கிளைகளில் மொட்டுக்கள் அரும்பினால்
விதைகளைப் பரப்பிவிடும்
பட்சிகள் வரும்
கூடு கட்டும் குஞ்சுகள் பொரிக்கும்

சூரியதேவனின் சுடுவீச்சுக்கு
இளசுகள் இளைப்பாற வந்துவிடும்
விழுதுகள் வேரோடு இணையும்
கொப்புக்களிற்கு தூணாகித் தாங்கிவிடும்

மூச்சுக்காற்றையும் கண்காணிக்க
புலத்துப் பணத்தில்
புலனாய்வுக் கருவிகள் இறக்கப்பட்டதில்
மக்களையும் எதிரியையும் மறந்து போயினர்

புல் நுனியின் அசைவுகளே
அச்சத்தை கொடுத்தபோது
விருட்சங்கள் மட்டுமென்ன விட்டுவைக்கப்படுமா
வெட்டிச் சரிக்கப்பட்டன விமலேஸ்வரன்களாய்

நந்திக்கடல்வரை
போராளிகளையும் மக்களையும்கூட இரையாக்கிய பசிக்கு
இராஜபக்ச குடும்பத்து
எலும்புத்துண்டுகள் ருசிக்காமலா இருக்கும்…………..

 

http://www.ndpfront.com/?p=8217