அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.
இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.
இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.
தமிழினமோ செய்வதறியாது கூனிக் குறுகி நிற்கின்றது. பயப்பீதியில் உறைந்து, நிலை தடுமாறுகின்றது. தனிமனிதரிடையே பழிவாங்கும் உணர்வு வன்மமாகி, கொப்பளிக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழினம் துயரமடைந்து நிற்கின்றது. துன்பம் தாங்காது அழுகின்றது. இந்த மரணங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நம்ப முனைகின்றது. மண்ணிலிருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வரை, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குள் தவிக்கின்றது. இது ஒரு இனத்தின் ஓலமாக எழுகின்றது.
தனிப்பட்ட ரீதியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எனெனின் அது இனம் மீதான இனவழிப்பின் ஊடாகவே அரங்கேறியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் உணர்வு கொண்டவர்கள்; தான், இந்த மரணத்தில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக அரசுடன் நிற்கின்றவர்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் குதூகலிக்கின்றனர்.
ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?
தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில், தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது. அதற்காக அது பாசிச மாபியா என்ற அரசியல் வழியை தேர்ந்தெடுத்தது. இதை அது தமிழ் மக்கள் மேல் திணிக்க, தமிழ்மக்கள் மேலான பேரினவாத இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான் உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. இதற்காகத்தான், பாசிச மாபியா என்ற அரசியலை செய்வதாக கூறிக்கொண்டது.
இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும், மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.
தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.
இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று, தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.
இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர். தமிழ் மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைக் கண்டனர். இதற்குள்தான் தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையும் காணப்பட்டது.
ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லா மனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.
புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.
இப்படி தமிழ்மக்கள் மரணித்துப் போன இந்த புலித் தலைவர்களின் கீழ் வாழ்ந்தார்கள். இதனால் அவர்களின் மரணத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இனவழிப்பு நடத்தி, தம் தலைவர்களை கொன்றதை அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.
தம் இனத்தின் மேலான ஒரு இனவழிப்பு யுத்தத்தில், அவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் புலிகளுடன் நின்றனர். அவர்கள் அரசுடன் சேர்ந்து நிற்கவில்லை. புலிகள் தமிழ் மக்களுடன் நிற்கா விட்டாலும், அவர்களுக்கு எதிராக செயற்பட்ட போதும், எதிரிக்கு எதிராக புலியுடன் நிற்கவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த அரசியல் எதார்த்தத்தை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். மக்கள் நம்பிய அந்த தேசியத்துக்காக, துரோகம் செய்யாது புலித் தலைவர்கள் போராடி மடிந்துள்ளனர். இந்த மக்கள் அதற்குத்தான் தலைசாய்க்கின்றனர்.
நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?
புலிகளின் தவறுகள் தான் தோல்வியாகியுள்ளது. புலிகளின் அரசியல் தான், இன்று தமிழ் மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியுள்ளது. மொத்தத்தில் தங்கள் தவறுகளை அவர்கள் கடுகளவு கூட சுயவிமர்சனம் செய்யவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கூட கோரவில்லை. இந்த நிலையில் நாம் அவர்களின் தவறுகளை அங்கீகரிக்க முடியாது. பொறுப்புள்ள வகையில் அதை சுட்டிக்காட்டி விழிப்புற வைப்பதன் மூலம் தான், மக்களின் எதிரியை வீழ்த்த முடியும். மீண்டும் அதே தவறுகளுடன் தமிழினம் பயணிக்க முடியாது.
இந்த தியாகமும், இந்த அவலமும் தவறான ஒரு அரசியல் வழிகாட்டலின் கீழ் நிகழ்ந்துள்ளது. எதிரி நண்பன் என்ற மக்கள் அரசியல் அடிப்படை இன்றி நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் எதிராகவே, இது தன்னை நிலைநாட்டிக் கொண்டது. அனைத்துவிதமான மக்கள் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கூட இது மறுதலித்தது. தேசிய பொருளாதாரத்தை சிதைத்தது. பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்களை காவு கொண்டது. தேசியத்துக்காக, மக்களின் உரிமைக்காக நின்றவர்களை கொன்று குவித்தது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்துதான் அது தற்கொலை செய்து அழிந்தது.
இந்த விடையத்தை இன்று புரிந்துகொள்ள முடியாத எல்லையில் தமிழ் சமூகம், இந்த மரணத்துக்கு தலை சாய்க்கின்றது. நாங்கள் இதற்காக அல்ல. மாறாக எதிரியிடம் சரணடைந்து ஒரு துரோகத்தை செய்ய மறுத்து, தம் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மடிந்ததற்காக, புலியில் இருந்து ஒரு துரோகத்தை புலியின் பெயரால் இனி செய்ய முடியாத வண்ணம் தம் மரணம் மூலம் பதிலளித்த அந்த நேர்மைக்காக, நாங்கள் தலைவணங்குகின்றோம்.
இறந்தவர்கள் எம் எதிரி வர்க்கம் என்ற போதும், பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அந்த தனித்தன்மை என்றும் மதிப்புக்குரியது. எல்லா வர்க்கத்தையும் தன் பின்னால் பலாத்காரமாக திரட்டிவைத்துக்கொண்டே, இந்த அரசியல் தற்கொலையை செய்துள்ளது. புலிகள் போராட்டத்தில் சரி, பிழை என்று கற்றுகொள்ள நிறைய விடையங்கள் உண்டு. புலிகளை எதிர்மறையில் உள்வாங்கி, அதை சமூகத்தின் முன் உடைத்துப் போடுவது அவசியமாகின்றது.
மக்களின் எதிரி, புலியை முன்னிறுத்தி தன்னை தூய்மைப்படுத்த முனைகின்றது. எல்லாம் புலிகளால் என்று சொல்ல முனைகின்றது. எல்லாம் பிரபாகரன் என்று காட்ட முனைகின்றது. எல்லா அரசியல் வேஷதாரிகளும்; இதற்குள் தான் புழுக்கின்றனர். நாம் இதைத் தெளிவாக மறுக்கின்றோம்;. இந்த இடத்தில் புலிகளின் தவறுகளை ஈவிரக்கமின்றி சரியாக இனம் காட்டி, எதிரியே இவை அனைத்துக்குமான அரசியல் காரணம் என்பதை அம்பலப்படுத்திப் போராட வேண்டியுள்ளது. எதிரிகள் பலர் என்பதால், இதற்கான உழைப்பு அதிகமானது. இதைச் செய்ய உங்களை தோழமையுடன் அழைக்கின்றோம்.
பி.இரயாகரன்
18.05.2009









Comments
இன்று விடுதலைப்புலிகள ் அழிக்கப்பட்டதாக வும்> தலைவர்கள் கொல்லப்பட்டதாக வும் பிரச்சாரப்படுத் தும் இனவாதிகளும்> அவர்களின் எடுபிடிகளும் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்து விட்டதாக மகிழ்கின்றனர்.
இன்று விடுதலைப்புலிகள ் தமது பிழையான அரசியல் பாதை மூலம் தமிழர்களின் விடுதலைப்போராட ்டத்தை தோற்கடித்தார்க ள். இதற்கு சிங்கள அரச அந்தச் சவப்பெட்டிக்கு ஆணியடித்துள்ளது .
புலிகள் தன்னை வளர்த்த வர்க்கத்திற்கு விசுவாசமாக இருந்து போராடிச் செத்திருக்கின்ற ார்கள். இவர்களின் இழப்பிற்கு தலைவணங்கும் வேளையில் தமிழ் மக்களிடையே இருக்கின்ற பிரதான எதிர்ப்புரட்சிக ர சக்திகளை இனம் காணவேண்டிய தேவை மிக அவசியமாகின்றது.
புலி எதிர்ப்பாளர்கள்
புலிகளிடையே இருந்து தோன்றியுள்ள புதிய ஆதிக்க வர்க்கம்
இந்தப் பகுதியினரை எதிர்க்கொள்ள வேண்டிய தேவை மிக அவசியமாகின்றது. இத்துடன் இளம் புலிப்போராளிகள ை நாம் உண்மை வர்க்க எதிரிகளை இனம் காண உதவவேண்டிய வரலாற்றுக் கடமையும் இருக்கின்றது.
ஆதிக்க வர்க்கத்தின் பாவையாக செயற்பட்டு சிதைத்த புலிகளைப் போல புலி எதிர்ப்பாளர்கள் >
புலிகளிடையே இருந்து தோன்றியுள்ள புதிய ஆதிக்க வர்க்கம் இவர்களை ஆழ வேர் ஊன்ற விட்டபின்னர்தான ் மக்கள் மத்தியில் இருந்து அம்பலப்படுத்துவ ோமானால் இன்றும் ஒரு 30 ஆண்டுகள் மறுபடியும் பின்னோக்கித் தான் செல்லோம்.
"நேசத்திற்குரிய இளம்புலியேஇ
தேசபக்ததேஇ
மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
உன்னை காவு கொள்ளும் உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
உன்னை காவுகொள்பவர்கள் வேறுயாரும் அல்ல.
உன்அப்பன் பாட்டனை விட வசதிபடைத்தவர்கள ் வளர்ந்து வந்த சமூதாயத்தில் தமக்கென சரியான இடம் கிடைக்கவில்லை என தம் நலன் கருதி இனஒற்றுமை பேசிய கயவர்கள் தான் உனது உள்ளுர் எதிரிகள்-
வெளியில் இருந்து வரவில்லை.
இவர்கள் எம்மில் இருந்து உருவாகியவர்கள். தமக்கான சந்தைப் போட்டியில் இருந்து உருவாகியவர்கள். இவர்களில் ஒடுக்குபவன் ஆரிய பெருமை பேசஇ எம்மவர்கள் ஆண்ட பரம்பரை பற்றிக் பேசினார்கள்.
நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
சிறிலங்கா அரசு இன்று கொல்கின்றது.
அவர்களுக்கு இந்திய பிராந்திய வல்லரசுஇ மேற்கு ஏகாதிபத்தியங்கள ும் அனுசரனை வழங்குகின்றது.
இதனை உன்தலைமை உன்னை உணரவிடவில்லை.
உன்தலைமை தனது குழுங்குழுவாத அரசியலின் மூலம் உனது எண்ணத்தைஇ சிந்தனை மழுங்கடித்தனர்.
தமக்கு கிடைத்து பணத்தின் மூலம் ஒரு பொருளாதார வளம் பொருந்திய அமைப்பாக உருவாகியிருக்கி ன்றார்கள்.
நீங்கள் சில பத்து பேர் கொண்ட ஒரு தலைமைக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கின்றீர்கள ்.
நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
உனது உண்மை எதிரியை இனம்கண்டு கொள் இன்று உன்னைக் கொல்லும் உனது தலைமைஇ
சிறிலங்கா அரசுஇ பிராந்திய வல்லரசுஇ மேற்கு ஏகாதிபத்தியங்கள ே.
உன்னை காப்பாற்ற புலம்பெயர் மக்கள் எவ்வாறுதான் போராடினாலும் எவ்வித மனவுறுத்தலின்றி பத்திரிகை அறிக்கை விடும் ஒடுக்குபவன்.
உன்னிடம் எண்ணை இல்லைஇ
பெரும் வளம் இல்லைஇ
பெரும் சந்தை இல்லை.
இவைகள் இருந்திருந்தால் மேற்கு ஜனநாயகம் உன்னை காப்பாற்றியிருக ்கும்.
நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
உழைக்கும் மக்களை நம்புஇ அவர்களின் உதவியுடன் உன் போராட்டத்தை தொடரு.
மக்களை விடுதலை செய்யப் போராடுஇ நீ புதிய தளத்தை உருவாக்கு
நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.
இதுதான் நாம் புலிப்போராளிகள ுக்கு கொடுக்கும் செய்தியாகும்.
இந்தியவல்லாதிக் கம் உட்பட அனைத்து ஆதிக்க சக்திகளும் உனது அழிவிற்கு துணை நின்றிருக்கின்ற னர். உனக்கு ஆதரவாக நீ எதிர்பார்த்திரு ந்த ஜ.நா மன்றம்> ஐரோப்பிய ஒன்றியம்> அமெரிக்க தேசம் கைகொடுக்க வில்லை. கைகொடுக்கும் எண்ணியது அரசியல் அறிவீனமே.
இன்று மக்களின் பிணங்களின் மேல் வெற்றிக் கொடி ஏற்றும் புலியெதிர்ப்பாள ர்கள்> இனவெறி அரசும் மக்களின் உரிமைகளை வழங்கப்போவதில் லை. உன்னிடம் இருக்கம் சக்தியை ஒன்றிணைப்பதும் தொடர்ந்தும் எமது மக்களின் விடிவிற்காக போராடுவதற்கு கடந்த வந்த பாதையை சுயவிமர்சனம் செய்வதும்> நேசசக்திகளை இணைத்துக் கொள்வதிலுமே தமிழ் மக்களின் வெற்றி தங்கியுள்ளது.
"பொறுப்புள்ள வகையில் அதை சுட்டிக்காட்டி விழிப்புற வைப்பதன் மூலம் தான், மக்களின் எதிரியை வீழ்த்த முடியும். மீண்டும் அதே தவறுகளுடன் தமிழினம் பயணிக்க மூடியது". இன்ஷா அல்லா நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் அதை தொடர்ந்து வலியுரூதி வெற்றி காண வேண்டும்
Still in india today servay people hero is identify as பகத்சிங் it is not Gandhi,
so பொது எதிரிக்கெதிராக போராடவேண்டிய அந்த போராட்டத்தை we will start imdietaly......
தோல்வியிலிருந்த ு பாடம் கற்றுக்கொள்வதற் கான நட்புரீதியான பிரசார முன்னெடுப்புக்க ளும், எம்மிடமிருந்தும ் எதிரிகளின் பரப்புரை மயக்கத்தில் கிடக்கும் சிங்கள முஸ்லிம் மக்களிடமிருந்து ம் நட்பு சக்திகளை திரட்டி எடுத்து பொது எதிரிக்கெதிராக போராடவேண்டிய அந்த போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்க ான அடிக்கட்டுமான வேலைகளைச் செய்யவேண்டிய பொறுப்பு தமிழரங்கத்துக்க ும் உண்டு.
இதை நோக்கி நகர்வீர்கள் என நம்புகிறேன்.
RSS feed for comments to this post