வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

 

சிங்கள அரசு. இதன் மூலம்தான் புலிக்கு எதிரான யுத்த முனையில், ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை பேரினவாத பாசிட்டுகள் பலியிடுகின்றனர். இப்படி இன்று இறந்து போன ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் மரணத்தை, தான் இனவெறியூட்டிய தன் சமூகத்தின் முன் முற்றாகவே இருட்டடிப்பு செய்து வருகின்றது. கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, இந்த பாசிச பலியிடலை முற்றாக மூடி மறைத்து வருகின்றது. இதற்கு அமையவே, படுகொலைகள் மூலம் சிங்கள ஊடகவியலின் வாயையே மூடிவைத்துள்ளது.

 

இதன் மூலம் பாசிச யுத்தத்தை, தன் இனச் சமூகம் மீது கூட அது மறைமுகமாக நடத்துகின்றது. ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை இதற்காக பலி கொடுக்கின்றது. அதேநேரம் இவர்களைக் கொண்டு, தமிழினவழிப்பைச் செய்விக்கின்றது.

 

உழைத்து வாழும் மக்களை இன ரீதியாக ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தியே, இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்த பாசிச அரசு செய்கின்றது. இதற்கு உடந்தையாகவே புலிகள்; உள்ளனர். இப்படி ஒரு இளம் தலைமுறை, சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்க,  பலியிடப்படுகின்றது. சிலர் சுரண்டி வாழ, இனவிரோதமும் இனக் குரோதமும் விதைக்கப்படுகின்றது. இதற்கே இந்த யுத்தம். இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான புலிகள் மட்டும் இறக்கவில்லை. சிங்கள இராணுவமும் தான் மரணிக்கின்றது.    

 

ஆனால் ஏதோ புலிகள் சண்டையின்றி தோற்பது போன்ற ஒரு பிரமையை விதைத்து இதன் மூலம் தன் இனமக்களையே அவர்கள் அறியமுடியாத ஒரு சூனியத்தில், சூனிய பிரதேசத்தில் வைத்து பலி கொடுக்கின்றது இந்த பாசிசம். இதை தன் இன மக்களுக்கு முழுமையாகவே மூடிமறைக்கின்றது. புலிகள் தம் கடுமையான தற்காப்பு எதிர்ப்பு மூலம், பல ஆயிரம் இராணுவத்தை கொன்று குவிக்காமல் அவர்கள் தோற்;கவில்லை. 10000 புலிகள் இந்த இனவழிப்பு யுத்தத்தில் செத்தால், அதேயளவுக்கு அல்லது வென்றவன் அதில் பாதியாவது கொல்லப்படுவான். இப்படி புலிகள் சிங்கள இராணுவத்தைக் கொன்று தான் மரணிக்கின்றனர். இந்த விடையம் வெளிவருவதில்லை.

 

இப்படித்தான் மூடிமறைக்கப்பட்ட இனவழிப்பு யுத்தத்தினை பாசிசம் கட்டமைத்துள்ளது. இதற்கு மாறாக பிரச்சாரப் படம் காட்டும் பேரினவாதப் பாசிசப் பின்னணியோ அவலமானது. பாரிய உயிரிழப்பிலானது. இப்படி இந்த தமிழினவழிப்பு யுத்தம், உண்மையில் தன் சொந்த மக்களுக்கும் எதிரானதுதான். அவர்களின்  குழந்தைகளை இது பலிகொடுக்கின்றது. 

 

இப்படி சிங்களப் பாசிச பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனவழிப்பு யுத்தத்தின் மூலம்,  ஒருபுறம் அப்பாவித் தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கின்றது. மறுபக்கத்தில் ஆயிரக்கணக்கான புலிகளை கொன்றுமுள்ளது.

 

இந்த எதார்த்தத்தின் பின் சிங்கள பேரினவாதம், இதற்காக தன் இனத்தைச் சேர்ந்த சில ஆயிரம் பேரை பலியெடுத்துள்ளது. இதை தன் இனத்துக்கு, பேரினவாத பாசிட்டுகளால் சொல்ல முடியாதுள்ளது. அப்படிச் சொன்னால் அழிவுகரமான இந்த இனவழிப்பு பாசிச யத்தத்தை, தம் இனமக்கள் எதிர்த்துப் போராடுவார்கள் என்பது தான் இதன் எதார்த்தம். இதனால் யுத்தத்தின் அவலமும், அது சாhந்த உண்மைகளையும் மூடிமறைக்கின்றனர். மாறாக சொந்த இனத்துக்கு பொய்யான படம் காட்ட, பிரச்சாரப் படங்களையும் விளம்பரத்தையும் தயாரிக்கின்றனர்.

 

இதைத்தான் கூலிக்கு மாரடிக்கும் தமிழ் நாய்கள், விசுவாசமாக பிரசுரிக்கின்றனர். வேறு அரசியல் இல்லாததால் நாய்ப் பிழைப்பு. இலங்கை பாதுகாப்பு அமைச்சை நம்பி, இணையங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள். அவை இதற்காகவே, இந்த நோக்கத்தோடு, பேரினவாத விசுவாசிகளாக இயங்குகின்றது. இதுதான் இன்று புலியல்லாத, மாற்றுத் தளமாக உள்ளது.

 

இப்படி எங்கும் மனித அவலம், அதன் மேலான சமூக அக்கறையீனமும் விரிவானது. அனைவரும் பாசிட்டுகளுக்கு விசுவாசமாக அதை நக்குவதன் மூலம், மனித அவலங்களை நியாயப்படுத்துகின்றனர்.   

 

பி.இரயாகரன்
10.05.2009