குற்றச்சாட்டு 4

 

"பிரான்சில் சோபாசக்தி, சுகன், ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது. அ.மார்க்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த பிற்பாடு அந்த துண்டுப்பிரசுரம் நாம் கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக சோபாசக்தி சுகன் அ.மாக்ஸ் மீதான அரசியல் அற்ற வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே இருந்தது. இதுவே எமது முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாயிற்று. எனினும் உங்களின் உறவை பேணினேன்."

 

இப்படி அசோக் குற்றம் சாட்டுகின்றார். ஆச்சரியம்தான்.

நானும் அசோக்கும் சேர்ந்து அ.மார்க்ஸ் க்கு எதிராக ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடவேயில்லை. இப்படி வெளியிட்டதாக கூறியதுடன், அதில் "வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே" இருந்ததாக கூறுவது தான், அதைவிட மேலும் ஆச்சரியம். அ.மார்க்ஸ் க்கு எதிராக நான் மட்டும் தான் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டேன்.

 

"அ.மார்க்ஸ் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி, அவரை அழைத்து கூடிக் கூத்தடிப்போர் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்" என்று வெளியிட்ட துண்டுப்பிரசுரம் <இங்கு இணைக்கப்பட்டுள்ளது.> அவர் அதை என்னுடன் சேர்ந்து வெளியிடவில்லை. சரி சேர்ந்து வெளியிடாத அவருக்கு, இதில் என்ன முரண்பாடு உள்ளது. இன்றாவது சொல்லுங்கள் பார்ப்போம். இதில் என்ன "வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே" உள்ளது?. அதையாவது சொல்லுங்கள்.

 

நானும் அசோக்கும் சேர்ந்து வெளியிட்டது "இருள்வெளி" க்கு எதிரான துண்டுப்பிரசுரம் தான். "ஒரு சமூகச் சீரழிவின் தொடக்கம்…" <பார்க்க துண்டுப்பிரசுரத்தை.> இதை நான் எழுதி, அவர் பார்வைக்கு வைக்கப்பட்டதன் பின் வெளியிடப்பட்டது. "கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக" என்பது, அவரின் அவதூறு குற்றச்சாட்டுகள் உள்ளடங்கிய பல பொய்கள் போல் ஒன்றுதான். அவர் கூறுவது போல் நடந்தது என்று வைப்போம். அசோக் இப்பவாவது சொல்லுங்கள், இதில் என்ன முரண்பாடு என்று? "வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே" என்று, இதில் எதைச் சொல்லுகின்றீர்கள்?

 

வலதுசாரிய புஸ்பராஜா எப்படி இரயாவுடன் சேர்ந்து இதை விடமுடியும் என்று இதை ஆட்சேபிக்கும் வரை, நீங்கள் என்னுடன் இதில் உடன்பட்டு நின்றீர்கள். இதை நாம் அறிவோம். உள்ளடக்கத்தில் முரண்பாடு என்றால், அது எதில்?


         

குற்றச்சாட்டு 5

 

அடுத்து பார்ப்போம்.

 

"அதன் பின் ஒரு கட்டுரை(!) ஒன்றில் பிரான்சில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் அவர்களை உங்கள் வழமையான வசைமொழியால் திட்டி அக் கொலையை நியாயப்படுத்தியிருந்தீர்கள். இது உங்களுக்கும் எனக்குமான பலத்த முரண்பாட்டை ஏற்படுத்த நான் உங்கள் அரசியல் உறவுகளை துண்டித்துக்கொண்டேன். உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்." வேடிக்கைதான். நாங்கள் அரசியல் அநாதையானது இருக்கட்டும். "வசை மொழியால் திட்டி அக் கொலையை நியாயப்படுத்தியிருந்தீர்கள்."

 

என்று கூறும் நீங்கள், அந்த வரலாற்றை திரிக்கின்றீர்கள்.

 

சஞ்சிகையின் கூட்டறிக்கையில் முதல் வரியில் எமது பெயர் இருப்பது, அவதூறு பொழியும்  அசோக்கின் கண்ணுக்கு தெரிவதில்லை. பார்க்க துண்டுப் பிரசுரத்தை. "பாரிஸ் நகரில் சபாலிங்கம் அவர்கள் படுகொலை – மாற்றுக் கருத்துகளுக்கு படுகொலை தீர்வாகாது" என்ற <இந்தத் துண்டுப்பிரசுரத்தை,> கூட்டாக தயாரிப்பதில் நாங்கள் பங்கு கொண்டோம். அந்தக் கொலையை கண்டித்தவர்கள் நாங்கள். இப்படியிருக்க, இதனால் "உங்கள் அரசியல் உறவுகளை துண்டித்துக்கொண்டேன்." என்பது ஆச்சரியம்; தான். சபாலிங்கம் கொல்லப்பட்ட மாதம் வெளியாகிய சமர் 11 இதழில் முதல் பக்கத்தில், எமது கருத்தை மீளத் தெளிவாக வெளியிடுகின்றோம்.

 

<பார்க்க சமர் 11 >

 

இப்படி உண்மை இருக்க, அசோக் அவதூறு புரிகின்றார். அவர் தன் கொலைகார வரலாற்றை புதைத்தது போல், இதையும் புதைத்து திரித்து விடலாம் என்று நம்புகின்றார்.

 

சபாலிங்கத்தின் அரசியலுடன், அவரின் நடைமுறையுடன் நாம் உடன்பட்டது கிடையாது. எம்முடன் உறவு இருந்தது. அவரின் மரணத்தின் பின் அவரை வைத்து அரசியல் பிழைப்பை நீங்கள் நடத்திய போது, நாம் அதை அம்பலப்படுத்தினோம். இதில் தான் உங்கள் பிழைப்புவாதக் கோபங்கள், வலதுசாரிய புஸ்பராஜாவுடன் உங்களைச் சேர்த்துக் கொண்டது.  

 

குற்றச்சாட்டு 6

 

"1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஜிதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஜிதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாவலனின் முயற்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்.

அந்த வரலாற்றை இன்று என்ன மாதிரி திரிவுபடுத்தி போராட்டத்தை தாங்கள்தான் முன்னெடுத்தது போன்ற விளம்பர அரசியலை செய்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு உங்கள் மொழியில் “விபச்சார அரசியலாக” தெரியவில்லையா. இந்தப் போராட்டத்தை முன்னின்று தலைமையேற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி, சோதிலிங்கம், அவ்வை, தவராஜா என்ற ஒரு நீண்ட பட்டியலையே என்னால் முன்வைக்க முடியும்."

 

இது அசோக் நவலனுடன் சேர்ந்து வைத்த வேடிக்கையான பொய்யான புனைவு அவதூறு.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துணையுடன் ராஜனி திரணகம எழுதிய முறிந்தபனை என்ற நூல் என்ன சொல்லுகின்றது.

 

"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணமால் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். ....அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ...அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதராண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள்." (பக்கம் 97)

 

தொடர்ந்து பாருங்கள்.

 

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினராகப் பங்குபற்றினான். றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மார்க்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணாமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் றயாகரன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த றயாகரன் யூலை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜீலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவித இம்சையும் அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அந்த விடயம் பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசும் பணி மாணவர்களிடமே விடப்பட்டது. ஏனையோர் வேண்டாத பயத்தினால் பின்வாங்கியபோது, மாணவர்கள் மீண்டும் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .....மாத்தையா கைலாசபதி கலையரங்கில் நடந்த கூட்டத்தில், சமூகமளித்து அந்த உறுதிமொழியை அளித்தார். மாத்தயா தனது கூற்றிலே றயாகரன் "கிரிமினல்" இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தாரா என விசாரணை செய்யப்பட்டாரெனக் கூறினார். கிரிமினல்கள் வேலைகளில் அசகாய சூரர்களான விடுதலைப்புலிகள், ஏனைய இயக்கங்களை கிரிமினல் இயக்கங்களென முத்திரை குத்துவது வேடிக்கையானது. றயாகரன் கைலாசபதி கலையரங்கிலே பிரசன்னமாயிருந்து வேண்டுகோளின் பேரில் மேடையில் தோன்றியமை எதிர்பாராத நிகழ்வாயிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தது. றயாகரன் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனக்குச் செய்த சித்திரவதைகள் உட்படத் தனது அனுபவங்களை விபரமாக எடுத்துக் கூறினார். அவர் வெளியிட்ட முக்கியமான தகவல்களில் ஒன்று, மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவையைச் சேர்ந்த தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியின் முக்கிய பிரமுகரான திரு. கைலாசபிள்ளை .....தன்னுடைய முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தமையாகும். சில நாட்களுக்கு முன்னர் "ஈழமுரசு" பத்திரிகை தனது முக்கிய செய்தியில் திரு.கைலாசபிள்ளை பற்றிக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. ஒரு பேட்டியில் அவர், த.வி.ஐ.மு. இனியும் தேவையில்லையெனக் கூறி, ஆயுதப் போராட்ட இளைஞர்களைப் புகழ்ந்தார்." (பக்கம்169,170)
 
இப்படி அந்த வரலாறு இருக்கின்றது. நான் போராடியதால் மாணவர்கள் என்னை அவர்களின் தலைவராக தெரிவு செய்கின்றனர். போராடாமல் எப்படி அது சாத்தியம்.

 

பார்க்க,< நான் முன்னின்று வழிநடத்திய போட்டோக்களை.>

 

இது பொய்யா?

 

"சுந்தரமூர்த்தி, சோதிலிங்கம், அவ்வை, தவராஜா".. போன்றவர்கள் என் தலைமையை எதிர்ர்தார்களா? வேடிக்கையாக இருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் என் பெயர் போராட்ட குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட போது, எந்த தனிநபரும் இதை ஆட்சேபிக்கவில்லை. போராட்டக் குழு எவரும் என் தலைமையை மறுக்கவில்லை. விமலேஸ்வரன் என்.எல்.எவ்..ரி.யின் ஆறு பேர் கொண்ட மாணவர் அமைப்புக்குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினர். நான் படித்த பாடசாலையில் நான் கல்வி கற்பித்த போது, அவன் அதே பாடசாலையில் என் மாணவன்.

 

புளட்டில் இருந்து ஒதுங்கிய அவனை மீண்டும் புரட்சிகர அரசியலில் ஈடுபடவைத்தவன் நான். அவனா! என் தலைமையை ஆட்சேபித்தான். புலுடா விடக் கூடாது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து போராடினோம். அதற்கு தலைமை கொடுத்தோம். இதை திரிப்பது, மறுப்பது, "தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில்" என்ற கூறி திரிப்பது, மற்றவர்களை மறுப்பது பொய்யும் பித்தலாட்டமுமாகும்.

 

"விஜிதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன்; ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால்.." இப்படி கூறுவது அபத்தம்;. மாணவர்கள் போராடினார்கள். இதற்கு பலர் தலைமை தாங்கினர். நாவலனோ, விமலேஸ்வரனோ தலைமை தாங்கவில்லை. மாணவர் அமைப்பின் தலைவர் ஜோதிலிங்கம். செயலாளர் விமலேஸ்வரன். என்னைப் போல் நாவலனும், அமைப்புக்குழுவில் இறுதியில் இணைக்கப்பட்டவர்கள்.

 

இப்படி உண்மை இருக்கின்றது. அமைப்புக்குழுவில் நான் இல்லை என்றால், என் போராட்டமே இல்லையாகிவிடும் என்ற அசோக்கின் கண்டுபிடிப்பு நகைச்சுவைதான்.    

 

தொடரும்

 

பி.இரயாகரன்
23.03.2010       

 

 13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

 

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

 

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

 

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)