பி.இரயாகரன் - சமர்

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்

1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.

2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.

3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.

4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் படிக்க: சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.

மேலும் படிக்க: இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும்

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

மேலும் படிக்க: இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

மேலும் படிக்க: சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க: மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது!

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுவிடக் கூடாது என்பது தான் அரசின் பொதுக் கொள்கை. அரசு மக்களை வர்க்கரீதியாக மட்டும் பிரிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனம் மதம் சார்ந்து நின்று மக்களை ஒடுக்குவதன் மூலமும் பிரிக்கின்றது. இதேபோல் எண்ணிக்கையில் சிறுபான்மையான மதத்திலும் இனத்திலும் உள்ள, உள்முரண்பாடுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அணிதிரண்டு விடாத வண்ணம் இனம், மதம், சாதி, பிரதேசம், பால், பண்பாடு ரீதியான வேறுபாடுகளை தூண்டி மக்களை  மோதவைக்கின்றனர். இப்படி இலங்கை மக்களைக் கூறுபோட்டு மோதவைக்கின்றது. இதுதான் அரசின் இன்றைய பொதுக்கொள்கை.

மேலும் படிக்க: இன்றைய இலங்கையும் புலம்பெயர் அரசியலும்

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09

அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்

ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான். ”அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

மேலும் படிக்க: இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9

இனவாதத்தை பேரினவாதிகள் மட்டும் கொண்டிருக்கவில்லை, பேரினவாதத்துக்கு எதிரானவர்களுக்குள்ளும் இனவாதமே தொடருகின்றது. இனவாதம் எங்கும் எப்போதும் மக்களுக்கு எதிரானது. முள்ளிவாய்க்கால், யூலைப் படுகொலை .. என அனைத்தையும் இனவாதம் ஊடாக அணுகி குறுக்கி விடுகின்ற இனவழிவுவாதமே, இன்று இலங்கையின் மைய அரசியலாகத் தொடருகின்றது.

கடந்த காலத்தில் எந்த இனவாதம் மக்களை முள்ளிவாய்க்காலில் பலியிட்டதோ, அந்த இனவாதம் அப்படியே மீண்டும் ஒரு புதிய பலிக்களத்தை தயாரிக்க முனைகின்றது. இந்த இனவாதத்தால் கொல்லப்பபட்டவர்கள் மக்கள். அவர்களுக்கு இன (மத, சாதி ..) அடையாளம் போட்டுக் காட்டுவதன் மூலம், மற்றைய இன (மத, சாதி ..) மக்களை எதிரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் எதிரியுடன் சேர வைக்கின்ற இன வக்கிரங்கள் தான், குறுகிய இனவாத அரசியலின் உள்ளடக்கமாக இருக்கின்றது.

மேலும் படிக்க: முள்ளிவாய்க்கால் படுகொலையும், தொடரும் இனவாதமும்

பாட்டாளி வர்க்க சக்திகள் அரசியற் செயல்தளத்தில் தீர்மானகரமாகத் தலையிடுகின்ற காலத்தில், சுயநிர்ணயம் தொடர்பான இன்றைய பொதுப்புரிதல் அபத்தமாகிவிடுகின்றது. தேசிய இனம் என்ற சொல் பலவித அர்த்தம் கொண்டதாக, முரணாக, முரண்பாட்டை தோற்றுவிப்பதாக இருப்பதால், இது பற்றிய அரசியற் தெளிவு இன்று அவசியமானது. மார்க்சிய லெனினிய மூல நூல்கள் தேசிய இனம் என்ற பதத்தை, தேசங்கள் - தேசிய இனங்கள் - தேசிய சமுகங்கள் - இனக்குழுக்களை குறிக்கவும், இதனடிப்படையில் தனிநபர்களின் தோற்றுவாயை வரையறுப்பதற்கும், தேசிய உறவுகளை விளக்கவும், சிறிய தேசிய பிரிவுகள், சிறுபான்மை தேசிய பிரிவுகள் முதல் மக்களுக்கு இடையிலான உறவுகளை குறிக்கவும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இனம் என்ற சொல், ஒரே அர்த்தத்தைக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை. பல அர்த்தங்கள் கொடுக்கக் கூடியது. ஒரே அர்த்தம் கொண்டு அணுகினால், ஒன்றையொன்று முரண்படுத்தி விடும். இனங்காட்டக் கூடிய சிறப்பான இயல்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களுக்குரியதே தேசிய இனம் என்ற சொல்.

மேலும் படிக்க: தேசங்கள் - தேசிய இனங்கள் - தேசியக் குழுக்கள் - இனக்குழுக்கள் பற்றியும், சுயநிர்ணயம் தொடர்பாகவும்

உலகமயமாதல் சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிகர வடிவம் என்ன? இது கடந்தகால கட்சிரீதியான வடிங்களையும், போராட்டங்களையும் மறுத்துவிடவில்லை. அதேநேரம் ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரத்தை ஜனநாயகப்படுத்தி மையப்படுத்தக் கோருகின்றது. எளிமைப்படுத்திய வடிவில் இடது முன்னணியாக அனைத்துப் புரட்சிகர சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஸ்தாபன வடிவமும், அதற்கான முதன்மையான அரசியல் பாத்திரமும் அவசியமானது. தனித்தனிக் கட்சிகளின், அமைப்புகளின் செயற்பாடுகள் இதை மையப்படுத்தி, இதற்கூடாக செயற்படுவது அவசியம். முரண்பாடுகள் என்பது முரண்பாடுகளைக் களையும் நோக்கில், நடைமுறைப் போராட்டத்தை முன்நகர்த்துவதாக இருக்க வேண்டும். பல்வேறு முரண்பட்ட சக்திகளையும், முரண்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளி தான் ஐக்கியம். புரட்சிகர சக்திகளும், போராடும் மக்களும் பிரிந்து நிற்காத வண்ணம், பாட்டாளி வர்க்க அரசியல் செயல்தந்திரம் இருக்க வேண்டும்;. முரண்பாடுகளை களைவதற்கான புள்ளி, நடைமுறையில் ஒன்றிணைந்து போராடுவது தான். ஆகவே முரண்பாட்டுடன் இணைந்து போராடும் புள்ளியும், அதற்கான வடிவமும் அதற்கான முதன்மையான இடமும் இன்று அவசியமானது. இதற்கான ஒரு பொது அரசியல்வெளியை உருவாக்கி அரசியல்ரீதியாக முன்னெடுப்பது தான், ஐக்கியத்துக்கான அரசியல் செயல்தந்திரமாக இருக்க முடியும்.

மேலும் படிக்க: ஐக்கியமும் போராட்டமும்

மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயற்படவும் கூடாது. இதுவே தேர்தல் நடக்கவுள்ள வடக்கில், அரசு கட்டமைத்துள்ள இராணுவப் பாசிசத்தின் வெட்டுமுகமாகும். இந்த நிலையில் வடக்கு தேர்தலில் தமிழ் மக்களை தோற்கடித்தல் மூலம், இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லையென்று உலகுக்கு அரசு காட்ட முற்படுகின்றனர். வடக்கில் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து இருப்பது என்பதன் அர்த்தம், தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுவதும், தேர்தல் ஜனநாயகத்தையே கண்டு அஞ்சுவதும் தான். இந்த அரசின் பரிதாபகரமான இன்றைய அரசியலாகும்.

இந்த நிலையில் தேர்தலை வெல்வது என்ற அரசின் முடிவே, தேர்தல் ஜனநாயகத்தை மறுப்பதாகிவிட்டது. தேர்தல் மோசடியில் தொடங்கி மக்களை பிளப்பது வரையான, எல்லா மக்கள் விரோத செயற்பாட்டையும் கொண்டு தமிழ் மக்களை தேர்தலிலும் தோற்கடித்தல் என்பதே அரசின் செயல்தந்திரமாகும். யுத்தத்தில் வென்றவர்கள் தேர்தலில் வெல்வது பற்றிப் பேசுகின்றனர்.

மேலும் படிக்க: வடக்கு தேர்தலும் பாசிட்டுகளின் உத்தியும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More