காட்சி: 1

செந்தில்:
அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே?

 

கவுண்டமணி:
ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான்.

அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி தானு இப்ப “நாமளே” போய் சொன்னாலும் நம்ப மாட்டானுங்க. அந்த அளவுக்கு ஜனங்களை பிரெய்ன் வாஷ் பண்ணாச்சுடா.

செந்தில்:
பாவம் ஜனங்கனே!

காட்சி: 2

கவுண்டமணி:
டேய் என்னடா ஆச்சு உனக்கு?

செந்தில்:
அண்ணே நேற்று அணுசக்தி ஒப்பந்தத்தில் சில பக்கத்தை பொழுதுபோகாமல் படிச்சு தொலைச்சுட்டேனே, மனசே சரியில்லைன்னே…

இந்த அளவுக்கு ஆணே நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டி கொடுக்குறது..

கவுண்டமணி:
அடே எவ்வளவு நாளைக்கு தாண்டா ஆயிரக்கணக்கான கோடியினை கொள்ளையடிக்குறது, மீண்டும் மக்களை போய் சந்திச்சு வாக்காளப் பெருமக்களே என இழிப்பது?
அதுக்கு தான் நம்ம கூட்டாளி பசங்களான பாசக, போலி கம்யூனிஸ்டு என எல்லா பயலோடவும் பேசி இந்த ஏற்பாட்டை பண்ணோம்.

மொத்தமாக நாட்டை விக்குறது., லட்சக்கணக்கான கோடியினை சுருட்டி விட்டு எஸ்கேப் ஆகுறது.

செந்தில்:
அப்ப தேர்தல் கிடையாதானே?

கவுண்டமணி:
ஆமாண்டா, இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இந்த தேர்தல் எல்லாம்.

செந்தில்:
அப்ப மக்கள் போராட மாட்டாங்க

கவுண்டமணி:
டேய், இன்னைக்கு ஓட்டு உரிமையை தவிர எந்த உரிமையும் தரலை. ஜனங்க என்ன போராடிகிட்டா இருக்காங்க. அப்புறமா “தேர்தலுன்னு ஒன்னு இல்லை” சொன்னவுடன் அப்படியே மக்கள் கிளர்ந்து எழ இது என்ன மக்கள் அரசாடா!

நாம எவ்வளவு அடிச்சாலும் இந்த ஜனங்க நம்மளை ரொம்ம நல்லவேன்னு தான்டா சொல்லுவாங்க…

செந்தில்:
நம்ம வடிவேலு பய மாதிரி கரக்டா சொல்லிட்டேங்கணே….