முன்பக்கம்

உலாவுவோர்

We have 151 guests online

உலாவியோர்

Content View Hits : 4893022
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
305
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16785
11797
11230

+567
ஞாயிறு, 01 ஆவணி 2010
 


தாய்மை விற்பனைக்கு

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் பெரியார்.

ஆம்என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை பாக்கியம்இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள்.

 

இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது. அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால், ‘கணிசமான பணம்தரப்படுகிறது.

 p1.jpg

ஆம், தாய்மை ஒரு தொழிலாகமாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் வறுமையைக் காரணம் காட்டி, ஏழைகளைச் சூறையாடுகிற சமூகம். இந்த முறையும் ஏழைப் பெண்களின் வறுமைக்கு மாற்றாக தாய்மையைச் சூறையாடியிருக்கிறது.

 

மனித உறவுகளில் உன்னதம் என்று சொல்லப்படுகிற தாய்மையையும் வர்த்தகமாயிருக்கிறது.

 

வசதியான தம்பதிகளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடு அல்லது குழந்தைப் பெற்றுக் கெள்ளும் பிராசஸ்ரொம்ப இம்சைஎன்ற காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் அற்ற மனைவி, அதனால் தனது சொத்துக்கு வாரிசு அற்று போய்விடுமே என்ற ஏக்கம்இவைகளே வாடகைத் தாய்மார்களை உருவாக்கி வருகிறது.

 

குழந்தை பெற்றுத்தரும் வரை பத்து மாத காலத்துக்கு இந்தப்பெண்கள் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைப் பெற்றவுடன் தொப்புள் கொடியோடு குழந்தைக்கும் தாய்க்குமான உறவைத் துண்டித்து கொள்ளவேண்டும்.

 

ஒருவேளை பிறக்கும் குழந்தை ஊனமுற்று இருந்தால், அந்தக் குழந்தையை தாயிடமே விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

 

கருவுருகிற பெண் தன் உணவை, தன் சுவாசத்தை, தன் உயிரையே ஊட்டித்தான் குழந்தையைச் சுமக்கிறாள். ஒரு பெண் தாய்மை அடைவது என்பது ஓய்வு நேரத்தில் மெல்லிய வயலினிசையை கேட்பது போல், இனிமையான அனுபவம் அல்ல. அது உயிர் வலி.

 

pic3.jpg

எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும், தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது, கட்டுக்கடங்காத அளவுக்கு வெறுப்பு வருவது மனித இயல்பு. ஆனால், ஒரு பெண்ணை மறுபிறப்பு அடைய வைப்பது மாதிரி பிறக்கிறது குழந்தை.என்னை இம்சைப் படுத்திய குழந்தை எனக்க வேண்டாம்என்று எந்த தாயாவது குழந்தையை தள்ளி வைப்பாளா?

 

மாறாக, ‘தன்னைவிட குழந்தைதான் முக்கியம்என்கிற உணர்வைதான் ஒரு பெண்ணின் மனதில் கர்ப்பகால நாட்களும், பிரசவவலி என்கிற அந்த மரண தரிசனமும் ஏற்படுத்தி இருக்கும். அதுதான் தாய்மை.

சமூக விரோதியால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கருவுகிற பெண், குழந்தைப் பேற்றுக்கொண்டாலும், ‘ச்சீ இந்தக் குழந்தை எவனோ ஒரு பொறுக்கியால் வந்தது. இது எனக்கு வேண்டாம்என்று தள்ளி வைக்கமாட்டாள். ஏனென்றால், அது அவள் குழந்தை.

இந்த உணர்வு தாய்மையைத் தவிர வேறு எந்த உறவுகளிலும் கிடையாது. (குழந்தை வளர வளர எதையும் தானாக செய்து கொள்கிற அறிவு வர வர அந்தப்பாசம் தாய்க்கு குறைந்து கொண்டு வருவதும் இயல்பே)

 

ஆணின் பங்களிப்பு என்பது குழந்தை வளர்ப்பிலும் குறைவே. பெரும்பாலும் குழந்தைக்கும், தகப்பனுக்குமான உறவு குழந்தையின் ஆரோக்கியமான நேரங்களில் குழந்தையை கொஞ்சுவது, குழந்தையோடு விளையாடுவது என்பதாகவே இருக்கிறது.

 

இன்னும் சரியாக வரையறுத்து ஒரே வரியில் சொல்வதானால், குழந்தையைக் கொஞ்சுவதால் தகப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தன் மகிழ்ச்சிக்காகவே அவன் குழந்தையைக் கொஞ்சுகிறான்’.

ஆனால் ஒரு தாய், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத நேரங்களில் குழந்தையோடு அதிக நேரம் செலவிடுகிறாள். குழந்தையின் துன்பத்தைத் தன் துனபமாக அனுபவிக்கிறாள்.

 

குழந்தையைக் குளிப்பாட்டுவது, மலம் கழித்தத் குழந்தையைக் கழுவி சுத்தப்படுத்துவது இவைகள் எல்லாம் தாயின் வேலைகளே.

 

பல இரவுகளில் குழந்தையின் அழுகைச் சத்தம் தாயைப் பதட்டப்படுத்திவிடும். ஆனால், தந்தையோ எரிச்சலடைவான்.

 

வாடகைத் தாய்மார்களை உருவாக்குகிறவர்கள், பெண்களின் இந்த உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த முறை பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற உடல் மற்றும் உளவியல் சார்ந்த வன்முறையாகவே இருக்கிறது.

***

 

கணவன்- மனைவிக்குள் தகராறு. ஒருவரை ஒருவர் வேவு பார்த்துக் கொண்டு நேர்ந்து வாழ்வதைவிட , இனி பிரிந்து வாழ்வது இருவருக்கும் மரியாதைஎன்று முடிவுசெய்து சட்டரீதியாக தங்கள் விவாதத்தை ரத்து செய்து கொள்கிறார்கள், அப்படி ரத்து செய்து கொள்ளுபோது குழந்தைகளை பங்கிடுகிற துயரமும் நடைபெறுகிறது.

 

அதுவரை குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கெடுக்காத கணவன், மனைவியுடனான மணமுறிவின் போது மட்டும் குழந்தை மீது அதிக உரிமை கொண்டாடுபவனாகக் காட்டிக் கொள்கிறான். தன் மனைவியின் உயிர் ஆதாரதம் குழந்தைதான் என்பது அவனுக்குத் தெரியும்.

 

மனைவியின் மீது வெறுப்புக் கொண்ட கணவன், உளவியல் ரீதியாக அவளைத் துன்புறுத்த, குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்க பெரிதும் முயற்சி எடுத்து குழந்தையை சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது குழந்தையிடம் தாயைப் பற்றி மிக மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கி, குழந்தை மனதில் தாயின் மீது வெறுப்பு ஏற்படச் செய்தோ பிரித்துக் கொண்டு போன கணவன், குழந்தைகளை நல்லமுறையில் £வளர்ப்பதில்லை என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த வாடகைத் தாய்மார்கள் முறையால் இனி அடாவடி ஆண்கள் சார்பாக, ‘குழந்தைகள் மீது தாய்மார்களுக்கு உரிமையில்லைஎன்கிற ஒரு பொதுக்கருத்து பரவ வாய்ப்பிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

 

ஆக இந்த நவீன விஞ்ஞான முறை பெண்களை கால் டாக்சி யைப் போல் ஒரு பொருளாகப் பாவிக்கிறது. பொதுவாகவே இன்றைய நவீன விஞ்ஞான முறைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதை விட, வர்த்தகம் நலன் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவ விஞ்ஞானம் பங்கு மார்க்கெட் போல்தான் நடந்துகொள்கிறது. அதனால்தான் அது எந்த ஒருநோயையும் முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை.

 

எய்ட்ஸ், கேன்சர் மட்டுமல்ல - சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா இந்த நோய்களையும் முற்றிலுமாகக் குணப்படுத்த இன்று வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவைகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத்தான் மருந்துகள் உண்டு.

 

ஆம், ஒருவர் ஆஸ்துமா நோயாளியாகவோ, சர்க்கரை வியாதிக்காரராகவோ, இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்வராகவோ இருந்தால் அவர் சாகும்வரை அந்த நோய்கள் அவரை விட்டு விலகாது. மருந்து மாத்திரைகளோடே அவர் மல்லுக்கட்ட வேண்டும். அதுதான் மருந்துக் கம்பெனிகளுக்கு நல்லது. அதனால்தான் ஆயிரத்தில் ஒருவருக்கு வருகிற உறையாத ரத்தம்போன்ற நோய்களுக்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை, ஆயிரத்தில் ஒருவர் மருந்து வாங்கினால் வியாபாரம் எப்படி நடக்கும்?

 

***

 

maternity_expecting_small_c.jpg

மருத்துவ விஞ்ஞானத்தின் இந்த நவீன வடிவமான வாடகைத் தாய்மார்கள் முறையால், அதிக லாபம் அடையப்போவது மருத்துவ வர்த்தகம்தான். சமூக ரீதியாக இந்த முறை பெரிய தீங்கையே ஏற்படுத்தும், அதுவும் இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் இந்த முறை பெருமளவில் பயன்படுத்தப்படும். காரணம், இந்த முறைக்கு பணக்கார நாட்டுப் பெண்கள் உடன் படமாட்டார்கள். அப்படியே உடன்பட்டாலும் மிகப் பெரிய அளவில் பணம் கேட்பார்கள். அதனால் மலிவு விலையில் தாய்மார்கள் இந்தியாவில் கிடைப்பார்கள் என்பதால், வெளிநாட்டினரும் இந்தியத் தாய்மார்களின் தாய்மையைச் சூறையாட அதிக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தங்களின் வறுமையை போக்க, சிறுநீரத்தை விற்றனர் நமது நெசவாளர்களும், விவசாயிகளும் என்பது நமது ஞாபகத்தில் கவலையோடு பதிவாகியிருக்கிறது.

 

ஆக, இந்த நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டுப் பெண்களின் உணர்வுகள் மீது, உரிமைகள் மீது தொடுத்து இருக்கிற தாக்குதலாகவே இருக்கிறது.

 

இப்படி , தாய்மையை வர்த்தகமாக அனுமதித்தால், இன்று எல்லாப் பொருட்களும் பிளாஸ்டிக் கவரில் கிடைப்பது மாதிரி, இன்னும் கொஞ்சநாளில் தாய்ப்பாலும் சாஷேயில் (Sache) கிடைக்கும் அவல நிலையும் வந்துவிடும். -

 

குங்குமம்வார இதழ், 13.8.2006

http://mathimaran.wordpress.com/2007/10/30/mathi/

Trackback(0)
கருத்துக்கள் (0)Add Comment

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
Last Updated ( Saturday, 22 November 2008 10:34 )  
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner