அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ் நாட்டின் கண்கள்
உச்சி இருட்டினில் பேய்வந்த தாக
உளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?
அச்சமும் மடமையும்...

முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்
பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி!
அச்சமும் மடமையும்...

கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? -- மிகு
கடியசா ராயமுனி ஏது?
விள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம்;
வேளைதோறும் படையல் வேண்டும்என் பாளாம்.
அச்சமும் மடமையும்...

மடமைதான் அச்சத்தின் வேராம் -- அந்த
மடமையால் விளைவதே போராம்!
மடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்
கல்விவேண் டும்அறிவு கேள்வியும் வேண்டும்.
அச்சமும் மடமையும்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt151