கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளர்த்தால்
கமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்
கண்மலரால் முல்லை வெண்ணைப்பால்
அமையஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள ஒருநாள். 1

 

சோலை அணங்கொடு திண்ணையிலெ - நான்
தோளiயை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழிய --------------
சங்க நாaதம்

 

எங்கள் வாழ்வ திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள். ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே. (எங்)
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதிதீரரென் று\ தூது சங்கே
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு. (எங்)
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குறுதி தனிற் கமழ்fந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம். (எங்) 2

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html