக்காமல் தாக்குதலை நடத்தியுள்ளார். எம்மை செம்மஞ்சள் பத்திரிகையென குறிப்பிட்டு தனது கருத்தை வாதிடும் பலத்தை இழந்துள்ளார். இவர் அ-ஆ-இ- இதழில் கருக்கலைப்பு தொடர்பாக எழுதும் போது எம்மை இடதுசாரி குழு எனக் குறிப்பிட்டு தான் இடதுசாரிகளுக்கு எதிரானவர் என்பதை அக் கட்டுரையினூடாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தாக்க முற்பட்டவர் சுவடுகளில் இடதுசாரிக்குழுவை செம்மஞ்சளாகத் தாக்கி தனது அந்தரமான நிலையைக் காட்டிக்கொண்டார். இவர் பல பத்திரிகைகளில் மார்க்சியத்தை உயர்த்துபவர்களைத் தாக்கி வருகின்றார். அதில் அதிதீவிர புரட்சியாளர்கள் எனச் சொல்லுகிறார். அப்படியாயின் அது என்ன? புரட்சியாளருக்கும் அதிதீவிரபுரட்சியாளருககும் என்ன வேறுபாடு? இப்படி சட்டம்பித்தனம், மேதாவித்தனம்,அதிமேதாவித்தனம், புரட்சி ஏற்றுமதியாளர், அதிதீவிர மார்க்ஸிட் எனப் பல. இவரின் எதிர்ப்புரட்சி பிழைப்புவாத நோக்கிலான இச் சொற்கள் விளக்கமற்ற சொற்றொடர்களே.

 

இனி நாம் கட்டுரையை ஆராய்வோம். பேராசிரியர் எழுதிய கருத்தில் ஜேர்மனிய இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் மீதும் வேறொருர் மீதும், சமர் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார். மார்க்சிசத்தை கதைத்தோர் அறிவிலிகள் எனக்கூறி தனது பெரும் பூர்சுவாத்தன்மையை பாராட்டிக் கொண்டார். இவர் பலரின் கட்டுரையை ஆதாரத்துக்காக முன்வைத்தவர், அவைகளை எந்தப் புத்தகத்தில் எடுத்தார் என்பதை முன்வைக்கத் தவறியுள்ளார். இவைகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் நித்தியானந்தனின் எழுத்தில் நம்ப முடியாத தன்மையுள்ளது. காரணம் முன்பு ஒரு கூட்டத்தில் மார்க்ஸ் பெண் உழைப்பைப் பற்றிக் கூறவில்லை எனப் பொய்யைக் கூறி கைதட்டு வாங்கியவரே. ஒரு கட்டுரையில் வேறு யாருடைய கருத்தை முன்வைக்கும் போதும் ஆதாரத்தையும் முன் வைக்கவேண்டும். ஏனெனில் முன்னுக்கும் பின்னுக்கும், இடையிலும் கருத்தை சிதைத்துச் சொல்லாத ஒன்றை கற்பனையில் சொல்லி வாங்குபவர்கள் இப் பேராசிரியர்மார்களே.

 

கத்தோலிக்கத் திருச்சபை தற்கொலையைக் கண்டிப்பதாகக் கூறியவர் தொடர்ந்து பைபிளின் தற்காலை செய்ததற்கான ஆதாரத்தை முன் வைத்துள்ளனர். ஒன்றுக்கு ஒன்று முரணான இந் நடவடிக்கை கற்பனாவாத உலகைக் கோருவதே. தற்கொலை பற்றிப் பலர் கருத்தை தொடுத்தவர் மொத்தத்தில் தற்கொலையை நியாயப்படுத்த முனைந்துள்ளார். தாம் தற்கொலையை ஊக்குவிப்பவர்கள் அல்ல எனக் கூறியபடி கண்டிக்க மாட்டோம் எனக் கூறியபடி இரட்டைத் தன்மையுடன் தற்கொலையை ஊக்குவிக்கின்றார். இது ஏன்? இன்று தற்கொலையை நாடி நிற்பவர்கள் இச் சமூக அமைப்பின் மீதான தாக்கத்திற்கு உள்ளானவர்களே. இவர்கள் இச் சமூக அமைப்பிற்கெதிராகப் போராடி இச் சமூக அமைப்பை மாற்றப் போராடும் நடவடிக்கை என்பது இப் பேராசிரியர்மார்களின் பெரும் பூர்வுசுவா கனவுக்களுக்கெதிரானதே. ஒரு புரட்சியைக் கண்டு நடுங்கிச் சாகும் இவர்கள் அப் புரட்சியளார்கள் இறந்துபோகக் கோருகின்றார்கள். இது ஒரு எதிர்ப்புரட்சி நடவடிக்கை, புரட்சியாளர்கள் தற்காலை செய்து சமூகத்தை மாற்ற முடியுமென ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால் கண்டிக்க மாட்டோமெனக் கூறி மறைமுகமாக ஊக்குவித்தபடி இச் சமூக அமைப்பையும், ஏகாதிபத்தியத்தையும் காப்பாற்றுகின்றனர்.

 

இவ் விவாதத்திற்கு மாவோவின் எழுத்துக்களை ஆதாரமாக முன்வைத்துள்ளனர். மாவோவின் கருத்தை எங்கே எடுத்தார் என்ற ஆதாரத்தை முன்வைக்கவில்லை. ஆகவே நித்தியானந்தன் குறிப்பிட்ட கருத்து மட்டுமா மாவோவின் கருத்தென தெரியாதுள்ளது. இப் பெண் 1919 இல் தற்கொலை செய்திருந்தபடியால் மாவோவின் அப்போதைய வயது 25 மட்டுமே. 1919 மே மாதமே மாவோ முதன் முதலாக அரசியலில் பிரவேசித்த காலம் கூட. மாவோவின் இளமைக்கால எழுத்து சமூக விஞ.ஞானமாக முழுமையாக ஏற்று வெளிவந்திருக்க முடியுமா? என்ற வாதத்தை இக்கட்டுரை ஏற்படுத்திவிடுகின்றது. ஏனெனில் பின்னைய எழுத்துக்கள் முன்னைய எழுத்துகளுக்கு முரணானது. நாம் மாவோவின் ஆரம்ப எழுத்துக்களைப் பார்க்கவில்லை. ஆனால் நாம் எங்கெல்சின் எழுத்துக்களைப் பார்த்த போது அவரின் ஆரம்ப எழுத்துக்கள் பின்னைய எழுத்துக்களுக்கு முரணானதாகப் பலவுள்ளன. இன்று மார்க்சியத்துக்கு எதிராக எங்கல்ஸ்சின் பழைய எழுத்துக்களை முன் வைப்பவர்கள் பரிணாம விதியை நிராகரிப்பவர்களே.

 

1921 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவான போதும் 1919 இல் மாவோ கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகளில் நின்று இக் கருத்தை வைத்திருக்க முடியாது எனப் பார்க்கலாம். மாவோ 1919 இல் வைத்த கருத்தை ஒட்டி தோழர்களிடம் விமர்சனத்தை கோருகின்றார். இதன் பின் பின் இக் கருத்தை மாற்ற வாய்ப்பு இருந்திருக்கும். இது ஒட்டுமொத்த வடிவாக அன்று மாவோ கருதவில்லையென்பதை விமர்சனம் வைக்கக் N;காரும் போதே புரிந்துகொள்ளக் கூடியதே. மாவோவின் இளமைக்கால தவறான கருத்துக்களை, மற்றும் தவறான நடவடிக்கைகளை கைக்கொள்ள கோருவது பிழைப்புவாதமே. ஏனெனில் ஜரோப்பியக் கூட்டமொன்றில் மாவோவின் பெண் தொடர்புகளைக் கூறி ஜரோப்பிய பிரமுகர் ஒருவர் தன்னை நியாயப்படுத்த முனைந்து கைதட்டுக்களையும் வாங்கிக்கொண்டார். கடந்தகாலத் தத்துவவாதிகள் தமது வாழ்வில் இழைத்த எந்தத் தவறுகளையும் நாம் ஏற்பவர்கள் அல்ல. இப் பிழைப்புவாத பிரமுகர்கள் தத்துவவாதிகளின் சரியான கருத்தை நிராகிரித்தபடி அவர்களின் தவறுகளை மட்டும் எடுத்து தமது பிழைப்புக்கு நியாயம் கொடுக்கின்றனர்.

 

மாவோவின் தற்கொலையை ஒட்டிய கருத்து நித்தி குறிப்பிட்டது போல் அவை தான் எனின் நாம் தற்கொலை மீதான மாவோவின் கருத்தை நிராகரிக்கின்றோம். இனி மாவோவின் இக் கருத்தை ஆராய்வோம். மாவோ குறிப்பிட்ட அப் பெண்ணின் காதலில் ஏற்பட்டிருந்த இரும்புத்திரை அப் பெண்ணுக்கு மட்டுமா சீனாவிலிருந்தது? இல்லை மாறாக சீனா முழுக்க இதுவே நிலைமையாக இருந்தபோது ஏன் சீனாவில் முழுப் பெண்களும் தற்கொலையை கூட்டம் கூட்டமாகச் செய்யவில்லை. அங்கு பெண்கள் எதிர்த்துப் போராடுகின்றார்கள். மாவோ இதே கட்டுரையில் தான் தற்கொலையை ஏற்பவனல்ல மாறாக போராடவேண்டும் என்கின்றார். இப ;பெண்ணின் நிலையில் மாவோ இருந்திருப்பின் அங்கு மாவோ போராடியிருப்பாரே ஒழியே தற்கொலை செய்திருக்க மாட்டார். வேறொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சமர் குழுவில் உள்ள ஒருவர் முன்பு புலிகளின் வதைமுகாமில் சிக்கியபோது கண்கட்டப்பட்ட நிலையிலிருந்த அவரிடம் மாத்தையாவால் கேட்க்கப்பட்ட முதல் கேள்வி தற்கொலை செய்வதைப் பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதே. இதனூடாக புலிகளே மன உறுதியைப் பரிசோதிக்கும் ஒரு முக்கிய கேள்வியை கேட்டிருந்தனர்.

 

சிறைக்கூடங்களில் இரும்பு வலைக்குள் சிக்குண்டு போயுள்ள எத்தனையோ புரட்சியாளர்கள் தற்கொலை செய்கின்றார்களா? இல்லை அங்கு போராடுகின்றார்கள். எத்தனையோ பேர் அச்சிறையிலிருந்து விடுபட்டு போராடவில்லையா? ஏன் கிட்லரின் வதைமுகாமில் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டபோது (சீனாவில் அப் பெண்ணுக்கிருந்த நிலையை விட மோசமான) யூதர்கள் அங்கும் போராடி இன்று உயிர் வாழவில்லையா?!!! இரும்புத்திரை என வர்ணிக்கும் இச் சமூக ஒழுங்குமுறை எப்போது தகர்க்கப்படுகின்றதோ அதனூடாகவே ஒவ்வொரு மனிதனும் இரும்பு திரையிலிருந்து வெளிவருகிறான். சீனாவில் அப் பெண்ணின் நிலையிலிருந்த பெண்கள் சீனப்புரட்சியுடன் விடுதலை பெற்றனர். ஏன் அப் பெண்ணும் இருந்திருப்பின் புரட்சியுடன் விடுவிக்கப்பட்டிருப்பாள். உலகில் மனிதன் தவிர்ந்த உயிரினம் தற்கொலையை தமது வாழ்வுக்காக மேற்கொள்ளுவதில்லை. அவை இச்சமூக ஒடுக்குமுறைக்கு ஏதிராகப் போராடி சில மடிந்து போகின்ற சில உயிர் வாழ்கின்றன. இதுவே உயிரியல் இயங்கியல் இயக்கம். உயிரினங்கள் மீது ஒன்று மாறி ஒன்றாக எத்தனை இரும்பு வலைகள். இன்று எயிற்ஸ்; நோய்க்கு உள்ளாகியிருக்கும் ஒருவன் மாற்றமுடியாது என கூறி தற்கொலையை நாடின் (இதை வீரம், தியாகம்) நாளை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அவனின் மரணம் அர்த்தமற்றது. மாறாக வாழ்வுக்காக கோழைத்தனத்தை கைவிட்டு உயிர் வாழ வேண்டும். ஒருவனின் தற்கொலைக்காண காரணமாகவுள்ளவை (இங்கு நியாயமானவை மட்டும்) வெறுக்கப்படக்கூடியவையே. ஒரு மனிதன் தற்கொலையை செய்ய முன்பு சமூகத்திற்குப் பங்களிப்பு செய்திருப்பின் அவனின் அப் பங்களிப்பு வீரத்துக்கும், தியாகத்திற்கும் உரியது. அவனின் மரணம் கோழைத்தனத்துக்கும், துரோகத்தனத்துக்கும் உரியது. ஒரு மனிதன் சமூகத்துக்கு சரியாக சில காலமும், பின் துரோக நடவடிக்கையில் சில காலமும் ஈடுபடும் போது அவனின் சரியான காலத்தை சரியாகவும், துரோகத்தனமான காலத்தை துரோகமாகவும் ஆராயவேண்டும். துரோகத்தை சரியாகவோ, சரியை துரோகமாவோ பார்க்கக் கூடாது. இதுபோல் தான் தற்கொலையையும், அவனின் கடந்தகாலப் சமூகப் பணியையும் ஆராய வேண்டும்.

 

ஒரு புரட்சிக்கு தலைமை தாங்கும் ஒருவன் சிறைவாழ்வையும், தலைமறைவு வாழ்வையும் கைக்கொள்கின்றான் எனில், அங்குள்ள நெருக்கடியான இரும்புத்திரை தற்கொலையை நியாயப்படுத்த நியாயமான காரணமாகக் கொள்ளலாமெனில் எல்லாப் புரட்சித் தலைவர்களும் இறந்து போகவேண்டுமா? இப்படி தற்கொலையைச் செய்யின் அப் புரட்சிகர இயக்கத்தை நடுவீதியில் விட்டு துரோகத்தைக் கைக்கொள்கின்றான். தனது கோழைத்தனத்துடன் கூடிய இத் தற்கொலை புரட்சிகரப் போராட்டத்தில் எத்தனை பெரிய இழப்பைச் செய்கிறது. தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகள் அவர்களை தற்கொலை செய்யக் கோர முடியுமா? தலைமை தாங்கியவர்கள் நெருக்கடிகளைச் சொல்லி கூட்டமாக தற்கொலை செய்ய முடியுமா? வீரம் தியாகம் எனச் சொல்லின் வீரம் தியாகம் என்பவற்றுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகின்றன. இப்படியான இரும்புத் திரையில் உள்ள ஒருவன் தற்கொலை செய்யின் அவனை வீரன் தியாகியெனத் பாராட்டின் அதே இரும்புத்திரையிலுள்ள ஒருவன் தற்கொலை செய்யாமல் போராடின், கோழை, துரோகியெனச் சொல்ல முடியும் தானே. சிவரமணி போன்றோர் தற்கொலைகளை தியாகம், வீரம் எனின் அதே சிவரமணிக்கு உள்ள நிலையிலுள்ளவர்கள் தற்கொலை செய்யாமையை துரோகிகள், கோழைகள் எனச் சொல்லமுடியும். மறுதலையாக எம் மண்ணில் தற்கொலைக்குப் பதில் எதிர்த்துப் போராடுபவர்கள் வீரர்களாகவும், தியாகிகளாகயும் உள்ளனர். இன்று புலிகளின் வதைமுகாமிலுள்ள 5000 கைதிகள் சிவரமணியின நிலையை விட மோசமான நிலையிலுள்ளவர்கள். அவர்கள் தற்கொலையைச் செய்யாது தமது வீரம் நிறைந்த தியாகத்தைப் புரிகின்றனர். புலிகளின் சிறையிலுள்ளவர்களை விட குறைந்த நெருக்கடிகளையே கொண்டிருந்த சிவரமணி தனது தற்கொலையை கோழைத்தனத்துடன் கைக்கொண்டதே. இதற்கு எதிர்மாறாக நெருக்கடிகளைச் சந்திப்பவர்கள் வீரர்களாக வாழ்கின்றனர்.

 

இக் கட்டுரையில் வேறொரு இடத்தில் எதிர்நீச்சல் போட்ட மகத்தான அனுபவத்திலிருந்த சிவரமணிக்கு(பயண முகவர் நிலையம்) முகவரியை கொடுத்திருக்கலாம் எனப் பேராசிரியர் நையாண்டி செய்துள்ளார். இங்கு சிவரமணி போன்றோர் தற்கொலை செய்வதற்கு ஊக்கப்படுத்தி, மேலும் சிவரமணி போன்று மண்ணிலுள்ளவர்களுக்கு தற்கொலையை தீர்வு எனக் கூறி தற்கொலை செய்யக் கோருகின்றார். நாட்டை விட்டு ஒருவன் தப்பித்து வருவது அவனின் கடந்தகால அரசியல் பணியை ஒட்டியேயொழிய பிழைப்புக்காகவல்ல.

 

மாவோ அப் பெண் தற்கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த மூன்று காரணங்களை முன் வைத்தார். இது 1921 இல் உருவான கம்யூனிஸ்ட கட்சியின் அடிப்படை முரண்பாட்டுக்குட்பட்டதே. இம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இப் பெண்ணின் இம் முரண்பாடு ஒரு புரட்சியினூடாக தீர்க்கப்பட்டிருக்க முடியுமே ஒழிய அதைக்கண்டு அஞ்சி அதிலிருந்து விடுபட தன்னைதான் அழித்துக் கொள்வதல்ல. மாறாக வீரத்துடன் எதிர்த்துப் போராடவேண்டும். இன்று இந்தியாவில் பெண் ஒடுக்குமுறையின் தீவிரத் தன்மையால் அங்குள்ள பெண்கள் தற்கொலை செய்வது தீர்வாகுமா? ஏன் இதன் விளைவாக கருவில் உள்ள பெண் சிசுவைப் அழிப்பதும், பிறந்த பின் பெண் குழந்தைகளைக் கொல்வதும் தற்கொலைக்கு ஒத்ததேயாகும.; நீ தற்கொலை செய்வதைவிட இப்போதே சா எனச் சமூக அங்கீகாரத்தோடு கொல்கிறார்கள். இவைகளை வீரம், தியாகம் எனின் போராடுபவர்களை என்னவென்று சொல்வது? கோழைகள் என்பதா?

 

புரட்சியின் போது சிறையிலுள்ள ஒருவன் மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது அவன் தனது உயிர் வாழ்வுக்காகக் காட்டிக் கொடுக்க முடியும் தானே. இதை வாழ்வுக்கான வீரம், தியாகம் எனச் சொல்லமுடியுமா? நித்தியின் வாதத்தில் இவை வீரம், தியாகமே. சாவா, வாழ்வா என்ற நிலையில் வாழ்வுக்காகக் காட்டிக்கொடுக்கும் தன்மை வீரமல்ல தியாகமல்ல மாறாக துரோகத்தனமே. இங்கு சாவை எதிர்த்துப் போராடும் வாழ்வே வீரத்துக்கும் தியாகத்திற்கும் உரியது. சிவரமணி மணணில்(அவர் தப்பித்து வெளிவர முடியாத நிலையிருந்திருப்பின் மட்டும்) நெருக்கடியை முகம் கொடுத்து போராடியிருக்க வேண்டும். புலிகள் கைது செய்திருப்பின் ஏன் 5001 வது கைதியாக மாறியிருக்க முடியாது. மாறாக தற்கொலை செய்வதன் ஊடாக புலிகள் அழியப் போவதில்லை. மாறாக புலிகளின் அடக்குமுறையை நேரடியாக ஈடுபட்டு அம்பலபட்டு போகாத வரையில் தன்னைத்தான் கொன்று புலிகளுக்கு ஏற்பட்டிருந்த இக்கட்டிலிருந்து புலிகளை காப்பாற்றி விடுகிறார். இத் தன்மையிலிருந்து நித்தி தற்கொலையை புலிகளிடம் (இங்கு புலிகள் அம்பலமாவதை தடுக்க) பிடிபடாமல் இருக்க ஊக்குவிக்கின்றார். தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கும் பலர் இன்று துரோகத்தை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் கூட இந்த இரும்புத்திரையைக் காரணமாக கூறி தமது நிலையை நியாயப்படுத்த முடியும். தற்கொலை, காட்டிக்கொடுப்பு புரட்சி ஊழியர்களை அந்தரத்தில் விட்டுச்செல்லல், எல்லாமே துரோகத்தனமான கோழைத்தனமாகும்.

 

இங்கு பேராசிரியர் இன்னுமோரிடத்தில் தற்கொலை கோழைத்தனம் என்ற வாதம் குறுட்டுத்தனமானது என வாதிட்டுள்ளார். அப்படிப் பார்த்தால் தற்கொலை வீரம். இதுவே பேராசிரியரின் வாதம். இங்கு தற்கொலை ஊக்குவிக்கப்:படுகிறது. இன்னுமோர் இடத்தில் தற்கொலைப்படை போல் முன் செல்வது தற்கொலைத் தாக்குதலை குறிப்பிட்டு இதை தற்கொலையென வருணித்திருந்தார். நித்தி தற்கொலையை சரியாக வகுத்துக் கொள்ள முடியாதுள்ளார். எந்த உயிரினத்தை எடுக்கும் போதும் அவை தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அவை (பெற்றோர்)தற்கொலைப்படை போல் (பேராசிரியரின் பார்வைப்படி) மோதி சிலவேளைகளில் மரணித்துப் போகின்றன. தமது வாழ்வுக்காகப் போராடும்போது மரணிப்பதை தற்கொலையென வாதிடமுடியாது. அதுவே உயிரின இயஙகியல் விதி. இதனூடாகவே உலகில் உள்ள எல்லாம் வாழ்கின்றன.

 

பேராசிரியர் மேலும் தென்கொரிய தொழிலாளி தாய்சுன், மாவோவின் மனைவி சியாங்சிங், எல்சல்வடோர் கொரில்லாத் தலைவர் கார்ப்பியோ, மட்டக்களப்பு கவிஞ்ர் சுபத்திரன், ......இவர்களின் தற்கொலைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மற்றும் லெனின் மரணிக்க நஞ்சு கோரினார் எனின் அதே நோயால் பீடிக்கப்பட்ட அனைவரும் நஞ்சுகோரமுடியும், இங்கு தற்கொலை செய்ய முடியுமென நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஏன் லெனின் வேறு வழிகளில் தற்கொலை செய்ய முடியாது போயிருக்கவில்லை. மாறாக நோயின் கடுமை இயல்பாகவே கோர வைக்கிறது. இதை இப்படிப் பார்க்கலாம். கடவுள் இல்லையெனச் சொல்லுபவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடவுளே எனச் சொன்னால் கடவுள் இருக்கிறான் என்று ஏற்றுகொண்டவன் ஆகிவிடுமா? மாறாக சிறுவயதிலிருந்து இச் சமூக அமைப்பு ஊட்டி வளர்த்த கருத்துக்கள் தம்மை அறியாமல் வெளிப்படுவதே. சுயசிந்தனையை ஒரு விதத்தில் இழந்த நிலையில் இப்படிக் கோருவதேயாகும். லெனின் போன்றோர் சாதாரண மனிதர்களே. அவர்களே விமர்சனம், சுயவிமர்சனங்களைக் கடைபிடித்தவர்கள். மற்றவர்களுக்கு அதைப்பற்றி கூறி ஏற்க வைத்தவர்கள். தவறான எக் கருத்தையும் வெளியிடாதவர்கள் எனக் கூறுபவர்கள் இயங்கியலையும், பரிணாம விதியையும்; நிராகரிப்பவர்களே. நித்தியானந்தனால் பட்டியலிடப்பட்டவர்கள் இச் சமூக நெருக்கடிகளைக் கண்டு அவர்களின் வாழ்வுத்தளத்தில் நின்று போராட அஞ்சி தம்மை தாம் அழித்து தமது கோழைத்தனத்தை வெளிபபடுத்தியவர்கள். இவர்களின் தற்கொலைக்கு முந்திய வாழ்வு வீரத்துக்கும், தியாகத்துக்கும் உரியது. இவர்களின் தற்கொலை சமூகத்துக்குச் செய்த கோழைத்தனத்துடன் கூடிய துரோகமே.

 

சாதிப்போராட்டத்தில் சுபத்திரன் போல் மாவோவின் மனைவி போல் (நால்வர் குழு) எல்சல்வடோர் கொரில்லாத்தலைவர் போல்.... பலரும், தற்கொலைக்குப் பதில் இச் சமூகத்துடன் போராடி உயிர் வாழும் வீரர்களாகவும், தியாகிகளாகவும் போராடியிருக்க வேண்டும். இன்று சோமாலிய மக்கள் எலும்புக்கூடுகளாக வாழ வேண்டுமா? என நித்தியானந்தனிடம் கேட்பின் இல்லை தற்கொலை செய்வது சிறப்பு என வாதிடுவார். அம் மக்களின் வாழ்வும் விடிவற்ற இரும்புப்பிடிக்குள்ளானதே. இவர்கள் வாழ்வுக்காக எலும்புக்கூடுகளாகப் போராடுகின்றனர்.

 

புலிகள் தற்கொலையை முன்னெடுத்த போது எதிரியின் கைகளில் பிடிபடக் கூடாது எனக் கூறியபடி (இதை மீண்டும் இக்கட்டுரையில் நித்தி கூறியுள்ளார்.) எதிரியை மிகைப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்திப் போராடும் புரட்சியாளர்களை கோழைகள் எனக் கூறி தற்கொலையை வீரம் எனச் சொல்லி தீர்வாக முன்வைக்கின்றனர். வரலாற்றில் எத்தனை சிறைக்கைதிகள் எதிரியின் பிடியில் சிக்கிய பின்னும் இன்று உயிர்வாழவில்லையா? போராட்டத்துக்கு தலைமை தாங்கவில்லையா? எதிரியுடன் மோதி இறக்கவில்லையா? இவர்களையெல்லாம் கொச்சைப்படுத்தி தற்கொலையின் முடிவுக்கான காரணத்தின் விழைவை வீரமெனப் பாராட்டி ஊக்குவிக்கின்றனர். தற்கொலையின் முடிவுக்கான காரணத்தின் விழைவை போராடியே வெல்ல முடியும்.

 

புலிகளில் இணையும் ஒருவனை எடுப்பின் அவன் சமூகத்திற்கு எனப் போராட வரும் தன்மை (இங்கு பிழைப்புக்காக வரும் பிரமுகர்களையல்ல) தியாகத்திற்கும், வீரத்திற்கும் உரியது. ஆனால் போராட வந்த பின் புலியின் ஒருவனின் நடவடிக்கை துரோகத்திற்கு உரியதாக மாறிவிடுகின்றது. இதுபோல் தான் சிவரமணியின் கவிதைகள் (இங்கு கவிதைகள் ஆராயப்படவேண்டும்) வீரத்துக்கும், தியாகத்திற்கும் உரியதாக இருக்கலாம். ஆனால் சிவரமணியின் மரணம் துரோகத்துக்கும், கோழைத்தனக்கும் உரியது. பேராசிரியர், சிவரமணி போன்றோர் ஈழத்தில் தறகொலை செய்ய வேண்டுமென்கின்ற அதேநேரம் இங்கு ஈழத்தை நோக்கி குரல் கொடுப்பவர்களைப் பார்த்து ஏற்றுமதி செய்து ரட்சித்து விடப்போவதாகச் சில சூனியங்கள் பிதற்றுவதாகக் கூறி புலிகளின் இருப்பை பாதுகாத்துள்ளார். புலிகளின் தற்கொலை கோழைத்தனமானது என நாம் சொல்லவில்லை வீரம் எனச் சொல்லி வக்காலத்து வாங்கியும், மற்றும் புரட்சியாளர்கள் புலிகளின் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது மக்களின் மத்தியில் ஏற்படப்போகும் பாதிப்பிலிருந்து புலிகளைப் பாதுகாக்க தற்கொலையை ஊக்குவித்தபடி புலியெதிர்ப்பாளர்களாக தம்மைக் காட்டி பிற்போக்கு அரசியலை பாதுகாக்க முயல்கின்றார்கள் இப் பிழைப்புவாதப் பிரமுகர்கள்.

 

 

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இன்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. 1993 ஆடி 23 இல் பௌத்த சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக்கலவரமானது இன்று தமிழ் தேசிய இனத்தை அழித்துவிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. அன்று சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், பல கோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், தமிழ் தேசிய இனத்தின் பொருளாதாரத்தை சிதைக்க முனைந்தது. மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் ஸ்ரீலங்கா அரச வதைமுகாமில் 53 தமிழ் சிறைக ;கைதிகளை சித்திரவதை செய்து கண்கள் பிடுங்கப்பட்டும் வெட்டியும் படுகொலை செய்து தமிழ் தேசியத்தை அடக்க முயன்றது.

 

1983 களில் தமிழ் தேசிய இனத்தின் மீது நடாத்தப்பட்ட மிருகத்தனமான அடக்குமுறையைத் தொடர்ந்து தமிழ் தேசிய எழுச்சியானது வீறு கொண்டது. சிங்கள தேசியவெறி தமிழ்மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பை தொடங்கியதை அடுத்து பல அமைப்புக்கள்; உருவாகின. அதில் இணைந்து கொள்ள பல ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் மக்கள் ஆதரவுடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தம்மையும் இணைத்துக்கொண்டனர்.

 

இவ்விளைஞர்களின் தியாகங்களும், உணர்வுகளும் இன்று சிதைக்கப்பட்டு, புலிகளின் தேசிய வெறியாக மாறி அது பாசிசமாகிச் சீரழிந்துள்ளது. அன்றும் இன்றும் போராடப் புறப்படும் ஒவ்வொரு இளைஞர்களின் தியாகத்தையும் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பாற்ற பயன்படுத்துகின்றனர். 1983 இன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில் உந்தப்பட்ட தியாகிகளின் உட்படுகொலைகள், மாற்று இயக்க அழிப்புகள், கிராமங்களில் இருந்த நியாய விரும்பிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் கொல்லப்பட்டும், மக்களின் தேசிய உணர்வுகள் துப்பாக்கி முனையில் அடக்கப்படுகின்றது.

 

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை சிங்கள இனவெறி அரசு, தமிழ் துரோகிகளை அரவணைத்து, அவர்களை கைக்கூலிகளாகப் பயன்படுத்துவதன் மூலம் சிதைத்து வருகிறது. தமிழ் துரோகக் குழுக்கள் இந்தியா, இலங்கை என்று நக்கிப்பிழைக்கும் தொழிலை சிறப்பாகச ;செய்தபடி மக்களின் முதுகில் குத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் தேசியவிடுதலையை கொச்சைப்படுத்தி வரும் இந்தத் துரோகிகளை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

 

புலிகள் முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன் அவர்களின் பராம்பரிய பிரதேசங்களையும் அபகரித்து. அவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததன் மூலமும் தமிழ்மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

 

இன்று கூர்மையடைந்துள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடு தமிழ் மக்களின் தேசிய விடுதலையை கோரி நிற்கின்றது. அதை புலிகள் துப்பாக்கி முனையில் அடக்கி, ஒடுக்கி தமது சொந்த நலன்களின் அடிப்படையிலான நோக்கத்துடன் அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளுக்கு பாய்விரித்துள்ளதுடன், சிங்கள இனவெறி அரசுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளை தமிழ் மக்கள் முன் உத்தியோக பூர்வமாக வெளியிட மறுப்பதுடன், இது தொடர்பாக கேள்வி எழுப்புவோரையும் அழித்து வருகின்றனர்.

 

மக்களே!

1983 இல் சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பு நடவடிக்கையானது தீவிரப்படுத்தப்பட்டு இன்று மொத்த சமூகத்தையுமே சீரழித்துவிட முனையும் இன்றைய நிலையில், தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்க முனையும் புலிகளின் கைகளிலிருந்து, மக்களின் கைகளுக்கு போராட்டத்தை மாற்றுவதன் தேவை இன்று எம் எல்லோர் முன்நிலையிலும் உள்ளது.


பௌத்த சிங்கள இனவெறி அரசே:

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் கொடு!

பொருளாதாரத்தடையை நீக்கு!

யுத்தத்தை நிறுத்து!

 

புலிகளே:

தேசியவிடுதலையை காட்டிக்கொடுக்காதே!

மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கொடு!

சமரசங்களை நிறுத்து!

 

தமிழ் துரோகிகளே:

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு துரோகம் செய்யாதே!

மககள் மீதான படுகொலை, சித்திரவதைகளை நிறுத்து!

அரசுடன் கூடிக்குலாவுவதை நிறுத்து!

 

மூன்றாவது பாதை-

23-07-1993

 

 

இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம் உள்ளுர் தேசிய செல்வங்களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள்ளையாகும்.

 

இந்த வகையில் வாழைச்சேனையிலிருந்த காகிதத் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இங்கு தொழில் புரியும் 1350 தமிழ், முஸ்லீம் ஊழியர்கள் தமது வேலையை இழக்கும் அபாயத்திலுள்ளனர்.

 

தமிழ்பகுதியிலிருந்த மூன்று முக்கிய பெரிய தொழிற்சாலைகளான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பன மூடப்பட்ட நிலையிலும் இறுதியில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மூடிவிட இனவாத சிங்கள அரசு முயல்கின்றது.

 

40 வருட பழமைவாய்ந்த இந்த தொழிற்சாலையை திட்டமிட்ட இனவாத சூழ்ச்சியில் கடந்தகாலத்தில் நலினப்படுத்தப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த பழைய இயந்திரங்களின் மூலம் ஊழியர்களின் சொந்த முயற்சியில் உச்ச உற்பத்தியைப் பெற்று வந்தனர்.

 

இந்த தொழிற்சாலையைக் கொண்டு கிடைக்கப்பெற்ற வருமானத்தில் கட்டப்பட்ட எம்பிலிபிட்டிய காகித ஆலை நட்டத்தில் இயங்கிய காலத்திலும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை கைகொடுத்துப் பாதுகாத்தது.

 

இன்று திறந்த பொருளாதாரக் கொள்ளையின் ஒரு வடிவமான உலகமயமாதலின் தொடர்ச்சியில் காகிதம் மீதான சுங்க தீர்வையை அரசு ரத்துச் செய்வதன் மூலம் வெளிநாட்டுக் காகிதம் மலிவு விலையில் வெள்ளமாக இலங்கைக்குள் பாய்கிறது.

 

இதனால் அரச நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்கள் வாழைச்சேனைக் காகிதத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் வாழைச்சேனைக் காகித ஆலையில் உற்பத்தியான 3500 தொன் காகிதம் தேங்கி பாதுகாக்க வசதியின்றியுள்ளதுடன், மீள் உற்பத்தியாக சேமித்த காகிதமும் தேங்கத் தொடங்கியுள்ளது. மீள் உற்பத்தியைத் தடுக்குமாயின் அல்லது வெளிநாட்டு உற்பத்திக்கு மலிவு விலையில் செல்லுமாயின் இதைச் சேகரிக்கும் வறுமையிலுள்ள குடும்பங்கள் மேலும் பட்டினிச் சாவுக்கு நகர்த்தப்படுவர்.

 

இன்று உலகவங்கியின் கட்டளையை நிறைவு செய்ய அதுவும் அதைத் தமிழ்ப்பகுதியில் நடத்திவிட இனவாத அரசு தனது சிங்கள மேலாதிக்க நிலையில் நின்று செயல்படுகிறது. இன்று இலங்கையில் தேவை தமிழ் சிங்கள் மக்கள் இணைந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். இதை விடுத்து தமிழ்ப்பகுதி என கண் மூடின் மறுபுறம் இருப்பதை இழப்பதற்கு முதல்காலடி எடுத்து வைப்பதாக இருக்கும்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More